search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gaja cyclone damage"

    புயல் பாதித்த பகுதிகளை சேர்ந்த தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். #GajaCyclone
    ஓமலூர்:

    சேலம் விமான நிலையத்தில் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கஜா புயல் நிவாரணப் பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. அங்கே பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக போர்வெல்கள் அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாணவர்களின் நலன் கருதி தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. புயல் பாதித்துள்ள பகுதிகளை சேர்ந்த அரசு கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் ஏற்கனவே கட்டணம் செலுத்திவிட்டனர். தனியார் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கட்டணங்களை குறைப்பது குறித்து தனியார் கல்லூரி நிறுவனங்களுடன் பேசி நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    துணை வேந்தர் பதவி காலியாகும் பல்கலைக்கழகங்களில் உடனடியாக துணை வேந்தர் நியமிக்க முன்கூட்டியே ஆய்வு கமிட்டி அமைக்கப்படும். அதன் மூலம் உடனடியாக துணை வேந்தர் பணியிடங்கள் நிரப்பப்படும். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு பதிவாளர் மற்றும் தேர்வாணையர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்.


    இதேபோன்று காலியாக உள்ள பதிவாளர், தேர்வாணையர் மற்றும் இதர பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். பெரியார் பல்கலைக்கழகத்தில் போலி சான்றுகள் கொடுத்து பேராசிரியர் பணியிடங்களில் உள்ளோர் மற்றும் இதர பலகலைக்கழகங்களில் போலி சான்றுகள் மூலம் பணியாற்றுவோர் குறித்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. போலி சான்றுகள் கொடுத்து ஆசிரியர் பணியில் உள்ளவர்களின் சான்றுகள் சரிபார்க்கப்பட்டு அவர்கள் மீது பணி நீக்கம் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #KPAnbazhagan

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் நடிகர் சரத்குமார் சென்ற காரை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. #GajaCyclone #Sarathkumar
    ஆலங்குடி:

    தமிழகத்தில் கடந்த 16-ந்தேதி கஜா புயல் தாக்கியது. இதனால் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டனர். பலர் வீடுகளை இழந்து சாலைக்கு தள்ளப்பட்டனர்.

    புயலால் வீடுகளை இழந்த பலர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களையும், புயலால் சேதமடைந்த மக்களையும் தமிழக முதல்வர் எடப்பாடி, பழனிசாமி, துணை முதல்வர் பன்னீர்செல்வம், எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் நேரில் சென்று சந்திப்பதோடு, நிவாரண உதவிகளையும் வழங்கி வருகின்றனர்.

    இதற்கிடையே இன்று காலை அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் ஆர்.சரத்குமார் புதுக்கோட்டை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுவதற்காக சென்றார்.

    ஆலங்குடி அரசமரத்தடி பஸ் நிறுத்தம் அருகே சரத்குமார் காரில் சென்றபோது, அப்பகுதியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் நடிகர் சரத்குமாரின் காரை முற்றுகையிட்டனர். பின்னர் காரில் இருந்து இறங்கி சரத்குமார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.


    அப்போது பொதுமக்கள் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி தாலுகா பகுதியில் அதிக அளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் யாரும் தங்கள் பகுதிகளுக்கு வராமல் அலட்சியம் செய்கின்றனர். பொதுமக்களுக்கு உரிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை.

    புயல் பாதித்த சேதத்தில் இருந்து மீள முடியாமல் தற்போது வரை தவித்து வருகிறோம். இது குறித்து அதிகாரிகளிடம் பேசி தங்கள் பகுதிகளுக்கு உரிய நிவாரணம் மற்றும் சேதமடைந்தவற்றை கணக்கிட்டு உரிய நிவாரணம் வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என முறையிட்டனர்.

    பொதுமக்களிடம் பிரச்சனைகளை கேட்டு தெரிந்து கொண்ட பின்னர் நடிகர் சரத்குமார், பிரச்சனைகள் குறித்து அதிகாரிகளிடம் பேசி உரிய நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக கூறினார். பின்னர் அங்கிருந்து கட்சி நிர்வாகிகளுடன் புறப்பட்டு சென்றார்.  #GajaCyclone #Sarathkumar
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு இலவசமாக 1 லட்சம் தென்னங்கன்றுகள் வழங்க உள்ளதாக தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth
    பட்டுக்கோட்டை:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் துறவிக்காடு, சேதுபாவாசத்திரம், அதிராம்பட்டினம் உள்ளிட் பகுதிகளில் தே.மு.தி.க. சார்பில் கட்சி பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞர் அணிச் செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய் பிரபாகரன் உள்ளிட்டோர் 1000 நபர்களுக்கு நிவாரண பொருள்களை நேற்று மாலை வழங்கினார்.

    துறவிக்காட்டில் நிவாரணப் பொருள்களை வழங்கிய பிறகு பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களிடம் கூறியதாவது:-

    டெல்டா மாவட்டங்களில் கஜா புயலால் லட்சக்கணக்கான தென்னை மரங்கள் சேதமடைந்து விவசாயிகளின் வாழ்வாதாரமே முழுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளின் கடன்களை அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் மாணவர்களின் கல்விக் கட்டணத்தையும் தள்ளுபடி செய்வதுடன், அவர்களுக்குத் தேவையான உதவிகளை அரசு செய்து தரவேண்டும்.

