search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் ரத்து"

    • சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது.
    • தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் இன்று முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் முழுமையாக ரத்து.

    சென்னை:

    சென்னை எழும்பூர்-விழுப்புரம் இடையே தாம்பரம் யார்டு பகுதியில் மின் பராமரிப்பு பணி நடக்கிறது. எனவே 13-ந்தேதி (இன்று) முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு நள்ளிரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40149) முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    அதேபோல் தாம்பரத்தில் இருந்து கடற்கரைக்கு இரவு 11.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40150) இன்று முதல் 16-ந்தேதி வரையிலும், 18-ந்தேதி முதல் 23-ந்தேதி வரையிலும் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரத்திற்கு இரவு 11.59 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40419) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது. மேலும் தாம்பரம்-சென்னை கடற்கரைக்கு இரவு 11.35 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் (40420) 17-ந்தேதி முதல் 24-ந்தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    இந்த தகவல் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது.
    • மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே போல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது.

    சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரெயில்கள் நாளை ரத்து செய்யப்படுகிறது. அதே தேதியில் காஞ்சீபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரெயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரெயில் 25-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மின்சார ரெயில்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் குறைந்த எண்ணிக்கையிலேயே இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பராமரிப்பு பணி காரணமாக கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமைகளில் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதால் ரெயில் பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    • மைசூரில் இருந்து புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து.
    • பெங்களூருவில் இருந்து சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து.

    சென்னை:

    தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    திருப்பதியிலிருந்து காலை 6.25 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16204) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16203) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்துசெய்யப்படுகிறது.

    மேலும், சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 9.15 மணிக்கு புறப்பட்டு மைசூரு செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16021) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, மைசூரில் இருந்து இரவு 9 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் (16022) வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    இதேபோல, பெங்களூருவில் இருந்து இரவு 10.40 மணிக்கு புறப்பட்டு சென்னை சென்ட்ரல் செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் (12658) வரும் 26, 27 மற்றும் மார்ச் 11, 12 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து இரவு 10.50 மணிக்கு புறப்பட்டு பெங்களூரு செல்லும் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வரும் 27, 28 மற்றும் மார்ச் 12, 13 ஆகிய தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலையில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
    • ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர்.

    ஆவடி:

    சென்னை ஆவடி ரெயில் நிலையத்தில் பழைய நடைபாதை மேம்பாலம் உள்ளது. இந்த நடை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்தும் பணிகள் நேற்று இரவு நடந்தது. இந்த பணிகள் இரவு 10 மணிக்கு தொடங்கி அதிகாலை 4.30 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.

    இதற்காக சென்னை சென்ட்ரல், திருவள்ளூர், அரக்கோணம் இடையே இரவு நேரத்தில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆவடி ரெயில் நிலையத்தில் நேற்று இரவு நடைபாதை மேம்பாலத்தை இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து நேற்று இரவில் 10 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன.

    ஆனால் இன்று அதிகாலை 4.30 மணிக்கு முடிய வேண்டிய பணிகளில் திடீரென்று காலதாமதம் ஏற்பட்டது. இதனால் காலை 6.30 மணி வரை பணிகள் நடந்தன. இதையடுத்து இன்று காலை 6.30 மணி வரை ரெயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக காலை நேரத்தில் ரெயில் நிலையங்களுக்கு வந்த பயணிகள் தவித்தனர். குறிப்பாக ஆவடி ரெயில் நிலையத்தில் இன்று காலை யில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    காலை 6.30 மணிக்கு பிறகு அரக்கோணம் மற்றும் திரு வள்ளூரில் இருந்த சென்ட்ர லுக்கு வரும் புறநகர் மின்சார ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரெயில்கள் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் செல்லும் பாதை யில் இயக்கப்பட்டதால் பட்டாபிராமில் இருந்து பட்டரவாக்கம் வரை இடை யில் உள்ள எந்த ரெயில் நிலையங்களிலும் ரெயில்கள் நிறுத்தப்படவில்லை.

