என் மலர்
நீங்கள் தேடியது "Actor vijay Sethupathi"
- பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள்
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதியராக கலந்து கொண்ட பிரஜினும் சாண்ட்ராவும் நாங்கள் தனித்தனி கண்டஸ்டண்ட் என்று சொல்லிக் கொண்டு ஒரே போட்டியை தான் விளையாடி வருகின்றனர். அதேபோன்று சாண்ட்ரா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன் வில்லத்தனத்தை எல்லாம் காண்பித்து வருகிறார். வீட்டினுள் சண்டையை மூட்டி விடுவது. பார்வதியுடன் சேர்ந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கனி வெளியேறுவார் என்று கூறப்பட்டது. அனால் கடைசி நேரத்தில் இந்த வாரம் எவிக்ஷன் இல்லை என்று அறிவிக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட ஆதிரை பிக்பாஸ் வீட்டிற்கு ரீ என்ட்ரி கொடுக்கவுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. FJ - வியானா காதல் ட்ராக்கில் ஆதிரையின் என்ட்ரி குழப்பத்தை ஏற்படுத்தி பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பாக்கும் என்று கூறப்படுகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார்.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 50 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தம்பதியராக கலந்து கொண்ட பிரஜினும் சாண்ட்ராவும் நாங்கள் தனித்தனி கண்டஸ்டண்ட் என்று சொல்லிக் கொண்டு ஒரே போட்டியை தான் விளையாடி வருகின்றனர். அதேபோன்று சாண்ட்ரா ஆரம்பத்தில் அமைதியாக இருந்த நிலையில் தற்போது தன் வில்லத்தனத்தை எல்லாம் காண்பித்து வருகிறார். வீட்டினுள் சண்டையை மூட்டி விடுவது. பார்வதியுடன் சேர்ந்து எல்லோரையும் தரக்குறைவாக பேசுவது என பல வேலைகளை செய்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து யார் வெளியேறுவார்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, வாக்குகளின் அடிப்படையில் கனி மற்றும் ரம்யா ஜோ குறைந்த வாக்குகளை பெற்றுள்ளதாகவும் இந்த இருவர்களில் ஒருவர் பிக்பாஸ் வீட்டை விட்டு இந்த வாரம் வெளியேறுவார்கள் என்றும் கூறப்படுகிறது.
- இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி ‘ஜெயிலர்2’ வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
- ‘ஜெயிலர்2’ படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது.
இயக்குநர் நெல்சன்- நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் படம் 'ஜெயிலர்2'. இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. சென்னை, கேரளா, கோவா மற்றும் மைசூர் போன்ற இடங்களில் படப்பிடிப்பு ஏற்கனவே முடிந்துவிட்டது.
'ஜெயிலர்' முதல் பாகத்தில் நடித்தவர்களே இரண்டாம் பாகத்திலும் நடிப்பதாக கூறினாலும், ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் மற்றும் சிவராஜ்குமார் தவிர்த்து பிற நடிகர்களின் விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை.
சமீபத்தில் 'ஜெயில் 2' படத்தின் தனது படப்பிடிப்பை முடித்ததாக தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த் இப்படம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந்தேதி 'ஜெயிலர்2' வெளியாகும் என தெரிவித்து இருந்தார்.
இதனிடையே, 'ஜெயிலர்2' படத்தில் சந்தானம் நடிக்க இருப்பதால் நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது என கூறப்பட்டது. இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியும் இந்த படத்தில் இணைந்துள்ளதாகவும், கோவா படப்பிடிப்பின் போது அவர் படப்பிடிப்பு தளத்தில் இணைந்ததாகவும் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
இருப்பினும், இத்தகவல் தொடர்பாக விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினரிடமிருந்து எந்த தகவலும் வெளியாகவில்லை. உறுதிப்படுத்தல் எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை 'ஜெயிலர் 2 ' படத்தில் விஜய்சேதுபதி இணைவது உண்மையானால், கார்த்திக் சுப்பராஜின் பேட்ட (2019) படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி ரஜினிகாந்துடன் இணைந்து பணியாற்றும் இரண்டாவது படமாக இது இருக்கும்.
- நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது.
- பிக்பாஸ் நிகழ்ச்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை அதனால் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யவேண்டும் என்று எதிர்ப்பு குரல்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய சின்னத்திரை நடிகை பவித்ரா, "சின்னத்திரை நடிகர்களுக்கு சினிமாவில் எளிதில் வாய்ப்பு கிடைப்பதில்லை. பிக்பாஸ் வீடு பெண்களுக்கு பாதுகாப்பான இடம், நாட்டில் எவ்வளவோ சீரழிவுகள் நடக்கும் நிலையில், பிக்பாஸ் மீது மட்டும் குற்றம் சாட்டுவது ஏற்புடையது அல்ல" என்று தெரிவித்தார்.
- சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.
- ‘அரசன்’ படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
நடிகர் சிலம்பரசன் 'தக் லைப்' திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் 'அரசன்' படத்தில் நடித்து வருகிறார். இப்படம் ஒரு வடசென்னையில் நடக்கும் கேங்ஸ்டர் திரைப்படமாக உருவாகி வருகிறது.
இயக்குநர் வெற்றி மாறன் 'வடசென்னை' படத்துடன் தொடர்புடைய அதே காலகட்டத்துடன் தொடர்புடைய மற்றொரு கதையைப் படமாக்கி வருகிறார். இந்த படத்தில், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்க உள்ள இப்படம் கலைப்புலி எஸ்.தாணு தயாரிப்பில் உருவாகுகிறது.
சிம்பு இப்படத்தில் இளமை மற்றும் முதுமை என 2 தோற்றத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், 'அரசன்' படம் தொடர்பாக வெளியான புரோமோ வீடியோ வரவேற்பை பெற்றது. மேலும் 'அரசன்' படம் தெலுங்கிலும் வெளியாக உள்ளது.
இந்த நிலையில், 'அரசன்' படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக படக்குழு போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். விஜய் சேதுபதி இப்படத்தில் இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.
- விஜய் சேதுபதியின் பான்-இந்தியா ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது.
- தபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
தலைவன், தலைவி படத்திற்கு பின் பூரி ஜெகன்நாத்தின் பான்-இந்தியா ஆக்ஷன் படத்தில் விஜய் சேதுபதி கமிட் ஆகியிருந்தார். இப்படத்தில் நடிகைகள் தபு மற்றும் சம்யுக்தா இணைந்தனர். இந்த அறிவிப்பே ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தில் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் சார்மி கவுர் தெரிவித்துள்ளார். முக்கிய அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
பிரம்மாஜி, துனியா விஜய் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர். படத்திற்கு ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ளார். இப்படத்தின் தலைப்பு செப்டம்பர் மாதம் வெளியாக இருந்தநிலையில், சிலகாரணங்களால் வெளியிடப்படவில்லை. விரைவில் தலைப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார்.
- கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
திவாகர் என்பவர் இணையத்தில் ரீல்ஸ் விடீயோக்களை வெளியிட்டு பிரபலமானார். குறிப்பாக கஜினி படத்தில் சூர்யா தர்பூசணி சாப்பிடும் காட்சியை நடித்து காட்டி தனக்கு தானே வாட்டர்மெலன் ஸ்டார் என்ற பட்டத்தை கொடுத்து கொண்டு தொடர்ந்து வீடியோக்களை அவர் வெளியிட்டு வந்தார்.
தனக்கு மிகப்பெரிய நடிப்பு திறமை இருப்பதாகவும் தான் மிகப்பெரிய ஹீரோ மெட்டீரியல் என்று அவர் நினைத்துக்கொண்டு அவர் நேர்காணல்களில் பேசிய விஷயங்கள் இணையத்தில் சர்ச்சையை கிளப்பின.
