search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "funds"

    • மின் கம்பத்தை புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.
    • பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாநகராட்சி 24 -வது வார்டு சாமுண்டிபுரம் சலவைக்காரர் 3 வது வீதியில் பல ஆண்டுகளாக போக்குவரத்துக்கு இடையூறாக 3 மின் கம்பம் இருந்தது. இதனை மாற்றுவதற்கு மின்சார வாரியத்திடம் கோரிக்கை வைத்தனர்.ஆனால் மின் கம்பத்தை மாற்றி புதிய இடத்தில் வைப்பதற்கு அரசுக்கு ரூ .68 ஆயிரத்து 210 செலுத்த வேண்டுமென மின்சாரம் வாரியம் தெரிவித்தது.

    உடனடியாக ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜின் முயற்சியில்இப்பிரச்சனைக்கு தீர்வு காணும் விதமாக அப்பகுதி பொதுமக்களிடம் கலந்து ஆலோசித்து அவர்கள் ஒத்துழைப்புடன் மின்சார வாரியத்துக்கு கட்ட வேண்டிய தொகை ரூ. 68,210யை பொதுமக்களிடம் இருந்து 40 ஆயிரம் நிதி உதவி பெற்று மீதமுள்ள ரூ.28 ஆயிரத்தை தனது சொந்த நிதியிலிருந்து கொடுத்து உதவி மின் பொறியாளரிடம் வழங்கினார். அப்போது மாமரத்து வீதியைச் சார்ந்த கோபி என்ற பழனி குமார் , உதவியாளர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்தனர்.

    • ஆதரவற்ற மற்றும் தொற்றினாள் பாதிக்கபட்ட குழந்தைகளுக்கு உதவித்தொகைக்காக விண்ணப்பிக்கலாம்.
    • நகரப்பகுதிக்கு ரூ.30,000-லிருந்து ரூ.96,000 மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது;-

    மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் அடிப்படையில் சமூக பாதுகாப்புத்துறையின் கீழ் செயல்பட்டுவரும் மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் மூலமாக தாய், தந்தை அல்லது தந்தையை இழந்த குழந்தைகள், எச்.ஐ.வி. தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள் மற்றும் சிறைவாசிகளின் குழந்தைகள் ஆகியோருக்கு மிஷன் வாட்சாலயா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி மாதந்தோறும் ரூ.4000 வீதம் 3 ஆண்டுகளுக்கு நிதி ஆதரவு உதவித்தொகை பெறுவதற்கு குடும்ப ஆண்டு வருமானச்சான்று உச்ச வரம்பு கிராம பகுதிக்கு ரூ.24000-த்தில் இருந்து ரூ.72000-மாகவும், நகரப்பகுதிக்கு ரூ.30000-லிருந்து ரூ.96000-மாகவும் உயர்த்தி திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

    எனவே நிதி ஆதரவு திட்டத்தில் பயனடைய விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வருமானச்சான்று ரூ.72000-(கிராமப்பகுதி), ரூ.96000-(நகரப்பகுதி)-க்குள் பெறப்பட்டு, அதனுடன் குழந்தையின் கல்விச்சான்று, வங்கி கணக்கு எண், ஆதார் நகல், குடும்ப அட்டை நகல், பெற்றோரின் இறப்பு சான்று மற்றும் குழந்தையின் புகைப்படம் ஆகியவற்றுடன் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, 36/2 திருமஞ்சன வீதி, திருஇந்தலூர், மயிலாடுதுறை என்ற முகவரிக்கு விண்ணப்பம் செய்து பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.
    • வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர வடிவது சிரமமாக இருந்தது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதாரண்யம் நகராட்சியில் ராஜாளி காடு, குமரன்காடு காந்திநகர் மாரியம்மன் கோவில்தெரு, குட்டாச்சிகாடு உள்ளிட்ட 21 வார்டுகளிலும் வாய்கால்கள் தூர்வாரப்படாததால் மழை காலங்களில் தண்ணீர் வடிவது மிகுந்த சிரமாக இருந்தது.

    வாய்க்கால்கள் தூர்வாரும் பணிக்காக அரசு ரூ. 50 லட்சம் நிதி ஒதுக்கியது.

