search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kalavani 2"

    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்தின் பிரச்சனை முடிவுக்கு வந்துள்ளது.
    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘களவாணி 2’. இப்படத்திற்கான காப்பிரைட் உரிமை தன்னிடம் இருப்பதாகவும், இதற்காக நடிகர் விமலிடம் பணம் கொடுத்ததாகவும் கூறி சிங்காரவேலன் தரப்பினர் நீதிமன்றத்தில் தடையுத்தரவு பெற்றிருந்தனர். 

    பின்னர் இயக்குனர் சற்குணம் தரப்பினர் இந்த தடையை உடைத்தனர். இருப்பினும் வழக்கு நிலுவையில் இருந்ததால் படத்தை வெளியிடுவதில் முட்டுக்கட்டை நீடித்தது. இந்நிலையில் இன்று நேரில் சந்தித்து கொண்ட விமல் மற்றும் சிங்காரவேலன் பிரச்சனையை பேசி தீர்த்து கொண்டனர்.



    சிங்காரவேலன் கொடுத்த பணத்திற்கு ஈடாக 2019 ஆம் ஆண்டிற்குள் இரண்டு படங்களில் நடித்து கொடுத்து விடுவதாக விமல் உத்தரவாத கடிதம் கொடுத்ததையடுத்து வழக்கை வாபஸ் பெறுவதாக சிங்காரவேலன் தெரிவித்துள்ளார். இதனால் களவாணி - 2 படத்திற்கான தடை முற்றிலுமாக நீங்கியிருக்கிறது.
    ‘களவாணி-2’ பட விவகாரத்தில் படத்தை வெளியிடுவது குறித்து சிலர் தன்னை மிரட்டுவதாகவும், அடியாட்களை ஏவி கொலை மிரட்டல் விடுப்பதாகவும் இயக்குநர் சற்குணம் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். #Sargunam
    ‘களவாணி-2’ பட இயக்குனர் சற்குணம், நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ‘களவாணி-2’ படத்தை நானே தயாரித்து இயக்கி உள்ளேன். நடிகர் விமல் அந்த படத்தில் கதாநாயகனாக நடித்து உள்ளார். இம்மாதம் படத்தை திரையிட திட்டமிட்டு இருந்தேன். அதுபோல விளம்பரமும் செய்திருந்தேன்.

    ஆனால் படத்தை வெளியிட ஐகோர்ட்டு தடை விதித்துவிட்டது. தற்போது அந்த தடையை ஐகோர்ட்டு விலக்கிவிட்டது. படத்தை வெளியிடலாம் என்றும் ஐகோர்ட்டு கூறிவிட்டது. இந்த நிலையில் ‘களவாணி-2’ படத்தை எப்படி நீ வெளியிடுகிறாய், பார்ப்போம்? என்று என்னை போனில் சிலர் மிரட்டுகிறார்கள். அடியாட்கள் நேரடியாக என்னிடம் அனுப்பி கொலை மிரட்டல் விடுக்கிறார்கள்.



    இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளேன். உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இவ்வாறு இயக்குனர் சற்குணம் கூறினார். #Kalavani2 #Sargunam #Vemal #Oviyaa

    சற்குணம் இயக்கத்தில் விமல் - ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் `களவாணி 2' படத்திற்கு நீதிமன்றம் முதலில் தடை விதித்திருந்த நிலையில், தற்போது தடையை நீக்கியுள்ளது. #Kalavani2 #Vemal
    நடிகர் விமல், ஓவியா உள்பட பலர் நடித்துள்ள திரைப்படம் `களவாணி 2'. இந்த திரைப்படம் வருகிற மே 4-ந் தேதி வெளியாக உள்ளதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான வர்மாண்ஸ் பிலிம்ஸ் என்ற நிறுவனம் விளம்பரம் வெளியிட்டது.

    இந்த படத்துக்கு தடை கேட்டு சென்னை ஐகோர்ட்டில் குமரன் வழக்கு தொடர்ந்தார். அதில், களவாணி 2 என்ற திரைப்படத்தின் உரிமையை மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுள்ளேன். அதனால், அந்த திரைபடத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், `களவாணி 2' திரைப்படத்தை ஜூன் 10-ந் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டார்.



