search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Heat"

    • காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாநிலங்களிலும் நல்ல மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த வகையிலும் மழை பெய்வதற்கான வாய்பபு இல்லை என்றே வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் வெப்பம் குறைந்து காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பிறகும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தது
    • வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த 2 மாதங்களாக வெயில் வாட்டி வதைத்தது. அக்னி நட்சத்திரம் முடிவடைந்தும் வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்தன.

    இந்த நிலையில் நேற்று தஞ்சை , பாபநாசம், பேராவூரணி, திருவிடைமருதூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் விட்டு விட்டு சாரல் மழை பொழிந்தது. இதனால் நேற்று வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்தது.

    மாவட்டத்தில் ஒரே நாளில் 74.80 மி.மீ. மழை அளவு பதிவாகியுள்ளன.

    தென்மேற்கு வங்கக்கடலில் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையுமென்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    அதன்படி தஞ்சையில் இன்று வெப்பத்தின் தாக்கம் குறைந்தே காணப்பட்டன.

    தொடர்ந்து அடுத்த வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் குறையுமா என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    பாபநாசம் -7, பேராவூரணி -6.40, திருவிடைமருதூர் -6.20, மஞ்சளாறு -5.80, தஞ்சாவூர் -5, பட்டுக்கோட்டை -5, கும்பகோணம் -4.40, அய்யம்பேட்டை - 4, மதுக்கூர்-3.

    • உடன்குடி பகுதியில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வரமக்கள் தயங்குகின்றனர்.
    • கம்பங்கூழ், கேப்பை, மோர், நுங்கு போன்ற சாலையோர கடைகள் ஏராளமாக வந்து விட்டது.

    உடன்குடி:

    உடன்குடி வட்டாரபகுதிக்கு உட்பட்ட உடன்குடி, மெய்ஞானபுரம், பரமன்குறிச்சி பஜார் வீதிகள் தினசரி காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்படுகிறது.

    கம்பங்கூழ், மோர், நுங்கு

    வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் வீட்டை விட்டு வெளியே வரமக்கள் தயங்குகின்றனர். வீடுகளிலும், தோட்டங்களிலும் முடங்குகின்றனர். அவசர தேவைக்கு மட்டுமே பஜார் வீதிக்கு வருகின்றனர்.இதனால் கம்பங்கூழ், கேப்பை, மோர், நுங்கு போன்ற சாலையோர கடைகள் ஏராளமாக வந்து விட்டது.

    நுங்கு விற்பனை ஜோராக நடைபெற்று வருகிறது.பொதுமக்கள் நுங்குகளை வீடுகளுக்கு வாங்கிச் செல்கின்றனர்.

    மேலும் இளநீர், சர்பத் மற்றும் குளிர்பானங்கள் ஆகியவற்றை விற்பனை நடைபெறுகிறது. கோடைகாலத்தைவிட தற்போது வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.

    • ஜூன் மாதத்திலும் வாட்டி வதைக்கும் வெயில்
    • இதனால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    மதுரை

    ஜூன் மாதத்தில் 2 வாரங்கள் கடந்த பின்னரும் மதுரையில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பநிலை 38-40 டிகிரி செல்சியஸ் அளவில் உள்ளது. சில நேரங்களில் வெப்பம் குறை வாக இருந்தாலும் புழுக்கம் அதிகமாக இருக்கிறது.

    பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்ப தால் அவர்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ரோட்டில் கடை வைத்து வியாபாரம் செய்துவரும் வியாபாரிகளும் வெயிலின் தாக்கத்தால் அவதிக்குள்ளா கின்றனர். இரவு நேரங்களில் புழுக்கம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் சிரமம் அடைந்துள்ளனர்.பலர் காற்றுக்காக வீட்டிற்கு வெளியில் வந்து அமர்ந்திருக்கின்றனர். மேலும் பகல் நேரங்களில் வெளியே செல்வதை பலர் தவிர்த்து வருகின்றனர்.

    காற்று வீசுவது குறைவாக இருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் நேரங்களில் சாலைகள் மற்றும் பாலங்களில் செல்லும்போது அனல் அடிக்கிறது. இந்த நிலையில் குளிர்பானங்கள், பழங்களின் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.வழக்கமாக அக்னி நட்சத்திரம் முடிவடைந்த பின்னர் படிப்படியாக வெப்பத்தின் தாக்கம் குறையும். இந்தமுறை அக்னி நட்சத்திர காலத்தில் மழை பெய்தும்கூட வெப்பத்தின் தாக்கம் குறையவில்லை.

    இந்த நிலையில் ஜூன் மாதத்தில் ஒரு வாரத்திற்கு வெப்பம் அதிகமாக இருக்கும் என வானிலை மையம் தெரிவித்திருந்தது. ஆனால் 2 வாரங்களை கடந்த பின்னரும் வெயில் அதிகமாகவே உள்ளது. கடந்த சில தினங்களில் ஒருமுறை மழை பெய்தும் கூட அது வெப்பத்தை தணிக்க போதுமானதாக இல்லை. வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் குறையுமா? என மக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

    • ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
    • வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சீர்காழி:

    வளிமண்டலத்தில் நிலவும் வறண்ட நிலை காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மற்றும் கடலோர மாவட்டங்களில் காற்று இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சுற்றுவட்டார பகுதிகளான சீர்காழி, கொள்ளிடம், திருவெண்காடு, சட்டநாதபுரம், வைத்தீஸ்வரன்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது.

