search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bigg Boss Tamil"

    பிக்பாஸ் படம் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியாவை கைது செய்ய வேண்டும் என்று மீண்டும் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. #Oviya
    களவாணி படம் மூலம் அறிமுகமானவர் ஓவியா. பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் பிரபலம் அடைந்தார். அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவர் நடித்த படம் 90 எம்.எல். அனிதா உதீப் இயக்கிய இந்த படத்தில் ஆபாச காட்சிகள், இரட்டை அர்த்த வசனங்கள் இடம்பெற்று இருப்பதாக சர்ச்சைகள் எழுந்தன. ஓவியா மீதும் இயக்குனர் மீதும் போலீசில் புகார்கள் கொடுக்கப்பட்டன.

    90 எம்.எல். படத்துக்காக ஓவியா மீது நேற்று கமி‌ஷனர் அலுவலகத்தில் இன்னொரு புகார் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேற்காட்டை சேர்ந்த தமிழ்வேந்தன் என்பவர் அந்த புகாரை கொடுத்துள்ளார். புகாரில் கூறப்பட்டுள்ளதாவது:-

    பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் ரீதியாக சித்தரவதை செய்யப்பட்டுள்ளனர். முகநூல், டுவிட்டர் மூலமாக அவர்களுக்கு காதல் வலை வீசி திருமண ஆசை காட்டி அந்த பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு உள்ளிட்டோர் நடந்து கொண்ட விதம் மனித இனத்திற்கே அவமானம்.

    தமிழகத்தில் மீண்டும் மீண்டும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் வகையில் படங்கள் எடுக்கப்படுவது அதைவிட கேவலம். கடந்த மார்ச் 1-ந் தேதி அனிதா உதீப் இயக்கிய 90 எம்.எல். படம் வெளியானது. அந்த படத்தில் நடிகை ஓவியா அருவருக்கத்தக்க வகையில் நடித்து இருந்தார்.



    புகைப்பது, ஆண் நண்பருடன் உதட்டோடு உதடு முத்தமிடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இதுதான் பெண்ணியம் என்றும் கற்பிக்கப்பட்டுள்ளது.

    தமிழக கலாசாரத்தை சீர்குலைக்கும் விதமாகவும் பெண்களை தவறாக வழி நடத்தக்கூடிய வகையிலும் 90 எம்.எல். படத்தை இயக்கிய அனிதா உதீப், அதில் நடித்த ஓவியா உள்ளிட்டோரை கைது செய்ய வேண்டும்’.

    இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.
    பொல்லாதவன், ஆடுகளம் படத்தில் நடித்தவரும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவருமான சென்ராயனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. #Sendrayan
    தனுஷ் நடித்த பொல்லாதவன் படத்தில் அறிமுகமானவர் நடிகர் சென்ராயன். தொடர்ந்து ‘சிலம்பாட்டம்’ , ’ஆடுகளம்’, ‘மூடர் கூடம் என பல படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் இரண்டில் போட்டியாளராக கலந்து கொண்டு மக்களிடம் பெரும் ஆதரவைப் பெற்றார்.

    இவர் கயல்விழி என்பவரை காதலித்து மணந்தார். இருவருக்கும் நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ராயன் இருந்த போதுதான் கயல்விழி கர்ப்பமான செய்தி வெளியில் தெரிந்தது.

    சினேகாவின் ரசிகையான தனது மனைவியின் ஆசையை நிறை வேற்றும் விதமாக கர்ப்பமாக இருந்த கயல் விழியை சினேகாவின் வீட்டுக்கே அழைத்துச் சென்று சந்திக்க வைத்து ஆச்சர்யப்படுத்தினார்.



    தொடர்ந்து சில மாதங்களுக்கு முன்பு சீமந்தம் நடந்து பெற்றோர் வீட்டுக்குச் சென்ற கயல்விழி, நேற்று மாலை 3.30 மணியளவில் அழகான ஆண் குழந்தையைப் பெற்றெடுத்துள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று காதலித்ததாக பிரபலமான மகத், யாஷிகா ஆனந்த் புதிய படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர். #MahatRaghavendra #YashikaAannand
    பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகர் மகத்தும், நடிகை யாஷிகா ஆனந்தும் நெருக்கமாக பழகினார்கள். ஆனால் வெளியில் வந்த பிறகு இருவரும் பிரிந்தார்கள். இந்த நிலையில், இரட்டை இயக்குனர்களான மகேஷ், வெங்கடேஷ் இயக்கும் புதிய படத்தில் இருவரும் ஜோடியாக நடிக்கிறார்கள்.

