search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திமுக கூட்டத்துக்கு ஜெனரேட்டர் மூலம்தான் மின் சப்ளை செய்யப்பட்டது- ஜெயக்குமாருக்கு திமுக பதில்
    X

    திமுக கூட்டத்துக்கு ஜெனரேட்டர் மூலம்தான் மின் சப்ளை செய்யப்பட்டது- ஜெயக்குமாருக்கு திமுக பதில்

    கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது என்று அமைச்சர் ஜெயக்குமாருக்கு தி.மு.க. பதில் அளித்துள்ளது. #DMK #TNMinister #Jayakumar
    சென்னை:

    கருணாநிதி சிலை திறப்பு விழா, பொதுக்கூட்ட கட்- அவுட்டுக்கு கொக்கி போட்டு மின்சாரம் திருடப்பட்டதாக அமைச்சர் ஜெயக்குமார் நேற்று குற்றம் சாட்டி இருந்தார்.

    இதற்கான ஆதாரமாக வாட்ஸ்-அப் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார்.

    இதற்கு தி.மு.க. மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை மேற்கு மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கருணாநிதி சிலை திறப்பு பொதுக்கூட்டத்திற்கான மின்சாரம் முழுவதும் ஜெனரேட்டர் மூலமே எடுக்கப்பட்டது. இது அனைவருக்கும் தெரியும்.


    சிலை திறப்பு விழா மாபெரும் வெற்றி பெற்றதால் பொதுமக்களின் ஆதரவு தி.மு.க.வுக்கு பன்மடங்காக அதிகரித்து வருவதால் இதை பொறுத்துக் கொள்ள முடியாத அமைச்சர் ஜெயக்குமார் விழாவுக்கு களங்கம் ஏற்படுத்த பத்திரிகையாளரிடம் மின் திருட்டு என வாட்ஸ்அப்பில் வந்த தகவலை செய்தியாக காண்பித்து குற்றம் சுமத்துகிறார்.

    வாட்ஸ்அப்பில் வந்ததை எல்லாம் ஆதாரமாக எடுத்துக் கொண்டு பேசினால் அமைச்சர் மீதும் எவ்வளவோ குற்றம் சாட்டலாம். ஆனால் தி.மு.க.வினர் என்றைக்கும் தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபட மாட்டார்கள்.

    அமைச்சரின் பேச்சில் என்ன தெரியவருகிறது என்றால் கருணாநிதி சிலை திறப்பு விழாவை பார்த்து ஆளுங்கட்சி ஆட்டம் கண்டு அஞ்சி நடுங்கி போய் இருப்பது தெரிகிறது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #DMK #TNMinister #Jayakumar
    Next Story
    ×