search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "karunanidhi statue"

    • தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.
    • முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    நாகர்கோவில்:

    நாகர்கோவில் ஒழுகின சேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது. இதற்காக 6 அடி உயரத்தில் பீடம் அமைக்கப்பட்டு அதன்மேல் 8½ அடி உயரத்தில் கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நிகழ்ச்சி இன்று காலை நடந்தது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்தார். பின்னர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    இதைத் தொடர்ந்து அமைச்சர்கள் கே.என்.நேரு, சாத்தூர் ராமச்சந்திரன், ஐ. பெரியசாமி, மனோ தங்கராஜ் ஆகியோரும் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்கள்.

    இதைத் தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த 25 அடி உயர கொடிக்கம்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியேற்றினார். பின்னர் கட்சி அலுவலகத்திற்குள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்றார். அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பேராசிரியர் அன்பழகன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

    முன்னதாக விழாவிற்கு வந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளரும், மேயருமான மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ஆஸ்டின், மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜே. ஸ்டாலின், மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநகர செயலாளர் ஆனந்த் ஆகியோர் புத்தகம், பொன்னாடை வழங்கி வரவேற்றனர்.

    கட்சி அலுவலகத்திற்குள் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கினார்கள். கட்சி அலுவலகத்திற்குள் நிர்வாகிகள் 80 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இதைத் தொடர்ந்து கருணாநிதியின் சிலையை தயார் செய்த மீஞ்சூரைச்சேர்ந்த தீனதயாளனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசையும், தங்க மோதிரத்தையும் வழங்கி கவுரவப்படுத்தினார். பின்னர் மேயர் மகேஷ் சார்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. கருணாநிதி வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்தின் மாதிரி நினைவு பரிசை அவர் வழங்கினார்.

    முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், மாவட்ட பொருளாளர் கேட்சன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.எஸ்.பார்த்தசாரதி, தாமரை பாரதி, சதாசிவம் ஒன்றிய செயலாளர்கள் பாபு, சுரேந்திரகுமார், மாநகரச் செயலாளர் ஆனந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர். முதலமைச்சர் வருகையையடுத்து அவ்வை சண்முகம் சாலையில் போக்குவரத்து மாற்றி விடப்பட்டு இருந்தது.

    தி.மு.க. அலுவலகத்திற்குள் சென்ற நிர்வாகிகள் பலத்த சோதனைக்கு பிறகு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்கும் வகையில் தி.மு.க. அலுவலகத்தின் முன் பகுதியில் சாலையின் இருபுறமும் வாழை தோரணங்கள் கட்டப்பட்டு இருந்தது.

    • குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார்.
    • 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    நாகர்கோவில்:

    நாகர்கோவிலில் இன்று அமைச்சர் மனோ தங்கராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:-

    குமரி மாவட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப்பயணம் செய்கிறார். இதற்காக அவர் 6-ந் தேதி மாலை நாகர்கோவில் வருகிறார். அன்று நாகர்கோவிலில் நடைபெறும் தோள்சீலை போராட்ட 200-வது ஆண்டு மாநாட்டில் பங்கேற்று பேசுகிறார்.

    இந்த நிகழ்ச்சியில் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும் கலந்து கொள்கிறார். இதுபோல தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்று பேசுகிறார்கள்.

    மறுநாள் 7-ந்தேதி காலை நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தின் புதிய கட்டிடத்தை திறந்து வைக்கிறார். அதன்பின்பு நாகர்கோவில் ஒழுகினசேரியில் உள்ள தி.மு.க. அலுவலகத்தில் அமைக்கப்பட்டு உள்ள முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார்.

    அன்று மதியம் அவர் குமரி மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு தூத்துக்குடி புறப்பட்டு செல்கிறார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கருணாநிதி சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார்.
    • தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாக உறுதியளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே கள்ளிப்பட்டி கிராமத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் முழு உருவ வெண்கலச் சிலை 8 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது. சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு, கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார்.

    மேலும், சிலையின் அருகே கட்டப்பட்டுள்ள கலைஞர் நூலகத்தையும் முதலமைச்சர் திறந்து வைத்தார். பள்ளி மாணவர்களுக்கு ஒரு லட்சம் மரக்கன்றுகளையும் வழங்கி உரையாற்றினார்.

