search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cyclone"

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.
    • நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரெயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.
    • தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும்.

    சென்னை:

    தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக்டோபர் மாதம் 21-ந்தேதி தொடங்கியது. தொடா்ந்து காற்று சுழற்சி மற்றும் மேலடுக்கு சுழற்சிகளால் தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    தற்போதும் குமரிக் கடல் பகுதியில் காற்று சுழற்சியும், அரபிக்கடல் பகுதியில் சோமாலியா அருகே புயல் சின்னமும், குஜராத்தில் நிலபரப்பில் காற்று சுழற்சியும் நிலவுகிறது.

    இதனால் நிலநடுக்கோட்டு பகுதியில் இருந்தும், வங்கக் கடலில் இருந்தும் மழையைத் தரும் காற்று தமிழகத்தின் ஊடாகச் செல்வதால் வட தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையோர மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பரவலாக ஞாயிறு மற்றும் திங்கள்கிழமை ஆங்காங்கே பலத்த மழை கொட்டியது. அதிகபட்சமாக காஞ்சிபுரத்தில் 100 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    இந்நிலையில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 30-ந்தேதி (ஞாயிற்றுக் கிழமை) வரை தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும்.

    சென்னை மற்றும் புறநகா் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 5 நாட்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே சென்னை வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே கணித்துக் கூறியபடி, தெற்கு அந்தமானை ஒட்டிய வங்கக் கடல் பகுதியில் திங்கள்கிழமை புயல் சின்னம் உருவாகியுள்ளது. தற்போது காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இருக்கும் இந்தப் புயல் சின்னம் நாளை (புதன் கிழமை) மேலும் வலுவடையும்.

    அதன் பிறகு அந்த புயல் சின்னம் வடமேற்கு திசையில் நகா்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் (வியாழக்கிழமை) காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும்.

    இது அடுத்த 2 நாள்களில் புயலாக வலுப்பெறக்கூடும். இந்தப் புயலுக்கு மியான்மா் நாடு பரிந்துரை செய்த 'மிச்சாங்' என்ற பெயா் சூட்டப்படும். இந்தப் புயல் தமிழகத்தின் வட மாவட்டங்களுக்கு வருமா? அல்லது ஆந்திரம், வங்கதேசம் நோக்கி நகருமா? என்பது இன்னும் இரண்டு நாட்களில் துல்லியமாகத் தெரியவரும்.

    இன்று (செவ்வாய்க் கிழமை) தெற்கு அந்தமான் மற்றும் அதையொட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதி தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை இலாகா எச்சரித்துள்ளது.

    நாளை (புதன்கிழமை) தென்கிழக்கு மற்றும் அதையொட்டிய தென்மேற்கு வங்கக் கடல் பகுதியில் சூறாவளிக் காற்று மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். எனவே, ஆழ்கடலில் உள்ள மீனவா்கள் இன்றுக்குள் கரைக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள். மேலும், மீனவா்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் புயல் சின்னம் தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரனிடம் இன்று கேட்டபோது, அவர் கூறிய தாவது:-

    திருவள்ளூர், கடலூர், மயிலாடுதுறை நாகப்பட்டினம், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

    காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை பொறுத்தவரையில் அது வருகிற 2-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மறுநாள் வலுப்பெற்ற பின்னர் அது புயலாக மாறுவது எப்போது? என்பதில் மாற்றங்கள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. சென்னையில் தற்போதைய சூழலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வாழை மரங்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்படுவதாக இருந்தது.
    • பல விவசாயிகள் சாய்ந்த வாழை மரத்தை சோகத்துடன் பார்த்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு சுற்றுவட்டார பகுதியான வடுகக்குடி சாத்தனூர், வளப்பகுடி , மருவூர் ஆகிய பகுதிகளில் நெல்லுக்கு அடுத்த படியாக வாழை சாகுபடி அதிக அளவில் செய்யப்படும்.

    பல ஏக்கர் பரப்பளவில் வாழை மரங்கள் சாகுபடி செய்யப்பட்டு இருந்தன.

    இதில் பெரும்பாலான வாழை மரங்கள் இன்னும் 20 நாட்களில் அறுவடை செய்யப்படுவதாக இருந்தது.

    இந்த நிலையில் வடுகக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் கனமழை கொட்டியது.

    இடைவிடாமல் பெய்த கனமழையால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடின.