இதனிடையே, நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9 இல் போட்டியாளராக திவாகர் கலந்துகொண்டார். அந்த நிகழ்ச்சியில் பெண்களிடம் அவர் தவறாக நடந்துகொண்டார் என்றும் சாதி ரீதியாக பேசினார் என்றும் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து கடந்த வாரம் அவர் வெளியேற்றப்பட்டார்.
30 வயதை தாண்டியும் தனக்கு திருமணம் நடக்கவில்லை என்று அவர் திவாகர் தொடர்ச்சியாக நேர்காணல்களில் கூறி வருகிறார். இந்நிலையில், திவாகருக்கு திருமணம் நடந்ததாக புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
அப்புகைப்படத்தில் திவாகர், கோட் சூட் போட்டுக்கொண்டு, கழுத்தில் மாலை அணிந்து கொண்டு ஒரு பெண்ணுக்கு அருகில் நிற்கிறார். அவர்களுக்கு பின்னால் திருமண மேடை பேக்-கிரவுண்டில் 2018ஆம் ஆண்டு, ஜூன் மாதம் 4ஆம் தேதி என்று எழுதப்பட்டிருக்கிறது.
அதே சமயம் இந்த புகைப்படம் உண்மையா என்று தெரியவில்லை. இதுகுறித்து திவாகரின் பதில் எப்படி இருக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
- கடந்த வாரம் திவாகர் வெளியேற்றப்பட்டார்.
- இந்த வார டாஸ்க்கில் சிறந்த அணியாக மாப் மாயாவிஸ்
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனின் முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.
அதன்பின் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
அதன்பின்பு துஷார் மற்றும் பிரவீன் ராஜ் மற்றும் திவாகர் ஆகியோர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் வீட்டின் வழக்கமான வேலைகளையே டாஸ்க் போல போட்டியாளர்கள் விளையாடினர். இதில் சிறந்த அணியாக மாப் மாயாவிஸ் அணியும் மோசமான அணியாக சாம்பார் ஸ்குவாட் அணியும் தேர்வானது.
இந்நிலையில், இந்த வார எவிக்ஷனில் கெமி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
- கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர்.
- கானா வினோத் அடித்த கவுண்டர்கள் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பு ஆக்கின.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
இந்த சீஸனின் முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.
இதனையடுத்து லக்சரி ஹவுஸ் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது. அதன்பின் வைல்ட் கார்டு போட்டியாளராக பிரஜின், சாண்ட்ரா, திவ்யா கணேஷ், அமித் பார்கவ் ஆகியோர் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றனர்.
கடந்த வாரம் துஷார் மற்றும் பிரவீன் ராஜ் ஆகிய இருவர் வெளியேற்றப்பட்டனர். இந்த வாரம் தர்பீசு சாம்ராஜ்ஜியம் கானா சாம்ராஜ்ஜியம் என பிக்பாஸ் வீடு பிளவுபட்டு போட்டிகள் நடந்தன. கானா வினோத் அடித்த கவுண்டர்கள் இந்த வார பிக்பாஸ் நிகழ்ச்சியை கலகலப்பு ஆக்கின.
இந்நிலையில், இந்த வார எவிக்ஷனில் கனி வெளியேற்றப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் பிரவீன் வெளியேற்றப்பட்டது விமர்சனத்திற்கு உள்ள நிலையில், நல்ல போட்டியாளராக கருதப்பட்ட கனியும் வெளியேற்றப்பட்டுள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதே சமயம் கடைசி நேரத்தில் பெண்கள் விஷயத்திலும் சாதி ரீதியாக தவறாக பேசிவரும் திவாகர் ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இதுதவிர 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இந்நிலையில், விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக இயக்குனர் பாலாஜி தரணிதரணுடன் மீண்டும் இணைகிறார்.
நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம், சீதக்காதி ஆகிய வெற்றிப் படங்களை இயக்கிய பாலாஜி தரணிதரண் இயக்கும் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.
