என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "karunanidhi statue"
தர்மபுரி மாவட்டத்தில் இன்று அரூர் ஒன்றியம் செட்ரப்பட்டியில் நடந்த தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
அதன்பிறகு சின்னாங்குப்பத்தில் நடந்த தி.மு.க வாக்குசாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் அவர் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசும் போது பெரியார் பிறந்த ஈரோட்டில் நாளை தலைவர் கலைஞர் சிலை திறக்கப்படுகிறது. அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் பிப்ரவரி 14-ந்தேதி கலைஞர் சிலை திறக்கப்படும் என்றார். #DMK #MKStalin #Karunanidhi
கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்ட கட்- அவுட்டுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.
இதற்கான ஆதாரமாக வாட்ஸ்-அப் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.
இதற்கு தி.மு.க. மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் தி.மு.க.வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.
அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #TNMinister #Jayakumar
பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-
‘ஈழத்தில் 85,000 இளம் தமிழ் விதவைகள் உருவாக காரணமாக இருந்தாலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியாவை நல்ல விதமாக வரவேற்பது இயல்புதான்.
ஆனால் மோடியை ‘சாடிஸ்ட்’ என பேசுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதனால்தான் ஸ்டாலினை முதிர்ச்சி இல்லாத தலைவர் என்கிறேன். தி.மு.க இன்று முற்றிலும் முதிர்ச்சி இல்லாத தலைமையின் கீழ் இருக்கிறது.
பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மோடி அரசு. அதில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. கலைஞர் சிலை திறப்பதற்குத் தமிழின துரோகி சோனியா காந்தியை ஸ்டாலின் அழைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.
அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர் பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி? அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அழைக்கப்பட்டதையே விமர்சித்துப் பதிலளித்தார். உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லுங்கள். காங்கிரஸ் சரி இல்லை என்பதால் தானே உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். உங்களிடம் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு, ‘‘தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை’’. என்று பதிலளித்தார்.
4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்த கேள்விக்கு ‘மக்கள் சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அனுபவம் வாய்ந்த மோடியா இல்லை முதிர்ச்சி இல்லாத ராகுலா என மக்கள் முடிவு செய்வார்கள்.
நாட்டுக்குத் தேவை நிலையான கட்சி. நிலையான அரசு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரே ஏற்கவில்லை. அந்தக் கூட்டணியில் ஆளுக்கு ஆள் நாட்டாமை. கருணாநிதி சிலைக்கு செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே!.
இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #BJP #HRaja
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதியை மக்கள் நீதி மய்ய தலைவர் நடிகர் கமல்ஹாசன் இன்று நேரில் பார்வையிட்டார். அங்கு பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி ஆறுதல் கூறினார். அதன்பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார். #KamalHaasan #GajaCyclone #KarunanidhiStatue
ஆலந்தூர்:
கருணாநிதியின் முழு உருவச்சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி, மூத்த தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வருகை தர உள்ளனர்.
அவர்களை வரவேற்று விமானநிலையத்தில் இருந்து கத்திபாரா பாலம் வரை காங்கிரஸ் கட்சியினர் பேனர்கள் வைத்து உள்ளனர். அனுமதி பெறாமல் பேனர்களை வைத்ததாக கூறியும் அதை அகற்ற கோரியும் சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி இன்று போராட்டம் நடத்தினார்.
ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பரங்கிமலை தாபால் நிலையம் அருகே ரோட்டில் பிளாட்பாரத்தில் அமர்ந்து அவர் போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி மனோகரன், ஆலந்தூர் பகுதி செயலாளர் சீதாபதி மற்றும் காங்கிரஸ் தொண்டர்கள் அங்கு திரண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
அங்கு பரங்கிமலை போலீஸ் உதவி கமிஷனர் கோவிந்த ராஜூ மற்றும் மாநகராட்சி அதிகாரிகளும் வந்தனர். போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைத்ததாக காங்கிரசார் தெரிவித்தனர். அதையடுத்து டிராபிக் ராமசாமியுடன் போலீசார் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். #TrafficRamasamy #soniagandhi #karunanidhi
அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க சோனியாகாந்தியுடன் ராகுல்காந்தியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சென்னை வருகிறார். விழாவில், 3 மாநில முதல்-மந்திரிகள், நடிகர் ரஜினிகாந்த் ஆகியோர் பங்கேற்கின்றனர்.
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சிலை அமைக்க தி.மு.க. தலைமை திட்டமிட்டது. இதற்காக மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் கருணாநிதியின் சிலையை சிற்பி தீனதயாளன் வடிவமைத்து வந்தார். 9 அடி உயரத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை தயாரானதை தொடர்ந்து, அந்த சிலை அண்ணா அறிவாலயத்திற்கு கொண்டு வரப்பட்டு, நிறுவப்பட்டுள்ளது. கருணாநிதியின் சிலை இன்று (ஞாயிற்றுக்கிழமை) திறந்து வைக்கப்பட உள்ளது. கருணாநிதியின் சிலையுடன், அறிஞர் அண்ணாவின் புதுப்பிக்கப்பட்ட சிலையும் திறக்கப்பட உள்ளது.
