search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Service Tax"

    • முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.
    • வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும்.

    சென்னை:

    இந்திய தேசிய ரியல் எஸ்டேட் பில்டர்ஸ் லேண்ட் டெவலப்பர்ஸ் நிலதரகர்கள் சங்க அகில இந்திய தலைவர் விருகை வி.என். கண்ணன் விடுத்துள்ள அறிக்கையில், தமிழக அரசுக்கு எப்பொழுதும் நிரந்தர வருவாய் ஈட்டி தரும் தொழிலாக ரியல் எஸ்டேட் தொழில் அமைந்துள்ளது. இந்த தொழிலையே நம்பி செயல்படும் ரியல் எஸ்டேட் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் விதமாக கடந்த 10-ந் தேதி முதல் பத்திரப்பதிவின் சேவை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை முதல்வர் தாய் உள்ளத்தோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்

    பவர் பத்திரத்திற்கான கட்டணம் சொத்து மதிப்பில் ஒரு சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதை கிரையப் பத்திரம் செய்யும்போது 7 சதவீத பத்திர கட்டணம் மற்றும் 2 சதவீத பதிவு கட்டணம் இவற்றில் ஒரு சதவீதத்தை குறைத்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். வீட்டுமனைகளுக்கு ரூ. 500 செலுத்தி நில வரையறை செய்து கொள்ள 6 மாத கால அவகாசத்தை உடனே அமல்படுத்த வேண்டும். பழைய வீட்டுமனையில் அமைந்துள்ள குறைந்த அளவில் உள்ள சாலையை ஒட்டி புதிய லே-அவுட் அனுமதி வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

    சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகள் நேற்று முடக்கப்பட்ட நிலையில், வழக்கு நிலுவையில் இருக்கும்போது முன் அறிவிப்பு இல்லாமல் வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக மகேஷ்பாபு குற்றம்சாட்டியுள்ளார். #MaheshBabu
    ஐதராபாத்:

    தெலுங்கு சினிமாவின் முன்னணி கதாநாயகனான விளங்குபவர் மகேஷ்பாபு. கடந்த 2007-08-ம் ஆண்டுகளில் பிராண்ட் அம்பாசிடராக இருந்து விளம்பரங்களில் தோன்றிய தற்கான சேவை வரி ரூ.18.5 லட்சம் செலுத்தவில்லை என்று ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி ஆணையகம் அவரின் வங்கிக் கணக்கு களை முடக்கியது.

    வட்டி, அபராதம் உள்ளிட்டவைகள் உட்பட அவர் ரூ.73.5 லட்சம் வரி பாக்கி வைத்துள்ள தாகவும் கூறப்பட்டது.

    இந்த விவகாரம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் வரி பாக்கி எதுவும் வைக்கவில்லை என்று விளக்கம் கொடுத் தார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ’ஜி.எஸ்.டி ஆணையகம் அறிக்கையின்படி கடந்த 2007-08-ம் ஆண்டில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கான வரியைக் கட்ட வில்லை என்று கூறப்பட்டு இருக்கிறது.



    அப்போதைய கால கட்டத்தில் பிராண்ட் அம்பாசிடர் சேவைக்கு வரி விதிக்கப்படவில்லை. 2010-ம்ஆண்டில்தான் அந்த சேவைக்கு வரி விதிக்கப் பட்டது. வரி கட்டுவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது, வங்கிக் கணக்கு முடக்கம் தொடர்பான பல்வேறு விதிமுறைகள் வரி செலுத்துவோருக்கு ஆதரவாக இருக்கிறது.

    ஆனால் ஜி.எஸ்.டி ஆணையகம் எந்த முன் அறிவிப்பும் இன்றி எனது வங்கிக் கணக்கை முடக்கி இருக்கிறது’’ என்று அந்த அறிக்கையில் கூறி உள்ளார். #MaheshBabu #GST #ServiceTax

    சேவை வரி கட்டாததால், நடிகர் மகேஷ்பாபுவின் வங்கி கணக்குகளை முடக்கி, ஜி.எஸ்.டி. ஆணைய அதிகாரிகள் நடவடிக்கையில் ஈடுபட்டனர். #MaheshBabu #GST #ServiceTax
    ஐதராபாத்:

    மத்திய அரசின் நேரடி வரி விதிப்பு சட்டத்தின்கீழ் நடிகர்களும், தொழில் செய்பவர்களாக கருதப்படுகிறார்கள்.

    எனவே அவர்கள் சேவை வரி செலுத்த வழிவகை செய்யப்பட்டு உள்ளது.

    பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு சேவை வரி செலுத்தாமல் இருந்தார். 2007-08ம் ஆண்டில் அவர் ரூ.18.5 லட்சம் சேவை வரிபாக்கிவைத்துள்ளார்.

    சேவை வரி செலுத்தும்படி அவருக்கு ஜி.எஸ்.டி. ஆணையரகம் நோட்டீஸ் அனுப்பியபடி இருந்தது. ஆனால் நோட்டீசுகளுக்கு நடிகர் மகேஷ்பாபு எந்த பதிலும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.



    இதையடுத்து ஐதராபாத்தில் உள்ள ஜி.எஸ்.டி. ஆணையரக அதிகாரிகள் நேற்று அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். நடிகர் மகேஷ்பாபுவின் 2 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன.

    ஆக்சிஸ் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி ஆகியவற்றில் உள்ள அந்த 2 கணக்குகளிலும் ரூ.73.5 லட்சம் பணத்தை நடிகர் மகேஷ்பாபு சேமித்து வைத்து இருந்தார். அந்த பணத்தில் இருந்து சேவை வரிக்கான தொகை மற்றும் வட்டியை வசூலிக்க ஜி.எஸ்.டி. ஆணையரகம் முடிவு செய்து உள்ளது. #MaheshBabu #GST #ServiceTax

    சேவை வரி செலுத்தவில்லை என்று விஷால் மீது சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணையை நீதிபதி ஒத்திவைத்து உத்தரவிட்டார். #Vishal #ServiceTax
    தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக இருப்பவர் நடிகர் விஷால்.

    2014-ஆம் ஆண்டு முதல் ரூ.1 கோடிக்கு மேல் சேவை வரி செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளார். இதுகுறித்து விளக்கம் நோட்டீசை சேவை வரி வாரியம் அனுப்பியது. அதற்கு அவர் பதில் அளிக்கவில்லை. அவரை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி சம்மன் அனுப்பியும், அவர் ஆஜராகவில்லை.

    இதையடுத்து நடிகர் விஷால் மீது, சென்னை எழும்பூர் பொருளாதார குற்றவியல் கோர்ட்டில், சேவை வரி உதவி கமி‌ஷனர் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நடிகர் விஷால் இருமுறை கோர்ட்டில் ஆஜரானார். அவரிடம் வழக்கு குறித்து நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு நடிகர் விஷால் பதில் அளித்தார்.

    இந்த வழக்கு நீதிபதி மலர்மதி முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஷால் நேரில் ஆஜராகவில்லை. அவர் நேரில் ஆஜராக விலக்கு அளிக்கும்படி அவர் சார்பில் வக்கீல் மனு தாக்கல் செய்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை டிசம்பர் மாதத்துக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். #Vishal #ServiceTax

    ×