search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "participate"

    • அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.
    • குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும்.

    திருப்பூர்:

    அங்கக வேளாண்மை என்பது செயற்கை ரசாயன உரம், பூச்சிக்கொல்லி ஆகியவற்றை தவிர்த்து இயற்கையுடன் இணைந்த உயிரியல் சுழற்சி, இயற்கை மற்றும் அங்கக எரு பயன்படுத்துதல் மூலம் பயிர் பாதுகாப்பு மற்றும் பயிர் சாகுபடி செய்யப்படுவதோடு மண்வளத்தையும் பாதுகாப்பதே ஆகும். அங்கக வேளாண்மையில் மண்ணில் உள்ள நுண்ணுயிர்கள் அங்கக கழிவுகளை நன்றாக மக்க செய்து அவற்றில் உள்ள ஊட்டச்சத்துகளை மண்ணிற்கு அளித்து பயிர்கள் கிரகித்துக் கொள்ள உதவுகின்றன.

    நுண்ணுயிர்கள் ஊட்டச்சத்துகளை மெதுவாகவும், சீராகவும் வெளியிடுகின்றன. இதனால் மாசற்ற சூழலில் பயிர்கள் வளர்வதனால் நஞ்சற்ற விளை பொருட்களை உற்பத்தி செய்ய முடியும்.

    வேளாண்மைத்துறை மூலம் நடப்பாண்டில், அங்கக வேளாண் நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக செயல்படும் தன்னார்வ விவசாயிகளை ஊக்குவிக்கும் பொருட்டு அங்கக விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்படும்.நம்மாழ்வார் விருது பெற விரும்பும் விவசாயிகள் அக்ரிஸ் நெட் வலைதளத்தில்நவம்பர் மாதம் 30-ந் தேதிக்குள் https://www.tnagrisnet.tn.gov.in பதிவுக்கட்டணம்ரூ.100 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

    பங்கேற்பதற்கான தகுதிகள்:குறைந்தபட்சம் ஒரு ஏக்கர் பரப்பில் அங்கக வேளாண்மையில் சாகுபடி செய்தல் வேண்டும். முழுநேர அங்கக விவசாயியாக இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 3ஆண்டுகள் அங்கக வேளாண்மையில் ஈடுபட்டிருக்க வேண்டும். அங்கக வேளாண்மைக்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.மதிப்பீட்டுக்குழு:-

    மாவட்ட அளவிலான மதிப்பீட்டுக்குழு மற்றும் மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் வெற்றியாளர்கள் தீர்மானிக்கப்படுவர். பரிசுத் தொகை:-வெற்றி பெறும் விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசால் நம்மாழ்வார் பெயரில்ரொக்கப் பரிசு, சான்றிதழ் மற்றும் பதக்கம் தமிழ்நாடு முதலமைச்சரால் குடியரசுதினத்தன்று வழங்கப்படும்.

    முதல் பரிசு ரூ.2.5 லட்சம் மற்றும் ரூ.10,000மதிப்புடைய பதக்கம், இரண்டாம்பரிசு ரூ.1.5 லட்சம் மற்றும் ரூ.7,000மதிப்புடைய பதக்கம், மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம் மற்றும் ரூ.5,000 மதிப்புடைய பதக்கம். மேலும், நம்மாழ்வார் விருதுக்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறைகளை தங்கள் பகுதி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகங்களைஅணுகி பெற்றுக்கொள்ளலாம் என கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.  

    • பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ந்தேதி உற்பத்தி நிறுத்தப்போராட்டம் நடைபெறும்
    • 430 சதவீதம் உயா்த்திய நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும்

    திருப்பூர்,செப்.23-

    பீக் ஹவா்ஸ் கட்டணத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூரில் வருகிற 25-ந்தேதி நடைபெறும் உற்பத்தி நிறுத்தப்போராட்டத்தில் பங்கேற்க சைமா வலியுறுத்தியுள்ளது.இது குறித்து அச்சங்கத்தலைவா் வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு வருமாறு:-

