என் மலர்
நீங்கள் தேடியது "Actor vijay Sethupathi"
- தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தின் அப்டேட்
- இந்தப் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார்.
தமிழ் திரையுலகின் குறிப்பிடத்தக்க இயக்குநர்களில் ஒருவர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம், சூப்பர் டீலக்ஸ் மற்றும் மாடர்ன் லவ் சென்னை (நினைவோ ஒரு பறவை) உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார். இதைத் தொடர்ந்து இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வெளியாகி உள்ளது.
அதன்படி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா இயக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கிறார். சூப்பர் டீலர்க்ஸ் திரைப்படத்திற்கு பிறகு இருவரும் புதிய படத்தில் இணைகின்றனர். இந்த நிைலயில், இருவரும் இணையும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நாளை (பிப்ரவரி 16) வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திரையுலகில் வித்தியாசமான கதையம்சம், ஆழமான அர்த்தமள்ள வசனங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளில் புதுமை என தியாகராஜன் குமாரராஜா இயக்கும் படங்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. அதன்படி இவர் இயக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகி இருப்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
படத்தில் நடிகராகவே வரும் விஜய்சேதுபதி தான் நடிக்கும் காதல் கதை செல்லவா என்கிற படத்தின் பர்ஸ்ட் லுக் ஒன்றை வெளியிடுகிறார். அந்த படத்தின் கதையை மக்களிடமே கேட்க நினைக்கும் விஜய் சேதுபதி, ரேடியோ எப்.எம் மூலம் பொது மக்களிடம் காதல் கதைகளை கேட்கிறார்.
அப்படி விஜய்சேதுபதிக்கு இரண்டு பெண்கள் போன் செய்கிறார்கள். அதில் ஒருவர் நிகிதா. வங்கியில் வேலை செய்கிறார். அதே வங்கியில் செக்யூரிட்டியாக வேலைசெய்கிறார் ஜெய்ராம். இவர்களுடைய காதல் கதையை சொல்கிறார்.
விஜய்சேதுபதியிடம் பேசும் மற்றொரு பெண், நகுலிடம் தனக்கு ஏற்பட்ட பழக்கத்தை பற்றி கூறுகிறார். இவர்களுக்கு சில ஆலோசனைகளையும் விஜய்சேதுபதி கூறுகிறார்.
கடைசியில், இருவர் வாழ்க்கையிலும் என்ன ஆனது? விஜய்சேதுபதி கதையை தேர்ந்தெடுத்தாரா? என்பது படத்தின் மீதிக்கதை..
நடிகர்கள்
விஜய் சேதுபதி வழக்கம் போல தனது எதார்த்தமான நடிப்பால் முத்திரை பதிக்கிறார். அதிக ஆர்ப்பாட்டம் இல்லாத வசன உச்சரிப்பும், கண்கள் வழியே கடத்தும் உணர்வுகளும் படத்திற்குப் பலம்.
ஜெயராம், தனது பரந்த அனுபவம் மற்றும் கலைஞரான திறமையால் இந்த காதல் கதையின் உணர்வுகளை நேர்த்தியாக வெளிப்படுத்தியுள்ளார்.
துடிப்பான இளைஞராகவும், அதே சமயம் காதலில் உருகும் காதலனாகவும் நகுல் சிறப்பான பங்களிப்பை வழங்கியுள்ளார். படத்தின் நாயகிகள் கதையின் காதல் கோணத்தை மிக நுட்பமாக வெளிப்படுத்துகின்றனர்.
இயக்கம்
ஒரு மென்மையான, அழகான காதல் கவிதையை இயக்க முயற்சியிருக்கிறார் இயக்குனர் சனில் களத்தில். கதைக்களம் நன்றாக இருந்தாலும், சில இடங்கள் நாம் ஏற்கனவே பார்த்த பழைய காதல் படங்களை நினைவுபடுத்துகின்றன. படத்தின் வேகம் சில இடங்களில் தொய்வடைகிறது. இரண்டாம் பாதியில் வரும் சில காட்சிகள் சற்று இழுவையாகத் தோன்றுகிறது.