    இந்த நிலையில், இந்த தடையை நீக்க கோரி சென்னை ஐகோர்ட்டில் வர்மாண்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஏ.சற்குணம் என்பவர் மனு தாக்கல் செய்தார். அதில், ‘களவாணி 2 தலைப்பை, களவாணி திரைப்படத்தை தயாரித்த ஷெர்ளி பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து வாங்கினேன். களவாணி 2 திரைப்படத்தை தயாரித்து இயக்கியுள்ளேன். இந்த தலைப்புக்கும், திரைப்படத்துக்கும், குமரன், மெரினா பிக்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் சிங்காரவேலன் ஆகியோருக்கு தொடர்பு எதுவும் இல்லை. தவறான தகவல்களை அளித்து, இந்த திரைபடத்துக்கு தடை பெற்றுள்ளனர். எனவே, இந்த தடையை நீக்க வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

    இந்த வழக்கு நீதிபதி வைத்தியநாதன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வக்கீல் சுதா ஆஜராகி வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, களவாணி 2 திரைப்படத்துக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட தடையை நீக்கி உத்தரவிட்டார். #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam

    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘களவாணி 2’ படத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ள நிலையில், இதுகுறித்து விநியோகஸ்தர் சிங்காரவேலன் விளக்கம் அளித்துள்ளார். #Kalavani2 #Vemal
    விமல், ஓவியா நடிப்பில் இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘களவாணி’. தற்போது அதே கூட்டணியில் ‘களவாணி 2’ படம் ரிலீசுக்கு தயாராகி உள்ளது.

    இந்த நிலையில் விநியோகஸ்தரும். தயாரிப்பாளருமான சிங்காரவேலன் இந்த படத்தை வெளியிட நீதிமன்றம் மூலம் ஆறு வார இடைக்காலத் தடை பெற்றுள்ளார்.

    இதுகுறித்து படத்தின் இயக்குனர் சற்குணம் வெளியிட்டுள்ள வீடியோவில் இந்த படத்தை தான் தயாரித்துள்ளதாகவும், விமலுக்கும் தயாரிப்பாளர் சிங்காரவேலனுக்கும் இடையே உள்ள பணப் பிரச்சினை தொடர்பாக, ‘களவாணி 2’ படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் சிங்கார வேலன் இடைக்கால தடை வாங்கி உள்ளார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

    இதுகுறித்து விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்காரவேலன் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:-

    ‘விமல் சொந்தமாகத் தயாரித்து நடித்த ‘மன்னர் வகையறா’ என்கிற படத்திற்கு என்னிடம் மூன்று கோடி ரூபாய் பைனான்ஸ் பெற்றிருந்தார். மூன்று கோடியில் அவரால் படத்தை முடிக்க முடியவில்லை.



    இன்னும் இரண்டு கோடி ரூபாய் கொடுத்தால்தான் படத்தை முடித்து வெளியிட முடியும் என்றும், இல்லை என்றால் இந்தப் படத்தை அப்படியே கிடப்பில் போட்டு விடுவேன் என்கிற ரீதியில் ஒரு மறைமுகமான மிரட்டல் விடுத்தார். நான் மேற்கொண்டு பணம் கொடுக்கவில்லை.

    சில நாட்கள் கழித்து என்னை அழைத்து பேசிய விமல், ‘களவாணி 2’ படத்தைத் தயாரிக்க ஒரு குறிப்பிட்ட தொகையை பைனான்ஸ் செய்து உதவுமாறும் அந்தத் தொகையை வைத்து ஏற்கனவே நின்று கொண்டிருக்கும் மன்னர் வகையறா படத்தை முடித்து வெளியிட்டு விடுவோம் என்றும் ‘களவாணி 2’ படத்தையும் தொடங்கி விடுவோம் என்றும் மன்னர் வகையறா படத்துக்காக நீங்கள் கொடுத்த பணம் உங்களைத் தேடி வந்துவிடும் என்றும் கேட்டுக்கொண்டார்.

    நானும் அதற்கு ஒப்புக் கொண்டு மேலும் ஒரு கோடி ரூபாய் கொடுத்து என்னிடம் வாங்கிய பணத்தின் மதிப்பிற்கு களவாணி 2 படத்தை பர்ஸ்ட் காப்பி அடிப்படையில் எடுத்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என விமலிடம் கூறி அதை அக்டோபர் 17-ந் தேதி ஒப்பந்தமாகவும் பதிவு செய்து கொண்டேன்.

    இன்றைய தேதி வரையில் விமல் எனக்கு 4.32 கோடி ரூபாய் தர வேண்டி இருக்கிறது. இந்தநிலையில் தான் ‘களவாணி 2’ படம் வர்மன்ஸ் புரொடக்‌‌ஷன்ஸ் சார்பில் தயாராகி வருவதாக அறிவிப்பு வெளியானது.