    படத்தை பற்றி இயக்குனர்கள் கூறும்போது ‘இந்த படம் ஹாரர் திரில்லர் படமாக இருந்தாலும், நாட்டு மக்கள் எளிதில் தங்களோடு பொருத்திக்கொள்கிற ஒரு முக்கிய பிரச்சினை படத்தில் இருக்கிறது. எனவே படத்தை தமிழ், கன்னடம் ஆகிய 2 மொழிகளில் எடுக்க இருக்கிறோம்.



    மகத், யாஷிகாவுடன் முனிஸ்காந்த், மாகாபா. ஆனந்த் ஆகியோரும் நடிக்கிறார்கள். ஜனவரியில் படப்பிடிப்பை தொடங்கி கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்’ என்றனர். மகத் இன்னொரு படத்தில் ஐஸ்வர்யா தத்தாவுடன் நடிக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின் மகத்துக்கு அதிக வாய்ப்புகள் குவிகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. #MahatRaghavendra #YashikaAannand

    பிக்பாஸ் இரண்டாவது சீசனில் பங்கேற்ற மகத் மற்றும் ஐஸ்வர்யா தத்தா இருவரும் இணைந்து ரொமான்டிக் காமெடி பலந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். #MahatRagavendra #AishwaryaDutta
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த சீசனில் ஐஸ்வர்யா தத்தாவின் செயல்பாடுகள் அதிக விமர்சனங்களைச் சந்தித்தன. அதன் மூலம் அவர் அதிக கவனம் பெற்றார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், ஆறாது சினம் உள்ளிட்ட சில படங்களில் நடித்த அவர் புதிய படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி உள்ளார்.

    பிக்பாசில் அவரோடு இணைந்து கலந்துகொண்ட மகத் அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை அறிமுக இயக்குனர் பிரபு ராம்.சி இயக்குகிறார். இவர் ஹாலிவுட் படங்களில் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். ரொமாண்டிக் காமெடி கதையம்சத்தில் தயாராகும் இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் முழு விபரம் விரைவில் வெளியாக உள்ளது. 

    மகத் தற்போது சிம்புவின் வந்தா ராஜாவாத்தான் வருவேன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். சுந்தர்.சி இயக்கும் இந்த படத்தில் மேகா ஆகாஷ், கேத்தரீன் தெரசா என இரு கதாநாயகிகள் நடிக்கின்றனர்.



    ‘அத்தாரின்டிகி தாரேதி’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் இந்த படத்தை பொங்கலுக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.

    கடந்த ஆண்டு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரைசா, ஹரிஷ் கல்யாண் இணைந்து பியார் பிரேமா காதல் படத்தில் நடித்திருந்தனர். ரொமான்டிக் காமெடி ஜானரில் உருவாகி இருந்த அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதே பாணியில் மகத், ஐஸ்வர்யா களம் இறங்கி உள்ளனர். #MahatRagavendra #AishwaryaDutta

    பிக்பாஸ் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ், ஓவியாவுடன் காதல் இருப்பதாக வரும் செய்திக்கு விளக்கம் அளித்துள்ளார். #Arav #Oviya
    பிக்பாஸ் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டிலை தட்டிச் சென்றவர் ஆரவ். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமான இவர் தற்போது இவர் ராஜபீமா படத்தில் நாயகனாக நடித்து வருகிறார். சமீபத்தில் ஆரவ்வுக்கு பிறந்தநாள் வந்தது. இந்த கொண்டாட்டத்தில் நடிகை ஓவியாவும் கலந்து கொண்டது சர்ச்சையானது. 

    இதுபற்றி கேட்டபோது ‘ராஜபீமாவுக்கு பிறகு மேலும் ஒரு படம் கமிட் ஆகியிருக்கிறேன். விரைவில் அது குறித்து அறிவிப்பு வெளியாகும். இந்த படமும் கதையை மையப்படுத்தியதாகத் தான் இருக்கும். எனக்கு லவ்வர் பாய் இமேஜ் இருக்கிறது. அதனால் காதல் படங்கள் தான் நிறைய வருகின்றன. ஆனால் நான் கதைக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தான் தேர்வு செய்கிறேன். 

    ஓவியாவுடன் சேர்ந்து படம் பண்ணும் ஐடியா இருக்கிறது. நிறைய கதைகள் வருகின்றன. ஆனால் எதுவும் செட்டாகவில்லை. நானும் அவரும் சேரும் போது வியாபார ரீதியாக நிறைய எதிர்பார்ப்புகள் இருக்கும். எனவே அதை பூர்த்தி செய்யக்கூடிய வகையிலான கதை அமைந்தவுடன் நிச்சயம் சேர்ந்து படம் பண்ணுவோம். எனது பிறந்தநாளுக்கு கூட ஓவியா நேரில் வந்து வாழ்த்துக் கூறினார். சிம்பு, பிந்து மாதவி உள்ளிட்டோரும் வந்திருந்தனர். நெருங்கிய நண்பர்கள் அனைவருமே வந்து வாழ்த்தினர். 