    அப்போது, கருணாநிதியின் மகனாக அல்லாமல் திமுகவின் நேர்மையான தொண்டனாக சிலையை திறந்து வைப்பதாகவும், 4 ஆண்டுகளில் ஈரோடு மாவட்டத்தில் நான் திறந்து வைத்த மூன்றாவது வெண்கலச் சிலை இது என்றும் குறிப்பிட்டார். மேலும், தேர்தலுக்கு முன்பு அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும் நிறைவேற்றுவதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  உறுதியளித்தார்.

    • கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார்.
    • கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கள்ளிப்பட்டியில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைப்பதற்கான ஏற்பா டுகள் செய்யப்பட்டது.

    ஆனால் சிலை வைக்க அப்போதைய மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்காத நிலையில் பீடம் அமைக்கப்பட்டதோடு நிறுத்தி வைக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கருணாநிதி சிலை வைக்க 3 ஆண்டுகளாக தொடர் நடவடிக்கை காரணமாக தற்போது அனுமதி கிடைத்தது. அதைத்தொடர்ந்து கள்ளிப்பட்டி பகுதியில் கருணாநிதி சிலை அமைப்பதற்கான முன்னே ற்பாட்டு பணிகள் மற்றும் பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர் சு.முத்துசாமி நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது பொதுப்பணித்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    அதைத்தொடர்ந்து அமைச்சர் முத்துசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைப்பதற்காக டி.என்.பாளையம் ஒன்றிய நிர்வாகிகள் கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பாடுகளை செய்து வந்தனர்.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போதே சிலை வைப்பதற்காக நிர்வாகத்திடம் முழு அனுமதி பெற்ற பின்பே சிலை நிறுவ வேண்டும் என்று கூறிவிட்டார்.

    தற்போது மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்து உள்ளதால் அடுத்த மாதம் 4-ந் தேதி காலை ஈரோட்டில் நலத்திட்ட உதவிகளையும், அரசு திட்டங்களை தொடங்கி வைப்பதோடு, நிறைவேறிய திட்டங்களை திறந்து வைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. மாலை கலைஞர் சிலை திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    பின்னர் 5-ந் தேதி ஈரோட்டில் புத்தக திருவிழாவை முதல்-அமைச்சர் தொடங்கி வைக்க உள்ளார். அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

    அந்தியூர் குருநாதசாமி கோவில் திருவிழா மட்டுமில்லை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் கட்டுப்பாட்டோடு நடத்த வேண்டும். குருநாதசாமி கோவில் திருவிழா தேரோட்டத்தை பொரு த்தவரை மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையுடன் கலந்து முடிவு செய்யப்படும்.

    இந்த ஆண்டு கீழ்பவானி பாசனத்திற்கு அடுத்த மாதம் 1 அல்லது 15-ந் தேதி தண்ணீர் திறப்பது குறித்து கோவையில் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் கீழ்பவானி பாசன விவசாயிகளுடன் ஆலோசனையில் ஈடுபட உள்ளார். அப்போது தண்ணீர் திறப்பு குறித்து முடிவு செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம், அந்தியூர் ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ., டி.என்.பாளையம் ஒன்றிய செயலாளர் எம்.சிவபாலன், முன்னாள் எம்.எல்.ஏ. கந்தசாமி, கோபி நகர் மன்ற தலைவர் என்.ஆர்.நாகராஜ் உள்பட மாவட்ட, ஒன்றிய தி.மு..க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் தொடக்கம்.
    • அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவி.

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக திருவண்ணாமலை சென்றார். மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூரில் மாவட்ட தி.மு.க. சார்பில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. அமைச்சர் எ.வ.வேலு, துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கட்சி நிர்வாகிகள் சால்வை அணிவித்து பூங்கொத்து கொடுத்து மேளதாளத்துடன் பிரம்மாண்டமாக வரவேற்றனர்.

    கீழ்பென்னாத்தூர் தாலுகா ஆராஞ்சி கிராமத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் இல்லம் தேடி கல்வி திட்டம் நிகழ்ச்சியை அவர் தொடங்கி வைத்தார். இது தமிழகத்தில் 2 லட்சமாவது இல்லம் தேடி கல்வி மையமாகும்.

    தொடர்ந்து மாலையில் திருவண்ணாமலை மாடவீதி பெரிய தெருவில் உள்ள பழைய மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார். 