    நான் இயக்குநர் சற்குணத்திடமும். விமலிடமும் ஏற்கனவே காப்பிரைட் அடிப்படையில் இந்தப் படத்தை எடுத்துக் கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டிருக்கிறீர்கள் என்றும் அதை மீறி இவ்வாறு விளம்பரப்படுத்துவது முறை அல்ல என்றும் பல முறை கூறியும் அவர்களிடம் இருந்து பதில் இல்லாததால் நீதிமன்றத்தை அணுகினேன். அங்கேயும் அவர்கள் ஆஜராகவில்லை. எங்கள் தரப்பு வாதங்களையும். ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிமன்றம் ‘களவாணி 2’ படத்துக்கான காப்பிரைட் உரிமை எங்களுக்குத்தான் என்று கூறி தீர்ப்பு வழங்கியதுடன், களவாணி 2 படத்தை வேறு யாரும் வெளியிடக் கூடாது என ஆறு வார கால இடைக்கால தடையும் விதித்துள்ளது.

    நீதிமன்றம் நல்ல தீர்ப்பைத் தரும் என இயக்குநர் சற்குணம் கூறியிருக்கிறார். உண்மையிலேயே நீதிமன்றம் எங்களுக்கு நல்ல தீர்ப்பைத்தான் கொடுத்துள்ளது. இதன் மீதான விசாரணை வரும் ஜூன் 10-ந் தேதி நடைபெற இருக்கிறது’.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #Kalavani2 #Vemal #Oviyaa #Sargunam #Singaravelan

    சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் உருவாகியிருக்கும் ‘களவாணி 2’ படத்தின் டிரைலரை அருண் விஜய் வெளியிட்டுள்ளார். #Kalavani2Trailer
    கடந்த 2010-ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘களவாணி’.  சற்குணம் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார். இந்த படத்தின் மூலம்தான் ஓவியா தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    நடிகர் விமலின் திரையுலக வாழ்க்கையை புதிய பாதைக்கு திருப்பிய ‘களவாணி’ படத்தின் இரண்டாவது பாகம் தற்போது உருவாகியுள்ளது. இதில் விமலுக்கு ஜோடியாக ஓவியா நடிக்கிறார். மேலும் சூரி, கஞ்சா கருப்பு, சரண்யா பொன்வண்ணன், இளவரசு என முதல் பாகத்தில் நடித்த பலரும் இப்படத்தில் நடித்துள்ளார்கள்.



    இந்நிலையில், இப்படத்தின் டிரைலரை நடிகர் அருண் விஜய் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அரசியல் கலந்த இந்த டிரைலர் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிப்பதாக ஓவியா கூறினார். #Oviyaa
    களவாணி-2, 90 எம்.எல், காஞ்சனா என்று சினிமாவில் பிசியாக இருக்கும் ஓவியா அளித்த பேட்டி:

    சின்ன வயசிலிருந்தே ரொம்ப சுதந்திரமா இருக்கணும்னு நினைக்கிற பொண்ணு நான். யாருகிட்டயும் எந்த உதவியும் கேட்கமாட்டேன். என் செலவைக்கூட நானே பார்த்துக்குவேன். அந்த வயசுல பணம் சம்பாதிக்க என்ன பண்ணலாம்னு யோசிச்சப்பதான் மாடலிங் வாய்ப்பு வந்துச்சு. மாடலிங், சின்னச் சின்ன விளம்பரங்கள் பண்ண ஆரம்பிச்சேன். என் பாக்கெட் மணிக்கு அது சரியா இருந்துச்சு. அப்போதான் என் மாடலிங் போட்டோஸ் பார்த்துட்டு ‘களவாணி’ படத்தின் டைரக்டர் சற்குணம் கூப்பிட்டார். ‘களவாணி’ படத்திலிருந்து ஹெலன் ஓவியாவா மாறியாச்சு.

    புத்தாண்டு திட்டம் என்ன?

    எப்போதும் போல நண்பர்களுடன் கொண்டாட திட்டமிட்டுள்ளேன். அதன் பின்னர் எனக்கு மிகவும் பிடித்த பயணம் மேற்கொள்ள இருக்கிறேன். அனேகமாக இமயமலைக்கு செல்லலாம்.

    உங்கள் வாழ்க்கையை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின், முன் என இரண்டாக பிரிக்கலாமா?

    நிறைய பேர் நான் ஒரே இரவில் பெரிய ஆளாக, பிரபலமாக மாறிவிட்டதாக நினைக்கிறார்கள். அது ஓரளவு உண்மை தான். அந்த நிகழ்ச்சி மூலம் தான் எனக்கு இவ்வளவு புகழ் கிடைத்தது. ஆனால் பெரிய கஷ்டங்கள், சிரமங்களுக்கு பிறகே இந்த இடத்திற்கு வந்துள்ளேன். பல ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவுக்கு வந்துவிட்டேன். ஆனால் இந்த புகழ் கிடைக்கவில்லை. பதிலாக போராடிக்கொண்டே இருந்தேன். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து ஒரு ஆண்டுக்கு மேல் ஆகியும் கூட மக்கள் என்னை மறக்காமல்நேசிக்கிறார்கள். அது ஆச்சர்யப்படுத்துகிறது.



