search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காங்கயம் அருகே ஆபத்தான மின் கம்பத்தை சரி செய்ய கோரிக்கை
    X

    கோப்புபடம்.

    காங்கயம் அருகே ஆபத்தான மின் கம்பத்தை சரி செய்ய கோரிக்கை

    • சாய்ந்து விழும் அபாய நிலையில் மின் கம்பம் காணப்படுகிறது.
    • அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் மின் கம்பத்தை சரிசெய்ய வேண்டும்.

    காங்கயம் :

    காங்கயம் ஒன்றியம் ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட சென்னிமலைக்கவுண்டன்வலசு பகுதியில் குடியிருப்பை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள மின் கம்பம், சாய்ந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது.

    பலமான காற்று வீசும் போது மின் கம்பம் சாய்ந்து வீட்டின் மீது விழும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்துள்ளனா். எனவே, அசம்பாவிதம் ஏதும் ஏற்படுவதற்கு முன் சாய்ந்து விழும் நிலையில் உள்ள மின் கம்பத்தை சரிசெய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    Next Story
    ×