என் மலர்
நீங்கள் தேடியது "எஸ்எம் கிருஷ்ணா"
- 90 வயதில் நான் 50 வயதை போல செயல்பட முடியாது அதனால் பொது அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன்
- இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும்; பழைய மைசூரு பகுதியில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் என்னிடம் கேட்டால் ஆலோசனை வழங்குவேன்.
பெங்களூரு:
முன்னாள் மத்திய மந்திரியும், கர்நாடகா மாநில முன்னாள் முதல்-மந்திரியுமான எஸ்.எம்.கிருஷ்ணா தற்போது தீவிர அரசியலில் இருந்து தாம் விலகுவதாக அறிவித்துள்ளார். பெங்களூருவில் உள்ள சித்ரகலா பரிஷத்திற்கு வந்த எஸ்.எம்.கிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு இப்போது 90 வயதாகிறது. என் வயது குறித்து எனக்கு தெரிகிறது. இந்த வயதில் நான் 50 வயதை போல செயல்பட முடியாது. அதனால், பொது அரசியலில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். ஆனால் முழுமையாக சன்யாசம் பெறவில்லை. கட்சி தலைவர்களுக்கு தேவைப்பட்டால் ஆலோசனை கொடுப்பேன். இட ஒதுக்கீடு சம்பந்தமாகவும்; பழைய மைசூரு பகுதியில் கட்சியை பலப்படுத்துவது தொடர்பாகவும் என்னிடம் கேட்டால் ஆலோசனை வழங்குவேன்.
பா.ஜ.க., என்னை புறக்கணிக்கவில்லை. நான் ஓய்வு பெற்றிருக்கும்போது என்னை புறக்கணிக்கின்றனர் என்ற கேள்வியே எழாது. அரசியலில் யாரும் பென்ஷன் தரமாட்டார்கள். அதனால் என் ஓய்வு குறித்து நான் மேலிடத்துக்கு தகவல் தரும் அவசியம் ஏற்படவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பா.ஜ.க.வில் இருந்து விலகும் கடிதத்தை கட்சி மேலிடத்துக்கும் அவர் அனுப்பி உள்ளார்.
கர்நாடக மாநிலத்தின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள காவிரி நதியின் முக்கியப் பகுதியாக விளங்கும் சோமனஹள்ளி என்ற பகுதியைச் சேர்ந்தவர் எஸ்.எம்.கிருஷ்ணா. மைசூரில் உள்ள மகாராஜா கல்லூரியில் இளங்கலைப் படிப்பை முடித்த அவர், அப்போது பெங்களூரில் உள்ள அரசு சட்டக் கல்லூரி சட்ட பிரிவில் பட்டம் பெற்றார்.
இதைத் தொடர்ந்து அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள டல்லாஸ் நகரில் இருக்கும் சதர்ன் மெத்தாலசிஸ்ட் பல்கலைகழகம் மற்றும் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகச் சட்டப் பள்ளியில் பட்டம் பெற்றார். அவரது கல்வி சாதனைக்காக அவர் கர்நாடகா மற்றும் அவரது சொந்த ஊரான சோமனஹள்ளி-யில் அவரை "ஆக்ஸ்போர்டு கிருஷ்ணா" என்று அழைத்தனர்.
எஸ்.எம்.கிருஷ்ணா புதிய தொழில்நுட்பங்களை பெங்களூரில் செயல்படுத்துவதில் முக்கிய இடத்தைப் பிடித்தார், மேலும் பெங்களூர் நகரம் உலக நாடுகளைக் கவரும் வண்ணம் வளர முக்கியக் காரணமாக இருந்த காரணத்தால் எஸ்.எம்.கிருஷ்ணா-வை விஷனரி சி.எம். எனவும் அழைத்தனர்.
இந்தியாவின் டெக் ஐகான் ஆகக் கருதப்படும் அளவிற்கு, பெங்களூர் முழுவதும் சப்வே, மேம்பாலங்கள், கேபிள் பிரிட்ஜ் என அதிநவீன கட்டுமானங்களைக் கட்டமைக்க முக்கியக் காரணமாக இருந்தவர். பெங்களூரில் இன்று ஐடி சேவை நிறுவனங்கள் கொடிகட்டிப் பறக்க முக்கியக் காரணமாகப் பெங்களூரில் உள் கட்டமைப்பை மேம்படுத்தினார். இதன் மூலம் இன்போசிஸ், விப்ரோ போன்ற பெரிய ஐடி நிறுவனங்கள் உருவாக அடித்தளமிடப்பட்டது. பயோடெக்னாலஜி துறையில் பிரமாண்ட நிறுவனமான பயோகான், பல அரசு அமைப்புகள், கல்லூரிகள் இவருடைய காலகட்டத்தில் அதிகமாகப் பெங்களூருக்கு வந்தது.
