search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "tn people"

    தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வரவில்லை என்று அக்கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்தார். #BJP #HRaja
    கோவை:

    பா.ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டி வருமாறு:-

    ‘ஈழத்தில் 85,000 இளம் தமிழ் விதவைகள் உருவாக காரணமாக இருந்தாலும், கலைஞர் சிலை திறப்பு விழாவில் சோனியாவை நல்ல விதமாக வரவேற்பது இயல்புதான்.

    ஆனால் மோடியை ‘சாடிஸ்ட்’ என பேசுவதற்கு என்ன அவசியம் வந்தது? அதனால்தான் ஸ்டாலினை முதிர்ச்சி இல்லாத தலைவர் என்கிறேன். தி.மு.க இன்று முற்றிலும் முதிர்ச்சி இல்லாத தலைமையின் கீழ் இருக்கிறது.

    பாராளுமன்றத்தில் உறுப்பினராக இல்லாத கலைஞருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றியது மோடி அரசு. அதில் சோனியா காந்தி கலந்து கொள்ளவில்லை. கலைஞர் சிலை திறப்பதற்குத் தமிழின துரோகி சோனியா காந்தியை ஸ்டாலின் அழைத்தது மிகவும் கண்டிக்கத்தக்கது.

    இரண்டு ஆண்டுகளாகத் தமிழகத்தில் இருக்கும் பிரிவினை தீய சக்திகளுக்கு தி.மு.கதான் அரவணைப்பு. தி.மு.க கூட்டணியில் ம.தி.மு.கவும் வி.சி.கவும் இல்லை என்று துரைமுருகன் கூறியது போலவே அவர்களுக்கு மேடையில் இடம் கொடுக்காமல் 8 -வது வரிசைக்கு தள்ளிவிட்டனர். துரைமுருகன் தான் தி.மு.கவை வழி நடத்துகிறார்.


    இந்து அறநிலையத் துறையின் கூடுதல் ஆணையர் திருமகள் மீது உடனடியாக துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது, திருடப்பட்ட சிலைகள் மீட்கப்படுகின்றது என்று சொல்லும் அமைச்சர் பாண்டியராஜன் போன்றோர் சிலை திருடுபோனது எப்படி? அப்போது அறநிலையத்துறை என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கும் பதில் சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களை பிரதமர் ஏன் பார்வையிட வரவில்லை என நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு நேரடியாகப் பதிலளிக்காமல் கருணாநிதி சிலை திறப்பு விழாவுக்கு சோனியா காந்தி அழைக்கப்பட்டதையே விமர்சித்துப் பதிலளித்தார். உங்கள் அரசின் மீதான குற்றச்சாட்டுக்குப் பதில் சொல்லுங்கள். காங்கிரஸ் சரி இல்லை என்பதால் தானே உங்களுக்கு வாய்ப்பளித்தார்கள். உங்களிடம் ஒரு குற்றச்சாட்டை முன் வைத்தால் அதற்கு பதில் சொல்லுங்கள் என்று நிருபர்கள் மீண்டும் கேட்டதற்கு, ‘‘தமிழக மக்கள் ஓட்டுப்போட்டு பா.ஜனதா ஆட்சிக்கு வரவில்லை’’. என்று பதிலளித்தார்.

    4 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா அடைந்த தோல்வி குறித்த கேள்விக்கு ‘மக்கள் சட்டமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் பாராளுமன்றத் தேர்தலில் ஒரு மாதிரியும் வாக்களிப்பார்கள். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் தி.மு.க ஒரு இடத்தில் கூட வெல்லவில்லை. அனுபவம் வாய்ந்த மோடியா இல்லை முதிர்ச்சி இல்லாத ராகுலா என மக்கள் முடிவு செய்வார்கள்.

    நாட்டுக்குத் தேவை நிலையான கட்சி. நிலையான அரசு. ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக, மம்தா பானர்ஜி, சந்திரபாபு நாயுடு, சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்டோரே ஏற்கவில்லை. அந்தக் கூட்டணியில் ஆளுக்கு ஆள் நாட்டாமை. கருணாநிதி சிலைக்கு செலவு செய்த நிதியை கஜா புயல் பாதித்த 4 மாவட்ட மக்களுக்கு வழங்கியிருக்கலாமே!.

    இவ்வாறு அவர் பேட்டி அளித்தார். #BJP #HRaja
    தமிழக மக்கள் ரஜினியை முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர் என்று ஓசூரில் நிருபர்களுக்கு தமிழருவி மணியன் பேட்டி அளித்துள்ளார். #tamilaruvimanian #rajinikanth #tncm

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

    10 நாட்களுக்கு ஒரு முறை ரஜினியை நான் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். மற்ற நேரங்களில் போன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறோம். ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர்.


    எல்லோர் மனதிலும் அவர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

    கர்நாடகாவில் எலியும், பூனையுமாக இருந்த சித்தராமையாவும், குமாரசாமியும் இன்று ஒருவருக்கொருவர் நட்பு கொண்டு நடிப்பது, பதவிக்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல், இதில் மக்கள் நலன் ஒன்றுமில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #tamilaruvimanian #rajinikanth #tncm

    எதிர்காலத்தில் தமிழக மக்கள் தங்கள் கட்சியைத்தான் ஆட்சியில் அமர வைப்பார்கள் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். #TTVDhinakaran
    சென்னை:

    சென்னை விமான நிலையத்தில் அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    தமிழ் நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் வெற்றிடத்தை நடிகர் ரஜினி காந்த் நிரப்புவார் என்று ஆடிட்டர் குருமூர்த்தி கூறி இருப்பது அவரது தனிப்பட்ட கருத்து.

    வருங்காலத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் அதை மக்கள் தான் தீர்மானிப்பார்கள்.

    எதிர்காலத்தில் தமிழக மக்கள் எங்கள் கட்சியைத்தான் ஆட்சியில் அமர வைப்பார்கள். அதற்கு சான்றாக ஆர்.கே.இடைத்தேர்தல் வெற்றி அமைந்துள்ளது.


    காவிரி நதி நீர் பிரச்சனையில் எச்.ராஜா 16-ந்தேதி நல்ல மகிழ்ச்சியான தகவல் வரும் என்று கூறி இருக்கிறார். அதை பொருத்திருந்து பார்ப்போம்.

    நதிநீர் இணைப்பு என்பது நல்ல எண்ணம்தான். முதலில் தமிழ்நாட்டில் உள்ள நதிகளை இணைக்க வேண்டும்.

    காவிரி பிரச்சனை குறித்து நமது அம்மா பத்திரிகையில் மத்திய அரசை எதிர்ப்பது போல் காட்டுகிறார்கள். இது எடப்பாடி பழனிசாமி அரசின் இரட்டை வேட மாகும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TTVDhinakaran
    ×