என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
பிரேசில்
- இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
- இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள்.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை சுமார் 35 லட்சம் பேருக்கு டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. அவர்களில் 1,600 பேர் சிகிச்சை பலனின்றி இறந்து உள்ளனர். இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 35 சதவீதம் அதிகம் ஆகும். இறந்தவர்களில் பெரும்பாலானோர் 20 முதல் 29 வயது வரை உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ளும்படி பொதுமக்களுக்கு பிரேசில் அரசாங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
- வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
- புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.
தென் அமெரிக்காவில் மிகப்பெரிய நாடாக பிரேசில் உள்ளது. இங்குள்ள, ரியோ டி ஜெனிரோ மற்றும் எஸ்பிரிட்டோ மாநிலங்களை புயல் தாக்கியது. இதனால் பயங்கர சூறாவளி காற்றுடன் பலத்த மழை கொட்டியது.
இங்குள்ள மலைப்பகுதிகள் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டது. நிலச்சரிவில் பல வீடுகள் இடிந்து விழுந்து தரை மட்டமானது.
ஆயிரக்கணக்கான வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதன்காரணமாக வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவித்து வருகிறார்கள்.
பிரேசிலை புரட்டி போட்ட இந்த புயல் மழைக்கு இதுவரை 20 பேர் வரை உயிர் இழந்துள்ளனர். வீடுகளை இழந்த பொதுமக்கள் நிவாரண முகாம்களில் தங்கி உள்ளனர்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதியில் மீட்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இடிந்த வீடுகளில் இடிபாடுகள் அகற்றப்பட்டு வருகிறது.
மோப்ப நாய்கள் உதவியுடன் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை தேடி கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது. மீட்பு படையினர் இடிபாடுகளில் இருந்து 16 மணி நேரத்துக்கு பிறகு ஒரு சிறுமியை பத்திரமாக மீட்டனர்.
ஆனால், அந்த சிறுமியின் தந்தை அவர் அருகிலேயே இறந்து கிடந்தார். மகளை காப்பாற்றிவிட்டு அவர் உயிர் இழந்ததாக மீட்பு படையினர் தெரிவித்தனர். தொடர்ந்து, மீட்பு பணி நடந்து வருகிறது. இந்த புயலில் மிமோசா டோவுல் பகுதியில் தான் பலர் இறந்துள்ளனர்.
- பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிக்கின்றன.
- எக்டோபிக் கருவுறுதல் என்று குறிப்பிடுகின்றனர்.
பெண்கள் கருவுற்றால் பத்து மாதங்களில் குழந்தை பிறப்பதே இயற்கை. கருவுற்ற பெண்களின் கருப்பையில் சிசு படிப்படியாக வளர்ந்து பத்தாவது மாதத்தில் குழந்தையாக பிறக்கும். மருத்துவ துறையில் பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை எளிமையாகி வரும் நிலையிலும், மனித உடல் பற்றிய பல்வேறு மர்மமங்கள் இன்றும் நீடிப்பதை யாரும் மறுக்க முடியாது.
அந்த வகையில், மருத்துவ துறையில் சமீபத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்று அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில் உள்ளது. பிரேசில் நாட்டை சேர்ந்த பெண் ஒருவர் 56 ஆண்டுகள் கருவுற்று இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் தனது வயிற்றில் குழந்தை உண்டாகி இருப்பது குறித்து அந்த பெண்ணுக்கே தகவல் தெரிந்திருக்கவில்லை.