    இதன் காரணமாக இந்த ரெயில் நிலையங்களில் ரெயிலுக்காக காத்திருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளானார்கள். இந்த மார்க்கத்தில் வந்த ரெயில்கள் சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்துக்குள் வர அனுமதிக்கப்பட்டன. இதனால் சென்ட்ரலில் இருந்து திரு வள்ளூர் மார்க்கத்தில் இன்று காலையில் செல்லும் 4 புறநகர் மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. சென்ட்ரலில் இருந்து இன்று அதிகாலை 5.20 மணிக்கு நெல்லூர் செல்லும் ரெயில், 5.40 மணிக்கு திருவள்ளூர் செல்லும் ரெயில், 6.15 மற்றும் 6.20 மணிக்கு பட்டாபிராம் செல்லும் ரெயில்கள் ஆகியவை ரத்து செய்யப்பட்டன. இதன் காரணமாக சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலும் இன்று காலையில் பயணிகள் தவித்தனர்.

    ரெயில்கள் ரத்து செய்யப்பட்டதால் அவர்கள் ரெயில் நிலையத்தில் இருந்து வெளியே வந்து பஸ்களில் ஏறி பயணம் செய்தனர். அதன் பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கினாலும் பயணிகள் கூட்டம் அதிகரித்தே காணப்பட்டது. காலை 8 மணிக்கு பிறகு நிலைமை சீரடைந்தது. இதற்கிடையே ஆவடி ரெயில் நிலையத்தில் நடை பாதை மேம்பாலத்தை இடித்து அப்புறப்படுத்துவதில் மீதமுள்ள பணிகள் இன்று இரவு நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    • ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.
    • திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.

    தஞ்சாவூர்:

    திருச்சி ரெயில்வே கோட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் பொறியியல் பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக சில விரைவு ரெயில் சேவையில் மாற்றம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி மன்னார்குடி-பகத்கீ கோதி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22674) நாளை (திங்கட்கிழமை) முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதேபோல் பகத்கீ கோதி-மன்னார்குடி அதிவிரைவு ரெயில் (வண்டி எண்-22673) வரும் 11-ந் தேதி முழுமையாக ரத்து செய்யப்படுகின்றன.

    மேல்மருவத்தூர்-விழுப்புரம் முன்பதிவில்லா விரைவு ரெயில் (06725) முண்டியம்பாக்கம்-விழுப்புரம் இடையேயும், விழுப்புரம்-மேல்மருவத்தூர் முன்பதிவில்லா மெமு ரெயில் (06726) விழுப்புரம்-முண்டியம்பாக்கம் இடையேயும் நாளை மற்றும் 13,20,22,27,29 ஆகிய தேதிகளில் என 6 நாட்கள் பகுதியாக ரத்து செய்யப்படுகின்றன.

    இதேபோல் காரைக்குடி-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06888) 9, 23 ஆகிய தேதிகளில் குமாரமங்கலம்-திருச்சி இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் குமாரமங்கலம் ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்படுகிறது.

    ஈரோடு-திருச்சி முன்பதிவில்லா விரைவு ரெயில் (06810) 9, 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் திருச்சி கோட்டை ரெயில் நிலையத்தில் 20 நிமிடம் நிறுத்தப்பட்டு பிறகு புறப்படும்.

    திருச்சி-ஸ்ரீ கங்காப்பூர் விரைவு ரெயில் (22498) 12-ந்தேதி மதியம் 2.30 மணிக்கு ஹூப்ளி கோட்டத்தில் நிறுத்தப்பட்டு அதன் பிறகு இயக்கப்படும்.

    பெரோஸ்பூர்-மண்டபம் ஹம்ஸபர் விரைவு ரெயில் (20973) 13-ந் தேதியும், மண்டபம்-பெரோஸ்பூர் விரைவு ரெயில் (20974) 16-ந் தேதியும் ரத்து செய்யப்படுகின்றன.

    மேற்கண்ட தகவலை ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் புயலாக மாறும்.
    • நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக உருவாகி புயலாக வலுப்பெற உள்ளது.

