search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mahesh Babu"

    • தெலுங்கு நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையும் பழம்பெரும் நடிகருமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • கிருஷ்ணா தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார்.

    தெலுங்கு திரையுலகின் பழம்பெரும் நடிகரும், நடிகர் மகேஷ் பாபுவின் தந்தையுமான கிருஷ்ணாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையின் அறிவிப்பின்படி அவருக்கு 20 நிமிடங்கள் சிபிஆர் செய்த பின்னர் அவர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் (ICU) உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    79 வயதாகும் நடிகர் கிருஷ்ணா, திரை வாழ்கையில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக வலம் வந்த கிருஷ்ணா, கடைசியாக 2016ஆம் ஆண்டு வெளியான ஸ்ரீ ஸ்ரீ படத்தில் நடித்திருந்தார். இவருக்கு ரசிகர்கள் பலரும் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி சமீபத்தில் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • பழம்பெரும் நடிகர் கிருஷ்ணாவின் மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி காலமானார்.
    • இவரின் மறைவுக்கு திரையுலகினர் மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு இவரது தந்தை பழம்பெரும் நடிகர் கிருஷ்ணா. இவரது மனைவியும், மகேஷ் பாபுவின் தாயுமான கட்டமனேனி இந்திரா தேவி. கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த அவர், ஐதராபாத்தில் உள்ள ஏஐஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

     

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்திராதேவியின் உடல் பத்மாலயா ஸ்டுடியோவில் இன்று காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை அஞ்சலிக்காக வைக்கப்பட உள்ளது. அவரது இறுதி ஊர்வலம் நாளை மறுநாள் மகா பிரஸ்தானத்தில் நடைபெறுகிறது.

     

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    கட்டமனேனி இந்திரா தேவி - மகேஷ் பாபு

    நடிகர் மகேஷ்பாபுவின் தாயார் மறைவுக்கு தெலுங்கு திரைப்பட நடிகர்கள் மற்றும் தமிழ், கன்னட திரைப்பட நடிகர் நடிகைகள், மற்றும் மகேஷ் பாபுவின் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    • தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் ராஜமவுலி.
    • இவர் தனது அடுத்த படம் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார்.

    தெலுங்கில் முன்னணி இயக்குனர் ராஜமவுலி. இவர் இயக்கத்தில் வெளியான ஆர்.ஆர்.ஆர். திரைப்படம் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து இவர் தனது அடுத்த படத்தில் நடிகர் மகேஷ் பாபுவுடன் இணையவுள்ளார். ஆர். ஆர். ஆர். படத்தின் வெற்றிக்கு பிறகு மகேஷ் பாபு படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளில் இயக்குனர் ராஜமௌலி ஈடுபட்டுள்ளார்.


    ராஜமவுலி

    இந்நிலையில், இவர் அமெரிக்காவில் நடக்கும் திரைப்பட விழாவில் கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ராஜமௌலி, "தான் இயக்கும் அடுத்த படம் ஆக்‌ஷன், அட்வென்ச்சர் ஜானரில் இருக்கும். இந்த படத்தின் கதை உலகம் முழுவதும் வெவ்வேறு இடங்களில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

    மகேஷ் பாபு தற்போது இயக்குனர் திரிவிக்ரம் இயக்கத்தில் நடித்து வருகிறார், எஸ்.எஸ்.எம்.பி. 28 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் துவங்கி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததும் ராஜமவுலி படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    • இப்படத்தை தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு பாராட்டியுள்ளார்.

    மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்தவர் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த ஜூன் 03-ஆம் தேதி வெளியான 'விக்ரம்' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்துள்ளார். ரசிகர்களின் பெரும் எதிர்ப்பார்ப்பில் வெளியான இப்படம் அனைவரையும் கவர்ந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

    விக்ரம்

    விக்ரம்

    இந்நிலையில் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான மகேஷ் பாபு விக்ரம் திரைப்படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், ''விக்ரம்.. ப்ளாக் பஸ்டர் சினிமா! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் உங்களுடன் இணைந்து விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். சிறப்பான படைப்பு, விஜய் சேதுபதி மற்றும் ஃபஹத் பாசில் நடிப்பு திரையில் ஒளிர்கிறது. இதைவிட சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த முடியாது.

