என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » bigg boss tamil 2
நீங்கள் தேடியது "Bigg Boss Tamil 2"
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி கலந்துக் கொண்ட மகத், மீண்டும் காதலியுடன் இணைந்திருக்கிறார். #Mahat #BiggBoss2
பிக்பாஸ் 2 வீட்டில் இருந்தபோது நடிகர் மகத், யாஷிகா மீது காதலில் விழுந்தார். இதை பார்த்த மகத்தின் காதலி பிராச்சி மனமுடைந்து காதலை முறித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்ததும் பிராச்சியை சந்தித்து பேசி சமாதானம் செய்து காதலை புதுப்பித்துவிட்டார் மகத்.
அந்த பெண்ணும் மகத்தை மன்னித்து அவரை மீண்டும் ஏற்றுக் கொண்டார். இன்ஸ்டாகிராமில் மகத்தின் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காத போதே பிராச்சி அவரை மன்னித்துவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் யாஷிகாவை பார்த்து காதலை சொன்ன மகத் வெளியே வந்ததும் ’யாஷிகா மீது ஈர்ப்பு மட்டுமே ஏற்பட்டது.
காதலி என்றால் அது பிராச்சி மட்டுமே. யாஷிகாவுடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பேன் என்று நான் ஒருபோதும் தெரிவிக்க வில்லை. பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள முக்கிய காரணம் எனது நெருங்கிய நண்பர் சிம்புதான். நான் எடுப்பார் கைப்பிள்ளையாக இருந்ததை வீடியோக்கள் போட்டுக் காட்டி சுட்டிக் காட்டினார் சிம்பு.
ஆனால் நான் நேர்மையாக நடந்து கொண்டதை பார்த்து அவர் பெருமைப்பட்டார். பிக் பாஸ் வீட்டிற்கு செல்வது சரி, அங்கு போலியாக இல்லாமல் நேர்மையாக இருக்க வேண்டும் என்று சிம்பு சொல்லி அனுப்பி வைத்தார். அவர் சொல்லியபடி தான் நான் நடந்தேன்’ என்று கூறியுள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துக் கொண்ட சினேகன், தற்போது விழாவில் கலந்துக் கொண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை கிண்டல் செய்திருக்கிறார். #BiggBoss
பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்துகொண்டவர் கவிஞர் சினேகன். இப்போது நடக்கும் பிக்பாஸ் சீசன் 2 விலும் அந்த வீட்டுக்கு சினேகன் சென்று வந்தார். நேற்று நடந்த பேய் எல்லாம் பாவம் இசை வெளியீட்டு விழாவில் சினேகன் கலந்துகொண்டார்.
புதுமுக நடிகை டோனா சங்கர் என்பவர் தமிழ் சினிமாவில் ‘பேய் எல்லாம் பாவம்’ என்ற படம் மூலம் அறிமுகமாகிறார். இந்தப் படத்தில் அரசு கதாநாயகனாக நடிக்கிறார்.
மேலும் படத்தில் அப்புகுட்டி, ஸ்ரீஜித் ரவி, தர்ஷன், சிவகுமார், ரசூல் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு நவீன் ஷங்கர் இசையமைக்கிறார். படத்தை ஹன்ஸிபாய் தயாரிக்கிறார். இந்தப் படத்தை தீபக் நாராயணன் இயக்கி இருக்கிறார்.
நிகழ்ச்சியில் சினேகன் பேசும்போது, ‘நான் 2500 பாடல்கள் எழுதி உள்ளேன். அப்போது கிடைக்காத அடையாளம் 100 நாட்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் இருந்தபோது கிடைத்தது. அங்கு நாம் முழுமையாக என்ன செய்தோம் என்று தெரியாது. அவர்களுக்கு தேவையானதை மட்டும் ஒளிபரப்பினார்கள். அது வியாபாரத்துக்காக செய்தது. குறை கூற முடியாது.’ என்று பேசினார்.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக இருந்த டேனியல் நேற்று வெளியான நிலையில், இன்று காதலியை திருமணம் செய்துக் கொண்டுள்ளார். #Danny #BiggBoss
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் சிறிய வேடத்தில் பிரபலமானவர் டேனியல். இவர் தற்போது கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டார். இதில் இவருடன் அனந்த் வைத்யநாதன், என்.எஸ்.கே.ரம்யா, வைஷ்ணவி, பாலாஜி, டேனியல், ஷாரிக் ஹாசன், நித்யா, ரித்விகா, ஜனனி, மும்தாஜ், பொன்னம்பலம், மமதி சாரி, சென்ட்ராயன், ஐஸ்வர்யா தத்தா, யாஷிகா ஆனந்த், மஹத் ஆகிய 16 பேரும் போட்டியாளர்களாகக் கலந்து கொண்டனர்.