    தமிழக அரசு அறிவித்த நிவாரண உதவி என்பது இதுவரை எந்த ஒரு மக்களுக்கும் வந்து சேரவில்லை. புயல் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களை மத்திய அரசு பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து, தமிழக அரசுக்கு உரிய நிவாரணத்தை வழங்கவேண்டும். அதற்கு முன்னதாக, தமிழக அரசு அறிவித்த ரூ.1000 கோடி முதல் கட்ட நிவாரண உதவியாக மக்களுக்கு வழங்க வேண்டும்.

    ஆளும் கட்சியும், எதிர்கட்சியும் இதுவரை மக்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யவில்லை தொண்டு நிறுவனங்கள்தான் உதவிகள் செய்து வருகின்றன. தே.மு.தி.க. சார்பில் ரூ.1 கோடி மதிப்பிலான நிவாரண உதவிகளை 4 மாவட்டங்களிலும் வழங்கி வருகிறோம்.

    அடுத்தகட்டமாக 1 லட்சம் தென்னங்கன்றுகளை வாங்கி நேரடியாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்க உள்ளோம். இதற்காக அரசு மானிய விலையில் தரமான தென்னங்கன்றுகளை வழங்கவேண்டும். மேலும் தென்னைக்கு அரசு அறிவித்த நிவாரணத்தொகை என்பது விழுந்த மரத்தை அகற்றவே போதாது. எனவே குறைந்தபட்சமாக ஒரு தென்னைக்கு ரூ.20 ஆயிரம் வழங்க வேண்டும் என்றார். #GajaCyclone #DMDK #PremalathaVijayakanth

    கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து விட்டதாக ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். #GajaCyclone #MDMK #Vaiko
    பட்டுக்கோட்டை:

    தஞ்சை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.

    முதலில் பட்டுக்கோட்டைக்கு வந்த வைகோ, பட்டுக்கோட்டை வடசேரி சாலையில் உள்ள பெரிய பள்ளிவாசலில் கஜா புயலினால் 120 அடி உயர மனோராக்கள் இடிந்து விழுந்ததைப் பார்வையிட்டு பள்ளிவாசல் நிர்வாகத்தினரிடம் சேதவிவரங்களை கேட்டறிந்தார்.

    இதையடுத்து பட்டுக்கோட்டை சிவகொல்லையில் கஜா புயலால் வீட்டு சுவர் இடிந்து பலியான 4 பேரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

    பின்னர் வைகோ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    கஜா புயலினால் பாதிக்கப்பட்ட புதுக்கோட்டை, தஞ்சை மாவட்ட பகுதிகளை பார்வையிட்டு வருகிறேன். கஜா புயலால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

    தமிழ்நாட்டில் பல புயல்களைப் பார்த்திருக்கிறேன். எந்த புயல் வந்தாலும் 1 மணி நேரத்திற்குள் போய்விடும். ஆனால் இந்த கஜா புயல் 5 மணி நேரம் அடித்து விவசாயிகளுக்கும், மீனவர்களுக்கும் பலத்த சேதத்தை ஏற்படுத்தி விட்டது.

    மீனவர்களுக்கு ரூ.40 லட்சம் செலவில் இரும்பினால் ஆன படகை அரசே வழங்க வேண்டும். தென்னை மரங்கள் அனைத்தும் விழுந்து விட்டன. ஒரு தென்னை மரத்திற்கு இழப்பீடாக ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும்.

    முதல்-அமைச்சர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஹெலிகாப்டரில் வந்து பார்த்துச் சென்றதால் நஷ்டத்தை கணிக்க முடியுமா? கீழே விழுந்த தென்னை மரங்களை பார்க்க முடியுமா? இனி விவசாயக் குடும்பங்கள் ஒரு தலைமுறைக்கு தலை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    கஜா புயலால் தமிழகத்தில் 4 மாவட்டங்கள் முற்றிலும் அழிந்து விட்டன. தமிழ்நாட்டில் 1 லட்சம் விவசாய குடும்பங்கள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன. தமிழகத்திற்கு சிறப்பு திட்டத்தை உடனடியாக கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும்.

    50 ஏக்கர் நிலத்திற்கு சொந்தக்காரர்கள், இன்றைக்கு சோறு வாங்க வரிசையில் நிற்பதை பார்த்தேன். கோடீஸ்வரராக இருந்தவர்கள் ஒரேநாளில் தெருவுக்கு வந்து விட்டார்கள். இந்த புயலில் போலீஸ்காரர்கள், மின்சார ஊழியர்கள், அதிகாரிகள், கலெக்டர்கள் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MDMK #Vaiko
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து ரெயில் மூலம் நாகை புறப்பட்டு சென்றார். #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்த அந்த புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ம்தேதி பார்வையிட்டார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் சென்றனர்.



    புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் ஆய்வு செய்த முதல்வர், மழை பெய்ததால்  தனது பயணத்தை ரத்து செய்து சென்னை திரும்பினார். அதன்பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

    இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுபட்ட இடங்களை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நாளை நாகை மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். இதற்காக சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து இன்று இரவு காரைக்கால் விரைவு ரயிலில் நாகை புறப்பட்டார்.

    முதலமைச்சருடன் தலைமைச்செயலாளர், டி.ஜி.பி உட்பட அரசு அதிகாரிகள் உடன் சென்றனர். நாளை காலை நாகை மாவட்டத்திலும், பிற்பகலில் திருவாரூர் மாவட்டத்திலும் ஆய்வு நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது தே.மு.தி.க மட்டும்தான் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். #GajaCyclone #Premalathavijayakanth
    நத்தம்:

    கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து நிவாரண உதவி வழங்க நத்தம் பகுதிக்கு தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா வந்திருந்தார். அங்குள்ள காந்தி கலையரங்கில் நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர் பேசியதாவது:-

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து நேரடியாக நிவாரண உதவிகள் வழங்க கேப்டன் அவர்கள் ஆணையிட்டார்.

    அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டு மக்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவது தே.மு.தி.க மட்டும்தான். இதற்காக ரூ.1கோடி வரை ஒதுக்கப்பட்டுள்ளது. உங்களது துயரத்தில் நாங்களும் பங்கேற்போம். ஆளுங்கட்சியினரும், ஆண்ட கட்சியினரும் மக்களை முறையாக சந்திக்கவில்லை.

    அடுத்து வர இருக்கும் தேர்தலை சந்திப்பதற்காக மட்டுமே மற்ற கட்சியினர் மக்களைச் சந்திப்பார்கள். ஆனால் தே.மு.தி.க. எப்பொழுதும் மக்களைச் சந்திக்கும் கட்சியாகும். வெறும் அறிவிப்பு அரசியலை மட்டுமே ஆளும்கட்சியினர் செய்து வருகின்றனர்.

    தமிழ்நாட்டில் மின்சாரம், குடிநீர், சாலை போன்ற அடிப்படை வசதிகளை முழுமையாக அரசு செய்யவில்லை. எனவே வரும் தேர்தலில் விஜயகாந்த் தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில் மக்களின் தேவைகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநில துணை செயலாளர்கள் சுதீஷ், பார்த்த சாரதி, மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், மாநில பொதுகுழு உறுப்பினர் வக்கீல் லெட்சுமணன், நத்தம் ஒன்றிய செயலாளர்கள் செல்வராஜ், ஆண்டிச்சாமி, தலைமை கழக பேச்சாளர் நாகராஜ், மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மன்ற செயலாளர் ராதாகிருஷ்ணன் நன்றி கூறினார். #GajaCyclone #Premalathavijayakanth
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி நேரில் பார்வையிட்டிருக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் கேபி முனுசாமி தெரிவித்தார். #GajaCyclone #Modi #KPMunuswamy
    காவேரிப்பட்டணம்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த முன்னாள் அமைச்சரும், அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப் கே.பி.முனுசாமி நிருபர்களிடம் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை தூக்கி நிறுத்த ஜெயலலிதா வழிவந்த அரசின் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரும் ஒருங்கிணைந்து இரவு-பகல் பார்க்காமல் மழை வெயில் பார்க்காமல் பணிபுரிந்து வருகின்றனர். எதிர்க் கட்சியினர் இந்த நேரத்தில் அரசியல் செய்வதை விட்டு விட்டு மக்களின் நலன் ஒன்றை மட்டுமே கருத்தில் கொண்டு அவர்களின் துயரைத் துடைக்க அரசுக்கு உதவ வேண்டும்.

    அ.தி.மு.க. அரசின் அமைச்சர்கள் அதிகாரிகள் ஏன் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் கூட புயல் பாதிக்கப்பட்ட பகுதிக்கு செல்லும்போது, அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவர்களது தேவையை எடுத்துக்காட்ட அழைத்து செல்கின்றனர். எதிர்க்கட்சியினர் இவற்றையெல்லாம் திசை திருப்பக் கூடாது.

    அரசியல் செய்வதற்கு இது களம் அல்ல. பாதிக்கப்பட்ட மக்கள் நமது மாநில மக்கள். இதை கருத்தில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.

    தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் கிராமம் கிராமமாகச் சென்று பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவிகளை அளித்து வருகின்றது.

    இந்த நேரத்தில் இல்லாவிட்டாலும் இந்த பணி முடிந்தவுடன் அந்த பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் கண்டிப்பாக அரசுக்கு நன்றி சொல்வார்கள். புயல் பாதித்த நேரத்தில் மழை பெய்திருந்தால் ஓரளவு விவசாய நிலங்கள் பாதிக்கப்பட்டு இருக்காது. மரங்கள் விழுந்து இருக்காது. இயற்கை சீற்றத்தின் நிலையை யாராலும் கணிக்க முடியவில்லை.