    இணையதளமோ, நேரிலோ என்னை ரசிகர்கள் அவர்கள் குடும்பங்களில் ஒருவராக தான் பார்க்கிறார்கள். இது என் வாழ்க்கையின் மிக முக்கிய தருணம். சிலர் என்னுடைய ரசிகர்களை தவறாக பயன்படுத்தி முறைகேடுகளில் ஈடுபடுத்தி சம்பாதிக்கிறார்கள். நான் சின்ன சின்ன வேடங்களில் நடித்த படங்களுக்கு கூட என் பெயரை சொல்லி விளம்பரம் தேடுகிறார்கள். வியாபார பொருட்களிலும் என் பெயரை பயன்படுத்துகிறார்கள். இது வருத்தம் அளிக்கிறது.

    கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆர்வமா?

    ஆமாம். ஆனால் அறம் போன்ற சீரியசான படங்கள் அல்ல. என்னுடைய படங்கள் வித்தியாசமானதாக இருக்கும். மாஸ் மற்றும் பொழுதுபோக்கு படங்களாக இருக்கும். என் ரசிகர்களும் என்னை போலவே இருக்க வேண்டும். கருத்து சொல்லி போரடிக்க விரும்பவில்லை. #Oviyaa #Kanchana3 #Kalavani2 #90ML

    பிக்பாஸ் முதல் சீசன் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ஓவியா, தற்போது ஆண்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். #Oviya #BiggBoss
     நடிகை ஓவியா சினிமாவில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் வீட்டுக்கு சென்று வந்த பிறகே ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதனால் அடுத்தடுத்து வாய்ப்புகள் குவிந்தன.

    தற்போது ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் காஞ்சனா 3 படத்தில் நடித்து வருகிறார். ஓவியா நடிப்பில் 90 எம்.எல் திரைப்படம் ரிலீசாக உள்ளது. 

    அதைத் தொடர்ந்து சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் களவாணி 2 ரிலீசாக உள்ளது. அவ்வப்போது டுவிட்டரில் பல வி‌ஷயங்களைப் பகிரும் ஓவியா, பெண்களைப் பெருமைப்படுத்தும் விதமாக, புக்கர் விருது மற்றும் நோபல் பரிசு பெற்ற ஆங்கிலக் கவிஞர் வில்லியம் ஜெரால்டு கோல்டிங்கின் வாசகத்தைப் பகிர்ந்துள்ளார்.

    பெண்கள் மிகச் சக்தி வாய்ந்தவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். பெண்களிடம் எதைக் கொடுத்தாலும் அதை சிறப்பாக மாற்றக் கூடியவர்கள்.

    அவளிடம் உயிரணுவைக் கொடுத்தால் அதை அவள் குழந்தையாகக் கொடுப்பாள். அவளுக்கு ஒரு வீடு கொடுத்தால் அவள் சிறந்த இல்லத்தைத் தருவாள். மளிகைப் பொருட்களை கொடுத்தால் உங்களுக்குச் சாப்பாடு தருவாள்.



    நீங்கள் புன்னகையை கொடுத்தால் அவள் இதயத்தைத் தருவாள். அவளிடம் எதைக் கொடுத்தாலும் அதை பன்மடங்காக்கி திரும்பி தருவாள். அதனால் அவளுக்கு மோசமாக ஏதாவது செய்தால், அதனால் ஏற்படும் பன்மடங்கு விளைவுகளை சந்திக்கத் தயாராக இருங்கள்” என்பதை பகிர்ந்துள்ளார்.
    சுராஜ் இயக்கத்தில் விமல் நடிக்கும் புதிய படத்தில் வடிவேலு ஒப்பந்தமாகி இருந்த நிலையில், தற்போது பார்த்திபனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. #Parthiban #Vadivelu
    விமல் நடிப்பில் கடைசியாக வெளியான ‘மன்னர் வகையறா’ படம் ஓரளவுக்கு வரவேற்பை பெற்றது. விமல் நடிப்பில் அடுத்ததாக ‘கன்னிராசி’, ‘களவாணி-2’ உள்ளிட்ட படங்கள் உருவாகி வருகின்றன.