சிலை திறப்பு விழா மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. இதனால் அண்ணா அறிவாலயம் விழாக்கோலம் பூண்டுள்ளது. வண்ண விளக்குகளால் அண்ணா அறிவாலயம் அலங்கரிக்கப்பட்டு இருக்கிறது. சிலை திறப்பு விழாவை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டம் நடக்க உள்ளது. இதற்காக அண்ணா அறிவாலயம் போன்று அங்கு விழா மேடை அமைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே விழாவில் பங்கேற்பதற்காக அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியாகாந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வர உள்ளனர். விமான நிலையத்தில் இருந்து புறப்படும் அவர்கள் கிண்டியில் உள்ள ஐ.டி.சி.சோழா ஓட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுக்கின்றனர்.
பின்னர் மாலை 4.55 மணிக்கு அண்ணா அறிவாலயத்திற்கு வரும் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை, தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், தி.மு.க. நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அதனை தொடர்ந்து 5 மணிக்கு விழா தொடங்குகிறது. கருணாநிதியின் சிலையை சோனியாகாந்தி திறந்து வைக்கிறார். இந்த விழாவில், அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.
சிலை திறப்பு நிகழ்ச்சி முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் மெரீனா கடற்கரைக்கு சென்று, கருணாநிதியின் சமாதியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் அங்கிருந்து புறப்படும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு, சிறப்புரையாற்றுகின்றனர். கூட்டம் மாலை 5.30 மணிக்கு தொடங்குகிறது. கூட்டத்திற்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார்.
தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். பொதுச்செயலாளர் க.அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் விழாவில் பாதுகாப்பு மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு முக்கிய பிரமுகர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள், கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருவதை தவிர்த்து, ராயபேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட சில முக்கிய பிரபலங்கள் அண்ணா அறிவாலயத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள் பார்ப்பதற்கு வசதியாக, பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்படுகிறது.
சென்னை வரும் சோனியாகாந்தி, ராகுல்காந்தியை வரவேற்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் நுழைவு வாசல் முதல் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் வரை காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ரூபி ஆர்.மனோகரன், காஞ்சீபுரம் மேற்கு மாவட்ட தலைவர் மதியழகன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி ஆகியோர் தலைமையில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. விமான நிலையம் தொடங்கி, ராயப்பேட்டை வரை சோனியாகாந்தி, ராகுல்காந்திக்கு வரவேற்பு அளிக்க அந்தந்த பகுதிகளை சேர்ந்த காங்கிரஸ் நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.
விழா முடிந்ததும் சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோர் இரவு 8 மணிக்கு விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு செல்கின்றனர்.
சோனியாகாந்தி, ராகுல் காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோரின் வருகையையொட்டி பாதுகாப்பு பணியில் 5 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
விழா நடைபெறும் சென்னை அண்ணா அறிவாலயம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானம் ஆகிய இடங்களில் அதிகளவில் போலீசார் குவிக்கப்பட உள்ளனர். சோனியாகாந்தியும், ராகுல்காந்தியும் மெரினாவில் உள்ள கருணாநிதி சமாதியில் அஞ்சலி செலுத்த இருப்பதால் அங்கும் போலீசார் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட உள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஒத்திகையும் நேற்று நடைபெற்றது. கருணாநிதி உடலுக்கு ராகுல்காந்தி இறுதி அஞ்சலி செலுத்த வந்த போது, பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. ‘ஜிசட்’ பிரிவு பாதுகாப்புக்குரிய ராகுல்காந்தி மக்களோடு, மக்களாக அஞ்சலி செலுத்தினார். எனவே அதுபோன்ற பாதுகாப்பு குளறுபடிகள் மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தனி கவனம் செலுத்தி உள்ளார். எனவே அவருடைய நேரடி கண்காணிப்பில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னை:
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு அண்ணா அறிவாலயத்தில் 9 அடி உயரத்தில் வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது.
சிலை திறப்பு விழா நாளை மாலை 5 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் நடைபெறுகிறது. இதில் சோனியா காந்தி கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.
இதற்காக சோனியா காந்தி டெல்லியில் இருந்து விமானம் மூலம் நாளை மாலை 4.30 மணிக்கு சென்னை விமான நிலையம் வந்தடைகிறார். அங்கிருந்து கிண்டியில் உள்ள ஐ.டி.சி. சோழா ஓட்டலுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வெடுக்கிறார்.