    தற்போது மறுசீரமைப்பு பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. திருவாரூர் இடைத்தேர்தல் பிப்ரவரி 7-ந் தேதி தேதிக்குள் நடத்தலாம் என உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    சோதனையான காலகட்டத்தில் எப்படி நடக்க வேண்டும் என மறைந்த தலைவர் ஜெயலலிதா வழிகாட்டியுள்ளார். இதன் அடிப்படையில் எந்த நிலையும் சமாளிக்கும் அளவிலே அ.தி.மு.க. உள்ளது. இதனிடையே புயல் நிவாரண பணிகள் தொய்வில்லாமல் நடத்திக்கொண்டே தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்தால் ஜெயலலிதா வழிகாட்டுதலின் நடைபெறும் இந்த அரசு தேர்தலை முறையாக தைரியமாக எதிர்கொண்டு பணியாற்றி வெற்றி பெறும். தேர்தலை கண்டு அ.தி.மு.க. என்றும் அஞ்சியது கிடையாது.

    தமிழக அளவில் மிக முக்கிய டெல்டா மாவட்டங்களில் 7 மாவட்டங்கள் கஜா புயலினால் முழுவதுமாக பாதிக்கப்பட்டு விவசாயிகள், பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இந்தியாவின் எந்தப் பகுதியில் பாதிப்பு ஏற்பட்டாலும் பிரதமராக இருப்பவர் நேரில் வந்து பார்ப்பதுதான் மரபு.

    அரசு அதிகாரிகள் தனி குழுவினர் வந்து பார்வையிட்டவர்கள் அவர்களது கருத்துக்களை மட்டுமே மத்திய அரசுக்கு தெரிவிப்பார்கள். என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதனை பிரதமர் நேரில் வந்து பார்த்திருக்க வேண்டும். அவர் பார்த்திருந்தால் என்ன நிலைமை என்பதை உணர்ந்து இருப்பார்.

    பார்வையிட்ட பின்பு இடைக்கால நிவாரணமாக அளித்துள்ள ரூபாய் 200 கோடியை உயர்த்தியும் தந்திருப்பார். விவசாயம் முற்றிலும் அழிந்துள்ளது. மரங்கள் வேறோடும் சாய்ந்துள்ளது. இதனை நேரில் பார்ப்பது என்பது வேறு அறிக்கை மூலம் படங்கள் மூலம் பார்ப்பது என்பது வேறு, பாதிக்கப்பட்ட மக்கள் தமிழக மக்கள் இந்திய துணை கண்டத்தின் மிகப்பெரிய மாநிலமான தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

    இவர்களுக்கு ஒரு பாதிப்பு என்றால் பிரதமர் மோடி உடனடியாக வந்திருக்க வேண்டும். அவருக்கு தமிழக பா.ஜ.க.வினர் எடுத்து சொல்லி இருக்க வேண்டும். ஆட்சியிலும், கட்சியிலும் இருப்பவர்கள் இதனை சரியாக எடுத்துச் சொல்லாத காரணத்தினால் அவருக்கு நிலைமை தெரியவில்லை என தெரிகிறது.

    எந்த நிலை என்றாலும் பிரதமர் மோடி நேரில் வந்து பார்வையிட வேண்டும். புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். வரமுடியாத சூழ்நிலை மாறி விரைவில் வருவார் என எதிர்பார்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #GajaCyclone #Modi #KPMunuswamy
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமப்புறங்களில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டு விட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். #GajaCyclone #MinisterThangamani
    திருவாரூர்:

    திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார சீரமைப்பு மற்றும் நிவாரண பணிகள் தொடர்பாக அமைச்சர் தங்கமணி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

    இதில் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், ராஜேந்திர பாலாஜி, மாவட்ட கணிப்பாய்வு அதிகாரி மணிவாசன், மாவட்ட ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதையடுத்து அமைச்சர் தங்கமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    திருவாரூர் மாவட்டத்தில் கஜா புயலினால் 1 லட்சத்து 58 ஆயிரத்து 157 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்கு 199 நிவாரண முகாம்களில் 3 வேளை உணவு, உடை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    மின்சாரத்தை பொறுத்த வரை திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் மின்சார கட்டமைப்பு முழுமையாக பாதிப்படைந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின்கம்பங்களும், 201 துணை மின்நிலையங்களும், 841 மின்மாற்றிகளும் சேதமடைந்துள்ளது.

    முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின்படி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 3,787 மின்வாரிய ஊழியர்கள் பணியில் ஈடுப்பட்டுள்ளனர். சீரமைப்பு பணியில் 1,518 எந்திரங்கள் பயன்பாட்டில் உள்ளது.

