search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumaraswamy"

    • பாலியல் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    • பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    பெங்களூரு:

    கர்நாடகா மாநிலத்தில் முன்னாள் பிரதமர் தேவேகவுடா பேரனும், ஹசன் பாராளுமன்ற தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வால் மீது எழுந்துள்ள செக்ஸ் குற்றச்சாட்டுகள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது.

    பிரஜ்வால் 100-க்கும் மேற்பட்ட பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவின.

    மேலும் அவர் பெண்களை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 ஆயிரம் வீடியோ தொகுப்புகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    பிரஜ்வால் மட்டுமின்றி அவரது தந்தை ரேவண்ணா மீதும் பாலியல் புகார்கள் எழுந்தன. தந்தையும், மகனும் பல பெண்களின் கற்பை சூறையாடி இருப்பதாக கர்நாடகா மாநிலம் முழுவதும் பரபரப்பாக பேசப்படுகிறது. இந்த நிலையில் பிரஜ்வால் வெளி நாட்டுக்கு தப்பி ஓடி விட்டார்.

    அவரை கைது செய்ய சர்வதேச போலீஸ் மூலம் புளுகார்னர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவரை கைது செய்ய கர்நாடகா சிறப்பு போலீஸ் படை வெளிநாட்டுக்கு சென்றிருப்பதாக தெரிய வந்துள்ளது.

    இதற்கிடையே கற்பழிப்பு புகாரில் சிக்கிய தேவேகவுடா மகனும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான ரேவண்ணா கைது செய்யப்பட்டார். பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அவருக்கு இன்று காலை உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

    இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதல் உதவி சிகிச்சை அளித்தனர். அவருக்கு ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது. அதன் அடிப்படையில் அவர் பெங்களூர் விக்டோரியா சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் பிரஜ்வால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரால் பாதிக்கப்பட்ட பெண்கள் பற்றிய பட்டியலை கர்நாடகா போலீசார் தயாரித்து உள்ளனர். அந்த பெண்களிடம் தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.

     இது தொடர்பாக முன்னாள் முதல்-மந்திரி யும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவருமான குமாரசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பிரஜ்வால் செய்திருப்பதை நான் நியாயப்படுத்தவில்லை. தவறு செய்தவர்களுக்கு சட்டப்படி தண்டனை வழங்க வேண்டும். ஆனால் ரேவண்ணா மீதும், பிரஜ்வால் மீதும் திட்டமிட்டு சதி செய்து வீடியோக்களை பரவச் செய்துள்ளனர்.

    துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் இந்த சதி திட்டத்தை மிகவும் சமயோசிதமாக அரங்கேற்றி உள்ளார். பிரஜ்வால் தொடர்பான தகவல்களை திரட்டி அவர் ஆபாச காட்சிகள் கொண்டதாக தயாரித்துள்ளார். சுமார் 25 ஆயிரம் பென்டிரைவ்கள் தயாரித்து அவை அனைத்தையும் ஹசன் பாராளுமன்ற தொகுதி முழுக்க வினி யோகம் செய்துள்ளார்.

    பிரஜ்வாலை இழிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கம் மட்டுமின்றி மோடியின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று சதித்திட்டத்துடன் இது அரங்கேற்றப்பட்டுள்ளது. 25 ஆயிரம் பென்டிரைவ்களை மாநில போலீசார்தான் வினியோகம் செய்து இருக்கின்றனர்.

    இவை அனைத்துக்கும் என்னிடம் ஆதாரம் உள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையையும் கர்நாடகா அரசு எடுக்கவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி வெளிப்படையாக பிரஜ்வல் ரேவண்ணாவை குற்றம்சாட்டியிருந்தார்.
    • குற்றம்சாட்டிய ராகுல் காந்தியிடம் ஆதாரங்களை கேட்டு எஸ்ஐடி ஏன் சம்மன் அனுப்பவில்லை.

