search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "electric pole"

    • திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர்.
    • .மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    மூலனூர்:

    திருப்பூர் மாவட்டம் மூலனூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட நல்லதங்காள் அணைக்கு நீர் வரும் முக்கிய வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் மின் கம்பங்கள் அமைத்து வருகின்றனர். தற்போது மழை காலம் துவங்க உள்ளதால் நல்ல தங்காள் அணைக்கு நீர்வரத்து அதிகமாக இருக்கும்.மழை நீர் அதிக அளவில் வரும் போது நீர் வழி தடத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் அமைக்கும் மின் கம்பங்கள் மழை நீரில் அடித்து சென்று விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.மேலும் விபத்து ஏற்பட்டு பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் உயிர் பலி ஏற்படும். எனவே துறை சார்ந்த அதிகாரிகள் அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று நீர் வழித்தடத்தில் உள்ள மின் கம்பங்களை அகற்றி ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு விவசாயிகள், சங்க நிர்வாகிகள் , பொதுமக்கள், கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • சாலையை ஒட்டிய இடத்தில் இருந்த அந்த மின் கம்பத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன.
    • இதனை ஆறுமுகநேரி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெபஸ்சாம், மின்பாதை ஆய்வாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் சரி செய்தனர்.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சந்திப்பிற்கும் மத்திய பஜார் ஸ்டேட் பாங்க் பஸ் நிறுத்தத்திற்கும் இடைப்பட்ட பகுதியில் இரும்பிலான மின் கம்பம் ஒன்று போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வந்தது. சாலையை ஒட்டிய இடத்தில் இருந்த அந்த மின் கம்பத்தில் வாகனங்கள் மோதி அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு வந்தன. எனவே குறிப்பிட்ட அந்த மின் கம்பத்தை அகற்றுமாறு பொதுநல அமைப்புகளின் சார்பில் நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.

    இந்நிலையில் நேற்று அந்த இடத்தின் அருகே நடந்த கார் விபத்தின் காரணமாக மற்றொரு மின்கம்பம் சேதமடைந்தது.இதனை ஆறுமுகநேரி மின்வாரிய உதவி பொறியாளர் ஜெபஸ்சாம், மின்பாதை ஆய்வாளர் மோகன் மற்றும் ஊழியர்கள் சரி செய்தனர். தொடர்ந்து அவர்கள் சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றிவிட்டு அங்கு புதிய மின்கம்பத்தை அமைத்தனர். அப்போது அருகில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக நின்றிருந்த இரும்பு மின் கம்பத்தையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். மின்வாரியத்தின் சார்பில் எடுக்கப்பட்ட இந்த நடவடிக்கையை அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் பாராட்டினர்.

    • புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் பயணிகளை இறக்கி விட்டு நள்ளிரவு ஓய்வு எடுப்பதற்காக முதலியார் பேட்டை நோக்கி வந்தது.
    • போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் இயக்கப் பட்டு வரும் தனியார் பஸ்கள் பணி நேரம் முடிந்து இரவு நேரங்களில் காலியான இடங்களில் நிறுத்திவிட்டு டிரைவர்கள் ஓய்வெடுப்பது வழக்கம்.

    அதுபோல் நேற்று இரவு கோரிமேட்டில் இருந்து புதுச்சேரி நோக்கி வந்த தனியார் பஸ் பயணிகளை இறக்கி விட்டு  நள்ளிரவு ஓய்வு எடுப்பதற்காக முதலியார் பேட்டை நோக்கி வந்தது.

    முதலியார் பேட்டையில் இருந்து உடையார் தோட்டம் வழியாக துறைமுகம் செல்லும் வழியில் பஸ் சென்ற போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து பஸ் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தின் மீது பயங்கரமாக மோதியது. மேலும் அருகில் உள்ள வீட்டிலும் மோதி நின்றது.

    இந்த விபத்தில் மின்கம்பம் சேதம் அடைந்த துடன் வீட்டின் முன் பகுதி சேதமானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை.

    விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். நள்ளிரவில் ஏற்பட்ட இந்த திடீர் விபத்தினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • சூறாவளி காற்றுடன் மழை பெய்தது
    • மின் இணைப்பு துண்டிக்கபட்டன

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் நேற்று இரவு சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கபட்டன.

    மேலும் ஆரணி பழைய ஆற்காடு ரோடு அருகே சூறாவளி காற்றுடன் கூடிய கனமழை பெய்ந்ததால் சாலை ஓரமாக இருந்த மரம் வேரோடு சாய்ந்து மின்கம்பம் மீது விழுந்தது.

    இதனால் மின்கம்பம் உடைந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இரவு நேரத்தில் இந்த சம்பவம் நடைபெற்றதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டன.

    இதனையடுத்து தகவலறிந்த வந்த ஆரணி தீயணைப்பு துறை மற்றும் மின்சார வாரியதுறையினர் மின் இணைப்பை துண்டித்து விழுந்து கிடந்த மரத்தை அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    • விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.
    • எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை அருகே முளப்பாக்கம் கிராமத்தில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

    இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் விளைநிலங்கள் உள்ளன. இந்த விளைநிலங்களின் வழியாக செல்லும் மின்கம்பம் ஒன்று சாய்ந்த நிலையில் உள்ளது.

    இதன் காரணமாக எப்போது வேண்டுமானாலும் விபத்து ஏற்படலாம். இதுகுறித்து அந்தப் பகுதியை சேர்ந்த விவசாயிகள் மின்சார வாரிய அலுவலகத்தில் பலமுறை புகார் அளித்துள்ளனர்.

    ஆனாலும் அது குறித்து இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அந்த பகுதி விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    கடந்த 3 மாதத்திற்கு மேலாக சாய்ந்த நிலையில் உள்ள இந்த மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழுந்து விபத்து ஏற்படலாம்.

    அதற்கு முன்னதாகவே விழித்துக் கொண்டு மின்சார வாரியம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • பலத்த காற்று வீசும் போது இன்சுலேட்டர்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது.
    • மின் கம்பங்களில் புதிய இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணி நடந்தது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடு மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட திருவெண்காடு, மங்கை மடம், பெருந்தோட்டம் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மழை, பலத்த காற்று வீசும் போது இன்சுலேட்டர்கள் பழுதாகி மின் தடை ஏற்படுகிறது.

    வரும் மழைக்காலத்தில் இதேபோன்று பழுதுகள் ஏற்பட்டு மின்தடை ஏற்படுவதை தடுக்கும் பொருட்டு திருவெண்காடு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 150 புதிய இன்சுலேட்டர் கருவிகள் பொருத்தும் பணி நடந்தது.

    இந்த பணியில் உதவி பொறியாளர் ரமேஷ் தலைமையில், ஆக்க முகவர் குணசேகரன், மின்பாதை ஆய்வாளர்கள் ராஜேந்திரன் மற்றும் 20-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    இந்த பணிகள் சரியாக செய்யப்படுகிறதா என சீர்காழி உட்கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் லதா மகேஸ்வரி, உதவி செயற்பொறியாளர் விஜய பாரதி ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    இதேபோல் பூம்புகார் மின்வாரிய அலுவலகத்திற்கு உட்பட்ட மேலையூர் மின் பாதையில் சுமார் 200 இன்சுலேட்டர்கள் பொருத்தும் பணியில் பூம்புகார் உதவி பொறியாளர் தினேஷ், ஆக்க முகவர் சேகர் ஆகியோர் தலைமையில் 25-க்கும் மேற்பட்ட மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டனர்.

    • 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.
    • மின்கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் விழும் அபாயம் உள்ளது.

    மயிலாடுதுறை:

    மயிலாடுதுறை தாலுகா கிழாய் ஊராட்சி சந்தன கருப்பு கோவில் அருகே மணல்மேடு சாலையில் மின்கம்பங்கள் உள்ளன. அந்த மின்கம்பங்களில் அடுத்தடுத்து வரிசையாக உள்ள 5-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சாய்ந்த நிலையில் உள்ளன.

