என் மலர்
உள்ளூர் செய்திகள்

பஸ் கவிழ்ந்து விபத்து
- டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதியது.
- திருக்குவளை போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம்:
சென்னையில் இருந்து திருத்துறைப்பூண்டிக்கு நேற்றிரவு தனியார் பஸ் சென்றது.
இன்று காலை நாகை-திருத்துறைப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் ஆலங்குடி சீராவட்டம் பாலம் அருகே சென்றது. அப்போது அந்த பகுதியில் மழை ெபய்துள்ளது.
இந்நிலையில் சீராவட்டம் பாலம் இறக்கத்தில் பஸ் சென்ற போது அதன் வேகத்தை கட்டுப்படுத்த டிரைவர் பிரேக் பிடித்துள்ளார்.
அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் தாறுமாறாக ஓடி சாலையோரத்தில் இருந்த மின்கம்பத்தில் மோதி கவிழந்தது.
இதைத் தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று பஸ்சில் இருந்த பயணிகளை மீட்டு ெவளியேற்றினர்.
இதில் பஸ்சில் பயணித்த 8 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நிலையில் ஓட்டுநர்க ளுக்கு காலில் லேசான காயம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து திருக்குவளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் கிரேன் மற்றும் மீட்பு ஊர்தியின் உதவியோடு கவிழ்ந்த பஸ்சை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனால் நாகை-திருத்துறைப்பூண்டி பிரதான சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.