    தமிழ்நாடு தொழில்துறை மின்நுகா்வோா் கூட்டமைப்பு சாா்பில் பீக் ஹவா்ஸ் கட்டணத்தை திரும்பப் பெற வேண்டும். 430 சதவீதம் உயா்த்திய நிலைக்கட்டணத்தை திரும்பப்பெற வேண்டும். 2 ஆண்டுகளுக்கு மின் கட்டண உயா்வை தவிா்க்க கோரி தமிழக முதல்-அமைச்சரின் கவனத்தை ஈா்க்கும் வகையில் திருப்பூரில் 25 -ந் தேதி உற்பத்தி நிறுத்தப்போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இந்த அழைப்பை ஏற்று சைமா சங்க உறுப்பினா்கள் அனைவரும் ஒருநாள் அடையாள உற்பத்தி நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.
    • ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

    கோவை.

    ஆவணி மாதம் வரும் அவிட்ட நட்சத்திரத்துடன் கூடிய பவுர்ணமி நாளில் ஆவணி அவிட்டம் கடைபிடிக்கப்படுகிறது.

    ஆண்டு சடங்கு உபநயனம் செய்து கொண்ட பிராமணர்கள் ஆவணி அவிட்டத்தன்று பழைய பூணூலை மாற்றி விட்டு புது பூணூலை அணிந்து கொள்வது வழக்கம்.

    கோவையில் ராஜா வீதியில் உள்ள சங்கர மடம், ராம் நகரில் உள்ள ராமர் கோவில், மற்றும் சித்தாபுதூரில் உள்ள அய்யப்பன் கோவிலில் 1000-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு தங்களது பழைய பூணூலை மாற்றி புதிய பூணூலை போட்டுக்கொண்டனர்.

    விநாயகர் வழிபாட்டுடன் துவங்கிய நிகழ்ச்சியில் உபநயனம் பெற்ற பிராமணர்கள் தங்கள் பூணூல்களை மாற்றி வேத ஆகமங்களின் படி வழிபட்டனர். முன்னதாக வேத மந்திரங்கள் ஓத, கணபதி ஹோமமும் நடந்தது.

    ஆவணி அவிட்டம் என்பது ஆண்கள் மட்டுமே கடைபிடிக்கும் விரதமாகும். ஆவணி மாத பவுர்ணமி அன்று வரும் அவிட்ட நட்சத்திரத்தில் பிராமணர்கள் மற்றும் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த சிலர் மட்டுமே இந்த விரத்தை கடைபிடிக்கின்றனர்.

    முன்னோர்களின் வழி பாட்டிற்கு பிறகு பூணூலை மாற்றிக் கொண்டு தங்கள் வேதங்களை படிக்க தொடங்குவார்கள். இதுவே சமஸ்கிருதத்தில் உபகர்மா என்று அழைக்கப்படுகிறது. உபகர்மா என்பதற்கு தொடக்கம் என்று அர்த்தம். இந்த உபகர்மாவே தமிழில் ஆவணி அவிட்டம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆவணி அவிட்ட தினத்தில் விரதம் இருந்து பூணூல் அணிந்து கொண்டால் குடும்பத்தில் எந்த துன்பமும் நெருங்காது என்பது ஐதீகம்.

    • போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும்.
    • போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும்.

    திருப்பூர்,ஆக.21-

    கோவை ஈஷா யோகா மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் சாா்பில் நடைபெற உள்ள மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக் கழகத்தின் செயலாளா் ஜெயசித்ரா ஏ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை ஈஷா யோக மையம், திருப்பூா் மாவட்ட அமெச்சூா் கபடிக்கழகம் சாா்பில் மாவட்ட அளவிலான கபடிப் போட்டி வருகிற 26-ந் தேதி காயத்ரி மஹாலில் நடைபெறுகிறது. இதில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள ஆண்கள், பெண்கள் கபடி அணிகள் கீழ்க்கண்ட விதிகளின்படி பங்கேற்கலாம்.