    விக்ரம்

    விக்ரம்

    அனிருத் என்ன மாதிரியான ஒரு இசை. உங்களுடைய பெஸ்ட் இது. இறுதியாக கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு குறித்து கருத்து சொல்ல எனக்கு போதுமான தகுதியில்லை. உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு, இது பெருமையான தருணங்களில் ஒன்று! வாழ்த்துகள் சார் உங்களுக்கும் உங்கள் அருமையான குழுவிற்கும்!'' என்று பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது சமூக வலைத்தளத்தில் வைராலகி வருகிறது.


    • மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
    • இப்படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார்

    தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் மகேஷ் பாபு.  மகேஷ் பாபு, கீர்த்தி சுரேஷ் நடித்த படம் சர்காரு வாரி பாட்டா. இந்த படத்தை இயக்குனர் பரசுராம் இயக்கியுள்ளார். இந்த திரைப்படம் சமீபத்தில்  திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

    இந்த படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மகேஷ் பாபுவின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.


    பில்கேட்ஸை சந்தித்த மகேஷ் பாபு

    இந்நிலையில், நடிகர் மகேஷ் பாபுவும் அவரது மனைவி நம்ரதாவும் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனருமான பில்கேட்ஸை சந்தித்து அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளனர்.

    இந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள மகேஷ் பாபு, " பில்கேட்ஸை சந்திக்கும் மகிழ்ச்சியான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இதுவரை உலகம் பார்த்த மிகச் சிறந்த தொலைநோக்கு சிந்தனையாளர்களில் ஒருவர். ஆனாலும் மிக எளிமையான மனிதர். இவர் உண்மையில் ஒரு உத்வேகம்" என பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

    ரஜினி நடிப்பில் வெளியாகி இருக்கும் பேட்ட படத்தை தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு பார்த்து பாராட்டியுள்ளார். #Petta #Rajini #MaheshBabu #Rajinikanth
    ரஜினி நடிப்பில் நேற்று வெளியான படம் ‘பேட்ட’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே ஏகோபித்த வரவேற்பு பெற்று வருகிறது. இப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலக பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.



    இந்நிலையில், பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, படத்தை பார்த்து பாராட்டியுள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில் ‘பேட்ட ரஜினி ரசிகர்களுக்கான படம். அந்த ரசிகர்களில் நானும் ஒருவன். ஒரே ஒரு வார்த்தைதான் தலைவா. கார்த்திக் சுப்புராஜ் சிறந்த திறமையான இயக்குனர்களில் ஒருவர். ஒளிப்பதிவாளர் திரு வழக்கம் போல் சிறப்பாக பணியாற்றியுள்ளார். படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துகள்’ என்று பதிவு செய்திருக்கிறார்.
    சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகள் நேற்று முடக்கப்பட்ட நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக மகேஷ்பாபு குற்றம்சாட்டியுள்ளார். #MaheshBabu
    ஐதராபாத்:

    தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான விளங்குபவர் மகேஷ்பாபு. கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து விளம்பரங்களில் தோன்றிய தற்கான சேவை வரி ரூ.18.5 லட்சம் செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் அவரின் வங்கிக் கணக்கு களை முடக்கியது.

    வட்டி, அபராதம் உள்ளிட்டவைகள் உட்பட அவர் ரூ.73.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள தாகவும் கூறப்பட்டது.

    இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் வரி பாக்கி எதுவும் வைக்கவில்லை என்று விளக்கம் கொடுத் தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08-ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான வரியைக் கட்ட வில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.



    அப்போதைய கால கட்டத்தில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010-ம்ஆண்டில்தான் அந்த சேவைக்கு வரி விதிக்கப் பட்டது. வரி கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பான பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது.

    ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது’’ என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #MaheshBabu #GST #ServiceTax

    சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். #MaheshBabu #GST #ServiceTax
    ஐதராபாத்:

    மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

    எனவே அவர்கள் சேவை வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரிபாக்கிவைத்துள்ளார்.

    சேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியபடி இருந்தது. ஆனால் நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.



    இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நடிகர் மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் உள்ள அந்த 2 கணக்குகளிலும் ரூ.73.5 லட்சம் பணத்தை நடிகர் மகேஷ்பாபு சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்தில் இருந்து சேவை வரிக்கான தொகை மற்றும் வட்டியை வசூலிக்க ஜி.எஸ்.டி. ஆணையரகம் முடிவு செய்து உள்ளது. #MaheshBabu #GST #ServiceTax

    இந்திய அளவில் ட்விட்டரில் அதிகம் பேசப்பட்டவர்கள் பட்டியலில் நடிகர் விஜய்க்கு 8-வது இடம் கிடைத்துள்ளது. #Vijay #TwitterTrend
    அரசியல், சினிமா, விளையாட்டு துறைகளில் 2018-ம் ஆண்டு அதிகம் பேசப்பட்ட பிரபலங்களின் பட்டியலை டுவிட்டர் இந்தியா அமைப்பு வெளியிட்டுள்ளது.

    10 பேர் கொண்ட பட்டியலில் இந்திய அளவில் நடிகர் விஜய்க்கு 8-ம்இடம் கிடைத்துள்ளது.

    இந்தப் பட்டியலில் பிரதமர் மோடி முதலிடத்தில் உள்ளார். இரண்டாம் இடம் ராகுல் காந்திக்கு கிடைத்துள்ளது. பட்டியலில் இடம்பெற்றுள்ள 10 பிரபலங்கள் வருமாறு:-

    1. மோடி. 2. ராகுல் காந்தி. 3. அமித் ஷா. 4. யோகி ஆதித்யநாத். 5. அரவிந்த் கெஜ்ரிவால். 6. பவன் கல்யாண். 7. ஷாருக் கான். 8. விஜய். 9. மகேஷ் பாபு. 10. ஷிவ்ராஜ் சிங் சவுகான்.



    விஜய் நடித்த மெர்சல் படத்தை தொடர்ந்து, சர்கார் படமும் இந்திய அளவில் சர்ச்சையாகி பிரபலமானது குறிப்பிடத்தக்கது. இதன் தாக்கம் தான் சமூகவலைதளங்களிலும் எதிரொலித்து இருக்கிறது. #Vijay #TwitterTrend

    ஐதராபாத்தில் கட்டப்பட்டியிருக்கும் மகேஷ் பாபுவின் திரையரங்கை நடிகர் ரஜினிகாந்த் திறந்து வைக்க இருப்பதாகவும், அந்த திரையரங்கில் முதல் படமாக 2.0 படத்தை திரையிட இருப்பதாகவும் கூறப்படுகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas
    தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனான மகேஷ்பாபு ஐதராபாத்தில் திரையரங்கு ஒன்றை தொடங்கி இருக்கிறார்.

    ஏசியன் சினிமாஸ் உடன் இணைந்து மிகப் பிரமாண்டமான திரையரங்க மால் ஒன்றை ஐதராபாத்தில் மகேஷ் பாபு நிறுவ உள்ளார். ஏஎம்பி சினிமாஸ் என பெயரிடப்பட்டுள்ள இந்தத் திரையரங்கில் முதல் படமாக அமீர்கான் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த தக்ஸ் ஆப் ஹிந்துஸ்தானை வெளியிட்டு தொடக்க விழாவிற்கு அமீர் கானை வரவழைக்க ஏற்பாடு நடந்தது.



    ஆனால் அமீர் கான் பிசியாக இருக்கவே அந்த முயற்சி பின்னர் கைவிடப்பட்டது. அதன் பின்னர் பிரமாண்டமான ஒரு தொடக்கத்திற்காக சரியான வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்த அவர்களுக்கு ரஜினியின் 2.0 படம் தற்போது கையில் கிடைத்துள்ளது.



    அந்தவகையில் ரஜினியின் இந்தப் படமே அந்தத் திரையரங்கினில் முதல் படமாக வெளியிடப்படவுள்ளது. இந்த தொடக்க விழாவிற்கு ரஜினியை அழைத்திருக்கிறார்கள். 2.0 படத்திற்கான விளம்பரமாகவும் அமையும் என்பதால் ரஜினி இதில் கலந்துகொள்வார் என தெரிகிறது. #2Point0 #Rajinikanth #AMBCinemas #MaheshBabu