இசை
படத்தின் பாடல்கள் மெலடி ரகமாக அமைந்துள்ளன. காதலைச் சொல்லும் காட்சிகளுக்குப் பின்னணி இசை கூடுதல் பலம்.
ஒளிப்பதிவு
காதலின் ஆழத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஒளிப்பதிவு அமைந்துள்ளது.
ரேட்டிங்- 2.5/5
- மௌன படமாக உருவாகி உள்ள இப்படம் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது
- பா.விஜய்யின் வரிகளில் பாடல் வெளியாகி உள்ளது.
விஜய் சேதுபதி, அரவிந்த் சாமி, அதிதி ராவ் ஹைத்ரி மற்றும் சித்தார்த் ஜாதவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள மௌன படம் காந்தி டாக்ஸ். கிஷோர் பாண்டுரங் பெலேகர் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் இம்மாதம் இறுதியில் 30ஆம் தேதியன்று வெளியாக உள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் மூன்றாவது பாடலான 'ஏதோ ஏதோ' வெளியாகி உள்ளது. நீண்ட நாட்களுக்கு பின்னர் பா.விஜய் எழுத்துகளில் உருவாகி உள்ள இப்பாடல் நல்ல மெலடியாக அமைந்துள்ளது. மௌனப் படம் என்பதால் இதன் பின்னணி இசை படத்திற்கு மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதற்கேற்றவாறே இசைப்புயலின் இசையும் அமைந்துள்ளது.
- 500 கோடி முதலீடு செய்துள்ளதாக கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது
- படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும்
ஹெச். வினோத் இயக்கத்தில், விஜய் நடித்துள்ள படம் ஜன நாயகன். பொங்கலை முன்னிட்டு, ஜன.9ஆம் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தணிக்கை சான்றிதழ் இழுபறியால் தற்போதுவரை வெளியாகவில்லை. இதனிடையே படத்திற்கு விரைந்து சான்றிதழ் வழங்க உத்தரவிடக்கோரி படக்குழு உயர்நீதிமன்றத்தை நாடியது. இதனையடுத்து ஜனவரி 9 அன்று தனி நீதிபதி பி.டி.ஆஷா இப்படத்திற்கு 'U/A 16+' சான்றிதழ் வழங்க உத்தரவிட்டார்.
இருப்பினும், இந்த உத்தரவை எதிர்த்து மத்திய தணிக்கை வாரியம் மேல்முறையீடு செய்ததால், சென்னை உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு அத்தீர்ப்பிற்கு இடைக்காலத் தடை விதித்தது. இந்த உத்தரவை எதிர்த்து தயாரிப்பு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியநிலையில் இது குறித்து சென்னை உயர்நீதிமன்றமே ஜனவரி 20 அன்று இறுதி முடிவெடுக்க வேண்டும் என்று பொங்கலன்று உத்தரவிட்டது.
இந்நிலையில் ஜனநாயகன் வழக்கு இன்று மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சினிமாட்டோகிராஃப் விதிகளின்படி, வாரியமே ஒரு படத்தைப் பார்த்து சான்றிதழைப் பரிந்துரைக்கலாம் அல்லது படத்தைப் பார்க்கும் பணியை மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பலாம். ஜனநாயகன் படம் தொடர்பாக புகார் வந்ததால் மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மறு தணிக்கை தொடர்பாக ஜனவரி 5ஆம் தேதியே ஜனநாயகன் பட தயாரிப்பு நிறுவனத்திற்கு தகவல் கொடுத்துவிட்டோம். ஜனவரி 6ம் தேதி தான் சான்றிதழ் கோரி பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. மறுஆய்வு முடிவை எதிர்த்து பட தயாரிப்பு நிறுவனம் வழக்கு தொடரவில்லை. பதில் மனு தாக்கலுக்கு அவகாசம் தராமல், மறு ஆய்வுக் குழுவுக்கு அனுப்பிய உத்தரவு தனி நீதிபதியால் ரத்து செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.