    அகில இந்திய அமெச்சூா் கபடிக் கழகத்தின் விதிமுறைகளைப் பின்பற்றி நடைபெறும் போட்டியில் பங்கேற்க திருப்பூா் மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும். போட்டியில் பங்கேற்க வரும் போது ஆதாா் அட்டை கொண்டுவர வேண்டும். ஆண்கள் 85 கிலோவுக்கு மிகாமலும், பெண்கள் 75 கிலோவுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

    மத்திய, மாநில அரசு ஊழியா்கள், செட்டிங் அணி, நிறுவன அணிகள் பங்கேற்க இயலாது. போட்டிகள் அனைத்தும் நாக்-அவுட் முறையில் நடத்தப்படும். இதில், பங்கேற்கவுள்ள அணிகள் ஈஷா யோக மையத்தின் இணையதளத்தில் ஆகஸ்ட் 23 ந் தேதிக்குள் பதிவு செய்துகொள்ள வேண்டும்.

    ஆண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.12 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.8 ஆயிரம் மற்றும் கோப்பை, மூன்று மற்றும் நான்காவது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.5 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    பெண்கள் பிரிவில் முதலிடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.6 ஆயிரம் மற்றும் கோப்பை, 3 மற்றும் 4-வது இடங்களைப் பிடிக்கும் அணிகளுக்கு தலா ரூ.3 ஆயிரம் மற்றும் கோப்பை வழங்கப்படும்.

    இதில் சிறப்பாக விளையாடும் வீரா், வீராங்கனைகள் தலா 12 போ் தோ்வு குழுவினரால் திருப்பூா் மாவட்ட அணிக்கு தோ்வு செய்யப்படுவாா்கள். தோ்வு செய்யப்பட்ட வீரா், வீராங்கனைகளுக்கு பயிற்சி முகாம்கள் நடத்தி கோவையில் செப்டம்பா் 9, 10 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான போட்டிக்கு மாவட்ட கபடிக் கழகத்தின் சாா்பில் அழைத்துச் செல்லப்படவுள்ளனா்.

    இது தொடா்பான கூடுதல் விவரங்களுக்கு 83000-30999 என்ற எண்ணைத் தொடா்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

     உடுமலை:

    உலக புலிகள் தினவிழா ஆண்டு தோறும் ஜூலை 29-ந்தேதி கொண்டாடப்படுகிறது. அதன்படி திருப்பூர் மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் உலக புலிகள் தின விழா சிறப்பாக கொண்டாட முடிவு செய்யப்பட்டு உள்ளது. அப்போது புலிகளின் முக்கியத்துவம் குறித்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு தெரிவிக்கும் வகையில் போட்டிகள் மற்றும் நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது.

    இந்தப் போட்டிகள் ஊடுமலை-பழனி சாலையில் உள்ள ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளி, திருப்பூர் ஜெய்வாபாய் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காங்கயம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது.மாணவ- மாணவிகள் போக்குவரத்து வசதிக்கேற்ப இந்த மையங்களில் கலந்து கொண்டு போட்டிகளில் பங்கு பெறலாம்.

    இது குறித்து ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் தேவேந்திர குமார் மீனா கூறி இருப்பதாவது:-

    ஓவியப்போட்டி காலை 10 மணி முதல் 12 மணி வரையில் நடக்கிறது. எல்.கே.ஜி. முதல் 1-ம் வகுப்பு வரையில் நமது தேசிய விலங்கு புலி என்ற தலைப்பிலும், 2-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை வனநிலப்பரப்பில் புலிகள் என்ற தலைப்பிலும், 6 - ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை புலி மற்றும் அதன் இரைவிலங்குகள் என்ற தலைப்பிலும், 9-ம் வகுப்பு முதல் 12- ம் வகுப்பு வரை புலிகள் அழிவிற்கான காரணிகள் மற்றும் அச்சுறுத்தல்கள் என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு புலிகள் வாழ்கின்ற பகுதியின் சூழ்நிலை என்ற தலைப்பிலும் நடக்கிறது.