    நகராட்சி பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை வேதாரண்யம் நகரமன்ற தலைவர் புகழேந்தி தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் ஹேமலதா, நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம், ஓவர்சியர் குமரன் மற்றும் நகராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

    தூர்வரும் பணி இன்னும் மூன்று வாரத்தில் முடிவடையும் என நகராட்சி ஆணையர் ஹேமலதா தெரிவித்தார்.

    • திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் போதிய நிதி ஒதுக்காததை கண்டித்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
    • எந்த கோரிக்கையிலும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய கூட்டம் இன்று நடைபெற்றது. ஒன்றிய தலைவர் வேட்டை யன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் இந்திரா ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். ஆணையாளர்கள் அன்பரசு, ராமர் ஆகியோர் கூட்டத்தை நடத்தினர்.

    கூட்டம் நடைபெறு வதற்கு முன்பாக அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பி னர் நிலையூர் முருகன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் ஆணையாளரை சந்தித்து தங்களது வார்டு பகுதிகளில் பொதுமக்களின் கோரிக்கை களை நிறைவேற்ற போதிய நிதி ஒதுக்கீடு செய்யாததால் திட்டப்பணிகள் செய்ய முடியவில்லை. நிதி ஒதுக்காததை கண்டித்து இன்றைய கூட்டத்தை புறக்கணிப்பதாக கூறி சென்றனர்.

    இதுகுறித்து அ.தி.மு.க. ஒன்றிய குழு உறுப்பினர் நிலையூர் முருகன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு மக்களுக்கான திட்டப்பணிகள் செய்யப்பட்டது. அதே சமயத்தில் தற்போது தி.மு.க. ஆட்சியில் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கு போதிய நிதி ஒதுக்காமல் மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஆன சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட எந்த கோரிக்கையிலும் நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்தை புறக்கணிக்கிறோம் என்றார்.

    • திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
    • நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

    குடிமங்கலம் :

    உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் வட்டாரம் உட்பட திருப்பூர் மாவட்டத்தில் 60 லட்சத்திற்கும் அதிகமான தென்னை மரங்கள், நீண்ட கால பயிராக பராமரிக்கப்பட்டு வருகின்றன.தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை, 2011, 2012 ல், இருந்து போதிய அளவு பெய்யவில்லை. அதிகரித்த வறட்சி காரணமாக, நிலத்தடி நீர்மட்டம் முற்றிலுமாக குறைந்து தென்னை சாகுபடியில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.போதிய தண்ணீர் இல்லாமல் உடுமலை சுற்றுப்பகுதியில், மட்டும் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகின. கடந்த சில ஆண்டுகளாக வெள்ளை ஈ தாக்குதல், வாடல் நோய் உள்ளிட்ட நோய்த்தாக்குதலால் ஆயிரக்கணக்கான தென்னை மரங்கள் கருகியுள்ளன.

    மேலும் பருவமழை காலத்திலும் பலத்த காற்றுக்கு நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்வது தொடர்கதையாகியுள்ளது. கருகிய மரங்கள் தவிர்த்து, பல்வேறு நோய்த்தாக்குதலால் காய்ப்புத்திறன் இல்லாமல் பல மரங்கள் வெறுமையாக காட்சியளிக்கின்றன. இத்தகைய தென்னை மரங்களை அப்புறப்படுத்த கூட வழியில்லாமல் விவசாயிகள் திகைத்து வருகின்றனர்.

    இந்நிலையில் மத்திய அரசின் தென்னை வளர்ச்சி வாரியம் சார்பில் முன்பு தென்னந்தோப்பு சீரமைப்பு பணிகளுக்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு வந்தது. மரத்துக்கு 1,700 ரூபாய் வரை விவசாயிகளுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்ட மரங்களுக்கு மாற்றாக புதிதாக தென்னங்கன்றுகளை நடவு செய்தல், சொட்டு நீர் பாசனம் அமைத்தல், பராமரிப்பு ஆகியவற்றுக்கும் தென்னை வளர்ச்சி வாரியம், சீரமைப்பு நிதி ஒதுக்கப்பட்டது.தென்னை விவசாயிகள் பாதிப்பு குறித்து மாநில அரசு மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று சீரமைப்பு நிதியை தென்னை வளர்ச்சி வாரியம் வாயிலாக பெற்றுத்தர வேண்டும் என உடுமலை பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மத்திய அரசு ஒதுக்கிய நிதியை மாநில அரசு வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துவதாக இணை மந்திரி குற்றம் சாட்டியுள்ளார்.
    • தமிழகத்தில் அந்த விபரங்களை அனுப்ப மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்டுள்ளதாக தெரிவித்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரத்தில் மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை மந்திரி கபில் மோரேஷ்வர் பாட்டீல் கூறியதாவது:-

