search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Venkatesh"

    • விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சைந்தவ்'.
    • இந்த படத்தை சைலேஷ் கொலானு இயக்கி இருக்கிறார்.

    விக்டரி வெங்கடேஷின் 75-வது படமாக உருவாகி இருக்கும் திரைப்படம் 'சைந்தவ்'. 'ஹிட்வெர்ஸ்' படத்தை இயக்கிய சைலேஷ் கொலானு இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நவாசுதீன் சித்திக், ஆர்யா, ஷ்ரதா ஸ்ரீநாத், ருஹானி ஷர்மா, ஆண்ட்ரியா ஜெர்மியா, சாரா மற்றும் ஜெயபிரகாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.


    அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த ஆக்ஷன் திரைப்படமாக உருவாகி இருக்கும் இப்படத்தை நிஹாரிகா எண்டர்டெயின்மெண்ட்ஸ் சார்பில் வெங்கட் பொயனபள்ளி பிரமாண்டமாக தயாரித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இந்த படத்திற்கு எஸ். மணிகண்டன் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டுள்ளார். படத்தொகுப்பு பணிகளை கேரி பி.ஹெச். கவனித்துள்ளார்.


    சைந்தவ் போஸ்டர்

    இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 'சைந்தவ்' திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

    • நடிகர் வெங்கடேஷ் காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர்.
    • இவர் மதுரை தபால் தந்தி நகரில் வசித்து வருகிறார்.

    மதுரை தபால் தந்தி நகர் பகுதியில் வசிப்பவர் சின்னத்திரை நடிகர் வெங்கடேஷ் (50). இவர் தனியார் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான காமெடி நிகழ்ச்சிகளில் பங்கேற்று பிரபலமானவர். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது மதுரையில் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி அதன் மூலம் நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

    வெங்கடேஷ் கோவையைச் சேர்ந்த பெண்ணுடன் நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. இது அவரது மனைவி பானுமதிக்கு தெரிய வந்த நிலையில், அந்த பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை கண்டித்து வந்ததாகவும், இதனால் இருவருக்குமிடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.


    வெங்கடேஷ்

    இந்நிலையில் வெங்கடேஷ், தனது மனைவியை விவாகரத்து செய்ய முடிவு செய்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதால் வழக்கு நீதிமன்றத்தில் நடந்துவருவதையடுத்து இருவரும் ஒரே வீட்டிலேயே வசித்து வந்துள்ளனர். இதனை தொடர்ந்து கணவர் மீதான கோபத்தில் பானுமதி தனது வீட்டில் கார் ஓட்டுனராக பணி யாற்றிய மோகன் என்பவர டம் வெங்கடேசின் காலை உடைத்து வீட்டிலேயே இருக்க வைக்க ஆலோசனை கேட்டுள்ளார்.

    இதையடுத்து ராஜ்குமார் என்பவரை மோகன் அறிமுகம் செய்து வைத்த நிலையில் கால்களை உடைக்க ராஜ்குமார் ஒரு லட்சம் கேட்டதால், பா.ஜ.க. பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினர் பொறுப்பில் இருக்கும் உறவினரான வைரமுத்து என்பவரிடம் பானுமதி உதவி கேட்டுள்ளார். ஏற்கனவே சமூக வலைதளங்களில் பா.ஜ.க பற்றி தவறாக பதிவிட்ட நடிகர் வெங்கடேஷ் மீது கோபத்தில் இருந்த வைரமுத்து இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டார்.


    துளசி- தமிழ்சங்கு

    பா.ஜ.க-வைச் சேர்ந்த 28-வது வார்டு மண்டல தலைவர் மலைசாமி, பா.ஜ.க. கிழக்கு மண்டல செயலாளர் ஆனந்தராஜ், வைரமுத்து ஆகியோர் கடந்த ஜூன் 15-ந் தேதி இரவு நாகனாகுளம் அருகே வைத்து வெங்கடேஷின் இரு கால்களையும் கட்டையால் அடித்து உடைத்துள்ளனர். இதைத்தொடர்ந்து வெங்கடேஷின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் தல்லாகுளம் போலீசாருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வெங்கடேஷை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    இச்சம்பவம் குறித்து வெங்கடேஷ் தல்லாகுளம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேஷின் மனைவி பானுமதி (48), ராஜ்குமார் (37), மோகன் (40), வைரமுத்து (38), மலைசாமி (35), ஆனந்தராஜ் (37) ஆகிய 6 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தானர்.

    இந்த வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த டிரைவர் துளசி மற்றும் பா.ஜ.க. பிரமுகர் தமிழ்சங்கு ஆகிய 2 பேரையும் தற்போது போலீசார் கைது செய்தனர்.

