search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சூறைக்காற்று"

    • தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    • ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதியில் கடந்த மாதங்களாக கடும் வெயில் வாட்டி வந்தது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டது. குடிநீரை விலைக்கு வாங்கும் விலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டனர்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை நேரங்களில் கடும் வெயில் வாட்டி வருவதும் மதியம் 3 மணிக்கு மேல் சூறைக்காற்றுடன் மிதமான மழையும் சில இடங்களில் பலத்த மழையும் பெய்து வருகிறது.

    சூறைக்காற்றால் வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்து வருகிறது. இதனால் விவசாயிகள் கடும் வேதனை அடைந்தனர். இந்த நிலையில் நேற்று மதியம் 3 மணியளவில் மேகமூட்டம் சேர்ந்து தூரல் மழையாக ஆரம்பித்து தாளவாடி, கும்டாபுரம், பாரதிபுரம், ராமாபுரம், ஓசூர், தொட்ட காஜனூர், கரளவாடி ஆகிய பகுதிகளில் சூறைக்காற்றுடன் 15 நிமிடம் மிதமான மழை பெய்தது.

    சூறைக்காற்றுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் ராமாபுரம் கிராமத்தில் உள்ள விவசாயி தீபு (வயது 35) என்பவரின் 700 நேந்திரம் வாழைகள், சுந்தரமூர்த்தி என்பவரின் 1000 வாழைகள், ராசு என்பவரின் 1000 வாழைகள், தொட்டகாஜனூர் சிவண்ணா என்பவரின் 1000 வாழைகள் என மொத்தம் 4 ஆயிரம் வாழைகள் முறிந்து நாசமானது.

    அதேபோல தாளவாடியில் இருந்து ராமாபுரம் செல்லும் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அங்கு சென்ற நெடுஞ்சாலைத்துறையினர் மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினர். அதேபோல் ராமபுரம், பாரதிபுரம் கிராமத்தில் சூறைக்காற்றால் 6 மின்கம்பங்கள் முறிந்து சேதமடைந்தது.

    அதை சீர் செய்யும் பணியில் மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் பல்வேறு இடங்களில் மின்தடையும் ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தாளவாடி மலை பகுதியில் சூறைக்காற்றுக்கு சேதம் அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

    ஒருபுறம் மழை வந்து சந்தோசம் இருந்த போதும் சூறைக்காற்றால் வாழை சேதம் அடைந்துள்ளதால் மலைப்பகுதி விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். தமிழக அரசு கள ஆய்வு மேற்கொண்டு சேதம் அடைந்த வாழைகளுக்கு உரிய நஷ்டஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

    மேலும் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.20 லட்சம் மதிப்பிலான வாழை மரங்கள் முறிந்து சேதம் அடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் மாவட்ட எல்லை பகுதியான தாளவாடி சுற்று வட்டார பகுதியில் கடந்த 2 நாட்களாக சூறைகாற்றுடன் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.
    • கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் வீசும் சூறைக்காற்று காரணமாக கடல் கடும் சீற்றமாக காணப்படுகிறது.

    இதனால் மீனவர்கள் 2-ம் நாளாகமீன்பிடிக்க கடலுக்கு செல்லவில்லை. மீனவர்கள் 100க்கும் மேற்பட படகுகளை கடலில் இருந்து கரையில் பாதுகாப்பாக நிறுத்தியுள்ளனர்.

    கோடியக்கரை கடற்கரை பகுதியில் வீசும் சூறை காற்று காரணமாக சாலைகளின் குறுக்கேயும், கடற்கரை பகுதிகளிலும் சுமார் 5 அடி உயரம் மணல் குன்றுகளாக குவிந்து காட்சியளிக்கிறது.

    இந்த திடீரென்று உருவான மணல் குன்றுகளால் மீனவர்கள் மற்றும் வாகனங்கள் அப்பகுதியில் செல்ல முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. கடற்கரையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள மீன்பிடி வலைகள் மண்ணில் புதைந்து காணப்படுகிறது. வழக்கமாக கோடியக்கரையில் அக்டோபர் முதல் மீன்பிடி வரை மீன்பிடி சீசன் காலமாகும்.

