search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெப்பசலனம்"

    • நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது.
    • திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.

    விழுப்புரம்:

    ஆடி மாத காற்றில் அம்மியும் நகரும் என்ற வழக்கு மொழி உள்ளது. ஆனால், இந்த ஆண்டு ஆடிமாதம் பிறந்தது முதல் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான வெயில் அடிக்கிறது. சித்திரை மாத கத்திரி வெயிலை விட அதிகமாக காணப்பட்டது. இதனால் விழுப்புரம், கோலியனூர், பெரும்பாக்கம், சாலை அகரம் மற்றும் செஞ்சி பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். வரும் 10-ந்தேதி வரை வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படும். 110 டிகிரி வரையில் வெயில் அடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இதனால் பகல் 12 மணி முதல் மாலை 4 மணிவரை விழுப்புரம் நகர சாலைகளில் பொதுமக்களின் நடமாட்டம் குறைந்த அளவிலேேய காணப்பட்டது.

    இந்நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் விழுப்புரம் நகரப் பகுதியில் லேசான குளிர்ந்த காற்று வீசியது. இதனைத் தொடர்ந்து 11 மணி முதல் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. விடியற்காலை 3 மணி வரை மழை நீடித்தது. இதனால் விழுப்புரம் நகர சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. வெப்பசலனத்தால் பெய்த இந்த திடீர் மழையால் விழுப்புரம் நகரப்பகுதியில் வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளது. இதேபோல இரவு நேரங்களில் ஒரிரு நாட்கள் மழை பெய்தால் வெயிலின் தாக்கம் குறைந்து விடும். அதேசமயம் இந்த திடீர் மழையால் விழுப்புரம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாலான விவசாயிகள் மகிழ்ச்சியடை ந்ததுள்ளனர்.

    • காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை.
    • குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    சென்னை:

    வடமேற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. ஒடிசா, மேற்கு வங்காள மாநிலங்களையொட்டி வங்க கடல் பகுதியில் உருவாகி இருக்கும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காாரணமாக ஒடிசா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் மழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

    அதே நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாகவோ, தீவிர புயலாகவோ மாறுவதற்கு வாய்ப்பு இல்லை என்றே கணிக்கப்பட்டுள்ளது. ஆனால் 2 மாநிலங்களிலும் நல்ல மழையை கொடுக்க வாய்ப்புள்ளது என்பதால் உஷார் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கடல் பகுதியில் இருந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தரைப் பகுதிக்கு செல்வதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக கணிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தமிழகத்தில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் தமிழகத்துக்கு எந்த வகையிலும் மழை பெய்வதற்கான வாய்பபு இல்லை என்றே வானிலை மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இடி-மின்னலுடன் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும், இதனால் வெப்பம் குறைந்து காணப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மன்னார் வளைகுடா, தென் தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதிகள், தென் தெற்கு வங்கக் கடல் பகுதிகள், தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசுவதற்கு வாய்ப்புள்ளது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ×