என் மலர்
நீங்கள் தேடியது "Former Karnataka Chief Minister"
- மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
- குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.
ஆனால், தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளார்.
- 1999-2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.
- கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா, 1999 முதல் 2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.
மே 1, 1932 இல் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்த கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் வேலியாக மாற்றிய பெருமைக்குரியவராக அறியப்படும் எஸ்.எம். கிருஷ்ணா தனது 92-வது வயதில் காலமானார்.
1962 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய எஸ்.எம். கிருஷ்ணா அன்று துவங்கி ஆறு தசாப்தங்கள் வரை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவரது அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், தான் கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
- எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- அவரது மறைவால் மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவை ஒட்டி அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி, எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "எஸ்.எம். கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்ததற்காக, குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அவர் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவு கூறப்படுகிறார். எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறந்த வாசகர் மற்றும் சிந்தனையாளர்."
"பல ஆண்டுகளாக ஸ்ரீ எஸ்.எம். கிருஷ்ணா ஜியுடன் தொடர்பு கொண்டு உரையாட எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அவரை பின் தொடர்வோருக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி," என்று குறிப்பிட்டுள்ளார்.