இதில், மமதி சாரி, அனந்த் வைத்யநாதன், நித்யா, என்.எஸ்.கே.ரம்யா, பொன்னம்பலம், வைஷ்ணவி, ஷாரிக் ஹாசன், மஹத் ஆகியோர் ‘பிக் பாஸ்’ வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். நேற்று டேனியல் பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார்.
வெளிய வந்த டேனியல், தனது காதலியான டெனிஷாவை இன்று கரம் பிடித்துள்ளார். இருவரும் மாலை மாற்றி எளிமையாகப் பதிவுத் திருமணம் செய்து கொண்டனர்.
வீட்டில் சில பிரச்சினைகள் இருப்பதால் இந்த சந்தோஷத்தை நேரடியாக உங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியவில்லை எனத் டேனியல் தெரிவித்துள்ளார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசன் நிகழ்ச்சி ஆரம்பத்தில் அரசியல் வசனங்களை பேசி மக்களை கவர்ந்தார். #KamalHaasan #BiggBossTamil2
கமல் அரசியலுக்கு வந்த பிறகு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் அரசியல் பேசுகிறார். நேற்று முன் தினம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் “பொதுமக்கள்தான் மெஜாரிட்டி. நீங்க பொறுப்புல வெச்சவங்கதான் மைனாரிட்டி. ‘மைனாரிட்டி போடற ஆட்டத்தைப் பார்த்து பொதுமக்களும் ஆட்டம் போட்டாங்கன்னா விளையாட்டு கெட்டுப் போயிடும்.
‘இதையெல்லாம் பார்த்து மனம் நொந்து ஒதுங்கியிருந்தாலும் விளையாட்டு கெட்டுப் போயிடும்’ என்று உள்ளே நுழைந்தவுடனேயே அரசியல் நையாண்டியுடன் பேசத் துவங்கினார் கமல்.
முன்னாள் தலைவர்கள் கூடி ‘தகுதியற்ற தலைவர்’ என்கிற பரிசை ரம்யாவிற்கு தந்தார்கள். “இப்படித்தான்.. தலைவர்கள் தப்பு பண்ணும் போது.. அவங்களுக்கு பளிச்சுன்னு பரிசு தந்துடணும்’ என்று அரசியல் பொடியை நைசாக தூவினார் கமல். #KamalHaasan #BiggBossTamil2
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆண்கள் செய்யும் தவறுகளை பெண்களும் செய்ய நினைக்க வேண்டாம் என்று பெண்களுக்கு கமல் அறிவுரை வழங்கினார். #BiggBossTamil2 #KamalHaasan
பிக்பாஸ் நிகழ்ச்சி மேற்கத்திய நாடுகளிலும் வட இந்தியாவிலும் பிரபலமான நிகழ்ச்சி. குறிப்பிட்ட பிரபலங்களை 100 நாட்கள் ஒரே வீட்டில் தங்கவைத்து அவர்கள் நடந்து கொள்வதை அப்படியே படம் பிடித்து காட்டும் நிகழ்ச்சி இது.
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு ஒளிபரப்பாகி வரவேற்பை பெற்றது.
முதல் பாகத்தில் ஆரவ், ஓவியா காதல், ஜூலியின் நாடகம், ஓவியா தற்கொலை முயற்சி, காயத்ரி ரகுராமின் கெட்டவார்த்தை இரண்டாம் பாகத்தில் மகத்-யாஷிகா நெருக்கம், ஒரே படுக்கையில் ஆணும் பெண்ணும் என வேறு பாதையில் செல்கிறது.
இதை எல்லாம் கமல் நேர்த்தியாக சமாளித்து வருகிறார். யாரும் மனம் கோணாதபடி அதே நேரத்தில் அவர்களது தவறை உணரும் வகையில் அவர்களுக்கு புரிய வைக்கிறார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தூங்கப் போகும் நேரத்தில் பெண்களின் படுக்கை அறையில் மகத் படுத்துக்கொண்டு சத்தமாக பேசிக் கொண்டிருந்தது குறித்து பொன்னம்பலம் பலத்த ஆட்சேபனை எழுப்பினார்.