    பல பெண்களுடன் பிரஜ்வல் ரேவண்ணா இருப்பது போன்ற ஆபாச வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கர்நாடாக மாநில காவல்துறையின் சிறப்பு விசாரணைக் குழு (SIT) விசாரணை நடத்தி வருகிறது.

    இந்த ஆபாச வீடியோ தொடர்பாக ஐக்கிய ஜனதா தளத்துடன் கூட்டணி வைத்துள்ள பா.ஜனதாவை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. பிரஜ்வல் ரேவண்ணா வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார். ஏழு நாட்களுக்குள் விசாரணைக்கு ஆஜராக எஸ்ஐடி சம்மன் அனுப்பியிருந்தத. அதன் அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

    இதற்கிடையே ராகுல் காந்தி சிவமோகாவில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசும்போது, 16 வயது மைனர் உள்பட 400 பெண்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகத்தில் பிரஜ்வல் ரேவண்ணா ஈடுபட்டுள்ளார் என வெளிப்படையாக குற்றம்சாட்டியிருந்தார்.

    இந்த நிலையில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் ஹெச்.டி. குமாரசாமி ராகுல் காந்தியிடம் எஸ்ஐடி விசாரணை நடத்த வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹெச்.டி. குமாரசாமி கூறியதாவது:-

    ஷிவமோகாவில் நடைபெற்ற பொது கூட்டத்தின்போது, 400 பெண்கள் கற்பழிப்பில் பிரஜ்வால் ரேவண்ணா ஈடுபட்டதாக ராகுல் காந்தி, நேரடியாக குற்றம்சாட்டியுள்ளார். வயநாடு எம்.பி. நேரடியாக குற்றம் சாட்டியதன் மூலம் அவரிடம் இந்த விவகாரம் தொடர்பாக தகவல் மற்றும் ஆதாரங்கள் இருப்பது போல் பார்க்கப்படுகிறது. இது குற்றம்சாட்டிய நிலையில், அதற்கான ஆதாரங்களை அளிக்க வேண்டும் என எஸ்ஐடி ஏன் சம்மன் வழங்கவில்லை என்பது குழப்பமாக உள்ளது.

    இந்த வழக்கில் நீதியை நிலைநாட்டுவதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். வீடியோ பரப்பப்பட்டதற்கான பொறுப்புள்ளவர்களும் விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியவர்கள். முதல்வர் தார்மீக கொள்கைகளை கடைபிடித்தால், சிவகுமாரை (பென் டிரைவ்கள் வினியோகம் செய்யப்படுவதற்கு முக்கிய சதிவேலையில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு) அமைச்சரவையில் இருந்து நீக்க வேண்டும். சித்தராமையா-சிவகுமார் விசாரணைக் குழுவான எஸ்ஐடி இரண்டு தலைவர்களால் கையாளப்பட்டு வருகிறது.

    ஏப்ரல் 26-ந்தேதி தேர்தல் நடைபெற இருந்த நிலையில் 26 ஆயிரம் பென் டிரைவ்கள் வினியோகம் செய்யப்பட்டுள்ளன. இது ஹசன் தொகுதிக்கு மட்டுமல்ல. பெங்களூரு புறநகர் மற்றும் மாண்டியாவுக்கும் வினியோகம் செய்யப்பட்டுள்ளது.

    ஏப்ரல் 21-ந்தேதி பிரஜ்வலின் போலிங் ஏஜென்ட், ஹசன் துணை கமிஷனர் மற்றும் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் நவீன் கவுடா, கார்த்திக் கவுடா, சேத்தன், புட்டண்ணா ஆகியோர் பென் டிரைவ்களை வினியோகம் செய்ததில் பின்னணியாக இருந்தவர்கள் என புகார் அளித்துள்ளார். எஸ்ஐடி அவர்கள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? அவர்களை ஏன் தப்பிக்க விட்டார்கள்? அவர்களுக்கு எதிராக ஏன் ப்ளூ கார்னர் இல்லை?