    இதற்கான சாட் மற்றும் வண்ண உபகரணங்களை மாணவர்களே கொண்டு வர வேண்டும். கட்டுரைப்போட்டி மதியம் 12:15 மணி முதல் 1.30 மணி வரை நடைபெறும். இந்த போட்டியானது 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு புலிகள் ஏன் தேசிய விலங்கு என குறிப்பிடப்படுகிறது என்ற தலைப்பிலும், கல்லூரி மாணவர்களுக்கு வன நிலப்பரப்பில் புலிகளின் முக்கியத்துவம் மற்றும் அதன் பாதுகாப்பு என்ற தலைப்பிலும் நடக்கிறது. ஒவ்வொரு பள்ளிகளும் ஒரு போட்டிக்கு வகுப்பு வாரியாக 3 பேர் தேர்வு செய்து அனுப்பி வைக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    இந்தப் போட்டிக்கு உடுமலை வனச்சரக அலுவலர் சிவக்குமார்-9487987173 உயிரியலாளர் மகேஷ்குமார்- 6369269722,9486192183, திருப்பூர் வனச்சரக அலுவலர் சுரேஷ் கிருஷ்ணன்-9688414468 திருப்பூர் வனவர் முருகானந்தம்-9585563002 காங்கயம் வனச்சரக அலுவலர் தனபாலன்-7094639223.காங்கயம் வனக்காப்பாளர் செல்வராஜ் -8903428422) ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

    போட்டிகள் தொடர்பாக மேலும் விவரம் தேவைப்படுவோர் மேலே உள்ள செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்குவது குறித்த இடம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.   

    • ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
    • ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    திருப்பூர்:

    மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 30-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தடகளம் - 56, கூடைப்பந்து - 48, பேட்மின்டன் - 21, கிரிக்கெட் - 75, சதுரங்கம் - 2, கால்பந்து - 72, கபடி - 103, சிலம்பம் - 27, நீச்சல் - 6, டேபிள் டென்னிஸ் - 5, த்ரோபால் - 14, ஆக்கி - 72, வாலிபால் - 96, , பளு தூக்குதல் - 1, டென்னிஸ் - 2 பேர் என மொத்தம் 603 பேர் சென்னை செல்கின்றனர்.

    அதிகபட்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் 220 பேர், கல்லூரிகளை சேர்ந்த 207 பேர், பொதுமக்கள் 85 பேர், அரசு ஊழியர் 62 பேர், மாற்றுத்திறனாளி 29 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    • ஓம்சக்தி சேகர் அழைப்பு
    • மாபெரும் முப்பெரும் விழா மாநாட்டை கூட்டி உள்ளார்கள்.

    புதுச்சேரி:

    முன்னாள் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    தீய சக்தியிடம் இருந்து தொண்டர்களை காக்க எம்.ஜி.ஆரால் உருவான இயக்கமான அ.தி.மு.க.வில் சாதாரண தொண்டனும் உச்சபட்ச பதவிக்கு வரலாம் என்ற நிலையை ஜெயலலிதா உருவாக்கி தொண்டர்களின் இரும்பு கோட்டையாக்கினார்.

    ஜெயலலிதா எண்ணங்களை அறவே நீக்கி அ.தி.மு.க. வை அபகரிக்க முயற்சிக்கும் சுயநல கூட்டத்திடம் இருந்து காத்து மீண்டும் தொண்டர்கள் இயக்கமாக மாற்ற ஜெயலலிதாவின் உண்மை விசுவாசியாகவும், முதல் -அமைச்சராக அடையாளம் காட்டப்பட்ட ஜல்லிக்கட்டு நாயகர் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ் நிரூபிக்க திருச்சியில் மாபெரும் முப்பெரும் விழா மாநாட்டை கூட்டி உள்ளார்கள்.

    அ.தி.மு.க ஆண்டு விழா, எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா, ஜெயலலிதா பிறந்த நாள் விழா என முப்பெரும் விழாவை தொண்டர்களால் சிறப்பாக நடத்திட திருச்சியில் ஒன்று கூட அனை வரையும் அழைத்துள்ளார். அவரது அழைப்பை ஏற்று லட்சக்க ணக்கான ஜெயலலிதா தொண்டர்கள் தமிழகம் முழுவதும் இருந்து மலைக்கோட்டை மாநகரில் கூட உள்ளனர்.

    புதுவை மாநில ஜெயலலிதாவின் உண்மை யான தொண்டர்கள் அனைவரும் அணி திரண்டு திருச்சி மாநகர் நோக்கி புறப்படுவோம் ஒன்று கூடுவோம் வென்று காட்டுவோம். என்று அனைவரையும் திரளாக கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

    இவ்வாறு ஓம்சக்தி சேகர் அறிக்கையில் கூறியுள்ளார்.

