என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
நிதி ஒதுக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம்
Byமாலை மலர்27 May 2022 9:56 AM GMT (Updated: 27 May 2022 9:56 AM GMT)
நிதி ஒதுக்காததை கண்டித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
ராமநாதபுரம்
பெரியபட்டினம் ஊராட்சிக்கு நிதி ஒதுக்கா ததை கண்டித்தும், ஊராட்சி பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் தனிநபர் மீது போலீஸ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திருப்புல்லாணி ஒன்றிய அலுவலகத்தில் ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி, துணைத்தலைவர் பெரோஸ்கான் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதைத்தொடர்ந்து ஒன்றிய ஆணையாளர் ராஜேந்திரன் போராட்ட த்தில் ஈடுபட்டவ ர்களை அழைத்து சமரச பேச்சு வார்த்தை நடத்தி னார். அப்போது ஊராட்சி தலைவர் அக்பர் ஜான் பீவி ஆணையாளரிடம் மனு அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
பெரியபட்டினம் ஊராட்சியின் மீது களங்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும், மக்கள் பணியை தொடர்சியாக செய்யக்கூடாது என்றும் சிலர் திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர்.
இதில் குறிப்பாக பெரிய பட்டினம் காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்த ஒரு நபர் ஊராட்சி நிர்வாகம் பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை தொடர்ச்சியாக 50-க்கும் மேற்பட்ட தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் மனுக்களை அனுப்பி வருகிறார்.
பெரியபட்டினம் ஊராட்சி குறித்து சமூக வலைதளங்களில் தொடர்ச்சியாக அவதூறுகளை பரப்பி வருகிறார்.
ஆகவே, சம்பந்தப்பட்ட நபர் மீது சட்டப்படியான நடவடிக்கை மேற்கொண்டு பெரியபட்டினம் ஊராட்சி தொடர்ந்து சிறப்பான முறையில் மக்கள் பணியாற்றிட ஆவண செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X