    இவ்வாறு குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார்

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இந்நிலையில் இன்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி கர்நாடக மாநிலத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது, "ரேவண்ணா பல்லாயிரக்கணக்கான பெண்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். கர்நாடகாவில் இந்த பலாத்கார குற்றவாளியை மேடையில் வைத்து கொண்டு அவருக்கு ஆதரவாக பிரதமர் மோடி வாக்கு கேட்டார். 

    இந்த பாவத்திற்காக நரேந்திர மோடி, அமித் ஷா மற்றும் பாஜகவின் ஒவ்வொரு தலைவரும் நாட்டின் ஒவ்வொரு பெண்ணிடமும் கைகூப்பி தலைகுனிந்து மன்னிப்பு கேட்க வேண்டும்.

    மிக மோசமான பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில் இருந்து தப்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் - இதுதான் மோடியின் உத்தரவாதம்!" என்று தெரிவித்துள்ளார்.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் 3000 ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனிக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ஜெர்மனி தப்பிச் சென்ற அவர் நாடு திரும்பியதும் கைது செய்ய போலீஸ் திட்டம் தீட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு ஒன்றை அமைத்துள்ளது.

    இதனையடுத்து பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழு சம்மன் அனுப்பியது.

    இந்நிலையில் சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

    ரேவண்ணா நேரில் ஆஜராகவில்லை என்றால் அவர் கைது செய்யப்படுவார் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா எச்சரித்துள்ளார்.

    இந்த விவகாரம் தொடர்பாக ரேவண்ணா தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "விசாரணையில் கலந்து கொள்ள நான் பெங்களூரில் இல்லாததால், எனது வழக்கறிஞர் மூலம் பெங்களூரு சிஐடிக்கு தகவல் தெரிவித்தேன். உண்மை விரைவில் வெல்லும்" என்று பதிவிட்டுள்ளார்.

    வெளிநாட்டில் இருப்பதால் விசாரணைக்கு ஆஜராக பிரஜ்வல் ரேவண்ணா ஒரு வாரம் அவகாசம் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், நாங்கள் அவரைப் பாதுகாக்கப் போவதில்லை. கடும் நடவடிக்கை எடுப்போம் என தெரிவித்தார்.

    ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி.யை அக்கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கியது.

    இந்நிலையில், பிரிஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தை எச்.டி.ரேவண்ணா ஆகியோருக்கு சிறப்பு புலனாய்வு குழுவினர் சம்மன் அனுப்பி உள்ளது.

    • தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது
    • பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது

    கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணா ஹாசன் தொகுதி எம்.பியாக உள்ளார். அவர் கர்நாடகாவில் முதல் கட்டமாக நடந்த பாராளுமன்ற தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் போட்டியிட்டார்.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் மதச்சார்பற்ற ஜனதா தளம் பா.ஜனதாவுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. .

    இந்நிலையில் தேவகவுடா பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவை அதிர வைத்துள்ளது. பெண்களுடன் பிரஜ்வால் ரேவண்ணா உல்லாசமாக இருப்பது போன்ற ஆபாச வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.

    ஹாசன் தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 26-ந் தேதி முதல் நாளில் இருந்தே இந்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

    இப்படிப்பட்ட நபருக்கா நீங்கள் ஓட்டுப் போடப் போகிறீர்கள்? என்ற வாசகத்துடன் இந்த ஆபாச வீடியோக்கள் வலம் வருகிறது. இதனால் ஒட்டுமொத்த தேவகவுடா குடும்பமும் நிலை குலைந்து போயுள்ளது.

    இந்த நிலையில் ஆபாச வீடியோ வழக்கு தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்க அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்-அமைச்சர் சித்தராமையா எக்ஸ் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    இதனையடுத்து, பெண்களை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்தி ஆபாச வீடியோ எடுத்ததாக ரேவண்ணா மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரஜ்வால் ரேவண்ணா, ஜெர்மனுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    இந்நிலையில் பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை அவரது முன்னர் ஓட்டுநர் கார்த்திக் 3 மாதங்களுக்கு முன்பே காங்கிரஸ் கட்சியிடம் கொடுத்துள்ளார். ஆனால் அப்போது காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பாஜக குற்றம் சாட்டியிருந்தது.