மேலும் வழக்கில் தணிக்கை வாரியம் பதிலளிக்க தனி நீதிபதி குறைந்தபட்ச கால அவகாசம் வழங்கியிருக்க வேண்டும். படத்தை 9ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாகவும், 500 கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கூறி உடனடி நிவாரணம் கோர முடியாது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
இதனையடுத்து மண்டல வாரியத்தில் யார் படத்தை பார்த்தார்கள்? சட்டப்படி படத்தை பார்த்து ஆய்வு செய்ய யாருக்கு அதிகாரம் உள்ளது? என தலைமை நீதிபதி கேள்வி எழுப்பினார். படத்தை பார்த்து ஆய்வு செய்து ஆலோசனை வழங்க குழு உள்ளது. அந்த குழு தான் படத்தை பார்த்தது என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து மண்டல தணிக்கை வாரிய அதிகாரி ஜனநாயகன் படத்தைப் பார்த்தாரா? என நீதிபதி கேள்வி. அதற்கு அவர் படத்தைப் பார்க்கவில்லை, தணிக்கை குழுவால் மட்டுமே பார்க்கப்பட்டது. படத்துக்கு சான்றிதழ் வழங்குவது குறித்து சென்சார் போர்டு தான் இறுதி முடிவு அறிவிக்கும் என தணிக்கை வாரியம் தெரிவித்தது. தொடர்ந்து பல்வேறு வாதங்கள் முன்வைக்கப்பட தணிக்கை சான்றிதழ் வழங்குவதை நிறுத்த சொன்னது யார் என நீதிபதி வினவினார். அதற்கு, புகாரை அடுத்து சான்றிதழ் வழங்கும் முடிவை நிறுத்திவைத்தோம். தற்போதுவரை இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என தணிக்கை வாரியம் தெரிவித்தது.
தொடர்ந்து உணவு இடைவேளைக்கு பிறகு தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- பிக்பாஸ் சீசனில் சபரி இரண்டாம் இடம் பிடித்தார்.
- விக்கல்ஸ் விக்ரம் மூன்றாவது இடம்பிடித்தார்.
சென்னை:
நூறு நாட்களைக் கடந்து ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி நேற்றுடன் முடிவுக்கு வந்தது.
இந்த நிகழ்ச்சியில் திவ்யா கணேஷ், சபரிநாதன், விக்கல்ஸ் விக்ரம் மற்றும் அரோரா ஆகியோர் இறுதிச்சுற்றுக்கு தேர்வாகினர்.
இவர்களில் முதலில் அரோரா, அடுத்து விக்கல்ஸ் விக்ரம் ஆகியோர் வெளியேறினர்.
திவ்யா, சபரிநாதன் இருவரும் இறுதிச்சுற்றுக்கான மேடையில் இருந்தனர். இவர்களில் இருவரில் திவ்யா கணேஷ் வெற்றியாளராக அறிவித்தார் விஜய் சேதுபதி. சபரிநாதன் ரன்னராக அறிவிக்கப்பட்டார்.
ஏற்கனவே, கானா வினோத் ரூ.18 லட்சம் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
இந்த சீசனில் பார்வதி மற்றும் கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டனர்.
- இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
- டைட்டில் வின்னர் ஆவார் என்று கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார்
பிக்பாஸ் நிகழ்ச்சி இன்றுடன் முடிவுக்கு வருகிறது. போட்டியின் நாட்கள் நெருங்க நெருங்க கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வந்தது.