    ஓவியாவும் நானும் காதலிக்கிறோம் என செய்திகள் தொடர்ந்து வந்துகொண்டிருக்கின்றன. அதில் உண்மையில்லை. அவர் எனக்கு நல்ல நண்பர் மட்டுமே’ இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.
    பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, தற்போது ஆண்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். #Oviya #BiggBoss
     நடிகை ஓவியா சினிமாவில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வந்த பிறகே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

    தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். ஓவியா நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. 

    அதைத் தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் களவாணி 2 ரிலீசாக உள்ளது. அவ்வப்போது டுவிட்டரில் பல வி‌ஷயங்களைப் பகிரும் ஓவியா, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தைப் பகிர்ந்துள்ளார்.

    பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக் கூடியவர்கள்.

    அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தைத் தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்குச் சாப்பாடு தருவாள்.



    நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பி தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால், அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்” என்பதை பகிர்ந்துள்ளார்.
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான விஜயலட்சுமி அடுத்ததாக பிரபல இயக்குனர் படத்தில் நடிக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார். #BiggBoss #VijayaLakshmi
    வெங்கட் பிரபு இயக்கிய 'சென்னை 28' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆன விஜயலட்சுமி. மிஷ்கின் இயக்கிய அஞ்சாதே படத்தில் நடித்து கவனம் பெற்றார்.

    அதன்பின்னர் சில படங்களில் நடித்தபோதும் பெரிய அளவிலான வெற்றிகளை அப்படங்கள் பெறவில்லை. நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் இரண்டாவது சீசனின் பாதியில் வந்து திடீர் போட்டியாளராக கலந்துகொண்டார்.

    பாதியிலேயே நிகழ்ச்சியிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். பிக் பாஸ் முடிந்துள்ள நிலையில் அடுத்ததாக எந்தப் படத்தில் அவர் நடிப்பார் எனும் எதிர்பார்ப்பு இருந்துவந்தது. இந்நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் இதுகுறித்த பதிவொன்றை வெளியிட்டுள்ளார் விஜயலட்சுமி.



    அதில், இயக்குனர் சிம்புதேவன் இயக்கவுள்ள புதிய படத்தில் தான் நடிக்கவுள்ளதாகவும் வெங்கட் பிரபு தயாரிப்பில் அப்படம் உருவாகவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

    களவாணி படத்தில் அறிமுகமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, வாழ்க்கையில் மாற்றம் வரவில்லை என்று கூறியிருக்கிறார். #Oviya
    ஓவியா திரைப்படங்களில் நடித்தபோதுகூட கிடைக்காத புகழ் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்தது. இதனை அடுத்து பல திரைப் படங்களில் நடிப்பதற்கும் ஒப்பந்தமானார். அதோடு பல்வேறு நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராகவும் பங்கேற்று வருகிறார்.

    சமீபத்தில் இலங்கையில் ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு ஓவியா ரசிகர்களிடமும், அங்குள்ள ஊடகங்களிடமும் கலந்துரையாடல் நிகழ்த்தி உள்ளார். அப்போது பேசிய ஓவியா, “தமிழில் பேச கொஞ்சம் கொஞ்சம் இலக்கண பிழை இருக்கிறது.

    நான் ஒன்றுமே பண்ணாமல் இவ்வளவு அன்பு கிடைத்திருப்பது சந்தோ‌ஷமாக இருக்கிறது. எனக்கு இதற்கு தகுதி இருக்கிறதா என்று தெரியவில்லை, இருந்தாலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக உணர்கிறேன்.



    வாழ்க்கை முறையில் பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. முன்பைவிட இப்போது எங்குச் சென்றாலும் மக்கள் என்னை அடையாளம் கண்டு விடுகிறார்கள். இதற்கு முன் அவ்வாறாக இல்லை. உங்களின் அன்பிற்கும், ஆதரவுக்கும் எப்போதும் நான் நன்றிக்கடன் பட்டவளாக இருக்கிறேன். இனிமேலும் இருப்பேன். இன்று நான் உலகம் முழுவதும் பேசப்படுபவளாக இருப்பதற்குக் காரணம் உங்களின் ஆதரவும், அன்பும் மட்டுமே” என்றார்.
    நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்ட மகத், மீண்டும் காதலியுடன் இணைந்திருக்கிறார். #Mahat #BiggBoss2
    பிக்பாஸ் 2 வீட்டில் இருந்தபோது நடிகர் மகத், யாஷிகா மீது காதலில் விழுந்தார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மனமுடைந்து காதலை முறித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் பிராச்சியை சந்தித்து பேசி சமாதானம் செய்து காதலை புதுப்பித்துவிட்டார் மகத்.