    இந்த மின்கம்பங்கள் எந்த நேரம் வேண்டுமானாலும் சாய்ந்து வயலில் விழும் அபாயம் உள்ளது. இந்த மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து உயிரிழப்பு ஏற்படுமோ என்ற அச்சத்தில் விவசாயிகள் உள்ளனர்.

    இது குறித்து அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்டவர்களுக்கு பலமுறை புகார் கொடுத்தும், இது வரையிலும் சீரமைக்கப்படவில்லை என்று அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொது மக்களின் நலன் கருதி, ஏதாவது அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக, மேற்கண்ட பகுதியில் சாய்ந்த நிலையில் உள்ள மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • சிவகுமார் ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர உள்ள மின் கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதியது.
    • இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    களக்காடு:

    களக்காடு அருகே உள்ள ஊச்சிகுளம் தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவகுமார் (வயது47). தொழிலாளி. இவர் சம்ப வத்தன்று களக்காட்டிற்கு வந்து விட்டு, ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டி ருந்தார். ஊச்சிகுளம் அருகே சென்ற போது சாலையோர முள்ள மின் கம்பத்தில் மோ ட்டார் சைக்கிள் மோதியது.

    இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சிவகுமாரை அக்கம், பக்கத்தினர் மீட்டு களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி களக்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் பச்சமால் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருவாரூர் நகராட்சியில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும்.
    • வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும்.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் புவனப் பிரியா செந்தில் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், பருவமழை தொடங்க இருப்பதால், அனைத்து வார்டுகளிலும் பாரபட்சம் இன்றி மழை நீர் வடிகால்களை தூர்வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    திருவாரூர் நகராட்சியில் உள்ள 30 வார்டுகளிலும் உள்ள மழைநீர் வடிகால் தூர்வாரும் பணிகளை முற்றிலுமாக நிறைவு செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    மேலும் நகராட்சி முழுவதும் உள்ள வார்டுகளில் குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை சீரமைக்க வேண்டும். பழுதடைந்த மின் கம்பங்களை அகற்றி புதிய மின்கம்பங்களை அமைத்து தர வேண்டும்.

    இவைகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகர் மன்ற உறுப்பினர்கள் பேசினர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு இரண்டு வருடங்கள் ஆகியும் உறுப்பினருக்கான அடையாள அட்டை வழங்கப்படவில்லை. நகர்மன்ற உறுப்பினர் என்பதற்கு எந்த அடையாளமும் இல்லாமல் இருக்கிறது.

    உடன் அடையாள அட்டை வழங்க வேண்டும் என்று உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அனைவரின் புகைப்படங்களும் சேகரித்து ஒரு வார காலத்திற்குள் அடையாள அட்டை வழங்கு வதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நகராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் நகராட்சி மேலாளர் முத்துக்குமார், நகர மன்ற உறுப்பினர்கள் பிரகாஷ், சங்கர், செந்தில், ரஜினி சின்னா, அசோகன் உள்ளிட்ட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்கம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது.
    • மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினார்கள்.

    தென்திருப்பேரை:

    தென்திருப்பேரையில் நேற்று பயங்கர சூறாவளி காற்று அடித்தது.