    இந்த 6 மாத சீசன் காலத்தில் நாகை,திருவாரூர், தஞ்சை, கடலூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கோடியக்கரைக்கு வந்து தங்கி மீன் பிடித்து தொழில் செய்வது வழக்கம்.

    ஆனால் இந்த ஆண்டு இதுவரை சீசன் துவங்கப்படவில்லை இதற்கு காரணம் தற்போது வழக்கத்துக்கு மாறாக வீசும் இந்த காற்றால் மீனவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    எனவே சீசன் காலம் தொடங்க இன்னும் இரு வாரமாகும் என மீனவர்கள் தெரிவித்தனர். கடும் காற்றின் காரணமாக கடற்கரையில் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. 

    • சூறைக்காற்றின் வேகம் குறைந்ததால் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்றனர்.
    • இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

    ராமேசுவரம்

    ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த நான்கு நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசியது. இதன் காரணமாக ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பல்வேறு பகுதிக ளில் இருந்து மீன் பிடிக்க செல்ல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை தடை விதித்தது. அவர்களுக்கான மீன்பிடி அனுமதியும் வழங் கப்படவில்லை.

    இதன் காரணமாக 1,650 விசைப்படகும், 6 ஆயிரத் துக்கும் மேற்பட்ட நாட்டுப் படகுகளும் மீன்பிடிக்க செல்லாமல் நான்கு நாட்க ளாக கரையில் நங்கூரமிட்டு நிறுத்தி வைக்கப்பட்டிருந் தன. இந்த நிலையில் இன்று காற்றின் வேகம் குறைந்ததின் காரணமாக மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. ராமேசு வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து இன்று காலை சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கட லுக்கு மீன் பிடிக்க சென்ற னர். இதனால் துறைமுகம் உள்ளிட்ட பகுதிகள் களை கட்டியது.

    • தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது.
    • தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது.

    ராமேசுவரம்:

    தமிழகத்தில் தென்கடல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து சூறைக்காற்று வீசி வருகிறது. குறிப்பாக ராமநாதபுரம் கடல் பகுதியில் பலத்த சூறாவளி காற்றுடன் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது.

    தனுஷ்கோடி, பாம்பன், மண்டபம், கீழக்கரை உள்ளிட்ட பகுதிகளில் கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீனவர்கள் தங்களின் படகுகளின் பாதுகாப்பு கருதி துறைமுகங்களில் நிறுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், தொடர்ந்து காற்றின் வேகம் அதிகரித்து வரும் நிலையில், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்தில் 50 மீட்டர் வரை கடல் உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கரையோரம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த நாட்டுப்படகுகள் மணலில் சிக்கிக்கொண்டது. இதனை மீட்க முடியாத நிலையில் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். மாலையில் கடல் நீர்மட்டம் உயர்ந்தவுடன் தான் படகை மீட்க முடியும் என மீனவர்கள் தெரிவித்தனர்.

    இதேபோல் தனுஷ்கோடியில் இன்று வழக்கத்தை விட கடல் சீற்றமாக காணப்பட்டது. சூறாவளி காற்று காரணமாக அரிச்சல்முனை-தனுஷ்கோடி சாலையை மணல் மூடியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்தனர்.

      பெரியகுளம்:

      தேனிமாவட்டம் பெரிய குளம் மற்றும் லட்சுமிபுரம் பகுதியில் மாலை பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது.

      இதன் காரணமாக லட்சுமிபுரம் முதல் தேனி மாவட்ட நீதிமன்றம் வரை சாலை ஓரங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நூற்றாண்டுகள் பழமையான மரங்களும், மின்கம்பங்களும் முறிந்து விழுந்தன. மேலும் சில இடங்களில் மின் கம்பங்கள், மரங்கள் சாலை ஓரங்களில் உள்ள கடைகள் வீடுகள் பைக் மற்றும் கார்கள் மீது விழுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.