    மின் வினியோகத்தை பொறுத்தவரை திருவாரூர் நகராட்சியில் 100 சதவீதமும், மன்னார்குடி நகராட்சியில் 92.66 சதவீதமும், கூத்தாநல்லூர் நகராட்சியில் 92.42 சதவீதமும், திருத்துறைப்பூண்டி நகராட்சியில் 75.02 சதவீதமும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. கிராம பகுதிகளில் 45 சதவீதம் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மின்சாரம் சீரமைப்பு பணிகள் மேற்கொள்வது மிகப்பெரிய சவாலாக உள்ளது. மின்வாரிய ஊழியர்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றி வருகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார். #GajaCyclone #MinisterThangamani
    கஜா புயலால் பாதிக்கப்பட்ட தமிழகத்துக்கு கேரள அரசும், மக்களும் உதவ வேண்டும் என்று பினராயி விஜயனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கமல்ஹாசன் வேண்டுகோள் விடுத்துள்ளார். #GajaCyclone #KamalHaasan #PinarayiVijayan
    சென்னை:

    கேரள முதல்-அமைச்சர் பினராயி விஜயனுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் எழுதியுள்ள கடிதத்தில் கூறி இருப்பதாவது:-

    அண்மையில் வீசிய கஜா புயல், தமிழக டெல்டா மற்றும் கடலோர மாவட்டங்களில் மக்களின் உயிருக்கும் உடமைக்கும் பெரும் பாதிப்பு ஏற்படுத்தியுள்ளது.

    மக்கள் நீதி மய்யம் கட்சி, கேரள அரசினையும் மக்களையும் தங்களால் இயன்ற உதவிகளை தமிழ்நாட்டிற்கு இப்பொழுது அளித்திட முன் வரவேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறது. இப்பேரிடர் காலங்களில் மனிதாபிமான உணர்வுகள் மக்களிடம் அதிகமாக மேலோங்கிட வேண்டும்.


    கஜா புயலின் தாக்கத்தினால் எங்கள் மக்கள் இழந்திருக்கும் வாழ்வாதாரத்தை மீட்டெடுத்து, மீண்டு வருவதற்கு இன்னும் பல வருடங்களாகும். இருப்பினும், நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது சகோதரர்களின் இயல்பு வாழ்க்கையை புனரமைக்கும் இப்பணியினை இன்றே தொடங்கிட வேண்டும்.

    பயிர்கள் சேதாரமடைந்து, மரங்கள் வேருடன் சாய்ந்து, படகுகளை இழந்து மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத்தையே இழந்து மிகக்கடுமையாக பாதிப்படைந்துள்ளது.

    நாம் அனைவரும் அரசியலுக்கு அப்பாற்பட்டு, உன்னதமான மானுடக்கருணையை உணர்த்திட வேண்டிய அத்தியாவசியமான தருணம் இது. மனிதாபிமானமே மனிதத்தின் அடிப்படை உணர்வு. அதுவே நம் அனைவரையும் ஒன்றிணைக்கும் உணர்வுப்பாகம் அதுதான் இன்று இப்பொழுது, இங்கே எங்கள் தமிழ்நாட்டிற்கு மிகவும் தேவையான ஒன்று.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார். #GajaCyclone #KamalHaasan #PinarayiVijayan
    கஜா புயல் பாதிப்பு பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாளை சென்னையில் இருந்து ரெயில் மூலம் புறப்பட்டு செல்கிறார். #GajaCyclone #EdappadiPalaniswami
    சென்னை:

    தமிழகத்தை மிரட்டிய கஜா புயல் கடந்த 16-ம் தேதி அதிகாலை வேதாரண்யம்- நாகப்பட்டினம் இடையே கரையை கடந்தது. 120 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்றுடன் கரையை கடந்த அந்த புயல் காரணமாக தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

    புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 20-ம்தேதி பார்வையிட்டார். அவருடன் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கருப்பண்ணன், பாஸ்கரன் ஆகியோரும் சென்றனர்.

    புதுக்கோட்டை மற்றும் தஞ்சையில் ஆய்வு செய்த முதல்வர், மழை பெய்ததால்  தனது பயணத்தை ரத்து செய்து சென்னை திரும்பினார். அதன்பின்னர் டெல்லி சென்று பிரதமரை சந்தித்து புயல் பாதிப்பு குறித்து எடுத்துக் கூறி, தமிழகத்திற்கு 15 ஆயிரம் கோடி நிவாரண நிதி வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்தார்.


    இந்நிலையில், புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் விடுபட்ட இடங்களை பார்வையிட முடிவு செய்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இதற்காக நாளை இரவு ரெயில் மூலம் புறப்பட்டுச் செல்கிறார். நாளை மறுநாள் திருவாரூர் மற்றும் நாகை மாவட்டங்களில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்கிறார். பாதிக்கப்பட்ட மக்களையும் சந்தித்து குறைகளை கேட்டறிய உள்ளார். #GajaCyclone #EdappadiPalaniswami
    கஜா புயலால் வீடுகளை இழந்த சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். #GajaCyclone
    திருச்சி:

    கஜா புயலால் மிகப்பெரும் பாதிப்பை சந்தித்துள்ள தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்டங்களில் நிவாரணப் பணிகள் மிகத் தீவிரமாக நடந்து வருகின்றன.

    இந்த 4 மாவட்டங்களிலும் சுமார் 3½ லட்சம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. சுமார் 1 லட்சம் கால்நடைகள் உயிரிழந்துள்ளன.