    பின்னர் திருவண்ணாமலை வேலூர் சாலையில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள அண்ணா நுழைவு வாயிலை திறந்து வைத்த முதலமைச்சர், பின்னர் வெண்கலத்தினால் செய்யப்பட்ட கருணாநிதியின் உருவச்சிலையையையும் திறந்து வைத்தார். கிரிவலப்பாதையில் திருவண்ணாமலை நகரத்தை நோக்கியபடி கருணாநிதி சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து ஈசான்ய மைதானத்தில் நடைபெற்ற தி.மு.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களின் கவலைகளைப் போக்கும் அரசாக திராவிட மாடல் அரசு திகழ்ந்து வருகிறது என்றார். தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், அண்ணாவின் ஆசைகள், கலைஞரின் கனவுகளை நிறைவேற்றிய திருப்தி தமக்கு உள்ளது என்றும் குறிப்பிட்டார்.  

    முதலமைச்சரின் வருகையையொட்டி திருவண்ணாமலையில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஏடிஜிபி தாமரைக்கண்ணன் தலைமையில் ஒரு ஐஜி, 3 டி.ஐ.ஜி., 7 போலீஸ் சூப்பிரண்டு உட்பட 2,200 போலீசார் திருவண்ணாமலையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கலைஞர் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

    ரூ.1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

    தொடர்ந்து, நிகழ்ச்சியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.

    மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

    இதையடுத்து, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்ததில் பெருமை அடைகிறேன். கலைஞர் சிலை மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதி சிறந்த நிர்வாகத் திறமை கொண்டவர். இந்தியாவின் பெருமைமிகு முதலமைச்சர்களில் கலைஞரும் ஒருவர். என் இளம்வயதில் கலைஞரின் உரைகளால் ஈர்க்கப்பட்டு இருக்கின்றேன்.

    கலைஞர் கைது செய்யப்பட்டபோது ஜனநாயகத்திற்காக வாதாடினேன். பன்முகத் தன்மை, அர்ப்பணிப்பு, உழைப்பு என பல்வேறு ஆற்றல் நிறைந்தவர் கலைஞர்.

    என்னுடைய பொது வாழ்வில் கலைஞர் கருணாநிதியுடனான உறவு மறக்க முடியாத இனிமையானது. எந்த கட்சியாக இருந்தாலும் எல்லோரும் நாட்டில் உள்ள மக்களுக்காக உழைக்கிறோம்.

    கருத்து வேறுபாடுகள் இருந்தபோதிலும் தமது தரப்பு கருத்தை முன்வைப்பதில் கலைஞர் தனித்திறன் கொண்டவர். சொலல் வல்லன் சோர்விலன் அவனை இகழ்வெல்லல் யார்க்கும் அரிது என்ற குரலுக்கு பொருந்துபவர் கலைஞர்.

    தமிழ் சினிமாவின் புதிய போக்கை தொடங்கி வைத்தவர் கலைஞர்.

    மாநிலங்கள் வளர்ச்சி அடைந்தால் நாடும் வளர்ச்சி அடையும். மாநிலங்களின் வளர்ச்சியே நாட்டின் வளர்ச்சி என்ற உணர்வோடு உழைக்க வேண்டும். மக்களை நடுநாயகமாக கொண்ட அரசியலை முன்னெடுத்தவர் கலைஞர் கருணாநிதி.

    தாய்மொழி, தாய்நாடு ஆகியவையே மிகவும் முக்கியமானது. தாய்மொழியே இதயத்தின் உணர்வுகளை சரியாக வெளிப்படுத்தும். எந்த மொழியை எதிர்க்காவிட்டாலும் எனது மொழியை ஆதரிப்பேன்.

    வெளிநாடுகளுக்கு மாநாட்டிற்கு சென்றாலும் பாரம்பரிய உடையிலேயே செல்கிறேன்.  இந்தியாவின் பன்முகத்தன்மையை ஏற்று அங்கீகரிக்க வேண்டும்.

    மக்களின் முன்னேற்றத்திற்காக உழவர் சந்தை, தொழில் வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை கொண்டுவந்தவர் கலைஞர்.

    தமிழ்த் தாய் வாழ்த்தை அரசு விழாக்களில் நடைமுறைப்படுத்தியவர் கலைஞர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதையும் படியுங்கள்.. எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாள் இந்நாள்- முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி
    நிகழ்ச்சியில் நவீன தமிழ்நாட்டின் சிற்பி என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.
    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.

    ₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    பின்னர் இந்நிகழ்ச்சியில் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வரவேற்புரையாற்றினார்.