      நூற்றாண்டுகள் பழமையான ராட்ஷச மரங்கள் சாலையின் குறுக்கே வாகனங்கள் செல்ல முடியாதபடி விழுந்ததால் தேனி-பெரியகுளம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      இதனைத் தொடர்ந்து அனைத்து வாகனங்களும் பைபாஸ் சாலை வழியாக திருப்பி விடப்பட்டது. மின்கம்பங்கள் முறிந்து விழுந்ததால் லட்சுமிபுரம் பகுதியில் மின்சாரம் நிறுத்தப்பட்டது. நெடுஞ்சாலை துறையினர் மற்றும் வருவாய்த் துறையினர் சாலைப் பகுதியில் உள்ள மரங்களை, அறுவை மெஷின்கள் மூலம் வெட்டி அகற்றியும், ஜே.சி.பி எந்திரம் மூலம் அப்புறப்படுத்தினர்.

      தொடர் மழை காரணமாக லட்சுமிபுரம் பகுதியில் கடைகள், வீடுகள் சேதம் அடைந்தன. மேலும் மின் தடை காரணமாக பொதுமக்கள் சிரமம் அடைந்தனர்.

      • தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.
      • அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

      பல்லடம்:

      பல்லடத்தில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இந்த நிலையில் பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை எம்.ஜி.ஆர்.நகரில் வசிக்கும் விசைத்தறி தொழிலாளி கருப்பசாமி(52) என்பவரது வீட்டின்மேற்கூரை சூறைக்காற்றால் முழுவதுமாக தூக்கி வீசப்பட்டது. மேற்கூரை பெயர்ந்து விழுந்ததால் அதன் இடிபாடுகள் வீட்டில் இருந்த மிக்ஸி, கிரைண்டர், பேன், டிவி, உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் மேல் விழுந்து அனைத்தும் முழுமையாக சேதம் அடைந்தன.

      இதனால் தற்போது அந்த தொழிலாளியின் குடும்பத்தினர் தங்குவதற்கு இடமின்றி தற்போது வீதியில் தஞ்சமடைந்துள்ளனர். இதற்கிடையே கருப்புசாமி வீடு அருகே இருந்த 2 ஓட்டு வீடுகளும், சூறைக்காற்றால் கடுமையாக சேதமடைந்துள்ளன. சூறைக்காற்றில் வீடுகள்,மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் சேதமடைந்த நிலையில், அரசு உதவ வேண்டும் என பாதிக்கப்பட்டோர் கோரிக்கை வைத்துள்ளனர்.

      • கமுதி அருகே சூறைக்காற்று வீசியதில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன.
      • பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

      பசும்பொன்

      ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள கோரைப்பள்ளம், ராமசாமிபட்டி, கிளாமரம், நீராவி மேலராமநதி, காவடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக சூறைக்காற்று வீசியது.

      இந்த பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஏக்கரில் வாழை மரங்கள் நடவு செய்யப்பட்டிருந்தன. அவை அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்தன. நேற்று சூறைக்காற்றுடன் பெய்த மழையால் கோரை பள்ளத்தை சேர்ந்த விவசாயி ராமர் என்பவரது தோட்டத்தில் உள்ள 2 ஆயிரம் வாழை மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன.

      இதேபோல் இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளான சுப்பிரமணி, கந்தசாமி, வீரமணி ஆகியோரது தோட்டத்தில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான வாழை மரங்களும் முறிந்து சேதமடைந்தன. சூறைக்காற்றால் அந்த பகுதியில் சுமார் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைமரங்கள் வேரோடு சாய்ந்து விழுந்தன.