    வெங்கடேஷ், மீனா நடிப்பில் உருவாகி இருக்கும் திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
    மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் திரிஷ்யம். இப்படம் பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் வெளியாகி ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பை பெற்றது. இதன் இரண்டாம் பாகமும் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் ரீமேக் செய்யப்படவுள்ளது.

    திரிஷ்யம் 2

    திரிஷ்யம் 2 தெலுங்கு ரீமேக்கில் வெங்கடேஷ்- மீனா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் வரும் நவம்பர் 25 ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. இந்தத் தகவலை நடிகர் வெங்கடேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதலித்ததாக பிரபலமான மகத், யாஷிகா ஆனந்த் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர். #MahatRaghavendra #YashikaAannand
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக பழகினார்கள். ஆனால் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில், இரட்டை இயக்குனர்களான மகேஷ், வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

    படத்தை பற்றி இயக்குனர்கள் கூறும்போது ‘இந்த படம் ஹாரர் திரில்லர் படமாக இருந்தாலும், நாட்டு மக்கள் எளிதில் தங்களோடு பொருத்திக்கொள்கிற ஒரு முக்கிய பிரச்சினை படத்தில் இருக்கிறது. எனவே படத்தை தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் எடுக்க இருக்கிறோம்.



    மகத், யாஷிகாவுடன் முனிஸ்காந்த், மாகாபா. ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். மகத் இன்னொரு படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் மகத்துக்கு அதிக வாய்ப்புகள் குவிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #MahatRaghavendra #YashikaAannand

    தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் சூர்யா, தெலுங்கில் முன்னணி நட்சத்திரங்கள் பலர் இணையும் புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். #Suriya
    சூர்யா தற்போது செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்திலும், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரு படங்களை முடித்த பிறகு அடுத்ததாக சுதா கொங்காரா இயக்கத்தில் நடிக்க இருக்கிறார்.

    சூர்யாவுக்கு ஆந்திராவில் அங்குள்ள கதாநாயகர்களுக்கு சமமான மார்க்கெட் உருவாகி உள்ளது. எனவே கதைகளாக தேர்வு செய்யும்போதே 2 மாநில ரசிகர்களுக்குமான கதைகளை தான் தேர்வு செய்கிறார். படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளிலும் தெலுங்குக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.



    நேரடி தெலுங்கு படத்தில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக கூறிய சூர்யாவின் விருப்பம் நிறைவேற இருக்கிறது. வெங்கடேஷ், நாகசைதன்யா, வருண் தேஜ் இணைந்து நடிக்கும் தெலுங்கு படம் ஒன்றில் சூர்யாவும் நடிக்க இருக்கிறார். 20 நிமிடங்கள் வந்தாலும் சூர்யாவுக்கு முக்கியமான வேடம் என்கிறார்கள். படத்தை நாகினா திரிநாத் ராவ் இயக்குகிறார். #Suriya

    ஸ்ரீகாந்த் இயக்கத்தில் மகேஷ் பாபு, வெங்கடேஷ் - சமந்தா, அஞ்சலி நடிப்பில் தெலுங்கில் உருவாகி தமிழில் டப் செய்யப்பட்டுள்ள `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்' படத்தின் முன்னோட்டம். #NanjamPalaVannam #MaheshBabu
    மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா பிரைவேட் லிமிடெட் பட நிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்துள்ள படம் `நெஞ்சமெல்லாம் பல வண்ணம்'.

    தெலுங்கில் “ சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிய இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தாவும் முக்கிய கதாபாத்திரங்களில் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

    இசை - மிக்கி ஜே.மேயர், பாடல்கள் - அமான்ராஜா, சுதந்திரதாஸ், ஏக்நாத், உமாசுப்பிரமணியம், கார்கோ அருண்பாரதி, ராஜராஜா, ரா.சங்கர், பா.சபிக், தமிழ்ப்ரியன் நசிர், எடிட்டிங் -  நிவேதா ஸ்டுடியோஸ் செல்வம், வசனம் மற்றும் தமிழாக்கம் -A.R.K.ராஜராஜா, தயாரிப்பு - ரோல்ஸ் பிரைட் மீடியா(பி.லிட்) மெஹபு பாஷா, இயக்கம் - ஸ்ரீகாந்த். 

    படம் பற்றி படத்தின் தயாரிப்பாளர் பேசும் போது,

    இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட், பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன், தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். 

    இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது என்றார். #NanjamPalaVannam #MaheshBabu #Venkatesh #Samantha #Anjali

    தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ்பாபு, தற்போது ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’ படத்தில் கடைக்குட்டி சிங்கமாக நடித்திருக்கிறார். #MaheshBabu
    மொயின் பேக் வழங்க ரோல்ஸ் பிரைட் மீடியா (பி.லிட்) படநிறுவனம் சார்பில் மெஹபு பாஷா தயாரித்திருக்கும் படம் ‘நெஞ்சமெல்லாம் பல வண்ணம்’.

