search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 603 பேர் தேர்வு
    X

    முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்க திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 603 பேர் தேர்வு

    • ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.
    • ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    திருப்பூர்:

    மாநில முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி வருகிற 30-ந் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் துவங்குகிறது. ஒரு மாதம் நடக்கும் இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 38 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    திருப்பூர் மாவட்டத்தில் இருந்து தடகளம் - 56, கூடைப்பந்து - 48, பேட்மின்டன் - 21, கிரிக்கெட் - 75, சதுரங்கம் - 2, கால்பந்து - 72, கபடி - 103, சிலம்பம் - 27, நீச்சல் - 6, டேபிள் டென்னிஸ் - 5, த்ரோபால் - 14, ஆக்கி - 72, வாலிபால் - 96, , பளு தூக்குதல் - 1, டென்னிஸ் - 2 பேர் என மொத்தம் 603 பேர் சென்னை செல்கின்றனர்.

    அதிகபட்சமாக பள்ளி மாணவ, மாணவிகள் 220 பேர், கல்லூரிகளை சேர்ந்த 207 பேர், பொதுமக்கள் 85 பேர், அரசு ஊழியர் 62 பேர், மாற்றுத்திறனாளி 29 பேர் பங்கேற்க உள்ளனர். இவர்கள் ஜூலை 1-ந்தேதி முதல் ஒவ்வொரு போட்டிகளிலும் பங்கு பெறுகின்றனர்.

    Next Story
    ×