      பாறைகுளம் பகுதியில் விவசாயி கருப்பையா என்பவரின் 200-க்கும் மேற்பட்ட எலுமிச்சை மரங்களும் வேரோடு சாய்ந்து நாசமானது. இதன் காரணமாக அதனை பயிரிட்டிருந்த விவசாயிகள் கவலையடைந்தனர். அவர்கள் கூறுகையில், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.20ஆயிரம் வரை-செலவு செய்து அறுவடைக்கு தயாராக இருந்த நாட்டு வாழை மரங்கள் முறிந்தும், வேரோடு சாய்ந்தும் விழுந்து சேதம் அடைந்தன. இதனால் நாங்கள் பெரிதும் நஷ்டத்தை சந்தித்துள்ளோம். ஆகவே பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

      • 3500 படகுகள்- வள்ளங்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை
      • துறைமுகத்தில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளது

      கன்னியாகுமரி:

      கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று காலை முதல் லேசான மழை பெய்து வருகிறது.

      இதுபோல கடற்கரை கிராமங்களில் பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் இன்று காலை கடலுக்கு செல்ல வேண்டிய படகுகள் மீன்பிடிக்க செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டன.

      கன்னியாகுமரியை அடுத்த சின்னமுட்டத்தில் சுமார் 350 விசை படகுகள் கடலுக்கு மீன்பிடிக்க செல்வது வழக்கம். இன்று காலை இந்த படகுகள் அனைத்தும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டன.

      இதுபோல குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் இருந்தும் இன்று கடலுக்கு குறைந்த அளவே விசைபடகுகள் கடலுக்கு சென்றது. 150-க்கும் மேற்பட்ட படகுகள் கரையில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டிருந்தன.

      குளச்சல் பகுதியிலும் குறைந்த அளவே வள்ளங்கள், பைபர் படகுகள் கடலுக்கு சென்றன. மாவட்டம் முழுவதும் சுமார் 3500 விசைபடகுகள், வள்ளங்கள், பைபர் படகுகள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

      கன்னியாகுமரியை அடுத்த வாவத்துறை, ஆரோக்கிய புரம், மணக்குடி பகுதிகளிலும் இன்று சில பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது.

      இதுபோல குளச்சல் பகுதியிலும் ஒரு சில இடங்களில் கடல் சீற்றமும், அலைகளின் கொந்தளிப்பும் காணப்பட்டது.

      • கடந்த ஒருமாதகாலமாக 150 அடி உயர கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளித்தது
      • 50 அடி உயர தேசிய கொடியை பராமரிக்கும் உரிமைக்கான சான்றிதழை ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

      கன்னியாகுமரி:

      கன்னியாகுமரி மகாதானபுரத்தில் முன்னாள் எம்.பி. விஜயகுமார் ஏற்பாட்டில் ரூ.75 லட்சம் செலவில் 150 அடி உயர ராட்சத தேசிய கொடிக் கம்பம் அமைக்கப்பட்டது. இதில் கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி தேசிய கொடி ஏற்றப்பட்டது. மறுநாளே அந்த பகுதியில் வீசிய சூறாவளி காற்றினால் கொடி சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளும் கொடிைய நிர்மாணிக்க காண்ட்ராக்ட் பெற்ற நிறுவன அலுவலர்களும் இதனை சரி செய்வதற்காக விரைந்துவந்தனர்.

      அவர்கள் சேதமடைந்த அந்த தேசிய கொடியை கீழே இறக்கினர். இதனால் கடந்த ஒருமாதகாலமாக 150 அடி உயர கொடி கம்பம் தேசியக்கொடி இல்லாமல் வெறுமனே காட்சியளித்தது. கன்னியாகுமரி பகுதியில் வீசும் சூறைக்காற்று மற்றும் இயற்கை சீற்றங்களுக்கு ஏற்றவாறு எந்த மாதிரியான தேசிய கொடியை ஏற்றலாம் என்பது குறித்து ஆய்வு செய்தனர். இந்த நிலையில் இன்று காலை அந்த 150 அடி உயர கொடிக்கம்பத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இதையொட்டி ராணுவ வீரர்கள் லெப்டினென்ட் கமாண்டர் சர்மா தலைமையில் கன்னியாகுமரியில் முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் கடற்கரையில் இருந்து தேசியக்கொடியை ஏந்திய படி கன்னியாகுமரிஅருகே உள்ள மகாதானபுரம் நான்கு வழி சாலை ரவுண்டானா சந்திப்பு பகுதிக்கு வந்தடைந்தனர். அவர்கள் 150 அடி உயர கம்பத்தில் ஏற்றப்பட்ட அந்த தேசிய கொடிக்குவீரவணக்கம் செலுத்தி மரியாதைஅளித்தனர். அதன் பிறகு முன்னாள் எம்.பி. விஜயகுமார் அந்த 150 அடி உயர தேசிய கொடியை பராமரிக்கும் உரிமைக்கான சான்றிதழை ராணுவ அதிகாரியிடம் ஒப்படைத்தார்.