    சூறாவளி காற்று தொடர்ந்து வீசியதால் அறுவடைக்கு தயாராக இருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்கள் முறிந்து வேரோடு சாய்ந்தன.

    இதனால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.

    கஷ்டப்பட்டு கடன் வாங்கி சாகுபடி செய்த வாழை மரங்கள் இப்படி சேதம் ஆகிவிட்டதே என எண்ணி வேதனை அடைந்தனர்.

    பல விவசாயிகள் சாய்ந்த வாழை மரத்தை சோகத்துடன் பார்த்தனர்.

    இது குறித்து விவசாயிகள் கூறும்போது,

    எங்கள் பகுதியில் வாழை மரங்கள் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும்.

    தற்போது வாழை மரங்கள் ஆயுத பூஜையை முன்னிட்டு அறுவடை செய்யப்படுவதாக இருந்தது.

    ஆனால் முதலீடு தொகை எடுக்கும் நேரத்தில் சூறாவளி காற்றால் வாழை மரங்கள் முறிந்து விழுந்து விட்டன.

    இதுபோன்று பருவ மழை பெய்யும் காலங்களில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

    ஆண்டுதோறும் இது போன்று நடைபெறுவதனால் நெல்லுக்கு பயிர் காப்பீடு செய்வது போல வாழைக்கும் காப்பீடு செய்வதற்கு வழிவகை செய்து தர வேண்டும்.

    மேலும் தோட்டகலைத்துறை அதிகாரிகள் சேதமடைந்த வாழை மரங்களை கணக்கிட்டு இழப்பீடு அறிக்கை தாக்கல் செய்த அரசுக்கு வழங்க வேண்டும்.

    உடனடியாக இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    • மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்கம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் நேற்று பயங்கர சூறாவளி காற்று அடித்தது.

    மின்கம்பம் சேதம்

    மகர நெடுங்குழைக்காதர் கோவில் தென்புரம் தெற்கு ரத வீதியில் சாலையோரம் உள்ள மரம் மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்க ம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது. அந்த சமையத்தில் பொதுமக்கள் யாரும் அவ்வழியில் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அவதி

    உடனடியாக மின் ஊழியர்கள் விரைந்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புற படுத்தினார்கள். இதனால் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் தடைபட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிப்பட்டனர்.

    • சீரமைப்பு பணிகள் தீவிரம்
    • சட்டசபை வளாகம் எதிரே அம்பேத்கர் சிலை அருகே இருந்த மரம் வேலியை தாண்டி சட்டசபை வளாகத்தின் தடுப்பு கம்பிகளில் விழுந்தது.

    புதுச்சேரி:

    புதுவையில்  இடி, மின்னல், சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது.

    கனமழையுடன் வீசிய சூறாவளி காரணமாக புதுவை நகர பகுதிகளில் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது. பெரிய மரங்களின் கிளைகள் முறிந்து விழுந்தது. நகர பகுதியில் பெரும்பாலான சாலைகளில் மரங்கள் விழுந்து போக்குவரத்துக்கு தடை ஏற்பட்டது. பல இடங்களில் மின்வயர்களில் மரக்கிளைகள் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது.

    நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் போக்குவரத்து குறைவாக இருந்தது. அதேநேரத்தில் அரசின் பொதுப்பணித்துறை, மின்துறை, தீய ணைப்புத்துறை, உள்ளாட்சித் துறையினர் களத்தில் இறங்கினர். சாய்ந்து கிடந்த மரங்களை உடனடியாக அப்புறப்படுத்தினர். முறிந்த கிளைகள் வெட்டி அகற்றப்பட்டது.

    சுமார் 100 டன் எடை கொண்ட மரக்கழிவுகள் அகற்றப்பட்டுள்ளது. அதோடு சூறாவளியில் சேதமடைந்த பகுதிகள் சீரமைக்கும் பணியும் நடந்தது. சட்டசபை வளாகம் எதிரே அம்பேத்கர் சிலை அருகே இருந்த மரம் வேலியை தாண்டி சட்டசபை வளாகத்தின் தடுப்பு கம்பிகளில் விழுந்தது.

    இதனால் 2 இரும்பு வேலிகளும் சேதமடைந்தது. சட்டசபை வளாகத்தில் இதை சீரமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அறுந்து விழுந்த மின்வயர்கள் உடனுக்குடன் சீரமைக்கும் பணியில் மின்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

    • சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது.
    • பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் ஷியோகிராண்ட டொசூல் மாநிலத்தில் புயல் காரணமாக கடும் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இந்த சூறாவளிக்கு ஆயிரக்கணக்கான வீடுகள் சேதம் அடைந்தது. ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தது.

