ரஜினியை முதல்வர் பதவியில் அமர்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டனர்- தமிழருவி மணியன்

தமிழக மக்கள் ரஜினியை முதல்வர் பதவியில் அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர் என்று ஓசூரில் நிருபர்களுக்கு தமிழருவி மணியன் பேட்டி அளித்துள்ளார். #tamilaruvimanian #rajinikanth #tncm
ரஜினியை முதல்வர் பதவியில் அமர்த்த தமிழக மக்கள் தயாராகி விட்டனர்- தமிழருவி மணியன்
Published on

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் நடந்த ஒரு தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

10 நாட்களுக்கு ஒரு முறை ரஜினியை நான் நேரில் சந்தித்து பேசி வருகிறேன். மற்ற நேரங்களில் போன் மூலம் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறோம். ரஜினி எனது சகோதரர். அவரை நான் கைவிட்டாலும், தமிழ்நாடு கை விடாது, தமிழக மக்கள், கோட்டையில் முதல்வர் பதவியில் ரஜினியை அமர்த்துவதற்கு தயாராகி விட்டனர்.

எல்லோர் மனதிலும் அவர் மட்டும் தான் இடம் பிடித்துள்ளார். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நீட் தேர்வு முதல் நியூட்ரினோ வரை அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.

கர்நாடகாவில் எலியும், பூனையுமாக இருந்த சித்தராமையாவும், குமாரசாமியும் இன்று ஒருவருக்கொருவர் நட்பு கொண்டு நடிப்பது, பதவிக்காகத்தான். இவர்கள் நடத்துவது பதவிக்கான அரசியல், இதில் மக்கள் நலன் ஒன்றுமில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #tamilaruvimanian #rajinikanth #tncm

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com