      • 25 ஆயிரம் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை
      • சூறைக்காற்றுக்கு மின்கம்பங்கள் முறிந்து விழுந்தது

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாகவே சூறைக்காற்று வீசி வருகிறது.

      மாவட்டம் முழுவதும் இன்று அதிகாலையில் சாரல் மழை பெய்தது. சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசியதால் நாகர்கோவில் கோட்டார் ரெயில்வே பகுதியில் டிரான்ஸ்பார்மர் மற்றும் மின்கம்பங்கள் முறிந்து சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் மின்தடை ஏற்பட்டது. மின்கம்பம் சாலையில் முறிந்து விழுந்ததை யடுத்து போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

      இதுகுறித்து மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முறிந்து விழுந்த மின்கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.ஆரல்வாய்மொழி, குளச்சல், தக்கலை, திருவட்டார், கன்னியாகுமரி, மார்த்தாண் டம் பகுதிகளி லும் சாரல் மழை இன்று பெய்து கொண்டே இருந்தது. சூறைக்காற்றும் வீசியதால் மரங்கள் முறிந்து விழுந்தன.

      குமரி மாவட்டத்தில் கடல் அலையின் சீற்றம் 10 அடி முதல் 15 அடி வரை உயரத்திற்கு எழும்பும் எனவும் காற்றின் வேகம் 45 முதல் 55 கிலோமீட்டர் வேகத்திற்கு வீசும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

      இதையடுத்து இன்று 5-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. பூத்துறை, வள்ளவிளை, தூத்தூர், ராஜாக்கமங்கலம் துறை, அழிக்கால் பகுதிகளில் இன்று காலையில் ராட்சத அலைகள் எழும்பியது. இதனால் கடற்கரையையொட்டி உள்ள வீடுகள் வரை ராட்சத அலைகள் வந்து மோதி சென்றன.

      மீனவர்கள் மீன்பிடிக்க செல்லா ததையடுத்து விசைப்படகுகள் மற்றும் கட்டுமரங்களை பாது காப்பான இடங்களில் நிறுத்தி வைத்திருந்தனர். கன்னியாகுமரி, கோவளம், கீழமணக்குடி பகுதியில் கடல் சீற்றமாக காணப்பட்டது. மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாததால் சின்னமுட்டம், குளச்சல் மீன்பிடி துறைமுகங்கள் வெறிச்சோடி காணப்பட் டது.

      • முள்ளங்கினாவிளையில் 12.8 மி.மீ. பதிவு
      • அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

      நாகர்கோவில்:

      குமரி மாவட்டம் முழுவ தும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

      நேற்று மாவட்டம் முழுவதும் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இன்று காலையிலும் மழை நீடித்தது. பூதப்பாண்டி பகுதியில் சூறைக்காற்றுடன் கனமழை கொட்டி தீர்த்தது. நாகர்கோவிலில் வானம் மப்பும் மந்தாரமாக காணப்பட்டது.

      அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலை 9.30 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்தது. இதனால் கடை வீதிகள் மற்றும் கோவில்களுக்கு வந்த பொதுமக்கள் குடை பிடித்த வாறு சென்றனர். சூறைக்காற்றுடன் மழை பெய்ததையடுத்து நகரின் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தது.