நீண்ட காலம் வயிற்றில் குழந்தையை சுமந்து வந்த நிலையில், பிரேசிலை சேர்ந்த டேனியலா வெரா சமீபத்தில் கடுமையான வயிற்று வலியால் அவதியுற்று வந்தார். வலி தாங்க முடியாமல் மருத்துவமனை சென்ற டேனியலாவை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பரிசோதனையில் டேனியலா வயிற்றில் குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனே விரைந்து செயல்பட்ட மருத்துவர்கள், டேனியலா வயிற்றில் கருவுற்று வளராமல் இருந்த குழந்தையை அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுத்தனர். அறுவை சிகிச்சை முடிந்த மறுநாளே டேனியலா உயிரிழந்தார். அறுவை சிகிச்சைக்கு பிறகு டேனியலாவுக்கு நோய் தொற்று ஏற்பட்டதால், அவர் உயிரிழந்தார் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
கருவுறும் பெண்களுக்கு சில சமயங்களில் கருப்பை தவிர உடலின் மற்ற இடத்தில் கரு உருவாகும் என்று மருத்துவர் பேட்ரிக் டெசிரெம் தெரிவித்தார். இதுபோன்ற நிலையை "எக்டோபிக் கருவுறுதல்" (ectopic pregnancy) என்று மருத்துவ துறையில் குறிப்பிடுகின்றனர். இது போன்ற நிலை தான் டேனியலாவுக்கும் ஏற்பட்டது.
இந்த சூழலில் குழந்தை சரியாக வளர முடியாது என்பதால் அது பெண்ணின் உடலில் கால்சியமேற்றம் (கரு கால்ஷியமாக மாறிவிடுதல்) ஆகி விடும். இந்த நிலையில், பெண்களின் வயிற்றில் சிசு இருப்பது தொடர்பான அறிகுறிகள் எதுவும் தென்படாது. மேலும் வலியும் ஏற்படாது. எக்ஸ்-ரே செய்யாமல் இந்த நிலையை கண்டறியவே முடியாது.
- நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் போது தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் எடை குறிப்பிட்ட அளவு குறைந்ததாகவும் கூறுகிறார்கள்.
- பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
பிரேசில் நாட்டின் சாவ் பாலோ பகுதியை சேர்ந்த ஜோடி பெல்லா மாண்டோவானி- வாக்னர் ஒபெரா. இந்த ஜோடியினர் தங்கள் உடற்பயிற்சி கூடத்தில் நிர்வாணமாக உடற்பயிற்சி செய்ய ஏற்பாடு செய்துள்ளனர். அவர்கள் அங்கு நிர்வாணமாக உடற்பயிற்சி செய்யும் போது தனித்துவமான அணுகுமுறையை பின்பற்றியதாகவும், இதன் மூலம் எடை குறிப்பிட்ட அளவு குறைந்ததாகவும் கூறுகிறார்கள்.
மேலும் அதிக கலோரிகள் கிடைத்ததாகவும், இந்த முயற்சி தங்களின் பிணைப்பை வலுப்படுத்த உதவியது மட்டுமின்றி, உடல் தகுதிக்கும் பங்களித்ததாக ஜோடியினர் தெரிவித்தனர்.
இதுகுறித்த தகவல்கள் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகிய நிலையில், பயனர்கள் பலரும் பல்வேறு கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
- டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள்.
- நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது.
பிரேசிலியா:
தென் அமெரிக்க நாடான பிரேசிலில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்து உள்ளது. டெங்கு காய்ச்சல் பரவலை கட்டுப்படுத்த அந்த நாட்டின் சுகாதாரத்துறையினர் கடுமையாக போராடி வருகிறார்கள். இருப்பினும் டெங்கு காய்ச்சல் பரவலின் வேகம் குறைந்தபாடில்லை.
இந்தநிலையில் நாட்டில் டெங்கு காய்ச்சலுக்கான பரிசோதனைகளை பொதுமக்கள் அதிக அளவில் மேற்கொள்ள அரசு வலியுறுத்தி வருகிறது. அதன்படி இந்த ஆண்டு இதுவரை 15 லட்சத்து 83 ஆயிரம் பேர் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடைந்ததாகவும், அதில் 12 ஆயிரத்து 652 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்தனர் எனவும் அந்த நாட்டின் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்குள்ளாகி இந்த ஆண்டு இதுவரை 391 பேர் உயிரிழந்து உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- வீடியோவில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார்.
- ஒரு கார் டயர் போன்ற தடிமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது.
அமேசான் மலைக்காடுகள் உலகின் மிகப்பெரிய தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் இருப்பிடம் ஆகும். இங்கு விஞ்ஞானிகள் நடத்தி வரும் ஆய்வில் புதுப்புது தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் அமேசான் காட்டில் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் விஞ்ஞானிகளில் ஒருவரான ப்ரீக் வோங்க் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகப்பெரிய அனகோண்டா பாம்பின் வீடியோவை பகிர்ந்துள்ளார். அதில் நீருக்கு அடியில் சுமார் 26 அடி நீளம் கொண்ட அனகோண்டாவின் தலை முதல் வால் வரை காட்டுகிறார்.