    30 ஆயிரத்து 100 ஹெக்டேர் பரப்பளவில் வளர்க்கப்பட்டு வந்த சுமார் 50 லட்சம் தென்னை மரங்கள் வேரோடு சரிந்து அழிந்துள்ளன. 32 ஆயிரத்து 706 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நாசமாகி உள்ளன. சுமார் 12 லட் சம் மரங்கள் சரிந்துள்ளன. சுமார் 1 லட்சம் மின் கம்பங்கள் சரிந்து உள்ளன.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 54 லட்சம் பேரின் வீடுகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. இத்தகைய வரலாறு காணாத சேதங்கள் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கையை முற்றிலுமாக முடக்கி விட்டது.

    கஜா புயலின் ஆக்ரோ‌ஷ தாக்குதல் எதிர்பார்த்ததை விட அதிகம் இருந்ததால் டெல்டா மாவட்டங்களில் லட்சக்கணக்கான மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை பறிகொடுத்து விட்டு பரிதவித்தப்படி இருக்கிறார்கள். புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தமிழக அரசு முதலில் சுமார் 150 முகாம்களை உருவாக்கி தயார் நிலையில் இருந்தது. ஆனால் 4 மாவட்டங்களிலும் லட்சக்கணக்கான மக்கள் வீடு இழந்து உணவு, உடை, குடிநீர் உள்பட எதுவுமே இல்லாமல் நிர்க்கதியாக நின்ற சோகத்தை கண்டதும் மளமளவென தமிழக அரசு கூடுதல் நிவாரண முகாம்களை உருவாக்கியது.

    4 மாவட்டங்களிலும் சுமார் 625 நிவாரண முகாம்கள் உருவாக்கப்பட்டன. இந்த முகாம்களில் முதலில் சுமார் 2 லட்சம் பேர் தங்க வைக்கப்பட்டனர். பிறகு அந்த எண்ணிக்கை சுமார் 2 லட்சத்து 80 ஆயிரமாக உயர்ந்தது. புயல் பாதித்த மற்ற மாவட்டங்களில் உள்ள முகாம்களில் இருப்பவர்களின் எண்ணிக்கையை கணக்கிட்டால் சுமார் 3 லட்சம் பேர் நிவாரண முகாம்களில் இருப்பதாக கூறப்படுகிறது.

    புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 97 முகாம்கள் அமைக்கப்பட்டிருந்தது. இதில் கடலோர பகுதி மக்கள் மற்றும் கிராமப்புற பகுதி மக்கள் என 12ஆயிரத்து 500 பேர் தங்கியிருந்தனர்.

    இந்தநிலையில் சேதமான வீடுகளை தாங்களாகவே சீரமைத்து அதில் குடிபுகுந்து வருகின்றனர். இதனால் நிவாரண முகாம்களில் தங்கியிருந்த பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி விட்டனர்.

    தற்போது மாவட்டம் முழுவதும் 25 முகாம்கள் வரை செயல்பட்டு வருகிறது. அங்கு பொதுமக்களுக்கு உணவு சமைத்து வழங்கப்பட்டு வருகிறது. காலையில் தங்களது வீடுகளுக்கு செல்லும் பொதுமக்கள், இரவு ஆகியதும் முகாம்களுக்கு வந்து தங்குகின்றனர். ஒவ்வொரு முகாமிலும் 300 முதல் 500 பேர் வரை தங்கியிருந்து வருகின்றனர்.

    ஆலங்குடி, கறம்பக்குடி முகாம்களில் இரவு மட்டும் 2ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தங்கி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான வசதி மற்றும் உணவுகள் அரசு மற்றும் தன்னார்வலர்கள் சார்பில் செய்து கொடுக்கப்பட்டுள்ளது.



    நிவாரண முகாம்களில் இருப்பவர்களுக்கு தினமும் உணவு, குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. நிறைய பேர் மாற்றுத் துணி இல்லாமல் அவதிப்பட்டப்படி இருந்தனர். அத்தகையவர்களுக்கு உடைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இவை தவிர ஒவ்வொரு குடும்பத்துக்கும் 10 கிலோ அரிசி, ஒரு லிட்டர் மண்எண்ணை, தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது.

    சுமார் 4 ஆயிரம் படகுகள் சேதம் அடைந்துள்ளதால் கடலில் மீன்பிடிக்க செல்ல இயலாத மீனவர்களும் நிவாரண முகாம்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். அவர்கள் தங்களுக்கு மீண்டும் படகுகள் வாங்க நிதி உதவி செய்யும்படி கோரிக்கை விடுத்துள்ளனர். அவர்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. முகாம்களில் உள்ள அனைவருக்கும் ஆவின் நிறுவனம் மூலம் பால் வழங்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே ஓரளவு நிவாரணப் பணிகள் முடிந்த பகுதிகளில் மக்கள் முகாம்களில் இருந்து வெளியேறி தங்கள் வீடுகளுக்கு திரும்பத் தொடங்கி உள்ளனர். அவர்கள் தங்கள் வீட்டையும், வாழ்வாதாரத்தையும் சீரமைக்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் வீடுகளை முற்றிலுமாக இழந்து விட்டவர்கள் இன்னமும் நிவாரண முகாம்களிலேயே தங்கி இருக்க வேண்டிய பரிதாபமான, நிர்ப்பந்தமான சூழ்நிலை நிலவுகிறது.