      கொட்டாரம், மயிலாடி, சாமித்தோப்பு, இரணியல், ஆணைக் கிடங்கு, குளச்சல், அடையாமடை, முள்ளங்கினா விளை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் மழை கொட்டியது. முள்ளங்கினா விளையில் அதிகபட்சமாக 12.8 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

      திற்பரப்பு அருவி பகுதி யில் விட்டுவிட்டு மழை பெய்து வருவதையடுத்து அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவியிலும் மிதமான அளவு தண்ணீர் கொட்டி வருகிறது.

      ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினமான இன்று திற்பரப்பு அருவியில் குளிப்பதற்கு ஏராளமான பொதுமக்கள் குடும்பத்தோடு குவிந்திருந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலியிட்டு மகிழ்ந்தனர்.

      பேச்சிப்பாறை, பெருஞ் சாணி, சிற்றார் அணை பகுதிகளிலும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் சாரல் மழை நீடித்து வருகிறது. இதனால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

      பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் இன்று காலை 39.97 அடியாக இருந்தது. அணைக்கு 474 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 631 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. பெருஞ்சானி அணை நீர்மட்டம் 59.25 அடியாக உள்ளது.

      அணைக்கு 189 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 210 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. சிற்றார்-1 அணையின் நீர்மட்டம் 13.19 அடியாக உள்ளது. அணைக்கு 137 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 200 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

      சிற்றார்-2 அணையின் நீர்மட்டம் 13.28 அடியாகவும், பொய்கை அணையின் நீர்மட்டம் 17.20 அடியாகவும், மாம்பழத்துறையாறு அணை நீர்மட்டம் 30.51 அடியாகவும் உள்ளது.

      சாரல் மழையுடன் சூறைக்காற்று வீசி வருவதையடுத்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து மின் கம்பங்கள் மீது விழுந்தன. இதனால் மின்கம்பங்கள் சேதம் அடைந்தது. மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. இதையடுத்து மின்வாரிய ஊழியர்கள் மின் இணைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

      • ராஜபாளையம், சிவகாசியில் சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது.
      • சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

      ராஜபாளையம்

      விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலையில் கடும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலை 4.30 மணி அளவில் திடீரென கருமேகங்கள் திரண்டு மழை பெய்தது.

      இடி மின்னலுடன் மழை பெய்தது. அப்ேபாது பலத்த சூறைக்காற்று வீசியது. இதனால் ராஜபாளையம்-தென்காசி தேசிய நெடுஞ்சாலை, காந்தி சிலை ரவுண்டானா, சங்கரன்கோவில் விலக்கு, பஞ்சு மார்க்கெட் ஆகிய பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது. ராஜபாளையம் பழைய நீதிமன்ற பகுதி உள்ளிட்ட சில இடங்களில் மரங்ள் சாலையில் முறிந்து விழுந்தது. போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

      மேலும் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் இருசக்கர வாகனங்களை இயக்கி செல்ல மிகவும் சிரமப்பட்டனர். கடந்த சில நாட்களாக விட்டு,விட்டு மழை பெய்து வருவதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை காரணமாக வெப்பம் தணிந்து குளிர் காற்று வீசியது.

      தற்போது அறுவடை முடிந்து பின்னர் அடுத்த சாகுபடிக்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பெய்த மழை ஒரு வரப்பிரசாதமாக அமைந்துவிட்டது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர். மேலும் சில இடங்களில் நெல் அறுவடை முடிவடையாமல் இருப்பதால் மழையின் காரணமாக விளைந்த நெற்பயிர்கள் சேதமானதாக விவசாயிகள் சிலர் கவலை அடைந்துள்ளனர்.

      சிவகாசியிலும் நேற்று மாலை சூறாவளி காற்றுடன் மழை பெய்தது. இதனால் மழைநீர் சாலைகளில் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. மழையின் போது ரிசர்வ்லைன் பகுதியில் இடி விழுந்ததில் பல ஆண்டுகள் பழமையான மரம் வேரோடு சாய்ந்தது. இதனால் அருகில் இருந்த மின் கம்பங்கள் சேதமடைந்து அந்தப்பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.

      இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். மின்வாரிய ஊழியர்கள் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு மரங்களை அப்புறப்படுத்தினர்.

      ×