அதனுடன், நான் பார்த்த மிகப்பெரிய அனகோண்டாவை வீடியோவில் நீங்கள் பார்க்கலாம். ஒரு கார் டயர் போன்ற தடிமன், சுமார் 8 மீட்டர் நீளம் மற்றும் 200 கிலோவுக்கு மேல் எடை மற்றும் பெரிய தலையுடன் காணப்படுகிறது. நான் இதற்கு முன்பு ஒரு பெரிய இனத்தை கண்டுபிடித்தேன். அது ஆஸ்திரேலியாவில் இருந்து வந்த ஒரு சிறிய பாம்பு. ஆனால், இப்போது கண்டுபிடிக்கப்பட்டிருப்பது உலகிலேயே மிகப்பெரிய பாம்பு என தெரிவித்துள்ளார்.
- மெட்ரோவை விரிவுபடுத்த தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டினர்
- 23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளத்தால் 7 பேர் உயிரிழந்தனர்
உலகிலேயே பரப்பளவில் 5-வது இடத்தில் உள்ள பெரிய நாடு, பிரேசில் (Brazil). இதன் தலைநகரம் பிரெசிலியா (Brasilia).
2007 ஜனவரி மாத காலகட்டத்தில் பிரேசில் நாட்டின் சா பாலோ (Sao Paulo) நகரின் பின்ஹெரோ (Pinheiros) பகுதியின் சுற்றுப்புறத்தில், மெட்ரோ அமைப்பை விரிவுபடுத்துவதற்காக தொழிலாளர்கள் சுரங்கப்பாதை தோண்டிக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பூமி உள்வாங்கி அங்கு மிக பெரும் பள்ளம் ஏற்பட்டது.
இதனை சற்றும் எதிர்பாராத அப்பகுதி வழியாக நடந்து சென்ற பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் இந்த பெரும் பள்ளத்தில் விழுந்தனர்.
23,680 சதுர அடி அளவில் ஏற்பட்ட இந்த பள்ளம், ஒரு மினி பஸ், 7 வீடுகள் மற்றும் பொதுமக்களில் சுமார் 200 பேர் என உள்ளே இழுத்து கொண்டது. பல லாரிகள் ஒன்றின் மேல் ஒன்றாக விழுந்தன.
இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
விபத்திற்கு காரணமானவர்கள் என கட்டுமான நிறுவனங்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மார்கோஸ் டி லிமா போர்டா (Marcos de Lima Porta) தீர்ப்பை அறிவித்தார்.
அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
இவ்வளவு பெரிய கட்டுமானத்தில் தாங்கி பிடிக்கும் தூண்கள் உருவாக்க வேண்டும் என வல்லுனர்கள் விடுத்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல், செயலை விரைவாக முடித்தாக வேண்டும் என்கிற ஒரே நோக்கில் அவசரகதியில் கட்டுமானத்தை மேற்கொண்டவர்கள் பணியாற்றி உள்ளார்கள். அதனால் இந்த விபத்து நேரிட்டது. இந்த விபத்திற்கும் அதனால் ஏற்பட்ட உயிரிழப்பிற்கும் அவர்கள்தான் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறினார்.
தனது தீர்ப்பில் ரூ.4,00,96,84,875.00 ($48.3 மில்லியன்) நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ள நீதிபதி, மெட்ரோ நிறுவன அதிபர், ஒரு பொறியாளர், கட்டிட ஆய்வாளர் உட்பட 6 பேரும், 6 நிறுவனமும் இந்த அபராதத்தை செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார்.
குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் 2018ல் உயிரிழந்து விட்டார். ஆனாலும், அவரது வாரிசுகள் அபராதத்தை செலுத்த வேண்டும் என்று தனது உத்தரவில் நீதிபதி குறிப்பிட்டுள்ளார்.
குற்றவாளிகள் மேல்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது.
- மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது.
ஸா பாலோ:
பிரேசிலின் அண்டை நாடான சாவ்பாலோ காம்பினாவில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று நேற்று புறப்பட்டது. பிரேசிலின் தென்கிழக்கு மினாஸ்ரைசுக்கு அந்த விமானம் வந்து கொண்டிருந்தது.
பிரேசிலின் சுரங்க நகரமான இட்டா பேலா மீது விமானம் வானில் பறந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம் தரைவில் விழுந்து நொறுங்கியது. புல் மற்றும் மரங்களால் சூழப்பட்ட பகுதியில் அந்த விமானம் விழுந்தது.
இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த விமானி உள்ளிட்ட 7 பேரும் பலியாகி விட்டனர். இது பற்றி அறிந்ததும் மீட்பு படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இது வரை இறந்த 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மற்றவர்கள் உடல்களை தேடும் பணி நடந்து வருகிறது. உடைந்த விமானத்தின் பாகங்களும் சேகரிக்கபட்டு வருகிறது. விபத்துக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது.
- அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது.
- உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது.
உலகிலேயே முதன்முறையாக, தென் அமெரிக்க நாடான பிரேசிலில், நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. ஏ.டி.எஸ். கொசுக்களால் பரவும் டெங்கு வைரஸ் காய்ச்சல் சமீபகாலமாக பிரேசில் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதிக வெப்பநிலை மற்றும் தொடர் கனமழை காரணமாக இந்த டெங்கு கொசு பரவல் அதிகரித்துள்ளது. இதனால், தொடர் காய்ச்சல். ஏற்பட்டதால், அந்நாட்டு மக்கள் கடும் அவதியடைந்தனர்.
இதனையடுத்து, மக்களை காக்க பிரேசில் நாட்டு சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மக்களுக்கும் டெங்கு காய்ச்சல் தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டது. அதைதொடர்ந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் டெங்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. உலகளவில் 5 மில்லியனுக்கும் அதிகமான டெங்கு தடுப்பூசி அந்நாட்டு மக்களுக்கு போடப்பட்டு உள்ளது. இதனால், உலக அளவில் அதிகமான டெங்கு தடுப்பூசி போடப்பட்ட நாடாக பிரேசில் கருதப்படுகிறது. இந்த தகவலை உலக சுகாதார நிறுவனம் ( WHO)தெரிவித்துள்ளது.
- ஃபேசியோ திடீரென தனது தலையில் ஏதோ தாக்கியதை உணர்ந்தார்
- ஃபேசியோவின் வலது கை படிப்படியே செயல் இழக்க தொடங்கியது
தென் அமெரிக்க நாடுகளிலேயே மிகப் பெரிய நாடு, பிரேசில். இதன் தலைநகரம் பிரேசிலியா (Brasilia).
கடந்த 2023 டிசம்பர் இறுதியில், பிரேசிலின் புகழ்பெற்ற கடற்கரை நகரமான ரியோ டி ஜெனிரோ (Rio de Janeiro) பகுதியில், கேபோ ஃப்ரியோ (Cabo Frio) கடற்கரையில் மேடியஸ் ஃபேசியோ (Mateus Facio) எனும் 21 வயது இளைஞர் தனது நண்பர்களுடன் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு கொண்டிருந்தார்.
அப்போது திடீரென ஃபேசியோவின் தலையில் ஏதோ தாக்கியதை உணர்ந்தார். அவர் தலையிலிருந்து ரத்தம் வழிந்தது.
வலியால் ஒரு சில நிமிடங்கள் தடுமாறியவர், எங்கிருந்தோ வந்த கல்லோ, வேறு ஏதோ பொருளோ தாக்கியிருக்க வேண்டும் என கருதினார்.
ஒரு சில நிமிடங்கள் மண்டைக்குள் ஒரு சிறு குண்டு வெடிப்பை போல் உணர்ந்தாலும், சிறிது நேரத்தில் ரத்தம் வருவது நின்றதால், ஃபேசியோ குளித்து விட்டு நண்பர்களுடன் மீண்டும் கொண்டாட்டங்களில் ஈடுபட சென்றார்.
