search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shifted"

    • சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.
    • ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

    தென்காசி:

    பாவூர்சத்திரம் அருகே உள்ள ஆவுடையானூர் ஊராட்சி மாடியனூரில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் பாதையில் ஆம்புலன்ஸ் வாகனம் உள்ளே சென்றுவர முடியாத அளவிற்கு போக்குவரத்திற்கு இடையூறாக சாலையின் நடுவே இருந்த மின் கம்பங்களை அகற்றி வேறு இடத்தில் மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கைகள் வைத்து வந்தனர்.

    மேலும் மின்கம்பங்களை வேறு இடத்திற்கு மாற்று வதற்கு மின்வாரியத்திற்கு குறிப்பிட்ட தொகை பணம் கட்ட வேண்டும் என்கிற சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் சுகாதாரத்துறையில் மின்சார வாரியத்திற்கு செலுத்த நிதிகள் இல்லை என்று கூறி வந்தனர். இதுகுறித்து ஆவுடையானூர் ஊராட்சி மன்ற தலைவர் குத்தாலிங்க ராஜன் கவனத்திற்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் நல சங்கத்தின் சார்பில் கொண்டு செல்லப்பட்டது.

    உடனடியாக ஊராட்சி தலைவர் அந்த கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு செலுத்த வேண்டிய பணத்தை செலுத்தினார். இதனையடுத்து மின் கம்பங்களை அகற்றிவிட்டு வேறு இடத்தில் வைக்கும் பணிகள் தொடங்கியது.கோரிக்கையை ஏற்று மின்சார வாரியத்திற்கு பணம் செலுத்திய ஆவுடையானூர் ஊராட்சி தலைவர் மற்றும் மின்சார வாரியத்தின் மின்பொறியாளருக்கு ஊர் பொதுமக்கள் மற்றும் தமிழன் மக்கள் நலச்சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்தனர்.



    கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.
    புதுடெல்லி:

    ஐகோர்ட்டு நீதிபதிகள் 3 பேரை வெவ்வேறு மாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்து மத்திய சட்ட அமைச்சகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டது.

    அதன்படி கர்நாடக ஐகோர்ட்டில் நீதிபதியாக பணியாற்றி வரும் வினீத் கோத்தாரி சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார்.

    இதேபோல் காஷ்மீர் ஐகோர்ட்டு நீதிபதி அலோக் அராதே கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மேலும் பஞ்சாப் மற்றும் அரியானா மாநில ஐகோர்ட்டு நீதிபதி ராஜேஷ் பிந்தால், காஷ்மீர் மாநில ஐகோர்ட்டுக்கு பணியிட மாறுதல் செய்யப்பட்டார். 
    அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன. #NawazSharif #Maryam
    இஸ்லாமாபாத்:

    பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் ஊழல் பணத்தில் லண்டன் அவென்பீல்டு சொகுசு வீடுகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இது தொடர்பான வழக்கில் அவருக்கு 10 ஆண்டு, அவரது மகள் மரியத்துக்கு 7 ஆண்டு, மருமகன் கேப்டன் சப்தாருக்கு 1 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.

    தண்டனையை எதிர்த்து 3 பேரும் இஸ்லாமாபாத் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்து உள்ளனர்.

    தற்போது அவர்கள் உச்சக்கட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட ராவல்பிண்டி அடியலா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் பாதுகாப்பு காரணங்களையொட்டி நவாஸ் ஷெரீப்பையும், மரியத்தையும் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ள சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாற்ற சிறைத்துறை பரிசீலித்து வருகிறது என தகவல்கள் வெளியாகின.

    ஆனால் மரியம், அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.

    தனது தந்தை நவாஸ் ஷெரீப், கணவர் கேப்டன் சப்தார் ஆகியோருடன் தான் அடியலா சிறையில் அடைக்கப்பட்டு இருப்பதைத்தான் விரும்புவாக அதிகாரிகளிடம் மரியம் தெரிவித்து விட்டார் என அந்த தகவல்கள் மேலும் கூறுகின்றன.

    நவாஸ் ஷெரீப்பும், மரியமும் காவலில் வைக்கப் படுவதற்காக சிஹாலா போலீஸ் கல்லூரி வளாகத்தில் உள்ள ஓய்வு இல்லம் ரூ.20 லட்சம் செலவில் கிளைச்சிறையாக மாற்றப்பட்டு உள்ளதாக தெரிய வந்து உள்ளது.  #NawazSharif #Maryam #tamilnews 
    ×