    ஒவ்வொரு நிதி ஆண்டும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படுகிறது. அவற்றை பெறுவதற்குரிய தணிக்கை ஆவணங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் உள்ளதால் தாமதம் ஏற்படு கிறது. இந்த பிரச்னை ராமநாதபுரத்தில் உள்ளது.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் எந்த அளவிற்கு செயல்படுத்தப்படுகிறது என்பது குறித்து அதிகாரிகள், பயனாளிகளிடம் கேட்டறிந்தோம். இது தொடர்பாக கூடுதல் கலெக்டரிடம் விசாரித்து விரைவில் ஆவணங்களை சமர்ப்பிக்க கூறியுள்ளேன்.

    ஊராட்சிகளுக்குரிய நிதி ஒதுக்கிய 10 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட திட்டத்திற்கு அதனை பயன்படுத்த வேண்டும். இல்லையெனில் மாநில நிதியில் அபராத வட்டி செலுத்தி அதனையும் ஊராட்சிக்கு பயன்படுத்த வேண்டும். மராட்டிய மாநிலத்திற்கு இவ்வாறு அபராதம் விதித்துள்ளோம்.

    ஜல் ஜீவன் திட்டத்தில் வீடுதோறும் குடிநீர் வழங்க வலியுறுத்துகிறோம். ராமநாதபுரத்திற்கு காவிரி நீர் வழங்கவேண்டும். அதனை பெறுவதற்கு முன்பாக நிறைய இடங்களில் வெறும் குழாய் மட்டும் பதித்துள்ளனர். இதுதொடர்பாக அறிக்கை கேட்டுள்ளேன்.

    மத்திய அரசு மாநிலங்களுக்கு நிறைய நிதி ஒதுக்கியுள்ளது. அதனை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு பயன்படுத்துகின்றன. தமிழகத்தில் அந்த விபரங்களை அனுப்ப மாவட்ட நிர்வாகங்களிடம் கேட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் பொன்.கணபதி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் கதிரவன், பொருளாளர் தரணி முருகேசன் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    • சொட்டுநீர் பாசன திட்டத்தை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர்.
    • மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    உடுமலை:

    குறைந்த தண்ணீரில் கூடுதல் மகசூல் கிடைக்க, விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசன திட்டம் பரிந்துரை செய்யப்படுகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு மானிய திட்டங்களை விவசாயிகளுக்கு வழங்குகின்றன.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    விவசாயிகளுக்கு வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு மானிய திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை வரவேற்கிறோம். சொட்டுநீர் பாசன திட்டத்தை ஏராளமான விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மானியத்துடன் இத்திட்டத்தை வேளாண் துறை செயல்படுத்தி வருகிறது.சாதாரணமாக 35 - 40 ஆயிரம் ரூபாய் செலவில் அமைக்கப்படும் சொட்டுநீர் பாசனம் சேதமடையாமல் பல ஆண்டுகள் உழைக்கிறது. ஆனால் வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் சொட்டு நீர் பாசனத்துக்கு 1.25 லட்சம் ரூபாய் மதிப்பிடப்படுகிறது. கூடுதல் விலை கொடுத்து இத்திட்டத்தை செயல்படுத்துவதால் மக்கள் வரிப்பணம் வீணாகிறது.