இந்த சீசனில் பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. குறிப்பாக டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், திவ்யா கணேஷ், சபரி, விக்கல்ஸ் விக்ரம், ஆரோரா ஆகிய 4 பேர் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்ற நிலையில் பிக்பாஸ் சீசன் 9 டைட்டில் வின்னராக திவ்யா கணேஷ் தேர்வாகியுள்ளதக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான நிகழ்ச்சி இன்று இரவு நடைபெறுகிறது.
நடிகர் விஜய் சேதுபதி மற்றும் சமூக ஆர்வலர் வீரராகவன் ஆகியோர் இணைந்து முன்னெடுத்து வரும் "வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம்" (VVVSI) இளைஞர்களின் வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தி வருகிறது.
புதுச்சேரியைச் சேர்ந்த வீரராகவன் என்பவர் ஒரு மத்திய அரசுப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். 2016-ஆம் ஆண்டு முதல் பகுதி நேரமாக வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புத் தகவல்களைப் பகிர்ந்து வந்தார்.
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியில் வீரராகவன் பங்கேற்றபோது, அவரது சேவையைக் கண்டு வியந்த விஜய் சேதுபதி, "நீங்கள் வேலையை விட்டுவிட்டு முழுநேரமாக இதைச் செய்யுங்கள், உங்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நான் செய்கிறேன்" என்று வாக்குறுதி அளித்தார்.
வாக்கு கொடுத்தபடியே, இந்த இயக்கம் ஒரு முழுமையான அலுவலகமாகச் செயல்பட விஜய் சேதுபதி பெரும் நிதி உதவி அளித்தார்.
விஜய் சேதுபதி புதுச்சேரியில் இதற்கான பிரத்யேக அலுவலகத்தை அமைத்துக் கொடுத்து தொடங்கி வைத்தார்.
அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் வீரராகவன் ஆகியோருக்கான மாதாந்திரச் சம்பளத்தைத் தனது சொந்தப் பணத்திலிருந்து விஜய் சேதுபதியே வழங்கி வருகிறார்.
பிரபல இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் விஜய்சேதுபதி நடிக்கும் படம் ட்ரெயின். மிஷ்கின் கடைசியாக 2020ம் ஆண்டில் சைக்கோ படம் வெளியானது. இதில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் ஆகியோர் நடித்துருந்தனர். இந்தப் படம் இளையராஜாவின் இசையில் பெரும் வரவேற்பைப் பெற்றது.
இதற்கிடையே, ஆண்ட்ரியா நடிப்பில் மிஷ்கின் இயக்கியுள்ள பிசாசு 2 படம் நீண்ட நாட்களாக ரிலீசுக்காகக் காத்திருக்கிறது. இதுவும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய்சேதுபதியின் இன்று பிறந்தநாளை கொண்டாடுவதை முன்னிட்டு, ட்ரெய்ன் படக்குழு சிறப்பு போஸ்டரை வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளது.
இந்த போஸ்டரில் விஜய் சேதுபதி கையில் ஒரு பையுடன், மிகவும் எதார்த்தமான அதே சமயம் தீவிரமான ஒரு தோற்றத்தில் காணப்படுகிறார்.
பெயருக்கு ஏற்றார் போலவே, இந்தப் படத்தின் கதை பெரும்பாலும் ரெயிலை மையமாக வைத்தே நகரும் ஒரு டார்க் த்ரில்லர் வகை எனத் தெரிகிறது.
- இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
- ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார்.
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் புதிய படத்தில் நடித்து வருகிறார். பான் இந்தியா அளவில் இப்படம் தயாராக உள்ளதாகவும், இப்படத்தை சார்மி கவுர் தயாரிப்பதாக கூறப்பட்டுள்ளது. நடிகை தபு இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின. அதன்பின் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
இந்த நிலையில், விஜய் சேதுபதி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவரின் புதிய படம் தொடர்பான அறிவிப்பை ஒன்றை படக்குழு அறிவித்துள்ளது.