விஜய் சேதுபதிக்கு ஜோடியாக ஜெய் பீம் புகழ் நடிகை லிஜோ மோல் ஜோஸ் நடிக்கிறார்.
- பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள்.
- வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் சேதுபதி, தற்போது மிஷ்கின் இயக்கத்தில் 'டிரெயின்' படத்திலும், பூரி ஜெகநாத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்திலும் நடித்து வருகிறார்.
இதுதவிர 'பிக்பாஸ்' நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதற்கிடையில் நிகழ்ச்சியில் அவர் பேசிய விஷயம் கவனம் ஈர்த்துள்ளது.
அதில் அவர், ''இந்த விளையாட்டில் பலரும் கடனை அடைக்கும் அளவுக்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறுகிறார்கள். நான் ஆயிரத்தில் சம்பாதித்தபோது அதே ஆயிரத்துக்கு கடன் இருந்தது. லட்சத்தில் சம்பாதித்தபோது அதற்கு தகுந்த கடன் இருந்தது.
தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன், ஆனாலும் அந்த கடன் பிரச்சனை என்னுடன் இருக்கத்தான் செய்கிறது. அதனால் அதனுடனேயே வாழ கற்றுக்கொண்டேன். வாழ்க்கையை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால்'' என்று விஜய் சேதுபதி பேசினார்.
- இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர்.
- சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை வெற்றிகரமாக முடித்தார்.
சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் பல்வேறு மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்க்குகளுடன் 100 நாட்கள் தங்கியிருப்பார்கள். டாஸ்க்குகளை கடந்து வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
நடிகர் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் தமிழ் சீசன் 9 தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் புதிய மாற்றங்களுடன், நிகழ்ச்சியை கூடுதலாக விறுவிறுப்பாக்கும் வகையில் பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
குறிப்பாக போட்டியாளர்கள் பிக் பாஸ் ஹவுஸ், லக்சரி ஹவுஸ் என இரண்டு குழுக்களாக பிரித்து விளையாடி வருகின்றனர். பிக் பாஸ் ஹவுஸ் எந்தவித சலுகைகள் இல்லாமலும் லக்சரியில் சமையல் உட்பட அனைத்து சலுகைகளும் கிடைக்கும்.
முதல் வாரத்தில் இயக்குநர் பிரவீன் காந்தியும் 2 ஆம் வாரம் அப்சரா சிஜேவும் 3 ஆம் வாரத்தில் ஆதிரையும் 4 ஆம் வாரத்தில் கலையரசனும் வெளியேற்றப்பட்டனர்.
கடந்த வாரம் லக்சரி ஹவுஸ் கிடையாது என்றும் அனைத்து போட்டியாளர்களும் பிக் பாஸ் வீட்டில் இருக்க வேண்டும் என்று புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டது.
இந்த வாரம் நடைபெற்ற ஹோட்டல் டாஸ்கின் விருந்தினராக பழைய போட்டியாளர்கள் களமிறக்கினர். இதில் தீபக், பிரியங்கா, மஞ்சரி ஆகியோர் பங்கேற்றனர். உள்ளே வந்த அவர்கள், போட்டியாளர்களின் செயல்களுக்கு ஸ்டார் கொடுத்தார்கள். வைல்ட் கார்டு போட்டியாளராக உள்ளே நுழைந்த சாண்ட்ரா தனக்கு கொடுத்த சீக்ரெட் டாஸ்க்கை முடித்து பிக்பாஸ் வீட்டர்களை அழவைத்து சம்பவம் செய்தார்.
இந்த வார எவிக்ஷன் பட்டியலில் வைல்ட் கார்டு போட்டியாளர்கள் தவிர மற்ற பெரும்பாலான போட்டியார்கள் இடம் பெற்றிருந்த நிலையில், துஷார் இந்த வாரம் வெளியேறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், இந்த டபுள் எவிக்ஷன் நடந்ததாகவும் அதில் 2 ஆவது நபராக பிரவீன் வெளியேற்றப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.