    விமல் தற்போது எழில் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை முடித்த பிறகு அடுத்ததாக சுராஜ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தில் விமலுடன் வைக்கைப் புயல் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மருதமலை பட பாணியில் கலகலப்பாக உருவாகும் இந்த படத்தில் விமல் - வடிவேலு இருவரும் போலீசாக நடிக்கின்றனர்.



    இந்த நிலையில், நடிகர் பார்த்திபனும் இந்த படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. எனினும் விமல், வடிவேலுவுடன், பார்த்திபன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எதுவும் இருக்காது என்றும் கூறப்படுகிறது.

    இந்த படம் குறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #Parthiban #Vadivelu

    ‘களவாணி 2’ படத்தில் இடம் பெறும் ஒரு பாடல் காட்சிக்காக விமலும் ஓவியாவும் பழமையான வீட்டை சுற்றி சுற்றி வருகிறார்கள். #Vimal #Oviya #Kalavani2
    விமல் - ஓவியா கூட்டணியில் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘களவாணி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணியில் ‘களவாணி 2’ திரைப்படம் உருவாகி வருகிறது. 

    சமீபத்தில் இந்த ஜோடி நடித்த 'ஒட்டாரம் பண்ணாத' என்ற பாடல் தஞ்சாவூர் பக்கத்தில் உள்ள ஒரு கிராமத்தில் படமாக்கப்பட்டது. யூடியூபில் 2.5 கோடிக்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டு சாதனை புரிந்துள்ளது. இயக்குனர் சற்குணம் மற்றும் படக்குழுவினர் இந்த பாடலை ஒரு பழமையான வீட்டின் பின்னணியில் எடுக்க திட்டமிட்டனர். இதற்காக கலை இயக்குனர் குணசேகரன், நிஜத்தை பிரதிபலிப்பது போன்ற ஒரு பழமையான வீட்டை வடிவமைத்துள்ளார். இந்த படத்தின் மிக முக்கியமான அம்சமாக இது இருக்கும் என்று கருதப்படுகிறது.

    இறுதிகட்ட படப்பிடிப்பு பணிகளில் இருக்கும் களவாணி 2 படத்தின் மொத்த படப்பிடிப்பும் ஜூன் 22ஆம் தேதி முடிய இருக்கிறது. எப்போதும் உத்வேகத்துடன் படத்தை முடிப்பதில் கவனத்தோடு இருக்கும் இயக்குனர் சற்குணம், மிக கடுமையாக இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறார். 



    ஏறக்குறைய முதல் பாகத்தில் நடித்த அத்தனை நடிகர்களும், அதே கதாபாத்திரத்தில் இந்த படத்திலும் நடித்திருக்கிறார்கள். ஆயினும் நடிகர் சூரி இந்த படத்தில் நடிக்கவில்லை, ஆர்ஜே விக்னேஷ் நாயகன் விமலின் நெருங்கிய நண்பராக நடிக்கிறார்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்ற நடிகை ஓவியா, களவாணி 2 படப்பிடிப்பில் கலந்துக் கொண்டு தஞ்சாவூர் மக்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளார். #Oviya
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழ்நாட்டு ரசிகர்களின் இதயத்தில் இடம் பிடித்தவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவை தேடி வாய்ப்புகள் குவிந்தன. ஆனால் அவர் தேர்ந்தெடுத்தது மூன்று படங்கள் தான். களவாணி 2, 90 எம்.எல், மற்றும் காஞ்சனா -3. இவற்றில் 90 எம்.எல். என்பது ஓவியா கதை நாயகியாக நடிக்கும் படம். இந்த படம் முடிந்துவிட்டது.

    காஞ்சனா-3 லாரன்ஸ் இயக்கத்தில் நடிக்கும் படம். இந்த படத்துக்கு ஒரு பாடல் மட்டும் எடுக்க வேண்டி இருக்கிறது. அடுத்து ஓவியா மிகவும் எதிர்பார்க்கும் படம் களவாணி -2. சற்குணம் இயக்கத்தில் விமல், ஓவியா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றி பெற்ற களவாணி படத்தின் தொடர்ச்சி இது. 



    இந்த படத்தில் ஓவியாவுக்கு கனமான வேடம். இதற்காக நேற்று முதல் தஞ்சாவூரில் முகாமிட்டுள்ளார் ஓவியா. முந்தைய களவாணி எடுத்த இடங்களில் தான் படப்பிடிப்பு என்பதால் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் ஓவியாவை தேடிவந்து பார்த்து படம் எடுத்துக்கொள்கிறார்கள். ஓவியாவும் நெகிழ்ச்சியுடன் அவர்களிடம் பேசுகிறார்.
    ×