மகத், யாஷிகா, ஷாரிக், ஐஸ்வர்யா கூட்டணி செய்யும் சில விஷயங்கள் அவருக்குப் பிடிக்கவில்லை. ‘‘இங்கு எல்லை மீறிய சில விஷயங்கள் நடக்கின்றன. அது தொடரக் கூடாது. தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் காக்கப்பட வேண்டும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மக்கள் பார்க்கிற நிகழ்ச்சி இது. தப்பாகிடக் கூடாது” என்றார்.
“நான் பேச வேண்டும் என்று நினைத்ததை நீங்கள் பேசிவிட்டீர்கள்” என்று பொன்னம்பலத்தின் கருத்தை ஆதரித்தார்.
இந்த நிகழ்ச்சியின் தரம் குறித்த பொறுப்பும் கடமையும் எனக்கு இருக்கு என்று அனந்த் வைத்தியநாதன் கூறியபோது கமல் அதை வழிமொழிந்தார்.
பொன்னம்பலம் சில கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தினார் என்று அவரை பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும் சிறைக்கு தள்ளினார்கள். அப்போது கமல் கூறியதாவது:-
“பொன்னம்பலம் - அனந்த் ஆகிய இரண்டு பேருக்குமே இந்த வீட்டின் மீது அக்கறையுள்ளது. பொன்னம்பலம் ‘அப்பா’ வாக இருந்து கண்டித்தார். அனந்த் ‘தாத்தா’வாக இருந்து செல்லம் கொடுத்தார். பொன்னம்பலம் விழிப்பாக இருந்து கவனித்த சில விஷயங்களை தூங்கிவிட்டதால் அனந்த் கவனிக்கவில்லை. ஆணுக்குச் சமமாக வர வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆண் செய்யும் தவறுகளையெல்லாம் பெண்கள் செய்யக் கூடாது. ஆண்களை விடவும் சிறப்பான காரியங்களை செய்து அவர்களை ஜெயித்துக் காட்டணும்.
நீங்கள் இன்னமும் மக்கள் மனதில் இடம்பிடிக்கவில்லை என்பதைச் சுட்டிக் காட்டுகிறேன். இதை அறிவுரை, ஆலோசனை, டிப்ஸ்’ என்று எப்படி வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தரப்பட்டிருக்கும் இந்த அரிய வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். சினிமாவில் நான் அப்படித்தான் பயன்படுத்திக்கிட்டேன். ஆரம்பத்துல என்னை யாரும் கவனிக்கவேயில்லை. பாலசந்தர் கண்களில் படும்படியாகச் சில காரியங்களைச் செய்தேன். புகழ்பெற்றேன். நீங்கள் நீங்களாக இருங்கள். தவறுகளைத் திருத்திக் கொள்ளுங்கள்’.
இவ்வாறு அவர் கூறினார். #BiggBossTamil2 #KamalHaasan
கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் நடித்து வரும் பிந்து மாதவி, பிக்பாஸ் வீட்டுக்குள் இனி போகமாட்டேன் என்று கூறினார். #BiggBossTamil2 #BindhuMadhavi
நடிகை பிந்துமாதவி கடந்த ஆண்டு நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று அங்கு சில நாட்கள் தங்கி இருந்தவர். அவர் தற்போது கரு.பழனியப்பன் இயக்கத்தில் ‘புகழேந்தி எனும் நான்’ படத்தில் அருள்நிதி ஜோடியாக நடித்து வருகிறார்.
இதுகுறித்து பிந்துமாதவி பேசும் போது,
“இது அரசியல் படம். அருள்நிதி எனக்கு நல்ல நண்பர். இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிந்து இருக்கிறது. ஐ.ஏ.எஸ் தேர்வுக்குத் தயாராகும் பெண்ணாக இந்த படத்தில் நடிக்கிறேன். எனக்கு நல்ல பெயர் வாங்கித்தரும் படமாக இது அமையும். வாழ்க்கையில் ஒருமுறை ‘பிக் பாஸ்’ வீட்டுக்குள்ளே இருந்து விட்டேன். அதுபோதும். இன்னொரு தடவை அது நடக்காது.
அப்படி வாய்ப்பு வந்தாலும் பிக்பாஸ் வீட்டுக்குள் போக மாட்டேன். ஆனால் எப்போதாவது விருந்தாளி போல அழைத்தால் போகலாம். `பிக்பாஸ் 2’வில் கலந்துகொள்பவர்கள் யாராக இருந்தாலும் நீங்கள் நீங்களாக இருங்கள். கண்டிப்பாக ஜெயிக்கலாம்‘’ என்று கூறி இருக்கிறார். #BiggBossTamil2 #BindhuMadhavi
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X