    தொடர்ந்து, நிகழ்ச்சியில் 'நவீன தமிழ்நாட்டின் சிற்பி' என்கிற தலைப்பில் காணொலி ஒளிபரப்பப்பட்டது.

    மு.கருணாநிதி சிலை திறப்பு நிகழ்ச்சியில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நினைவு பரிசு வழங்கினார்.

    பின்னர், விழாவில் மு.க.ஸ்டாலின் உரையாற்றியதாவது:-

    வாழ்வில் ஓர் பொன் நாள் என்று எந்நாளும் மகிழ்ந்து போற்றும் நாளாக இந்நாள் அமைந்துள்ளது. கருணாநிதியின் கனவு கோட்டையாக உள்ள இடத்தில் அவரது சிலை திறக்கப்பட்டுள்ளது.

    பெரியார் மற்றும் அண்ணாவின் சிலைக்கு இடையில் கருணாநிதியின் சிலை இருப்பது சிறப்பு வாய்ந்தது.

    கலைஞர் சிலையை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்தது மிக மிக பொருத்தமானது.

    நட்புக்குரிய இனிய நண்பராகவே குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு இருக்கிறார். நாட்டில் பல குடியரசுத் தலைவர்களை உருவாக்கியவர் கலைஞர்.

    பராசக்தி, பூம்புகார் படத்தின் வசனங்கள் இன்றும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கின்றன. கலைஞர் தீட்டிய திட்டத்தால் தமிழகத்தில் ஒவ்வொருவரும் பயன்பெற்றிருப்பர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது - அமைச்சர் துரைமுருகன்
    ரூ. 1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
    சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் முன்னாள் முதல்வர் மு.கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டுள்ளது.

    ₨1.7 கோடி மதிப்பில் 12 அடி பீடத்தில், 16 அடிக்கு மு. கருணாநிதி சிலையை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் வரவேற்புரையாற்றிய நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

    கலைஞரின் சிலையை பார்க்கும்போது நெஞ்சம் உருகிவிட்டது.

    நம்முடன் கலைஞர் நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    முடியாததை முடித்துக் காட்டுபவர் கலைஞருக்கு நிகர் கலைஞர்தான். ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின்தான்.

    எங்களைப் போல் வேட்டி கட்டும் வெங்கையா நாயுடு எங்கள் ஊர்க்காரர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையும் படியுங்கள்.. ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை- துணை ஜனாதிபதி இன்று மாலை திறந்து வைக்கிறார்
    ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதோடு கருணாநிதி பிறந்த நாளான ஜூன் 3-ந் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்றும் அறிவித்தார்.

    அதன்படி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையின் முன்புறம் அண்ணாசாலை ஓரத்தில் கருணாநிதியின் சிலை நிறுவ இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் பொதுப்பணித்துறை சார்பில் 12 அடி உயர பீடத்தில் 16 அடி உயரத்தில் கருணாநிதி சிலை நிறுவப்பட்டு உள்ளது. ரூ.1.7 கோடி மதிப்பில் அந்த முழு உருவ வெண்கல சிலை தயாரிக்கப்பட்டுள்ளது.

    மீஞ்சூரில் உள்ள சிற்பக்கூடத்தில் வடிவமைக்கப்பட்ட கருணாநிதி சிலை இதுவரை நிறுவப்பட்ட கருணாநிதி சிலைகளில் மிகப்பெரியதாகும்.

    இந்நிலையில், ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் சிலை இன்று திறக்கப்பட்டது. இதற்காக, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பலத்த பாதுகாப்பும் போடப்பட்டன.

    முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாழுடுவை முதல்வர் மு.க.ஸ்டாலின் பொன்னாடை அணுவித்து வரவேற்றார்.

    பின்னர்,  ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதியின் வெண்கல சிலையை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.

    நிகழ்ச்சியில் சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

    இதையும் படியுங்கள்.. ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதி சிலை- துணை ஜனாதிபதி இன்று மாலை திறந்து வைக்கிறார்
    எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலையை உதயநிதி ஸ்டாலின் நாளை திறந்து வைக்கிறார்.
    போரூர்:

    சென்னை தெற்கு மாவட்டம் கலைஞர் நகர் தெற்கு பகுதி தி.மு.க. சார்பில் எம்.ஜி.ஆர். நகர் அண்ணா மெயின் ரோட்டில் உள்ள கட்சி அலுவலக வளாகத்தில் கருணாநிதியின் மார்பளவு வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நாளை (வெள்ளி) மாலை 6 மணிக்கு நடக்கிறது.