    அடுத்த 24 மணி நேரத்தில் அது புயலாக மாறும். அதாவது நாளை தீவிர புயலாக உருவெடுக்கும். அந்த புயலுக்கு "மிச்சாங்" என்று பெயரிடப்பட்டு உள்ளது.

    இந்நிலையில், மிச்சாங் புயல் எதிரொலியால் நாடு முழுவதும் 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது நாளை முதல் வரும் 7ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.

    சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலிருந்து புறப்படும் டெல்லி நிஜாமுதீன், விஜயவாடா அதிவரைவு ரெயில், பெங்களூரு ஹவுரா எக்ஸ்பிரஸ் உள்பட 142 ரெயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன.
    • தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    பயணிகளின் பாதுகாப்பு கருதி தாம்பரம் ரெயில் நிலையத்தில் நாளை (புதன்கிழமை) முதல் அடுத்த மாதம் (டிசம்பர்) 14-ந்தேதி வரை நள்ளிரவு 12.25 முதல் அதிகாலை 2.25 வரை பொறியியல் வேலைகள் மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. இதனால், அந்த நாட்களில் சென்னை கடற்கரையில் இருந்து இரவு 11.59 மணிக்கு தாம்பரம் செல்லும் மின்சார ரெயிலும், மறுமாா்க்கமாக தாம்பரத்தில் இருந்து இரவு 11.40 மணிக்கு கடற்கரைக்கு செல்லும் ரெயிலும் முழுமையாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    காலை 9.05 மணிக்கு புறப்படும்(வண்டி எண்:06802) கோவை-சேலம் மெமு ரெயில் 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    கோவை,

    தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    கோவை-சேலம் ரெயில் வழித்தடத்தில் பல்வேறு இடங்களில் பராமமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. எனவே கோவை ரெயில் நிலையத்தில் காலை 9.05 மணிக்கு புறப்படும்(வண்டி எண்:06802) கோவை-சேலம் மெமு ரெயில் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.

    சேலம் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 1.40 மணிக்கு புறப்படும் வண்டி எண் 06803 சேலம்-கோவை செல்லும் மெமு ரெயிலும் இன்று முதல் வருகிற 30-ந் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பகுதியளவு ரத்து மற்றும் வழித்தடம் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
    • தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    திருப்பூர் :

    மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட மதுரை - திருமங்கலம் இடையே பொறியியல் மேம்பாட்டு பணி நடக்கிறது. இதனால் மதுரை மார்க்கமாக செல்லும் ரெயில்கள் ரத்து, பகுதியளவு ரத்து மற்றும் வழித்தடம் மாற்றம் செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

    அவ்வகையில் கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் தினசரி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 28, மார்ச் 1, 2 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. நாகர்கோவிலில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் தினசரி ரெயில் மார்ச் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது.மேற்கண்ட தகவலை தெற்கு ரெயில்வே சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    கோவையில் இருந்து நாகர்கோவிலுக்கு பகல்நேரத்தில் இயக்கப்படும் ரெயில் மதுரையில் நடக்கும் பராமரிப்பு பணி காரணமாக தற்போது விருதுநகர் வரை மட்டும் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

    • சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது.
    • இதையொட்டி இந்த வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தை அடுத்துள்ள மேக்னசைட் ரெயில் நிலையம் பகுதியில் ரெயில்வே பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதையொட்டி இந்த வழியாக செல்லும் ரெயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி ஈரோடு-மேட்டூர் அணை ரெயில் (வண்டி எண்-06407) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை 4 நாட்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதேபோல் மறுமார்க்கத்தில் மேட்டூர் அணை-ஈரோடு ரெயில் (வண்டி எண்-06408) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் சேலம்-யஷ்வந்த்பூர் ரெயில் (வண்டி எண்-16212) வருகிற 23-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை சேலம் ஜங்ஷன் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.20 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக ஓமலூர் ரெயில் நிலையத்தில் இருந்து காலை 5.40 மணிக்கு புறப்பட்டு யஷ்வந்பூர் செல்லும். இந்த ரெயில் சேவை சேலம்- ஓமலூர் இடையே இல்லை.