    தொடர்ந்து வெயிலின் தாக்கம் அதிகமாக நிலவி வந்த நிலையில் இந்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    • அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளது.
    • கோழி இறைச்சி கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    திருப்பூர் :

    அக்னி நட்சத்திரம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிக அளவில் உள்ளதால் கோழி உற்பத்தி குறைந்துள்ளது. இதனால் கடந்த மாதம் கிலோ ரூ.250க்கு விற்பனையான கோழி இறைச்சி தற்போது கிலோ ரூ.300க்கு விற்கப்படுகிறது.

    இறைச்சி கோழி வி கோப்புபடம். ற்பனையாளர் சங்க நிர்வாகி ஒருவர் கூறுகையில், வெயில் காலத்தில் உற்பத்தி குறைந்து கோழி இறைச்சி விலை அதிகரிப்பது வழக்கம். இந்த ஆண்டு வெயில் மிகவும் அதிகம் என்பதால் விலை அதிகரித்துள்ளது. இன்னும் 15 நாட்கள் வரை விலையில் மாற்றமிருக்காது. மழை துவங்கினால் விலை குறையும் என்றார். 

    • வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.
    • உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    சென்னை:

    அதீத வெப்பத்தின் தாக்கத்தால் உடல் உறுப்புகள் செயலிழந்த 70 வயது மூதாட்டிக்கு சென்னை, காவேரி மருத்துவமனை மருத்துவா்கள் உயா் சிகிச்சையளித்து உயிரைக் காத்து உள்ளனா். 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் உடல் உச்ச வெப்பநிலை காரணமாக அவருக்கு அந்த பாதிப்பு ஏற்பட்டதாகவும் வெயில் தீவிரமாக இருக்கும்போது இணை நோயாளிகளும் முதியவா்களும் வெளியே செல்ல வேண்டாம் எனவும் மருத்துவா்கள் அறிவுறுத்தி உள்ளனா்.

    இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் செயல் இயக்குநா் அரவிந்தன் செல்வராஜ் கூறியதாவது:-

    கடந்த சில வாரங்களுக்கு முன்பு மிகவும் கவலைக்கிடமான நிலையில் மூதாட்டி ஒருவா் எங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவரது இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை செயலிழக்கும் நிலையில் இருந்தன. அதீத வெப்பத்தில் அவா் 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்குள்ளானதும் தெரியவந்தது. இதனால், அவரது உடல் வெப்ப நிலை 104 டிகிரி பாரன்ஹீட்டுக்கும் மேல் உயா்ந்தது. இதையடுத்து தீவிர சிகிச்சைப் பிரிவில் அவா் அனுமதிக்கப்பட்டாா்.

    தீவிர மருத்துவ சிகிச்சை நிபுணா் ஸ்ரீதா் தலைமையிலான மருத்துவக் குழுவினா் அந்த மூதாட்டிக்கு வெண்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை அளித்தனா். குறிப்பாக, அவரது உடல் வெப்ப நிலையைக் குறைக்கவும் உறுப்புகளின் செயல் திறனை மீட்டெடுக்கவும் சிகிச்சை வழங்கப்பட்டது.

    3 வார சிகிச்சைக்குப் பிறகு அவா் இயல்பு நிலைக்குத் திரும்பினாா். தற்போது அவா் நலமுடன் உள்ளாா். சரும வறட்சி, மயக்கம், மனக் குழப்ப நிலை, நினைவிழப்பு, வலிப்பு, தீவிர காய்ச்சல் ஆகியவை 'ஹீட் ஸ்ட்ரோக்' பாதிப்புக்கான அறிகுறிகள். அதை அலட்சியப் படுத்தாமல் உடனடியாக மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கினால், உயிரிழப்புகளைத் தவிா்க்க முடியும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தார்ச்சாலை வெப்பத்தால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
    • பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர்பானம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    விசாக திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லுக்கு பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்ற னர்.

    சாலையில் தண்ணீர்

    இதன்படி அவர்கள் நேற்று கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் போது வெயிலின் உக்கிரத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அத்துடன் தார்ச்சாலை வெப்பத்தால் சூடு தாங்காமல் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலான பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஏற்பாட்டில் பக்தர்கள் செல்லும் சாலைகளில் டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பக்தர்கள் மகிழ்ச்சி

    இதனால் ஏற்பட்ட குளுமை காரணமாக பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும் பேரூராட்சியின் பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர் பானம் இலவசமாக வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் விபத்து களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்க ர்களை பக்தர்களின் பின்புறம் ஒட்டு வதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சி லர்கள் வெங்கடேஷ், ஆறுமுக நயினார், பேரூ ராட்சி சுகாதார மேற்பார் வையாளர் கார்த்திக் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    • அக்னி நட்சத்திர வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.
    • வெயிலின் காரணமாக பெரும்பாலானோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர்.