    இதன் காரணமாக 4 மாவட்டங்களிலும் சுமார் 2½ லட்சம் பேர் கடந்த 10 நாட்களாக நிவாரண முகாம்களில் தவித்தப்படி இருக்கிறார்கள். முகாம்களில் உணவு, குடிநீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தும் கிடைத்தாலும், எத்தனை நாட்களுக்குத்தான் முகாம்களிலேயே தங்கி இருப்பது என்ற சலிப்பு ஏழை-எளிய மக்களின் மனதில் நிலவுகிறது. எனவே தங்கள் வீடு மற்றும் வாழ்வாதாரத்துக்கு தேவையான நிதி உதவிகளை செய்து தரும்படி பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்வதற்கு தமிழக அரசு முதல் கட்டமாக ரூ.1000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நிவாரண பணிகளை முழுமையாக செய்து முடிக்க ரூ.15 ஆயிரம் கோடி தேவை என்று மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தது. இதைத் தொடர்ந்து புயலால் பேரழிவை சந்தித்த 4 மாவட்டங்களிலும் பாதிப்புகளை ஆய்வு செய்ய மத்திய உள்துறை இணை செயலாளர் டேனியல் ரிச்சர்ட் தலைமையில் குழுவை அனுப்பி உள்ளது.

    மத்தியக் குழுவினர் கடந்த சனிக்கிழமை தொடங்கி இன்று வரை 4 மாவட்டங்களுக்கும் சென்று நேரில் ஆய்வு செய்தனர். இணைச் செயலாளர் டேனியல் ரிச்சர்ட் இது குறித்து கூறுகையில், “நாங்கள் நினைத்ததை விட 4 மாவட்டங்களிலும் மிகப்பெரிய பாதிப்பும் இழப்பும் ஏற்பட்டுள்ளது. மக்களின் நிலையை பார்த்தபோது பரிதாபமாக உள்ளது. இதில் இருந்து மக்கள் துணிவுடன் மீள வேண்டும்” என்றார்.

    மத்திய குழுவினர் நாளை டெல்லியில் கஜா புயல் பாதிப்பு அறிக்கையை தயார் செய்ய உள்ளனர். இந்த வார இறுதிக்குள் புயல் பாதிப்பு அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதன் பரிந்துரை அடிப்படையில் புயல் நிவாரணத் தொகையை மத்திய அரசு, தமிழக அரசுக்கு கொடுக்கும். ஆனால் எவ்வளவு பணம் கிடைக்கும்? எப்போது கிடைக்கும்? என்பது உறுதியாக தெரியவில்லை.

    இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் விரைவில் தங்கள் துயரத்தில் இருந்து மீள்வதற்காக தமிழக அரசு 100 நாள் வேலைத் திட்ட பணியை கையில் எடுத்துள்ளது. அதன்படி 4 மாவட்டங்களில் 2 லட்சத்து 28 ஆயிரத்து 573 பேருக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தில் பணி வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    இவர்களுக்கு தினமும் ரூ.224 வரை சம்பளமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள பெண்களிடம் சற்று நிம்மதி பெருமூச்சை ஏற்படுத்தி உள்ளது. மற்ற அத்தியாவசிய உதவிகளும் கிடைத்து விட்டால் புயல் பாதிப்பில் இருந்து விரைவில் விடுபட்டு விட முடியும் என்று நம்புகிறார்கள்.

    புயல் பாதித்த 4 மாவட்டங்களில் 6980 கிராமங்கள் மிக அதிக பாதிப்பை சந்தித்துள்ளன. சில கிராமங்கள் முற்றிலும் உருக்குலைந்து விட்டன. அந்த பகுதிகளைச் சேர்ந்தவர்கள் நிவாரணப் பணிகளை தீவிரப்படுத்த கோரி சாலை மறியலில் ஈடுபடுகிறார்கள். அவர்களை அதிகாரிகள் சமரசம் செய்து உதவிகள் செய்து வருகிறார்கள்.

    இன்று (திங்கட்கிழமை) 11-வது நாளாக நிவாரணப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சுகாதார பணிகளில் நேற்று முதல் சுமார் 3 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மின்சார இணைப்புக் கொடுக்க முன்னுரிமை கொடுத்து இரவு- பகலாக பணிகள் நடந்து வருகின்றன.

    4 மாவட்டங்களில் 1 லட்சத்து 13 ஆயிரம் மின் கம்பங்கள் சாய்ந்து விட்டதால் போர்க்கால அடிப்படையில் மின் கம்பங்களை நடும் பணி நடந்து வருகிறது. சுமார் 23 ஆயிரம் மின் வாரிய ஊழியர்கள் கடந்த 10 நாட்களாக 4 மாவட்டங்களிலும் முழு வீச்சில் அருமையான ஈடுஇணையற்ற சேவையாக தங்கள் பணியை செய்து வருகிறார்கள்.