    இதனையடுத்து, இந்த தகவலை ஓட்டுநர் கார்த்திக் மறுத்துள்ளார். இது தொடர்பாக வீடியோ வெளியிட்டுள்ள அவர், பிரஜ்வல் ரேவண்ணாவின் ஆபாச வீடியோக்கள் இருந்த பென்டிரைவை ஹாசன் பாஜக தலைவர் தேவராஜ் கவுடாவிடம் தான் நான் கொடுத்தேன். பாஜக தலைவரைத் தவிர வேறு யாரிடமும் இதை நான் கொடுக்கவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது.
    • இது வெட்கக் கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை என்றார் குமாரசாமி.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் ஹூப்ளி தொகுதி மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் ஆபாச வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியானது.

    இதற்கிடையே, அவர் வெளிநாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டார். இந்த ஆபாச வீடியோ குறித்து விசாரணை நடத்த கர்நாடக அரசு சிறப்பு விசாரணை குழுவை நியமித்து உத்தரவிட்டது. அவர்கள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ரேவண்ணாவை கட்சியில் இருந்து நீக்கவேண்டும் என மூத்த நிர்வாகிகள், அக்கட்சியின் எம்.எல்.ஏக்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் இன்று மத சார்பற்ற ஜனதா தள கட்சியின் செயற்குழு கூட்டம் நடந்தது. இதில் குமாரசாமி மற்றும் மூத்த நிர்வாகிகள் மற்றும் எம்.எல்.ஏக்கள் கலந்து கொண்டனர்.

    இந்நிலையில், ஆபாச வீடியோ சர்ச்சையில் சிக்கிய பிரஜ்வால் ரேவண்ணாவை இந்த விசாரணை முடியும் வரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • இது வெட்கக் கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை என்றார்.
    • கள யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கமே அன்றி நான் அல்ல எனவும் குமாரசாமி கூறினார்.

    பெங்களூரு:

    முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், முன்னாள் மந்திரி ரேவண்ணாவின் மகனுமான பிரஜ்வல் ரேவண்ணா எம்.பி. மீது பாலியல் புகார் கூறப்பட்டது. இதுதொடர்பான ஆபாச வீடியோக்கள் வெளியாகின. இதுகுறித்து விசாரிக்க எஸ்ஐடி குழு அமைத்து மாநில அரசு உத்தரவிட்ட நிலையில், அவரை கட்சியிலிருந்து நீக்க முடிவுசெய்துள்ளதாக குமாரசாமி தெரிவித்திருந்தார்.

    இதற்கிடையே, தேவகவுடா பேரனின் ஆபாச வீடியோ விவகாரம் தொடர்பாக கர்நாடக அரசு என்ன செய்துகொண்டிருக்கிறது? என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா கேள்வி எழுப்பியுள்ளார்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தள தலைவருமான குமாரசாமி இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நாங்கள் அவரைப் பாதுகாக்கப் போவதில்லை. கடும் நடவடிக்கை எடுப்போம். இந்த விவகாரத்தில் அரசாங்கத்தின் பொறுப்பு அதிகம்.

    உறவினராக மட்டுமல்ல, நாட்டின் சாமானியனாகவும் நாம் மேலும் முன்னேறவேண்டும்.

    இது வெட்கக்கேடான பிரச்சனை. நான் யாரையும் பாதுகாக்கவில்லை. இதுபோன்ற சட்டவிரோத செயல்களுக்கு எதிராக நாங்கள் போராடினோம். இது ஒரு தீவிரமான பிரச்சனை.

    ஆட்சியை யார் நடத்துகிறார்கள், அவர்கள் உண்மையான நிலவரத்தை அம்பலப்படுத்த வேண்டும்.

    கள யதார்த்தத்தை வெளிப்படுத்த வேண்டியது அரசாங்கமே அன்றி நான் அல்ல என தெரிவித்தார்.

    • எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
    • எங்களை நன்றாக நடத்தினால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளத்தில் தலைவருமான குமாரசாமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டவட்டமாக, நான் உங்களுக்கு சொல்கிறேன். கேள்வியே இல்லை.

    எங்களை நன்றாக நடத்தினால், எல்லாம் சுமூகமாக நடந்தால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம்.

    100 சித்தராமையாக்கள் எங்களுக்கு எதிராக வந்தாலும் அவர்களால் எங்கள் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அதை சேதப்படுத்த முடியாது.

    நான் காங்கிரசுக்கு முற்றிலும் எதிரானவன். எங்களை எப்படி நடத்துவார்கள், முதல் மந்திரியாக இருந்த என்னை எப்படி நடத்தினார்கள் என தெரியும் என்றார்.

    • மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.

    கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.

    ஆனால், தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளார்.

    • பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
    • தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது.

    பெங்களூர்:

    கர்நாடக ஜனதா தளம் (எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என். மஞ்சுநாத் பா.ஜ.க. சின்னத்தில் பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கர்நாடக மாநில காங்கிரஸ் துணை முதல்-மந்திரி சிவகுமார் மற்றும் அவரது சகோதர் டி.கே.சுரேஷ் ஆகியோர் அதிக அளவில் வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்வதாக ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இங்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.என். மஞ்சுநாத் உள்ளார். இந்த தொகுதியில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் பணபலம், ஆயுத பலம், அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலில் வெற்றி பெற உள்ளனர். அவர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு குக்கர்களை விநியோகம் செய்தனர்.

    தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது. ஹரோஹல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குக்கர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். விசாரணை நடத்த ராம்நகர் மாவட்ட கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வணிக வரித்துறை அதிகாரிகளையும் அனுப்பினார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று அறிக்கை கொடுத்து மூடிவிட்டனர்.


    குக்கர் தயாரித்து அனுப்புவது இன்னும் தொடர்கிறது. அதற்கான போட்டோக்களை பாருங்கள். புகார் வந்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரமாகியும் இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சிவக்குமார், சுரேஷ் சகோதரர்களின் தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும். திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜே.டி.(எஸ்) தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    குக்கர், சேலை ஸ்டாக் கண்டுபிடித்து தொண்டர்கள் தீ வைப்பார்கள். சிவக்குமார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்வார்களா? என்பதை நான் பார்க்கிறேன். சட்ட விரோதம் தொடர்ந்தால் நான் விரைவில் முழு வீச்சில் களம் இறங்குவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    • என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்.

    பெங்களூரு:

    தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவருமான குமாரசாமியின் வீட்டிற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு மின்சாரம் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றச்சாட்டு கூறியிருந்தது.

    இதை ஒப்புக்கொண்ட குமாரசாமி, மின்விளக்கு அங்காரம் செய்த தொழிலாளி இதை செய்துவிட்டதாகவும், இது தனது கவனத்திற்கு வந்ததும், சட்டவிரோத மின்சாரம் எடுக்கப்பட்டதை அகற்றும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.

    இந்த மின்திருட்டு குறித்து பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) கொடுத்த புகாரின்பேரில் குமாரசாமி மீது ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை குமாரசாமி திருடிவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலக சுவர்களில் ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருட்டுத்தனமாக 71 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக குமாரசாமிக்கு ரூ.68 ஆயிரத்து 526 பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், நான் செய்யாத தவறுக்காக என்னை மின்சார திருடன் என்று சொல்கிறார்கள். நான் அபராதம் செலுத்தியுள்ளேன். இப்போதாவது என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். நான் காங்கிரஸ் தலைவர்களை போல் பெரிய திருடன் அல்ல என்றார்.

    ×