    மேலும் ஆலப்புழா-தன்பாத் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்-13352) இயக்கத்தில் 45 நிமிடம் கால தாமதமாகவும், சேலம்-அரக்கோணம் ரெயில் (வண்டி எண்-16088) வருகிற 25-ந் தேதி ரெயில் இயக்கத்தில் 30 நிமிடமும் காலதாமதம் ஏற்படும். இந்த தகவல்கள் சேலம் ரெயில்வே கோட்ட அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் (16868) டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரையும், வருகிற 12 முதல் 15-ந்தேதி வரையும் என மொத்தம் 10 நாட்களுக்கு மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.
    • ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06654) இன்று முதல் 31-ந்தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செங்கோட்டை:

    ரெயில் பாதை பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாதத்தில் ரெயில் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

    அதன்படி மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் மதுரை-செங்கோட்டை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06663) மற்றும் செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் செங்கோட்டை-மதுரை முன்பதிவில்லாத சிறப்பு ரெயில் (06664) ஆகியவை டிசம்பர் 6 மற்றும் 7-ந்தேதிகளில் முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    மதுரை-விழுப்புரம் விரைவு ரெயில் (16868) டிசம்பர் 5 முதல் 10-ந்தேதி வரையும், வருகிற 12 முதல் 15-ந்தேதி வரையும் என மொத்தம் 10 நாட்களுக்கு மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    மேலும் ராமேஸ்வரம்-மதுரை முன்பதிவு இல்லாத சிறப்பு ரெயில் (06654) இன்று முதல் 31-ந்தேதி வரை வியாழக்கிழமைகள் தவிர மற்ற நாட்களில் ராமேஸ்வரத்தில் இருந்து காலை 11 மணிக்கு பதிலாக மதியம் 12 மணிக்கு புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • தண்டவாள பராமரிப்பு பணி காரணமாக மதுரை- செங்கோட்டை ரெயில் மீண்டும் ரத்து செய்யப்பட்டது.
    • மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    மதுரை

    மதுரை ரெயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட வெள்ளனூர் -புதுக்கோட்ட, மானாமதுரை-மேல கொன்னகுளம், திண்டுக்கல் -அம்பாத்துரை, ராஜபாளையம்- சங்கரன்கோவில் இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.

    இதன் காரணமாக திருச்சி-மானாமதுரை பயணிகள் ரெயில் இரு மார்க்கங்களிலும் இன்று (8-ந் தேதி) முதல் வருகிற 15-ந் தேதி வரை ஞாயிறு தவிர மற்ற நாட்களில் சிவகங்கை-மானாமதுரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

    திண்டுக்கல்-அம்பாத்துரை பராமரிப்பு பணிகள் காரணமாக, கோவை-நாகர்கோவில் ரெயில் செவ்வாய், வெள்ளி, சனிக்கிழமைகளில் 90 நிமிடம் தாமதமாக இயக்கப்படும். சென்னை-குருவாயூர் விரைவு ரெயில் மதுரை கோட்டத்தில் செவ்வாய், சனிக்கிழமைகளில் 70 நிமிடம் தாமதமாகவும், வெள்ளிக்கிழமைகளில் 95 நிமிடம் தாமதமாகவும் இயக்கப்படும்.

    இந்த 3 நாட்களுக்கும் வாஞ்சி மணியாச்சி- தூத்துக்குடி பாசஞ்சர் இணைப்பு ரெயிலாக செயல்படாது. ராஜபாளை யம்-சங்கரன் கோவில் பிரிவில் ரெயில் பாதை பலப்படுத்தும் பணிகள் காரணமாக மதுரையில் இருந்து காலை 11.30 மணிக்கு புறப்படும் செங்கோட்டை ரெயில், செங்கோட்டையில் இருந்து காலை 11.50 மணிக்கு புறப்படும் மதுரை பயணிகள் ரெயில் ஆகியவை இன்று முதல் வருகிற 15-ந் தேதி வரை முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

    கொடை ரோடு ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை -விழுப்புரம் ரெயில், இன்று முதல் 15-ந் தேதி வரை மதுரை-திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×