அதாவது, பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்திற்கு 'Slum Dog - 33 Temple Road' என பெயரிடப்பட்டுள்ளது. இதுதொடர்பான போஸ்டரை வெளியிட்டு விஜய் சேதுபதிக்கு படக்குழு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளது. போஸ்டரில் விஜய் சேதுபதி ஆக்ரோஷமாக ரத்தக்கறை படிந்த கத்தியுடன் பணப்பெட்டிகளுக்கு நடுவில் நிற்கும்படியாக உள்ளது. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
முன்னதாக, நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஜூன் மாதம் வெளியாக உள்ள 'ஜெயிலர் 2' படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடிப்பதாக தெரிவித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
- சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது. இதனையடுத்து இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுபிக்ஷா வெளியேறிய நிலையில், இந்த வாரம் பணப்பெட்டி டாஸ்க் நடைபெற்றது. முதலில் சபரி ரூ.7 லட்ச ரூபாய் பணப்பெட்டியுடன் வெளியேறியதாக தகவல் பரவிய நிலையில், தற்போது கானா வினோத் ரூ.18 லட்ச பணப்பெட்டியுடன் வீட்டில் இருந்து வெளியேறியதாக தகவல் கிடைத்துள்ளது.
டைட்டில் வின்னர் ஆவார் என்று பெரும்பாலானோரால் கூறப்பட்ட கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறியுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
- பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
- பார்வதி - கம்ருதீனுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்த நடவடிக்கைக்காக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வார வீக்கெண்ட் எபிசோடில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கப்பட்டது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு வாரமும் ஒவ்வொருத்தர் வெளியேறுவார்கள். அப்படி, கடந்த சில வாரங்களாக பிரவீன் காந்தி, நந்தினி, அரோரா சி.ஜே., ஆதிரை, துஷார், பிரவீன் காந்தி, திவாகர், கெமி, பிரஜின், ரம்யா ஜோ, FJ மற்றும் ஆதிரை ஆகியோர் வெளியேறினார்கள்.
இந்நிலையில், இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து சுபிக்ஷா வெளியேறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
- பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
- குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது.
பிக்பாஸ் நிகழ்ச்சி 50 நாட்களை கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் நெருங்க நெருங்க யார் வின்னராகப் போகிறார் என்ற பதற்றமும் அதிகரித்து வருகிறது. பிக்பாஸ் போட்டியாளர் கானா வினோத் தான் தற்போது அனைவருக்கும் ஃபேவரைட் லிஸ்டில் உள்ளார். இவர் தான் வின்னராவார் என்ற கருத்துகளும் மேலோங்கி வருகிறது.
பிக்பாஸ் நிகழ்ச்சி என்ன தான் 80 நாட்களை கடந்தாலும் இன்னும் இந்த நிகழ்ச்சியில் விறுவிறுப்பு இல்லை என்று தான் கூறப்படுகிறது. அதாவது, தேவையில்லாத சண்டைகள் ஆடியன்ஸை உற்சாகப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் யாருக்கும் இல்லை என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.மேலும், பார்வதி செய்யும் வேலைகள் இன்னும் கடுப்பேற்றுவதாக தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக பார்வதி - கம்ருதீன் லவ் டிராக் ரசிகர்களை வெறுப்பேற்றியது. இந்த நிலையில் இந்த வாரம் நடைபெற்ற டிக்கெட் டூ பைனல் டாஸ்கின் கடைசி விளையாட்டில் காரில் இருந்து சான்ட்ராவை பாருவும் கமருதீனும் கீழே தள்ளிவிட்டது இணையத்தில் பெரும் பேசுபொருளானது.
இந்த நடவடிக்கைக்காக இருவருக்கும் ரெட் கார்டு கொடுக்கவேண்டும் என்று நெட்டிசன்கள் கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் இந்த வார வீக்கெண்ட் எபிசோடில் இருவருக்கும் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்டதாக நம்மதகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை கேட்டு பிக்பாஸ் ரசிகர்கள் சந்தாஷமாகியுள்ளனர்.