இரவு முழுவதும் புத்தாண்டு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு, அடுத்த நாள் புது வருடத்தை கொண்டாட தனது சொந்த ஊரான மினாஸ் கெராய்ஸ் மாநிலத்திற்கு புறப்பட்டார். சுமார் 320 கிலோமீட்டர் பயணத்தின் போது, அவரது வலது கையில் ஆங்காங்கே பிடிப்பு ஏற்பட்டு வாகனத்தை செலுத்த முடியாமல் அவதிப்பட்டார்.
வீட்டிற்கு சென்ற 2 தினங்களில் அவரது வலது கை செயலிழக்க ஆரம்பித்தது.
உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டவருக்கு அனைத்து பரிசோதனைகளும் செய்யப்பட்டன.
அதில், அவரது மூளை பகுதியில் ஒரு துப்பாக்கி குண்டின் சிறு பகுதி நுழைந்து, அங்கேயே தங்கி, அழுத்தம் கொடுத்து வருவதும், அதன் காரணமாக அவர் வலது கை செயலிழக்க தொடங்கியிருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
குறைந்த அளவே வெற்றி வாய்ப்புள்ள, 2 மணி நேரம் நடைபெற்ற உயிருக்கு ஆபத்தான அறுவை சிகிச்சையின் மூலம் அந்த துப்பாக்கி குண்டின் சிறு பகுதியை நரம்பியல் சிறப்பு சிகிச்சை மருத்துவர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். இந்த அறுவை சிகிச்சை குழுவிற்கு ஃப்ளேவியோ ஃபால்கோமிட்டா எனும் அந்நாட்டின் புகழ் பெற்ற நரம்பியல் நிபுணர் தலைமை வகித்தார்.
தற்போது ஃபேசியோ உடல்நலம் தேறி வருகிறார்.
காவல்துறையினருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு துப்பாக்கிச் சூடு நடத்தியது யார் என கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.
- சுற்றுலா சென்ற 30-க்கும் மேற்பட்டோர் மினி பேருந்தில் பயணம் செய்துள்ளனர்.
- முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
பிரேசில் நாட்டின் வடகிழக்கு மாநிலம் பாஹியா. இந்த மாநிலத்தின் வடக்கு கடற்கரை நகரான குவாராஜூபாவில் உள்ள கடற்கரைக்கு ஒரு மினி பேருந்தில் பலர் சுற்றுலா சென்றிருந்தனர். அவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு ஜாக்கோபினா நகருக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.
சயோ ஜோஸ் டோ ஜேக்குயூப் நகர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி பேருந்து வந்து கொண்டிருக்கும்போது, லாரி ஒன்று திடீரென மினி பேருந்து மீது பயங்கரமாக மோதியது.
இந்த விபத்தில் 25 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 6 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 25 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து ஜாக்கோபினா நகராட்சி மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.
முந்திச் செல்லும்போது விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
- திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை.
- அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையிலும், 48 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு.
பிரேசில் நாட்டின் சமூக வலைத்தள பிரபலமாக திகழ்ந்தவர் 19 வயதான மரியா சோபியா வலிம். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய உடற்பயிற்சி, தோல் தொடர்பான அழகு குறிப்புகள் போன்றவற்றை பதிவு செய்து பிரபலமானார். மேலும், தனக்கு ஆர்வமுள்ள உயர்தர பிராண்ட்கள் குறித்தும் வெளிப்படுத்துவார். அவரை சுமார் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர்.
19 வயதேயான மரியா சோபியாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்ச மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவருக்கு கல்லீரல் வழங்க கொடையாளர் சம்மதம் தெரிவித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக முடிந்துள்ளது. ஆனால் அறுவை சிகிச்சை முடிந்த 48 மணி நேரத்திற்குள் அவர் மரணம் அடைந்துள்ளார்.
சோபியா மரணம் அடைந்த தகவலை சியாராவில் உள்ள காசியாவின் மேயராக இருக்கும் அவரது தந்தை உறுதிப்படுத்தியுள்ளார். 19 வயதிலேயே மரணம் அடைந்த நிலையில், சமூக வலைத்தளத்தில் அவரை பின்தொடர்ந்தவர்கள் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்