    இடைவிடாமல் மழை கொட்டி தீர்த்ததால் ரோடுகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடுயது. தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்தனர்.

    அவர்களை மீட்பு குழுவினர் விரைந்து சென்று படகு மூலம் மீட்டனர். வெள்ளத்தில் சிக்கிய 3,713 பேரை அவர்கள் பத்திரமாக மீட்டனர். 20-க்கும் மேற்பட்டவர்களை வெள்ளம் அடித்து சென்றது. அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் அதிரடியாக மீட்கப்பட்டனர். இந்த சூறாவளி புயலுக்கு 4 மாத குழந்தை உள்பட 13 பேர் பலியாகிவிட்டனர், 20-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி விட்டனர். அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை, அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ஆயிரக்கணக்கானவர்கள் வீடுகளை இழந்துவிட்டனர்.

    அவர்கள் அங்குள்ள விளையாட்டு மைதானங்களில் தற்காலிமாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. முன் எச்சரிக்கை நடவடிக்கையாக பலர் வீடுகளை விட்டு அப்புறப்படுத்தப்பட்டு விட்டதால் உயிர்சேதம் பெருமள வில் இல்லாமல் தடுக்கப்பட்டது.

    • வருகிற 8ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    அதன்படி வருகிற 8-ந் தேதி, அதாவது நாளை தென்மேற்கு பருவ மழை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் பிபோர்ஜோய் என்ற புயல் உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது மேலும் ஒருவாரம் தாமதமாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம்.
    • அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    சென்னை:

    தமிழகத்தில் கோடை வெயில் வாட்டி எடுத்து வருகிறது. மே மாதம் முடிந்துள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறையாமலேயே உள்ளது. கோடை முடிந்து எப்போதும் ஜூன் மாத தொடக்கத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இன்னும் சில தினங்களில் பருவ மழை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை மைய நிபுணர்கள் கணித்து உள்ளனர்.

    இந்த நிலையில் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அரபிக்கடலில் தற்போது நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதியில் வருகிற 5-ந்தேதி புயலாக மாறுவதற்கு வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக தனியார் வானிலை நிபுணரான பிரதீப்ஜான் தெரிவித்துள்ளார். இதே போன்று வங்கக் கடலிலும் புயல் உருவாவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த புயல் இன்னும் சில தினங்களில் உருவாகும் என பிரதீப்ஜான் தெரிவித்தார்.

    இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது:-

    ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை தொடங்கும் கால கட்டத்தில் இது போன்ற புயல் சின்னங்கள் ஏற்படுவது வழக்கம். அந்த வகையில்தான் அரபிக்கடல் மற்றும் வங்கக்கடலில் புயல் உருவாவதற்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன.

    இதில் அரபிக்கடலில் தான் முதலில் புயல் உருவாகிறது. பின்னர்தான் வங்கக்கடலில் புயல் உருவாகும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    புயல் உருவாகும் நேரத்தில் தரைகாற்று அதிகமாக வீசுவதற்கு வாய்ப்பு உள்ளது. இதனால் சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருக்கும் என்றும் வானிலை மைய நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வருகிற 5-ந்தேதி அரபிக்கடலில் புயல் உருவாகும் என்று கணிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கக்கடலில் 9- ந்தேதி புயல் உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    அரபிக்கடலில் உருவாகும் புயல் தீவிரம் அடைந்து மேற்கு இந்திய கடலோர பகுதிகளை நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் கர்நாடகா பகுதியை இந்த புயல் நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    வங்க கடலில் உருவாக உள்ள புயலின் தாக்கம் பற்றி தற்போது கணிக்க முடியாது என்றும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

    • நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது.
    • மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு ழுலு பல இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது

    கடலூர்:

    கடந்த சில தினங்களாக கோடை வெயிலின் தாக்கம் கடலூர் மாவட்டம் முழுதும் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலை குறிஞ்சிப்பாடி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இடி மின்னலுடன்மழை பெய்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது. இதில் நகரப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் இருந்தவேப்பமரம், தென்னை மரங்கள் உள்ளிட்ட பல்வேறு மரங்கள் முறிந்து மின்கம்பத்தில் சாய்ந்ததால் பல்வேறு இடங்களில் மின்கம்பம் உடைந்தது இதனால் மின்தடை ஏற்பட்டது .