    அந்த பெண்ணும் மகத்தை மன்னித்து அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்டாகிராமில் மகத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காத போதே பிராச்சி அவரை மன்னித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவை பார்த்து காதலை சொன்ன மகத் வெளியே வந்ததும் ’யாஷிகா மீது ஈர்ப்பு மட்டுமே ஏற்பட்டது.

    காதலி என்றால் அது பிராச்சி மட்டுமே. யாஷிகாவுடன் ரிலே‌ஷன்ஷிப்பில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் தெரிவிக்க வில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம் எனது நெருங்கிய நண்பர் சிம்புதான். நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததை வீடியோக்கள் போட்டுக் காட்டி சுட்டிக் காட்டினார் சிம்பு.



    ஆனால் நான் நேர்மையாக நடந்து கொண்டதை பார்த்து அவர் பெருமைப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது சரி, அங்கு போலியாக இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சிம்பு சொல்லி அனுப்பி வைத்தார். அவர் சொல்லியபடி தான் நான் நடந்தேன்’ என்று கூறியுள்ளார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்ட சினேகன், தற்போது விழாவில் கலந்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்திருக்கிறார். #BiggBoss
    பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டவர் கவிஞர் சினேகன். இப்போது நடக்கும் பிக்பாஸ் சீசன் 2 விலும் அந்த வீட்டுக்கு சினேகன் சென்று வந்தார். நேற்று நடந்த பேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழாவில் சினேகன் கலந்துகொண்டார்.

    புதுமுக நடிகை டோனா சங்கர் என்பவர் தமிழ் சினிமாவில் ‘பேய் எல்லாம் பாவம்’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அரசு கதாநாயகனாக நடிக்கிறார்.

    மேலும் படத்தில் அப்புகுட்டி, ஸ்ரீஜித் ரவி, தர்‌ஷன், சிவகுமார், ரசூல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு நவீன் ‌ஷங்கர் இசையமைக்கிறார். படத்தை ஹன்ஸிபாய் தயாரிக்கிறார். இந்தப் படத்தை தீபக் நாராயணன் இயக்கி இருக்கிறார். 

    நிகழ்ச்சியில் சினேகன் பேசும்போது, ‘நான் 2500 பாடல்கள் எழுதி உள்ளேன். அப்போது கிடைக்காத அடையாளம் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது கிடைத்தது. அங்கு நாம் முழுமையாக என்ன செய்தோம் என்று தெரியாது. அவர்களுக்கு தேவையானதை மட்டும் ஒளிபரப்பினார்கள். அது வியாபாரத்துக்காக செய்தது. குறை கூற முடியாது.’ என்று பேசினார்.


    கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த டேனியல் நேற்று வெளியான நிலையில், இன்று காதலியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Danny #BiggBoss
    விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சிறிய வேடத்தில் பிரபலமானவர் டேனியல். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதில் இவருடன் அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்ட்ராயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.

    இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.

    வெளிய வந்த டேனியல், தனது காதலியான டெனிஷாவை இன்று கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.



    வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனத் டேனியல் தெரிவித்துள்ளார்.
    பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு வெளியேறிய மகத்தை நடிகர் சிம்பு, அவரை அடித்து வரவேற்றிருக்கிறார். #Simbu #STR #Mahat #BiggBoss2
    அஜித்துடன் ‘மங்காத்தா’, விஜய்யுடன் ‘ஜில்லா’, சிம்புவுடன் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் மகத். இவர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார்.

    சுமார் 70 நாட்கள் கடந்துள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து மகத் வெளியேறினார். இவரை அவரது நண்பரான சிம்பு அடித்து வரவேற்று இருக்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.



    நடிகர் மகத் துபாயில் வசிக்கும் தொழில் அதிபரான பிராச்சி மிஸ்ராவை 8 மாதங்களாக காதலித்து வந்தார். பிக் பாஸ் வீட்டிற்கு வந்த இடத்தில் அவருக்கு நடிகை யாஷிகா மீது காதல் ஏற்பட்டது. இதனால் பிராச்சி, மகத்திற்கு இடையேயான காதல் முறிந்ததாக கூறப்பட்டது. 
    ×