    தெலுங்கில் “சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு” என்ற பெயரில் வெளியாகி வசூலை அள்ளிக் குவித்த படமான இது ஆந்திர திரையுலகினரே அதிசயிக்கும் விதமான படமானது. இந்த படத்தில் மகேஷ்பாபு, வெங்கடேஷ் கதாநாயகர்களாக நடித்துள்ளனர். கதாநாயகிகளாக அஞ்சலி, சமந்தா நடிக்கிறார்கள். மற்றும் பிரகாஷ்ராஜ், ராவ் ரமேஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.

    ஸ்ரீகாந்த் இப்படத்தை இயக்கி இருக்கிறார். இவர் ஏற்கனவே புதுமுகங்களை வைத்து இயக்கிய “கொத்த பங்காரு லோகம்” அமோக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த படத்தின் வசனம் எழுதி தமிழாக்கம் செய்திருப்பவர் ஏ.ஆர்.கே.ராஜராஜா இப்படம் குறித்து இவர் கூறும்போது, ‘இந்த படம் தெலுங்கு சினிமா என்றாலே அடி தடி, ஸ்பீட் பாட்டு மசாலாத்தனமான திரைக்கதை மட்டும் தான் என்கிற மாயையை தகர்த்தெரிந்துள்ளது.



    முழுக்க முழுக்க குடும்ப உறவுகளை மையமாக வைத்து இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. மகேஷ்பாபு, வெங்கடேஷ் அண்ணன் தம்பிகளாக நடித்துள்ளனர். கடைக்குட்டி சிங்கம் படத்தை தொடர்ந்து அதே போலவே இந்த படத்தில் மகேஷ்பாபு கடைக்குட்டியாக நடித்துள்ளார். அது அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும். தமிழில் செல்வந்தன் படத்திற்கு பிறகு மகேஷ்பாபுவிற்கு பெயர் சொல்லும் படமாக இந்த நெஞ்சமெல்லாம் பல வண்ணம் இருக்கும். இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். விரைவில் இப்படம் திரைக்கு வர இருக்கிறது’ என்றார்.
    விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கிய நிலையில், இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல நடிகரின் மகள் ஷிவானி நடிக்க இருக்கிறார். #VishnuVishal #Shivani
    கதாநாயகன் படத்திற்கு பிறகு விஷ்ணு விஷால் நடிப்பில் அடுத்ததாக `சிலுக்குவார்பட்டி சிங்கம்', `ராட்சசன்', `ஜெகஜாலக் கில்லாடி' உள்ளிட்ட படங்கள் உருவாகி இருக்கின்றன. இதில் ராட்சசன் படம் விரைவில் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்த நிலையில், விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படத்திற்கான படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று துவங்கியிருக்கிறது. வெங்கடேஷ் என்ற புதுமுக இயக்குநர் இயக்கும் இந்த படத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ஷிவானி நடிக்கிறார். இவர் பிரபல நடிகர் டாக்டர்.ராஜசேகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. ஷிவானி இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். பிரபு, சரண்யா பொன்வண்ணன், முனிஸ்காந்த், சிங்கம் புலி, பிரவீன், நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
    இந்த படத்தை விஷ்ணு விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் கிரிஷ் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். வேல்ராஜ் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். 

    இந்த படத்தின் படப்பிடிப்பை தனது பெற்றோரின் திருமண நாளில் துவங்குவதில் மகிழ்ச்சி என்று விஷ்ணு விஷால் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 
    காலா படத்தில் ரஜினிக்கு ஜோடி நடித்திருக்கும் 2 நாயகிகளில் ஒருவரான ஹூமா குரேஷி, வெங்கடேஷ் ஜோடியாக தெலுங்க படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். #HumaQuereshi
    காலாவில் ரஜினியின் காதலியாக நடித்து இருப்பவர் இந்தி நடிகை ஹூமா குரேஷி. படத்தில் 40 வயது பெண்ணாக வருகிறார். மும்பையை சேர்ந்த ஒரு அரசியல்வாதியாக வந்து ரஜினிக்கு உதவும் கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. 

    காலா படத்தை தொடர்ந்து தென் இந்திய மொழிகளில் ஹூமாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. தமிழ் படங்களில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்த்து வந்த நிலையில், தற்போது தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். வெங்கடேஷ், நாகசைதன்யா இணைந்து நடிக்கும் புதிய தெலுங்கு படம் ஒன்றில் வெங்கடேஷுக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடிக்கிறார். இந்த படத்தில் நாக சைதன்யாவுக்கு ஜோடியாக ரகுல் பிரீத்திசிங் நடிக்கிறார். 



    இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஹூமா குரோஷி விரைவில் தமிழில் ஒப்பந்தமாவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #HumaQuereshi
    ×