    மின்கம்பம் சேதம்

    மகர நெடுங்குழைக்காதர் கோவில் தென்புரம் தெற்கு ரத வீதியில் சாலையோரம் உள்ள மரம் மின்கம்பத்தின் மீது விழுந்தது. இதனால் மின்கம்பம் உடைந்தும் அடுத்தடுத்து உள்ள 4 மின்க ம்பங்கள் ரோட்டில் வளைந்தும் விழுந்தும் கிடந்தது. அந்த சமையத்தில் பொதுமக்கள் யாரும் அவ்வழியில் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. மேலும் அந்த வழியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

    பொதுமக்கள் அவதி

    உடனடியாக மின் ஊழியர்கள் விரைந்து மின் இணைப்பை துண்டித்தனர். மேலும் மின்வாரிய ஊழியர்கள் மின்கம்பியில் விழுந்த மரத்தை துண்டு துண்டாக வெட்டி ஜே.சி.பி. எந்திரம் மூலம் அப்புற படுத்தினார்கள். இதனால் மாலை 4 மணி முதல் இரவு 10 மணி வரை மின்சாரம் தடைபட்டு பொதுமக்களும் வியாபாரிகளும் அவதிப்பட்டனர்.

    • இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர்கிறது.
    • கேபிள் வயர் தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.

    ஆறுமுகநேரி:

    ஆறுமுகநேரி மெயின் பஜார் சாலை ஓரமாக மின் கம்பங்கள் உள்ளன. இவற்றில் மத்திய பஜார் சந்தைக்கு எதிர்ப்புறம் உள்ள கான்கிரீட் மின் கம்பம் ஒன்று நேற்று இரவு அடி பாகத்தில் முறிந்த நிலையில் அருகில் உள்ள கடை சுவரில் சாய்ந்தது. ஆனால் இதற்கான மின் கம்பியில் உயர் அழுத்த மின்சாரம் இன்னும் சென்று கொண்டிருக்கிறது.

    மேலும் இதே மின் கம்பத்திலிருந்து அருகில் உள்ள 10-க்கும் மேற்பட்ட கடைக ளுக்கான மின் இணைப்புகளின் மூலம் மின் சப்ளையும் தொடர் கிறது.

    பஸ் போக்குவரத்து மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த இப்பகுதியில் அபாயகரமான நிலையில் இருக்கும் இந்த மின் கம்பத்தை உடனடியாக மாற்ற மின்சார வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    மேலும் இந்த மின்கம்பத்தில் இருந்து அடுத்த மின் கம்பத்திற்கு இடையில் தடிமனான கேபிள் வயர் சென்றுள்ளது. அது தாழ்வாக கிடந்துள்ள நிலையில் அவ்வழியாக சென்ற மினி லாரி ஒன்றில் கேபிள் வயர் சிக்கி இழுக்கப்பட்டதால் இந்த மின் கம்பம் ஒடிந்து சரிந்தது தெரிய வந்துள்ளது.

    இதே போல் ஆறுமுகநேரி, காயல்பட்டினம், திருச்செந்தூர் பகுதிகளில் மின் கம்பங்கள் வழியாக தாழ்வாக செல்லும் கேபிள் வயர்களால் மேலும் பல விபத்துக்கள் நடக்கும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

    இதனை கருத்தில் கொண்டு மின் கம்பங்கள் வழியாக இதுபோன்ற கேபிள் வயர்கள் செல்வதை அகற்றவும், தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • மின்கம்பத்தின் அடி பகுதியில் கட்டி வைக்கப்பட்டிருந்த சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து காணப்படுகிறது.
    • இதனால் அப்பகுதியில் பெரும் காற்று வீசுகையில் மின்கம்பம் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    சாத்தான்குளம்:

    சாத்தான்குளம் கடை வீதியில் வணிக கடைகள் மற்றும் வீடுகளுக்கு மின் விநியோக்கும் பொருட்டு மின் கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தின் மேல் பகுதி நல்ல நிலையில் உள்ளது. அதன் அடி பகுதியில் கட்டி வைக்கப் பட்டிருந்த சிமெண்ட் பூச்சு திடீரென பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் அப்பகுதியில் பெரும் காற்று வீசுகையில் மின்கம்பம் சரிந்து விழும் நிலை ஏற்பட்டுள்ளது.

    எனவே மின் கம்பம் சரிந்து பெரும் விபத்து ஏற்படும் முன் மின்கம்ப த்தின் அடி பகுதியில் சிமெண்ட் பூச்சு மூலம் கட்டி வலுவான முறையில் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    ×