    கே.கே.நகர் தெற்கு பகுதி செயலாளர் கே.கண்ணன் தலைமையில் வடக்கு பகுதி செயலாளர் மு.ராசா, தலைமை பொதுக்குழு உறுப்பினர் துரைராஜ், மாவட்ட துணை செயலாளர் வாசுகி பாண்டியன் ஆகியோர் முன்னிலையில் நடைபெறும் விழாவில் முரசொலி நிர்வாக மேலாண்மை இயக்குனர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி சிலையை திறந்து வைக்கிறார்.

    விழாவில் மாநில இளைஞரணி துணை செயலாளர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி எம்.எல்.ஏ., மாவட்ட செயலாளர் மா.சுப்பிர மணியன் எம்.எல்.ஏ., தலைமை செயற்குழு உறுப்பினர் க.தனசேகரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர்.

    முடிவில் 131-வது (அ) வட்ட செயலாளர் ராஜ், செழியன், நந்தகோபால், கே.வி.எஸ்.சுரேஷ், கண்ணன் ஆகியோர் நன்றி கூறுகிறார்கள்.
    ஈரோட்டில் இன்று மாலை நடைபெற உள்ள பிரமாண்ட விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். #DMK #Karunanidhi #MKStalin
    ஈரோடு:

    தி.மு.க. முன்னாள் தலைவர் மறைந்த கருணாநிதியின் முழு உருவ வெண்கல சிலை ஈரோடு முனிசிபல் காலனி திரு.வி.க. வீதியில் அமைக்கப்பட்டுள்ளது.

    கருணாநிதியின் சிலை திறப்பு விழா இன்று மாலை 4 மணிக்கு நடக்கிறது.

    விழாவில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதியின் சிலையை திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார்.

    முன்னதாக ஈரோடு வரும் மு.க.ஸ்டாலினுக்கு ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான முத்துசாமி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    மு.க.ஸ்டாலின் ஈரோடு வருகையையொட்டி ஈரோடு மாவட்டம் மற்றும் அண்டை மாவட்டங்களான திருப்பூர், கோவை, சேலம், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

    சிலை திறப்பு விழாவில் கட்சி முக்கிய பிரமுகர்கள், கூட்டணி கட்சி பிரமுகர்களும் கலந்து கொள்கிறார்கள். #DMK #Karunanidhi #MKStalin
    ஈரோட்டில் கருணாநிதி சிலையை திமுக தலைவர் முக ஸ்டாலின் நாளை மாலை திறந்து வைக்கிறார். சிலை திறப்புக்காக 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார். #Karunanidhi #DMK
    ஈரோடு:

    ஈரோடு முனிசிபல் காலனியில் சென்னை கலைஞர் அறிவாலயத்தில் உள்ளது போல் முழு உருவ கருணாநிதி சிலை வைக்கப்பட்டு உள்ளது.

    இந்த சிலையை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை (30-ந் தேதி) மாலை திறந்து வைக்கிறார். இந்த சிலை திறப்பு நிகழ்ச்சிக்காக கொடுமுடி அருகே உள்ள சாண்டாம்பாளையம் மேலூரை சேர்ந்த 3-ம் வகுப்பு மாணவி சிறுமி சோபிகா தனது உண்டியல் பணத்தை கொடுத்துள்ளார்.

    இந்த மாணவி தனது தந்தையிடம் வாங்கும் பணத்தை உண்டியலில் சிறுக... சிறுக சேர்த்து வைத்திருந்தார். இந்த உண்டியல் பணத்தை தான் சிறுமி சோபிகா வழங்க முடிவு செய்தார்.

    உண்டியலை திறந்து பார்த்தபோது அதில் ரூ.1104 இருந்தது. அந்த பணத்துடன் பெற்றோருடன் ஈரோடு வந்த சிறுமி சோபிகா முன்னாள் அமைச்சரும், ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமியை சந்தித்து வழங்கினார்.

    அந்த சிறுமி கூறும்போது, ‘‘எனக்கு கலைஞர் தாத்தா ரொம்ப பிடிக்கும். கலைஞர் தாத்தா சிலை திறப்புக்காக இந்த பணத்தை கொடுத்துள்ளேன்’’ என்று கூறினார்.  #Karunanidhi #DMK
    ×