    நெல்லை:

    தமிழகம் முழுவதும் கத்திரி வெயில் என்று அழைக்கக்கூடிய அக்னி நட்சத்திர வெயிலால் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. இந்த வெயில் வருகிற 29-ந்தேதி வரை மொத்தம் 25 நாட்களுக்கு நீடிக்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் கடந்த வாரம் திடீரென கோடை மழை பெய்த நிலையில், தற்போது கடுமை யான வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள அக்னி வெயிலால் மாநகரப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் பகலில் வெகுவாக குறைந்து ள்ளது. பெரும்பா லான வாகன ஓட்டிகள் மற்றும் பணிக்கு செல்லும் பெண்கள் குடை பிடித்தபடியும், முகத்தை துணியால் மூடிக்கொண்டு செல்கின்றனர். ஒரு சில இடங்களில் அனல் காற்று வீசுகிறது.

    கடுமையான வெயிலின் காரணமாக பெரும்பாலா னோர் பகல் பயணத்தை தவிர்த்து வருகின்றனர். மாலை நேரங்களில் வாகன போக்குவரத்து அதிகரித்து காணப்படுகிறது.

    பணிக்கு செல்லும் பெண்கள் குடைபிடித்தபடி சாலைகளில் செல்கின்றனர். பெரும்பாலா னோர் வெயிலின் தாக்கத்தால் குளிர்பானங்கள் இருக்கும் கடைகளை நாடி செல்கின்றனர்.

    இதனால் இளநீர், தர்பூசணி, பதநீர், நுங்கு, வெள்ளரிக்காய் கடைகளில் கூட்டமாக சென்று அவர்கள் அருந்துவதை காண முடிகிறது. ஒரு இளநீர் ரூ.30 முதல் ரூ.40 வரையிலும், ஒரு நுங்கு ரூ.20 வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    ஒரு சிலர் நுங்கு சர்பத், இளநீரில் எலுமிச்சை சாறு பிழிந்து வழங்குவது உள்ளிட்ட வித்தியாசமான முறைகளில் பொதுமக்களுக்கு வழங்கி வருகின்றனர்.

    அக்னி நட்சத்திரம் முடிவதற்கு இன்னும் 3 நாட்களே உள்ளதால் வெயிலின் தாக்கம் விரைவில் குறைந்து விடும் என்று மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
    • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

    இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.
    • கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

    சென்னை:

    சென்னையில் கடந்த சில தினங்களாக வெயிலின் அளவு 106 டிகிரியை தாண்டி கொளுத்துகிறது. வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் படாத பாடுபடுகிறார்கள்.

    மேற்கு திசையில் இருந்து வறண்ட காற்று வீசுவதால் கடல் காற்று உள்ளே வர தாமதமாவதால் மாலையிலும் வெப்பம் அதிகமாக உணரப்படுகிறது.

    நேற்று பகலில் 106 டிகிரி வெயிலை கடந்த நிலையில் பிற்பகலில் ஆந்திர கடலோரத்தில் இருந்து தெற்கு நோக்கி வீசிய கடல் காற்று சென்னையின் வெப்பத்தை ஓரளவு தணித்தது. அடுத்த சில நாட்களுக்கும் வெயில் வழக்கத்தைவிட அதிகமாகவே இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடல் காற்று வருகையை பொறுத்து வெப்பத்தின் தாக்கம் குறையும்.

    நேற்று பகல் 11 மணிக்கு மேல் கடல் காற்று வந்ததால் வெப்பம் குறைந்தது. அதே போல் இன்றும் வருமா? என்று எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள்.

    கொளுத்தும் இந்த வெயிலுக்கு இடையேயும் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

    • 3 நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.
    • அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டத்தில் கடந்த மூன்று நாட்களாக வெப்பத்தின் தாக்கம் குறைந்து விட்டுவிட்டு பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று பிற்பகலில் தஞ்சையில் கனமழை கொட்டியது.

    தஞ்சை அடுத்த திருவையாறில் கனமழை பெய்தது.

    தொடர்ந்து இடைவிடாத பெய்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின. தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கியது.

    திருவையாறில் மட்டும் ஒரே நாளில் 70 மி.மீ. அளவுக்கு மழை கொட்டியது.

    இதேபோல் வல்லம், பூதலூர், திருக்காட்டுப்பள்ளி, பாபநாசம், அய்யம்பேட்டை உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    தஞ்சை மாவட்டத்தில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விட்டு விட்டு பெய்து வரும் மழையால் வெப்பத்தின் தாக்கம் கணிசமாக குறைந்துள்ளது.

    இன்று முதல் அக்னி நட்சத்திரம் தொடங்கியுள்ள நிலையில் மீண்டும் தஞ்சை மாவட்டத்தில் மழை பெய்யுமா? அல்லது அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் இருக்குமா என்பது வரும் நாட்களில் தெரியவரும்.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு :-

    திருவையாறு -70, திருக்காட்டுப்பள்ளி -55.40, பூதலூர் -53, அய்யம்பேட்டை -42, பாபநாசம்-32, தஞ்சாவூர் -25, வல்லம் -12.

    ×