    தெலுங்கில் முன்னணி நடிகரான மகேஷ் பாபுவை ஸ்டாண்ட் அப் காமெடியன் மனோஜ் பிரபாகர் கிண்டல் செய்த நிலையில், மகேஷ் பாபு ரசிகர்கள் தமிழ் நடிகர்களை வம்புக்கு இழுத்தனர். #MaheshBabu #ManojPrabhakar
    தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக திகழ்பவர் மகேஷ் பாபு. பிரின்ஸ் என்றும் சூப்பர் ஸ்டார் என்றும் அழைக்கப்படும் மகேஷ் பாபுவின் படங்கள் தமிழிலும் நல்ல வரவேற்பு பெற்றுள்ளன. மகேஷ் பாபு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘ஸ்பைடர்’ என்ற நேரடி தமிழ் படத்திலும் நடித்துள்ளார்.

    தமிழ் டிவி நிகழ்ச்சிகளில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக வரும் மனோஜ் பிரபாகர் நடிகர் மகேஷ் பாபுவை ஒரு நிகழ்ச்சியில் கிண்டல் செய்தார். ‘மகேஷ் பாபுவும், இந்தி நடிகை காத்ரீனா கைபும் ஒரே மாதிரியானவர்கள். இருவரும் அழகாக இருப்பார்கள்.



    ஆனால் முகத்தில் எந்த உணர்ச்சியுமே காட்டுவதற்கு வராது. மகேஷ் பாபு எல்லா சூழ்நிலையிலும் ஒரே மாதிரியாக முகத்தை வைத்து வசனம் பேசுவார். ஸ்பைடர் படத்தில் ஹீரோவான மகேஷ் பாபுவை விட வில்லனாக நடித்த எஸ்.ஜே. சூர்யா நன்றாக நடித்திருந்தார்’ என்று கிண்டல் செய்திருந்தார். இந்த வீடியோ கடந்த வாரம் பரவியது.

    மகேஷ் பாபுவின் ரசிகர்கள் இந்த வீடியோவால் கோபம் அடைந்தனர். மனோஜ் மீது மோசமான வார்த்தைகளால் தாக்குதல் நடத்திய அவர்கள் ஒரு கட்டத்தில் தமிழ் நடிகர்களையும் கிண்டல் செய்ய தொடங்கினார்கள். இந்த விவகாரம் தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா’ கவனத்திற்கும் சென்றது. தென்னிந்திய சினிமா நடிகர் சங்கத்துக்கு மனோஜ் மன்னிப்பு கேட்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஒரு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்தில் மனோஜின் பேச்சு அதிர்ச்சிக்குள்ளாக்கியது என்றும், தென்னிந்திய சினிமாவில் மிகப்பெரிய பிரச்சினையாக இது வெடிக்குமோ என்று அச்சம் தோன்றுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.



    தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளர் விஷால் இதுபற்றி கூறும்போது, ‘மகேஷ் பாபு பற்றி எல்லோருக்குமே நன்றாக தெரியும். அவர் யாரிடமும் தன்னை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லை. எனக்கு மனோஜ் பிரபாகர் என்ற கிரிக்கெட் வீரரை தான் தெரியும். சமூக வலைதளங்கள் பெருகியதால் சில நபர்கள் தங்களை பிரபலப்படுத்திக்கொள்ள இப்படி செய்கிறார்கள். அவர்களை நாம் கண்டு கொள்ள வேண்டியதில்லை.

    இந்த வி‌ஷயத்தில் மகேஷ் பாபு மீது தங்களது பிரியத்தை அதிகரிக்குமாறும், விமர்சித்த நபரை பெரிய ஆளாக்கிவிட வேண்டாம் என்றும் மகேஷ் பாபு ரசிகர்களை வேண்டிக் கொள்கிறேன்’ என்று கூறி உள்ளார்.

    இதற்கிடையே மனோஜ் பிரபாகர், மகஷே் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #MaheshBabu #ManojPrabhakar

    ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' படத்தின் முன்னோட்டம். #NanjamPalaVannam #MaheshBabu
    மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'.

    தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர், எடிட்டிங் -  நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம், வசனம் மற்றும் தமிழாக்கம் -A.R.K.ராஜராஜா, தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட்) மெஹபு பாஷா, இயக்கம் - ஸ்ரீகாந்த். 

    படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது,

    இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட், பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன், தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். 

    இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார். #NanjamPalaVannam #MaheshBabu #Venkatesh #Samantha #Anjali

    ×