    பொதுவாக 3 -5 அடி இடைவெளியுடன் பயிர்களுக்கு சொட்டுநீர் பாசனம் அமைப்பது வழக்கம். ஆனால்வேளாண் துறை சார்பில் பரிந்துரைக்கப்படும் நிறுவனங்கள் மூலம் கிடைக்கும் சொட்டு நீர் 4 அடி இடைவெளியில் உள்ளன.இது அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து பயிர்களுக்கும் ஏற்புடையது அல்ல. இதனால் மகசூல் குறையவும் வாய்ப்பு உள்ளது.

    மத்திய அரசின் பி.எம்., கிஷான் திட்டத்தின் கீழ், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி வழங்கப்படுவது போன்று, சொட்டு நீர் பாசனத்துக்கு உண்டான தொகையை, விவசாயிகளின் வங்கிக் கணக்கிலேயே வழங்க வேண்டும்.இதனால் திட்டத்துக்கு கூடுதல் நிதி செலவாவது தவிர்க்கப்படுவதுடன், விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு தேவையான இடைவெளியில் சொட்டுநீர் அமைத்துக்கொள்ள முடியும். இதன் மூலம் ஊழல் முறைகேடுகளும் தடுக்கப்படும். எனவ, மத்திய, மாநில அரசுகள் இது குறித்து ஆலோசித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.

    நிதி ஒதுக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
    ராமநாதபுரம்

    பெரியபட்டினம் ஊராட்சிக்கு நிதி ஒதுக்கா ததை கண்டித்தும், ஊராட்சி பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் தனிநபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி, துணைத்தலைவர் பெரோஸ்கான் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். 

    இதைத்தொடர்ந்து ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் போராட்ட த்தில் ஈடுபட்டவ ர்களை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி ஆணையாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    பெரியபட்டினம் ஊராட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்கள் பணியை தொடர்சியாக செய்யக்கூடாது என்றும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.

    இதில் குறிப்பாக பெரிய பட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த ஒரு நபர் ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தொடர்ச்சியாக 50-க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை அனுப்பி வருகிறார். 

    பெரியபட்டினம் ஊராட்சி  குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருகிறார். 

    ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு பெரியபட்டினம் ஊராட்சி தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிட ஆவண செய்ய வேண்டும்.

    இவ்வாறு  அதில் கூறப்பட்டுள்ளது. 
    ஆலந்தூரில் குடிநீர் பணிகளை மேற்கொள்ள விடுபட்ட 82 தெருக்களுக்கு ரூ.13 கோடி நிதி ஒதுக்க வேண்டும் என்று தா.மோ.அன்பரசன் எம்.எல்.ஏ. வலியுறுத்தியுள்ளார்.

    சென்னை:

    ஆலந்தூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் தா.மோ. அன்பரசன் சென்னை குடிநீர் வாரிய நிர்வாக இயக்குனரை நேற்று நேரில் சென்று சந்தித்தார்.

    அப்போது ஆலந்தூர், முகலிவாக்கம், மணப்பாக்கம் பகுதிகளில் விடுபட்ட பகுதிகளுக்கு மெட்ரோ குடிநீர் கிடைக்க நிதி ஒதுக்குமாறு வலியுறுத்தினார்.

    ஆலந்தூர் பகுதியில் ரூ.66 கோடி செலவில் மெட்ரோ குடிநீர் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்ட போது அங்குள்ள 160,161,162, 164,165,166 ஆகிய வட்டங்களில் உள்ள 82 தெருக்களிலும் மெட்ரோ குடிநீர் பணிகள் செயல்படுத்தப்படாமல் விடுபட்டுள்ளதை சுட்டிக் காட்டினார்.

    இது பற்றி சட்டமன்றத்தில் ஏற்கனவே பேசியதாகவும், அமைச்சர் இதை நிறைவேற்றி தருவதாக கூறியதையும் சுட்டிக்காட்டினார்.

    விடுபட்ட 82 தெருக்களிலும் குடிநீர் பணியை மேற்கொள்ள ரூ.13 கோடியே 71 லட்சம் அளவுக்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு நிதி ஒதுக்காமல் உள்ளதால் விரைந்து நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

    ஆலந்தூரில் குடிநீர் பிரச்சினையை போக்க நெம்மேலி கடல் குடிநீரையும் வழங்குமாறு வலியுறுத்தினார்.

