search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு
    X

    மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைப்பு

    • மழையால் சாய்ந்த மின்கம்பங்கள் சீரமைக்கப்பட்டது.
    • கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    தொண்டி

    ராமநாதபுரம் மாவட்டம், கொடிப்பங்கு பஞ்சாயத்துக்குட்பட்ட உள்ள சவேரியார் பட்டினம் குடியிருப்பு பகுதியில் பெய்த கனமழையின் காரணமாக 2 மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்தன.

    இதனை அறிந்த அந்த பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கிங் பீட்டர் மின் வாரியத்திற்கு தகவல் கொடுத்தார்.

    உடனடியாக மின்இணைப்பு துண்டிக்கப்பட்டு கிராம மக்கள் உதவியுடன் ஜே.சி.பி. எந்திரம் வரவழைக்கப்பட்டு, மின் ஊழியர் ராஜேந்திரன் தலைமையில் பணியாளர்களைக் கொண்டு மின் கம்பங்கள் சீரமைக்கப்பட்டன.

    விபத்து ஏற்படும் முன் நடவடிக்கை எடுத்து மின்கம்பங்களை சீரமைத்ததற்கு கிராம மக்கள் நன்றி தெரிவித்தனர்.

    Next Story
    ×