search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கடுமையாக நிலவும் வெப்பத்தை தணிக்க பக்தர்கள் செல்லும் சாலையில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு- ஆறுமுகநேரியில் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு
    X

    திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களுக்கான அன்னதான நிகழ்ச்சியை ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாணசுந்தரம் தொடங்கி வைத்த போது எடுத்த படம். அருகில் துணைத் தலைவர் கல்யாணசுந்தரம் உள்ளார்.

    கடுமையாக நிலவும் வெப்பத்தை தணிக்க பக்தர்கள் செல்லும் சாலையில் டிராக்டர்கள் மூலம் தண்ணீர் தெளிப்பு- ஆறுமுகநேரியில் பேரூராட்சி நிர்வாகம் ஏற்பாடு

    • தார்ச்சாலை வெப்பத்தால் பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.
    • பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர்பானம் வழங்கப்பட்டது.

    ஆறுமுகநேரி:

    விசாக திருநாளை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவி லுக்கு பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தர்கள் பாத யாத்திரையாக சென்ற னர்.

    சாலையில் தண்ணீர்

    இதன்படி அவர்கள் நேற்று கூட்டம் கூட்டமாக நடந்து செல்லும் போது வெயிலின் உக்கிரத்தால் கடுமையாக பாதிக்கப் பட்டனர். அத்துடன் தார்ச்சாலை வெப்பத்தால் சூடு தாங்காமல் சிறுவர்கள் முதல் பெரியோர்கள் வரையிலான பக்தர்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இந்நிலையில் ஆறுமுகநேரி பேரூராட்சி தலைவர் கலாவதி கல்யாண சுந்தரம், துணைத்தலைவர் கல்யாண சுந்தரம், செயல் அலுவலர் கணேசன் ஆகியோர் ஏற்பாட்டில் பக்தர்கள் செல்லும் சாலைகளில் டிராக்டர்கள் மூலம் தொடர்ந்து தண்ணீர் தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    பக்தர்கள் மகிழ்ச்சி

    இதனால் ஏற்பட்ட குளுமை காரணமாக பக்தர்கள் மகிழ்ந்தனர். மேலும் பேரூராட்சியின் பாத யாத்திரை பக்தர்கள் தங்குவதற்கான மையத்தில் குளிர் பானம் இலவசமாக வழங்கப்பட்டது. இரவு நேரத்தில் விபத்து களை தவிர்க்கும் வகையில் ஒளிரும் ஸ்டிக்க ர்களை பக்தர்களின் பின்புறம் ஒட்டு வதற்கான ஏற்பாடு களும் செய்யப்பட்டன.

    இதில் வார்டு கவுன்சி லர்கள் வெங்கடேஷ், ஆறுமுக நயினார், பேரூ ராட்சி சுகாதார மேற்பார் வையாளர் கார்த்திக் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×