    இதே போல் மணப்பாக்கம், முகலிவாக்கம் பகுதிகளில் உள்ள 156,157 ஆகிய வட்டங்கள் சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டு 7 ஆண்டு ஆகியும் மெட்ரோ குடிநீர் இணைப்பு வழங்காமல் உள்ளதை சுட்டிக்காட்டியதுடன் அங்கும் மெட்ரோ குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்யும் படி கேட்டுக் கொண்டார்.

    ஆதம்பாக்கம் பாலாஜி நகரில் 96- 2001-ம் ஆண்டில் அமைக்கப்பட்ட கழிவு நீர் வெளியேற்றும் நிலையத்தின் திறன்- குடியிருப்பு பகுதி அதிகரித்ததால் போதிய திறன், சக்தி இல்லாமல் உள்ளது.

    எனவே கூடுதலாக ஒரு வெளியேற்றும் நிலையம் அமைத்து தர வேண்டும் என்றும், 156,157,158 ஆகிய வட்டங்களில் பாதாள சாக்கடை வசதிகளை அமைத்து தருமாறும் கேட்டுக் கொண்டார்.

    இது தொடர்பாக தனித் தனியாக 5 கோரிக்கை மனுக்களையும் வழங்கினார்.

    போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, போக்குவரத்து கழகத்திற்கு போதுமான நிதியினை ஒதுக்கவேண்டும் என்று தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார். #Vijayakanth
    சென்னை:

    தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழக அரசு போக்குவரத்து கழகத்தை சரிசெய்ய வேண்டும் எனில் 3-ந் தேதி போக்குவரத்து மானிய கோரிக்கையின் போது, போக்குவரத்து கழகத்திற்கு போதுமான நிதியினை ஒதுக்கவேண்டும்.

    போக்குவரத்து துறையின் சார்பாக நாள் ஒன்றுக்கு 22 ஆயிரத்து 456 பேருந்துகள் இயக்கப்படுகிறது. இதன் மூலம் 90 லட்சம் கிலோமீட்டர் ஓட்டப்படுகிறது.

    இதற்கு 18 லட்சம் லிட்டர் டீசல் செலவாகிறது. நாள் ஒன்றுக்கு 12 கோடியே 76 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் செலவாகிறது. இதற்கு மத்திய, மாநில அரசு வாட் வரியாக 24.99 சதவிகிதம் செலுத்துவதன் மூலம், நாள் ஒன்றுக்கு 3 கோடியே 19 லட்சத்து 10 ஆயிரத்து 230 ரூபாயும், ஆண்டுக்கு 1148 கோடியே 76 லட்சம் ரூபாய் போக்குவரத்து கழகத்திற்கு இழப்பு ஏற்படுகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் பரிசீலனை செய்து வரி விதிப்பதை தவிர்க்க வேண்டும்.

    பணிக்கொடை சட்டம் 1972-ன் படி போக்குவரத்து தொழிலாளி வாங்கும் ஊதியத்தில் வருடத்திற்கு 15 நாள் ஊதியமாக பணிக்கொடை ஊக்கத்தொகை நிர்வாகம் கொடுக்க வேண்டும். சராசரியாக ஒரு தொழிலாளிக்கு ஆண்டுக்கு ரூபாய் 15 ஆயிரம் எனில், 1 லட்சத்து 40 ஆயிரம் தொழிலாளர்களுக்கு, வருடத்திற்கு ரூபாய் 210 கோடி தொழிலாளர்களிடமிருந்து பிடித்தம் செய்து நிர்வாக செலவுக்கு பயன்படுத்துகிறது.

    தொழிலாளர்கள் ஓய்வு பெறும்போது பணிக்கொடையின் ஊக்கத்தொகையை நிர்வாகத்தால் கொடுக்க முடியவில்லை.

    போக்குவரத்து மானியக் கோரிக்கையின் போது தமிழக அரசு, போக்குவரத்து தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் பணிக் கொடை பணத்தை, ஆயுள் காப்பீட்டு கழகத்தில் பிரீமியமாக செலுத்தி, அதன் மூலம் தொழிலாளர்கள் ஓய்வு பெரும் அன்றே பணப் பலன்கள் வழங்கப்படும் என்ற உத்தரவை வெளியிட்டால் போக்குவரத்து தொழிலாளர்களின் வேதனை சற்று குறையும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNAssembly #Vijayakanth
    உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்க நிதி உதவி கேட்டு பிரதமர் மோடி, முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு கடிதம் எழுதிய இளம் வீராங்கனைக்கு ரூ.4.5 லட்சம் நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    மீரட்:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐ.எஸ்.எஸ்.எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.

    எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி இருந்தார்.

    தாம் விளையாட்டு போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக உள்ளதாகவும், என் தந்தை கூலித்தொழிலாளி என்பதால் அங்கு சென்று போட்டியில் பங்கேற்பதற்கான பண உதவியை கேட்டு முதல்மந்திரி மற்றும் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த கடிதம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய முதல்மந்திரி யோகி ஆதித்யநாத், துப்பாக்கிச்சூடு வீராங்கனை பிரியா சிங் ஜெர்மனி சென்று போட்டியில் பங்கேற்பதற்காக உ.பி அரசு சார்பில் 4 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளதாகவும், அவரது பயணத்துக்கான செலவில் ஒரு பகுதியினை மாவட்ட நிர்வாகம் செய்துதரும் எனவும் கூறியுள்ளார்.


    பிரியா சிங்கின் சகோதரர்

    முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்தின் இந்த அறிவிப்பால் பிரியா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து பேசிய பிரியா சிங்கின் சகோதரர் அனிகெட் கவுதம், ‘நாங்கள் மிகவும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். ஜெர்மனிக்கு எனது சகோதரியை அனுப்புவதற்கான பண வசதி எங்களிடம் இல்லை. நாங்கள் முதல்மந்திரி யோகி ஆதித்யநாத்துக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறோம்’ என தெரிவித்துள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer #YogiAdityanath
    ஜெர்மனியில் நடைபெற உள்ள உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் பங்கேற்பதற்கு நிதி உதவி கேட்டு பிரதமர் மோடிக்கு உ.பி.யைச் சேர்ந்த இளம் வீராங்கனை கடிதம் எழுதி உள்ளார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    மீரட்:

    சர்வதேச துப்பாக்கி சுடுதல் கூட்டமைப்பு (ஐஎஸ்எஸ்எப்) சார்பில் ஜெர்மனியின் சுகல் நகரில் வரும் 22-ம் தேதி ஜூனியர் உலகக் கோப்பை போட்டி தொடங்க உள்ளது. இதில் இந்தியா சார்பில் பங்கேற்பதற்கு, உத்தர பிரதேச மாநிலம் மீரட்டைச் சேர்ந்த பிரியா சிங் (வயது 19) தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    ஆனால், உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்க்க காத்திருக்கும் பிரியா சிங்கின் குடும்பம் ஏழ்மை நிலையில் இருப்பதால், அவரால் ஜெர்மனி சென்று தங்கியிருந்து போட்டியில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அங்கு செல்வதற்கு லட்சக் கணக்கில் செலவு ஆகும் என்பதால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவிப்பில் உள்ளனர்.



    எனவே, ஜெர்மனி சென்று திரும்புவதற்கான பயணச் செலவு மற்றும் அங்கு தங்குவதற்கு தேவையான நிதி உதவி கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரியா சிங் கடிதம் அனுப்பி உள்ளார்.

    இது தொடர்பாக பிரியா சிங் கூறியதாவது:-

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க ஆர்வமாக இருக்கிறேன். ஆனால், அதற்கு 3 முதல் 4 லட்சம் ரூபாய் வரை செலவாகும் என கூறியுள்ளனர். என் தந்தை கூலித் தொழிலாளி. அவரால் இயன்ற வரை முயற்சி செய்தார். ஆனால், அவரால் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. எனவே, நிதி உதவி கேட்டு உத்தர பிரதேச முதல்வர் மற்றும் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ளேன்.

    உலகக் கோப்பை போட்டியில் பங்கேற்க உதவி கேட்டு விளையாட்டுத்துறை மந்திரியை சந்திப்பதற்காக இரண்டு முறை சென்றேன். ஆனால் அவரை சந்திக்க முடியவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #ISSFJuniorWorldCup #FundForIndianPlayer
    ×