    மின் வாரிய ஊழியர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக இன்னும் ஒரு வாரத்துக்குள் ஊரகப் பகுதிகளிலும் முழுமையான மின் இணைப்பு கொடுக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    என்றாலும் ஒவ்வொரு நாளும் மக்கள் கவலையில் தத்தளிக்கிறார்கள். இழந்த சொத்துக்களை மீட்க என்ன செய்வது? இருக்கும் உயிரை எப்படி காப்பாற்றுவது என்று தெரியாமல் புலம்புகிறார்கள்.

    அரசு, அரசியல் கட்சிகள், அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் உதவிகள் செய்தாலும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நேரமும் பிறரை எதிர்பார்த்தே காலத்தை நகர்த்த வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கப்பட்டுள்ளனர்.

    பல கிராமங்களில் இன்றும் மின்சாரம் வரவில்லை. மண்எண்ணை விளக்கில் பழங்கால வாழ்க்கையை வாழ வேண்டியதுள்ளதே என மக்கள் புலம்புகிறார்கள். வெளியூர்களில் இருந்து ஜெனரேட்டர்கள் வாடகைக்கு கொண்டு வரப்பட்டு பணக்காரர்கள் சமாளிக்கும் நிலையில் ஏழைகள் நிலை அவர்கள் வாழ்க்கையை போல வீட்டிலும் எப்போதும் இருள் சூழ்ந்து நிற்கிறது.

    பல பகுதிகளில் கிராம மக்கள் அருகில் உள்ள கண்மாய், ஊரணியில் இருந்து ஊற்றுநீரை குடிநீராகவும், சமைக்கவும் பயன்படுத்தி வருகிறார்கள்.

    உணவு தருவதற்கு யாராவது வருகிறார்களா என நிவாரண பொருட்கள் வழங்க வரும் வாகனங்களை எதிர்பார்த்து சாலை ஓரங்களில் காத்து கிடப்பவர்களை பார்ப்பவர்களுக்கு கண்ணீர் வருகிறது.

    இன்னும் 7 நாட்களில் மின் கம்பங்கள் நடும் பணி முழுமையாக முடிந்து விடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. என்றாலும் மின்சார விநியோகம், குடிநீர் விநியோகம் சீராக 7 நாட்களுக்கு மேலாகும் என்பதால் மக்கள் விரக்தி அடைந்துள்ளனர். #GajaCyclone
    கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை மத்திய குழுவினர் ஆய்வு செய்த பின்னரே, அது தேசிய பேரிடரா? என்று தெரியவரும் என மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #BJP #PonRadhakrishnan #GajaCyclone
    நாகர்கோவில்:

    பிரதமர் மோடியின் 50-வது ‘மன் கீ பாத்’ (மனதின் குரல்) நிகழ்ச்சி நேற்று வானொலியில் ஒலிபரப்பானது. இந்த உரையை பொதுமக்கள் கேட்பதற்காக நாகர்கோவில் எஸ்.எல்.பி. பள்ளி மைதானத்தில் பா.ஜனதாவினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். இதில் பிரதமர் மோடியின் உரை தமிழில் மொழிபெயர்த்து கூறப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன் ராதாகிருஷ்ணன் உள்பட பா.ஜனதாவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பின்னர் பொன் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் கஜா புயல் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தி இருக்கிறது. புயல் பாதிப்புக்கு தமிழக அரசு சார்பில் 16 ஆயிரம் கோடி ரூபாய் கேட்கப்பட்டு இருக்கிறது. அதே சமயம் புயல் சேதத்தை மத்திய குழுவினர் ஆய்வு செய்து வருகிறார்கள். அவர்கள் முழுமையாக ஆய்வு நடத்திய பிறகுதான் புயலின் தாக்கம் முழுமையாக கண்டுபிடிக்கப்படும். பின்னர்தான் அது தேசிய பேரிடரா? என்பது பற்றியும் தெரியவரும்.

    புயலால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை நான் சந்தித்தேன். அப்போது ஒரு முகாமில் சிலர் நிவாரண பொருட்கள் கிடைத்ததாக கூறுகிறார்கள். வேறு சிலர் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்கிறார்கள்.

    சபரிமலைக்கு சென்ற என்னை போலீஸ் அதிகாரி தடுத்து நிறுத்தியதில் எந்த தவறும் இல்லை என்று கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியிருக்கிறார். சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா மட்டும் தான் போராட்டம் நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டு உள்ளார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்துவது அவருக்கு தெரியவில்லையா?

    கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளிக்கு இயக்கக் கூடாது என்பது குறித்து ரெயில்வே மந்திரிக்கு நான் கடிதம் அனுப்பி உள்ளேன். இரட்டை ரெயில் பாதை, மின்மயம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே அதுமுடிந்ததும் குமரி மாவட்டத்தை மதுரை ரெயில்வே கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.  #BJP #PonRadhakrishnan #GajaCyclone
    ×