தொடக்கத்தில் சட்டக் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய எஸ்.எம். கிருஷ்ணா, 1962-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தீவிர அரசியலில் இறங்கினார். 1968-ம் ஆண்டே லோக்சபா எம்.பி.யானார். 1970-களின் தொடக்கத்தில் மீண்டும் கர்நாடகா அரசியலுக்கு திரும்பி அமைச்சரானார்.
பின்னர் மீண்டும் டெல்லி அரசியலுக்கு சென்று இந்திரா காந்தி அமைச்சரவையிலும் இடம்பிடித்தார். கர்நாடகா சட்டசபை சபாநாயகராகவும் பதவி வகித்தார். 1992-ம் ஆண்டு கர்நாடகா மாநில துணை முதல்வரானார் எஸ்.எம்.கிருஷ்ணா. பின்னர் மீண்டும் ராஜ்யசபா எம்.பி.யாக்கப்பட்டார். 1999-ம் ஆண்டு முதல் 2004-ம் ஆண்டு வரை கர்நாடகா மாநில முதல்-மந்திரியாக பதவி வகித்தார். இதனையடுத்து மகாராஷ்டிரா ஆளுநராக்கப்பட்டார். கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்னர் பா.ஜ.க.வில் இணைந்தார்.
பிரஜா சோசலிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க. என அரசியல் கட்சிகளில் பயணித்த எஸ்.எம். கிருஷ்ணா எம்.எல்.ஏ, எம்பி, முதல்வர், மத்திய மந்திரி, ஆளுநர் என பல்வேறு பதவிகளை வகித்தவர். காவிரி நதிநீர் பிரச்சனைகளின் போதும் சந்தனக் கடத்தல் வீரப்பனால் கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்ட காலங்களிலும் எஸ்.எம்.கிருஷ்ணா தமிழகத்தின் விவாத களங்களில் முக்கியமானவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 1999-2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.
- கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். சோமனஹள்ளி மல்லையா கிருஷ்ணா, 1999 முதல் 2004 வரை கர்நாடகாவின் முதல்வராக இருந்தார்.
மே 1, 1932 இல் கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள சோமனஹள்ளியில் பிறந்த கிருஷ்ணா, வெளியுறவுத் துறை அமைச்சராகவும், மகாராஷ்டிர ஆளுநராகவும் பணியாற்றி இருக்கிறார்.
பெங்களூருவை இந்தியாவின் சிலிக்கான் வேலியாக மாற்றிய பெருமைக்குரியவராக அறியப்படும் எஸ்.எம். கிருஷ்ணா தனது 92-வது வயதில் காலமானார்.
1962 ஆம் ஆண்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய எஸ்.எம். கிருஷ்ணா அன்று துவங்கி ஆறு தசாப்தங்கள் வரை அரசியலில் ஈடுபட்டு வந்தார். இவரது அரசியல் வாழ்க்கையை அங்கீகரிக்கும் வகையில், தான் கடந்த ஆண்டு எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு இந்தியாவின் பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது.
- எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.
- அவரது மறைவால் மிகுந்த வருத்தம் அடைகிறேன்.
கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா இன்று அதிகாலை உயிரிழந்தார். இவரது மறைவை ஒட்டி அரசியல் தலைவர்கள், பொது மக்கள் மற்றும் பலர் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வரிசையில், பிரதமர் நரேந்திர மோடி, எஸ்.எம். கிருஷ்ணா மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "எஸ்.எம். கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்ட ஒரு குறிப்பிடத்தக்க தலைவர். மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த அவர் எப்போதும் அயராது உழைத்தார். கர்நாடகாவின் முதலமைச்சராக இருந்ததற்காக, குறிப்பாக உள்கட்டமைப்பு மேம்பாட்டில் அவர் கவனம் செலுத்தியதற்காக அவர் அன்புடன் நினைவு கூறப்படுகிறார். எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு சிறந்த வாசகர் மற்றும் சிந்தனையாளர்."
"பல ஆண்டுகளாக ஸ்ரீ எஸ்.எம். கிருஷ்ணா ஜியுடன் தொடர்பு கொண்டு உரையாட எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ளன. அந்த உரையாடல்களை நான் எப்போதும் போற்றுவேன். அவரது மறைவால் நான் மிகுந்த வருத்தம் அடைகிறேன். அவரது குடும்பத்தினருக்கும் அவரை பின் தொடர்வோருக்கும் எனது அனுதாபங்கள். ஓம் சாந்தி," என்று குறிப்பிட்டுள்ளார்.
- எஸ்.எம்.கிருஷ்ணா தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர்.
- கர்நாடக முதல்வராக, வெளியுறவு அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா.
கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா மறைவுற்ற நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்,
எஸ்.எம்.கிருஷ்ணா தொலைநோக்கு பார்வை கொண்ட தலைவர் மற்றும் இந்திய அரசியலில் தலைசிறந்தவர்.
கர்நாடக முதல்வராக, வெளியுறவு அமைச்சராக நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியவர் எஸ்.எம்.கிருஷ்ணா.
எஸ்.எம்.கிருஷ்ணாவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், ஆறுதல் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.






