search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் மகிழ்ச்சி"

    • சில நாட்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது.
    • பொதுமக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் கடும் அவதி அடைந்து வந்தனர். மேலும் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வந்ததால் வெப்ப சலனம் காரணமாக அனல் காற்று வீசி வந்தது. கடந்த சில நாட்களாக 104 டிகிரி வெயில் அளவு பதிவாகி பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கியது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் முக்கிய சாலைகளில் மதிய நேரங்களில் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் பெருமளவில் குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது. இதனையடுத்து வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் 7-ம் தேதியான இன்று திறக்க இருந்த அனைத்து பள்ளிகளும் வருகிற 12 மற்றும் 14 - ம்தேதி திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பலத்த இடி மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக கடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 2,500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த வாழை மரங்கள் முழுவதும் முறிந்து கடும் சேதத்தை விளைவித்தது. இதனை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், கலெக்டர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதன்பின்னர் விவசாயிகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்திருந்தனர். இதனைதொடர்ந்து மாவட்ட முழுவதும் பரவலாக மழை பெய்த காரணத்தினால் கடும் வெப்பம் குறைந்து குளிர்ந்த காற்று வீசி வந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோன்று நேற்றும் காலை முதல் மாலை நேரங்களில் வெப்பம் அதிகரித்து வந்த நிலையில் மாலை முதல் குளிர்ந்த காற்று வீசதொடங்கி மலை பெய்தது. இந்த மழை கடலூர் மாவட்டத்தில் காட்டு மயிலூர், பரங்கிப்பேட்டை, பண்ருட்டி, வேப்பூர், சேத்தியாதோப்பு, குறிஞ்சிப்பாடி, வடக்குத்து, கடலூர், அண்ணாமலை நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக பெய்தது. இதனால் 2-வது நாளாக கடலூர் மாவட்டத்தில் மழை பதிவானது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் ஆங்காங்கே விவசாயிகள் தங்கள் விவசாய பணிகளையும் மும்முரமாக மேற்கொண்டு வந்ததும் காண முடிந்தது. கடலூர் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டர் அளவில் பின்வருமாறு:-

    காட்டுமயிலூர் - 10.0 மி.மீ, மே.மாத்தூர் - 10.0 மி.மீ, பரங்கிப்பேட்டை- 8.6 மி.மீ, பண்ருட்டி- 6.0 மி.மீ, வேப்பூர் - 6.0 மி.மீ, சேத்தியாதோப்பு - 5.2 மி.மீ, குறிஞ்சிப்பாடி -3.5 மி.மீ, வடகுத்து -3.0 மி.மீ, வானமாதேவி -3.0 மி.மீ, கடலூர் - 3.0 மி.மீ, ஆட்சியர் அலுவலகம் -1.9 மி.மீ, அண்ணாமலைநகர் -1.7 மி.மீ, என மொத்தம் - 61.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளது.

    • திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.
    • வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    காஞ்சிபுரம்:

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்து வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. சென்னையில் 109 டிகிரி வரை வெயில் கொளுத்தியது. தொடர்ந்து வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருவதால் பொது மக்களும் வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர்.

    இதேபோல் காஞ்சிபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பத்தின் தாக்கம் அதிகம் உள்ளது. கடந்த சில நாட்களாக 100 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்து வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரத்தில் இன்று காலை 7 மணியளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு பலத்த மழை கொட்டியது. இடியுடன் சுமார் அரை மணிநேரம் வெளுத்து வாங்கியது.

    இதனால் அப்பகுதியில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    இதேபோல் காஞ்சிபுரத்தை சுற்றியுள்ள ஓரிக்கை, செவிலிமேடு, ஒலிமுகமது பேட்டை, தாமல், ஏனாத்தூர், வையாவூர், அய்யம்பேட்டை, வாலாஜாபாத், குருவிமலை, களக்காட்டூர் பரந்தூர், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

    காலையிலேயே இடியுடன் கூடிய மழை பெய்ததால் வாகன ஓட்டிகளும் பொது மக்களும் வெப்பத்தின் தாக்கத்தில் இருந்து தப்பி நிம்மதி அடைந்தனர். தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால் வெயிலின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    வண்டலூர், ஊரப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் சில இடங்களில் லேசான மழை பெய்தது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் காலையில் வெப்பத்தின் தாக்கம் குறைந்து காணப்பட்டது.

    • இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன.
    • வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளானார்கள்.

    கள்ளக்குறிச்சி:

    வடகிழக்கு பருவமழை தொடங்கி 15 நாள்களுக்கு மேலாக பரவலாக மழை பெய்தது இதனால் சின்னசேலத்தில் உள்ள குளம், கிணறு, ஏரி, போன்றவை நீர் மட்டம் வேகமாக நிரம்பி வருகின்றன. கடந்த சில தினங்களாகவே சின்னசேலம் பகுதியில் மழை முற்றிலும் நின்றது.இந்நிலையில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் நேரம் ஆக ஆக கருமேகம் சூழ்ந்து தூரல் மழை பொழிய ஆரம்பித்தது.

    இரவு 8 மணிக்கு ஆரம்பித்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக சின்ன சேலத்தில் புதிய பேருந்து நிலையம், பழைய பஸ் நிலையம், விஜயபுரம், காந்தி நகர், திரு வி க நகர், உள்ளிட்ட பகுதியில் பரவலாக நல்ல மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெரு க்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்கு உள்ளா னார்கள். மழையினால் நேற்று இரவு அதிக அளவில் பணி இல்லாமல் இருந்ததால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    • கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது.
    • கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி, சின்னசேலம், தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், திருக்கோவிலூர் ஆகிய வட்டாரப் பகுதிகளில் நேற்று இரவு பரவலாக மழை பெய்தது. மழையின் அளவு மி. மீட்டரில் பின்வருமாறு, கள்ளக்குறிச்சி 6, தியாகதுருகம் 9, விருகாவூர் 15, சின்னசேலம் 10, அரியலூர் 2, கடுவனூர் 3, கலையநல்லூர் 22, கீழ்பாடி 4, மூரார்பாளையம் 12, மூங்கில்துறைப்பட்டு 8, ரிஷிவந்தியம் 22, சூளாங்குறிச்சி 2, வடசிறுவலூர் 16, மாடாம்பூணடி 7, மணலூர்பேடடை 0, திருக்கோவிலூர் 4, திருப்பாலபந்தல் 11, வேங்கூர் 5, ஆதூர் 2.5, எறையூர் 0, ஊ.கீரனூர் 16, என்ற அளவில் மழை பெய்துள்ளது. இதில் அதிகபட்சமாக கலையநல்லூர் மற்றும் ரிஷிவந்தியம் ஆகிய பகுதிகளில் 22 மி.மீட்டரும், குறைந்த பட்சமாக அரியலூர் மற்றும் சூளா ங்குறிச்சி ஆகிய பகுதிகளில் 2 மி.மீட்டர் மழையும் பெய்து ள்ளது. மேலும் கள்ள க்குறிச்சி மாவட்ட த்தில் பெய்த மொத்த மழை அளவு 176.5 மி.மீட்ட ராகவும், சராசரி 8.40 மி.மீட்டர் அளவா கவு ம் உள்ளது.

    ×