    • சங்கரன்கோவில் வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, சங்கரன்கோவில் காந்தி நகர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து அண்ணப்பிரசனதிவாஸ், ஊட்டச்சத்து உணவு திருவிழா, ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்குதல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடந்தது.
    • ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை ராஜா எம்.எல்.ஏ., சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவிலில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட பணிகள் சங்கரன்கோவில் (பொது) வட்டார குழந்தை வளர்ச்சித்திட்ட துறை சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, சங்கரன்கோவில் காந்தி நகர் சமுதாய நலக்கூடத்தில் வைத்து அண்ணப்பிரசனதிவாஸ், ஊட்டச்சத்து உணவு திருவிழா, ஊட்டச்சத்து உணவு பெட்டகம் வழங்குதல் ஆகிய முப்பெரும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு சங்கரன்கோவில் எம்.எல்.ஏ. ராஜா தலைமை தாங்கினார். நகராட்சி சேர்மன் உமாமகேஸ்வரி சரவணன், சங்கரன்கோவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சுமதி முன்னிலை வகித்தனர்.

    இதில் 6 மாதம் முடிந்த குழந்தைகளுக்கு முதல் முறை இணை உணவு வழங்கப்பட்டது.

    ஊட்டச்சத்து குறைபாடுள்ள குழந்தை களுக்கு ஊட்டச்சத்து உணவு பெட்டகத்தை ராஜா எம்.எல்.ஏ., சேர்மன் உமா மகேஸ்வரி சரவணன் வழங்கினார். தொடர்ந்து பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த 30- க்கும் மேற்ப்பட்ட உணவுகளை பார்வையிட்டனர்.

    தாய்மார்களுக்கு ஆரோக்கியமான தாய் என்பதை வெளிப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான தாய் என்ற செல்ஃபி ஸ்டண்ட் வடிவமைக்கப்பட்டது. அதில் தாய்மார்கள் ஆர்வமாக புகைப்படம் எடுத்துக்கொண்டார்கள். அவர்கள் முதல் 1000 நாட்கள் மற்றும் இணை உணவு முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. நிகழ்ச்சியில் கவுன்சிலர் புனிதா,

    நகர நிர்வாகி பிரகாஷ், தி.மு.க. நிர்வாகிகள் கே.எஸ்.எஸ். மாரியப்பன், சுப்புத்தாய், அப்பாஸ்அலி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு உறுப்பினர் சங்கர், ஜெயக்குமார், சங்கர் கோமு ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ஏற்பாடுகளை மேற்பார்வையாளர் செல்வம், வட்டார ஒருங்கிணைப்பாளர், வட்டார திட்ட உதவியாளர், குழந்தைகள் மைய பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் செய்து இருந்தனர்.

    • உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர்.
    • நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

    உடுமலை :

    சர்வதேச விண்கற்கள் கண்டறியும் நிறுவனம், அறிவியல் மற்றும் தொழில் நுட்ப தன்னார்வ அமைப்புகள், அரசுத்துறைகளுடன் இணைந்து விண்வெளியில் உள்ள விண்கற்களை கண்டறிய ஆய்வு நடத்துகிறது.

    மாதம்தோறும் நடத்தப்படும் இந்த ஆய்வில், ஆசிரியர்கள், அறிவியல் தன்னார்வலர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பங்கேற்கலாம்.அதன்படி கடந்தாண்டு, இரு முறை உடுமலை கலிலியோ அறிவியல் கழகம் வாயிலாக 6 பேர் கொண்ட குழுவினர் சர்வதேச விண்கற்கள் கண்டறியும் ஆய்வில் ஈடுபட்டனர். இதேபோல நடப்பாண்டு செப்டம்பர் மாதம் விண்கற்கள் கண்டறியும் ஆய்வு நடத்தப்படுகிறது.

    லேப்டாப், கம்ப்யூட்டர் உதவியுடன் ஆய்வில் பங்கேற்கலாம்.தகவல் அறிய கலிலியோ அறிவியல் கழக ஒருங்கிணைப்பாளர் கண்ணபிரானை 8778201926 என்ற வாட்ஸ்ஆப் எண், galilioscienceclub@gmail.com முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    • மாவீரன் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி.
    • சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றையும், அவருடைய பெருமைகளையும் அறிந்து கொள்ள வேண்டும்.

    திருப்பூர் :

    கொங்குநாடு விவசாயிகள் கட்சியின் மாநில தலைவர் கொங்கு வி.கே.முருகேசன், மாநில பொதுச்செயலாளர் கொங்கு எம்.ராஜாமணி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சுதந்திர போராட்ட தியாகி தீரன் சின்னமலையின் 217-ம் ஆண்டு நினைவு தினம் கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் நாளை (புதன்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் மாவீரன் தீரன் சின்னமலைக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி திருப்பூர் காங்கயம் ரோடு காயத்ரி மகாலில் நாளை காலை 8 மணி முதல் 10 மணிவரை சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தீரன் சின்னமலை நினைவு நாளையொட்டி இன்றைய இளம் தலைமுறையினர், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் வரலாற்றையும், அவருடைய பெருமைகளையும் அறிந்து கொள்ளும் நோக்கில் திருப்பூரில் கொங்குநாடு விவசாயிகள் கட்சி சார்பில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளோம். இதில் கட்சியின் கவுரவ தலைவர் சரண்யா கே.எம்.முருகேசன், துணைத் தலைவர் சிலீக் என்.எம்.ராமசாமி, பொருளாளர் ஜியோ ஏ.என்.செல்வராஜ் உள்பட மாநில, மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள உள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

    சென்னையில் நாளை நடைபெற உள்ள கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Rajini #KarunanidhiStatue
    சென்னை:

    சென்னையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. சிலை திறப்பு விழாவில் பங்கேற்பதற்காக அனைத்து தலைவர்களுக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கருணாநிதி சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சிலை திறப்பு விழாவில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியுடன், ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள மாநில முதல்வர் பினராயி விஜயன், புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.



    நாளை சென்னை வரும் சோனியா காந்தி மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மரியாதை செலுத்த உள்ளார்.

    அண்ணா அறிவாலயம் வளாகத்தில் நடைபெறும் திருவுருவச் சிலை திறப்பு விழா முடிவடைந்ததும், ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு தலைவர்கள் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். #Rajini #KarunanidhiStatue

    நாகர்கோவிலில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும் என அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    நாகர்கோவில்:

    தமிழக அரசு சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா மாவட்டம் தோறும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி குமரி மாவட்டத்தில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது.

    நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவக் கல்லூரி மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.

    இந்த விழாவில் முதல்வர் பழனிசாமி பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:
     
    ஒகி புயலில் இறந்த, மாயமான 136 மீனவர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்கப்பட்டது, ஒகி புயலில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு நிதி, பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேங்காய்பட்டினம் மீன்பிடி துறைமுக பணி முடியும் நிலையில் உள்ளது. 

    விவசாய பயிரிழப்புகளுக்கு ரூ.36 கோடி வழங்கப்பட்டது. குளச்சலில் ரூ.96.2 கோடியில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும், சின்ன முட்டம் துறைமுகம் மேம்படுத்தப்படும்.



    தற்போது எல்லைகள் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்த பணிகள் முடிந்ததும் நாகர்கோவில் நகராட்சி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படும்.

    அதிமுக ஆட்சியின் சாதனைகளை மக்கள் நன்றாக புரிந்துள்ளனர், ஆனால் ஒருசிலர் தேவையில்லாமல் விமர்சனம் செய்கின்றனர்.

    எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களுக்கு அடிப்படை ஆதாரம் இல்லை, விமர்சனங்கள் அனைத்தும் அவர்களுக்கு திரும்ப செல்லும்.

    திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சொல்லும் குற்றச்சாட்டுகளில் ஒன்று கூட உண்மையல்ல. பொய் பேசுவதற்கு டாக்டர் பட்டம் கொடுத்தால் அது ஸ்டாலினுக்கே பொருந்தும் என அவர் அறிவித்தார். #MGRCenturyFestival #Edappadipalaniswami
    ×