மாலை 4.55 மணிக்கு காரில் அண்ணா அறிவாலயம் வருகிறார். அங்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதி சிலை திறப்பு விழா நடைபெறுகிறது. கருணாநிதி சிலையை சோனியா காந்தி திறந்து வைத்து பேசுகிறார்.
விழாவில் ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள்.
தி.மு.க. பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்று பேசுகிறார். சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ. நன்றி கூறுகிறார்.
இந்த நிகழ்ச்சி முடிந்ததும் சோனியா காந்தி காரில் மெரீனா கடற்கரைக்கு சென்று கருணாநிதியின் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.
அங்கிருந்து ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். கூட்டம் முடிந்ததும் காரில் விமான நிலையம் சென்று இரவு 8 மணியளவில் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.
சோனியா காந்தி வருகையையொட்டி 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். அவர் வந்து செல்லும் அண்ணா அறிவாலயம், கருணாநிதி நினைவிடம், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடல் ஆகிய இடங்கள் இப்போதே போலீஸ் வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழா நிகழ்ச்சியை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் திரண்டிருக்கும் கட்சி நிர்வாகிகள் பார்ப்பதற்கு வசதியாக பெரிய எல்.இ.டி. திரை வைக்கப்படுகிறது.
இந்த விழாவில் ரஜினி காந்த் கலந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கருணாநிதியுடன் ரஜினி, கமல் இருவரும் நெருங்கி பழகியவர்கள். அவர்களும் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் விரும்பினார்.
அதன்படி ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் தி.மு.க., தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. தலைமை கழக செயலாளர் பூச்சி முருகன் நேரில் சென்று இருவரிடமும் அழைப்பிதழ் வழங்கினார்.
அக்டோபர் மாத இறுதியில் ரஜினி தனது ரசிகர்களுக்கு சில கட்டளைகளை பிறப்பித்து அறிக்கை வெளியிட்டார்.
அந்த அறிக்கையை தி.மு.க.வின் கட்சி பத்திரிகையான முரசொலி கடுமையாக விமர்சனம் செய்தது. இது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனால் மு.க.ஸ்டாலினே ரஜினியை தொடர்பு கொண்டு வருத்தம் தெரிவித்ததாக செய்தி வந்தது. இந்த நிலையில் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு ரஜினியை தி.மு.க அழைத்தது.
இடையில் நடந்த கசப்பான சம்பவங்களால் ரஜினி கலந்துகொள்வாரா என்ற விவாதங்கள் எழுந்தன. இப்போது ரஜினி கலந்து கொள்வார் என்று உறுதியான தகவல் வெளியாகி உள்ளது.
பா.ஜனதாவுக்கு ஆதரவாக இதுவரை கருத்துகளை தெரிவித்து வந்த ரஜினியின் முடிவில் சமீபத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 5 மாநில தேர்தல் முடிவுகள் பற்றி கருத்து சொன்னபோது பா.ஜ.க மக்கள் செல்வாக்கை இழந்துவிட்டதாக கூறினார்.
இந்த சூழ்நிலையில் எதிர்க் கட்சிகளை ஒன்றிணைக்கும் விழாவாக நடைபெறும் கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ரஜினி பங்கேற்பது அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கமல்ஹாசன் இன்னும் தனது பங்கேற்பை உறுதி செய்யவில்லை. கமலுக்கு நெருக்கமான பினராயி விஜயன் உள்ளிட்டோர் பங்கேற்கும் விழா என்பதால் கமலும் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. #KarunanidhiStatue #SoniaGandhi
சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். #Rajini #KarunanidhiStatue
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கலைஞர் திருவுருவச் சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்று, இந்திய அரசியலின் வழிகாட்டியாக விளங்கிய வரலாற்று நாயகர் நம் தலைவருக்கு சிறப்பு சேர்க்கின்றனர்.
பல மாநிலங்களிலிருந்தும் வரும் தலைவர்களுடன் தமிழ்நாட்டில் நம் தோழமைக் கட்சியின் தலைவர்கள்- நிர்வாகிகள், பல்வேறு கட்சி அமைப்புகளின் தலைவர்கள், திரைத்துறையைச் சார்ந்தவர்கள், ஊடகத்துறையினர், பல துறை அறிஞர் பெருமக்கள், சான்றோர்கள் என கலைஞரின் மீது பேரன்பு கொண்ட பலரும் பங்கேற்கிறார்கள்.
அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழாவில், இடவசதி கருதி அதிகம் பேர் பங்கேற்க இயலாது என்பதால்தான், டிசம்பர் 16 மாலை 5 மணிக்கு சிலை திறப்பு விழா நடைபெற்றதும், தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் மாலை 5.30 மணியளவில் ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் நடைபெற இருக்கிறது.