    இதே போல குறிஞ்சிப்பாடியை அடுத்த ரெட்டிபாளையம் கிராமத்தில் மேச்சலில் இருந்த கறவை மாடு மீது மின்னல் தாக்கியது. அதில் சம்பவ இடத்திலேயே அந்த மாடு உயிரிழந்தது. இதனை அறிந்த மாட்டின் உரிமையாளர் மூதாட்டி லட்சுமி என்பவர் கதறி அழுதது பலரையும் சோகத்தில் அழுத்தியது. சூறாவளிக்காற்று மற்றும் அதனைத் தொடர்ந்து பெய்த மழை போன்றவற்றால் சற்று குளுமையான சூழல் நிலவியது.

    • ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.
    • இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன.

    ராசிபுரம்:

    கோடை வெயில், கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் வெளியே நடந்து செல்ல முடியாத அளவிற்கு வாட்டி வதைத்தது. இந்த நிலையில் ராசிபுரம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் நேற்று மாலை 3 மணியளவில் பலத்த சூறாவளி காற்று வீசியது.

    இந்த காற்றில் விளம்பர பலகைகள், புழுதி பறந்தன. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர். காற்று வீசிய சிறிது நேரத்தில் கனமழையும் பெய்தது.

    மழையுடன் காற்று வீசியதால் ராசிபுரத்தில் இருந்து புதுப்பாளையம் செல்லும் சாலையில் இருந்த மின்கம்பங்கள் சாய்ந்தன. அப்போது அந்தப் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

    மின்கம்பங்கள் சாய்ந்த பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பின்னர் மின்வாரிய ஊழியர்கள் சரி செய்தனர். மழை பெய்ததன் காரணமாக மாலையில் குளிர்ந்த சீதோஷணம் நிலவியது.

    அதேபோல் நாமகிரிப்பேட்டை, சீராப்பள்ளி, புதுப்பட்டி உள்பட பல்வேறு பகுதி களில் நேற்று மழை பெய்தது.

    • தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
    • அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பல்லடம்:

    பல்லடத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளி கருப்பசாமி(52) என்பவரது வீட்டின்மேற்கூரை சூறைக்காற்றால் முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதன் இடிபாடுகள் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மேல் விழுந்து அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தன.

    இதனால் தற்போது அந்த தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே கருப்புசாமி வீடு அருகே இருந்த 2 ஓட்டு வீடுகளும், சூறைக்காற்றால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சூறைக்காற்றில் வீடுகள்,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்த நிலையில், அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும்.
    • வங்கக்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது.

    சென்னை:

    தமிழகத்தில் கடந்த 2 மாதங்களாகவே கோடை வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்நிலையில் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. மே 28-ந்தேதி வரை அக்னி வெயில் நீடிக்கும். இந்த காலக்கட்டத்தில் வெயில் அதிகமாக கொளுத்தும்.

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக கோடை மழை பெய்து வருகிறது. சென்னையிலும் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் வெப்பம் தணிந்து காணப்படுகிறது.

    இந்நிலையில் வங்கக் கடலில் வருகிற 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. இது புயலாக மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயலின் தாக்கம் முடிந்த பிறகு வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து புயல் எச்சரிக்கை மைய இயக்குனர் பி.செந்தாமரைகண்ணா கூறியதாவது:-

    வங்கக்கடல் பகுதியில் வருகிற 6-ந்தேதி வளி மண்டலத்தில் காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதன் தாக்கத்தால் 7-ந்தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. 8-ந்தேதி அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். அதன்பிறகு 9-ந்தேதி புயலாக வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இது வடக்கே மத்திய வங்கக்கடலை நோக்கி நகரும்போது புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளது. இதன் பாதை மேற்கு வங்காளம் மற்றும் வங்காளதேச கடற்கரையை ஒட்டி இருக்கும்.

    தமிழகத்தை பொறுத்தவரை மழையில் எந்த முன்னேற்றமும் இருக்காது. எனவே மழை குறைய வாய்ப்புள்ளது. இந்த புயலின் தாக்கமானது வங்கக் கடலில் நிலவி வரும் ஈரப்பதம் முழுவதையும் இழந்துவிடும். இதனால் வருகிற 10-ந்தேதி முதல் தமிழகத்தில் வெப்பம் மேலும் அதிகரிக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×