search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிபோஜோய் புயல்"

    • வருகிற 8ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குவதாக இருந்தது.
    • தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு.

    திருவனந்தபுரம்:

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஆண்டுதோறும் ஜூன் 1-ந் தேதி தொடங்குவது வழக்கம். இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தொடங்குவதில் தாமதம் ஏற்படும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.

    அதன்படி வருகிற 8-ந் தேதி, அதாவது நாளை தென்மேற்கு பருவ மழை தொடங்குவதாக இருந்தது. இந்நிலையில் அரபிக்கடலில் பிபோர்ஜோய் என்ற புயல் உருவாகி உள்ளது.

    இதன் காரணமாக கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தொடங்குவது மேலும் ஒருவாரம் தாமதமாகலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதே நேரம் வளிமண்டல சுழற்சி காரணமாக கேரளாவிலும், தமிழ்நாட்டிலும் அடுத்த 5 நாட்களுக்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

    ×