இது நம் வீட்டு விழா. நம் குடும்ப விழா. விருந்தினரை வரவேற்று அவர்கள் மனநிறைவு அடையும் வகையில் நடந்துகொள்ள வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கிறது. எனவே, கட்டுப்பாடு காப்போம்.
அறிவாலயத்தில் கூடுவதைத் தவிர்த்து, ஆர்ப்பரிக்கும் கடலென ராயப்பேட்டை அரங்கில் கூடிடுவோம். கலைஞரின் திருவுருவச் சிலை திறப்பு விழா சிறப்புற நிகழ்ந்த பிறகு, மாவட்ட வாரியாக ஒவ்வொரு நாளும் நம் உயிர்நிகர்த் தலைவரை சிலையில் காண்போம். இதயம் குளிர்வோம்.
சிலை திறப்பு விழா பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் ஆற்றுகின்ற உரை, கலைஞர் கட்டிக்காத்த மதசார்பற்ற, முற்போக்கு, சமூகநீதி ஜனநாயகக் கொள்கைகளின் முழக்கமாக அமையும். அது இந்தியா எதிர்கொள்ளப்போகும் பாராளுமன்றத் தேர்தலுக்கும் தமிழ்நாடு காணவிருக்கும் சட்டமன்றத் தேர்தலுக்கும் நமக்கான வெற்றிப் பாதையை சுட்டிக்காட்டும்.
அந்த வெற்றியை நம்மைவிட அதிகமாக நாட்டு மக்கள் எதிர்பார்க்கிறார்கள். கழகத்தின் வெற்றி என்பது கல்வெட்டுகளில் பொறிக்கப்பட்டு விட்டது.
அதனை எடுத்துப் பதிக்கின்ற பணிதான் தேர்தல் களம். அதற்கேற்ப பொறுப்புணர்ந்து கட்டுப்பாடு காத்து ஓயாது உழைத்திட வேண்டும். அதுவே திருவுருவச்சிலையாக உயர்ந்து நிற்கும் கலைஞருக்கு நாம் செய்யும் தொண்டு காட்டுகின்ற நன்றி செலுத்துகின்ற காணிக்கை!
இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார். #DMK #MKStalin #KarunanidhiStatue
மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி சிலை திறப்பு விழா அண்ணா அறிவாலயத்தில் வருகிற 16-ந்தேதி மாலை 5 மணிக்கு நடைபெறுகிறது.
இதுகுறித்து தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-
கலைஞரின் திருவுருவச் சிலை வருகிற 16-ந்தேதி சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் க.அன்பழகன் முன்னிலையில், பாராளுமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி திறந்து வைக்கிறார்.
இதை முன்னிட்டு இடவசதி மற்றும் போக்குவரத்து நெரிசலை தவிர்த்திடும் வகையில், தலைமைக் கழகத்தால் ‘சிறப்பு அழைப்பாளர்’களாக அழைக்கப்பட்டுள்ள முன்னணியினர் மட்டுமே, அண்ணா அறிவாலய வளாகத்தில் நடைபெற உள்ள கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கலைஞர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சி, பொதுக்கூட்டம் நடைபெறும் ராயப்பேட்டை, ஒய்.எம்.சி.ஏ. திடலில் நேரடி ஒளிபரப்பு செய்திட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அண்ணா அறிவாலயத்தில் சிலை திறந்து வைத்தவுடன், சோனியா காந்தி, மு.க.ஸ்டாலின், பொதுச்செயலாளர் அன்பழகன் மற்றும் வாழ்த்துரை வழங்க உள்ள ஆந்திர மாநில முதல்-மந்திரி சந்திரபாபுநாயுடு, கேரள மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்-மந்திரி நாராயணசாமி ஆகியோர் நேரடியாக பொதுக்கூட்டம் நடைபெறும் திடலுக்கு வருகை தந்தவுடன், பொதுக்கூட்ட நிகழ்ச்சிகள் தொடங்கும்.
எனவே, கழக நிர்வாகிகள் தோழர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் அண்ணா அறிவாலயத்திற்கு வருகை தருவதை தவிர்த்து, பொதுக்கூட்டம் நடைபெறும் ஒய்.எம்.சி.ஏ. திடலுக்கு வருகைதர வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ராயப்பேட்டையில் சோனியா காந்தி பேசும் பொதுக்கூட்ட மேடை அண்ணா அறிவாலய வடிவமைப்பில் தயாராகி வருகிறது.
தென் சென்னை மேற்கு மாவட்டச் செயலாளர் ஜெ.அன்பழகன் எம்.எல்.ஏ, மேடை அமைக்கும் பணியை கவனித்து வருகிறார்.
இந்த மேடை வெளியில் தயாரிக்கப்பட்டு ராயப்பேட்டை மைதானத்திற்கு கொண்டு வரப்படுகிறது. #DMK #KarunanidhiStatue #MKStalin
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்