search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb"

    • கேரளாவின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.
    • நேற்றிரவு வந்த மர்ம நபர்கள் இந்த அலுவலகத்தில் பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், நேற்று இரவு மர்ம நபர்கள் ஒரு பைக்கில் வந்து இந்த அலுவலகத்தினுள் பெட்ரோல் குண்டு வீசி சென்றனர். இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன.

    கட்சி அலுவலகத்தில் வெடிகுண்டு வீசிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வில்லியனூர் அருகே ஏரிக்கரையில் விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரை கொல்ல நாட்டு வெடிகுண்டுகள்- வீச்சரிவாளுடன் பதுங்கியிருந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே கோர்க்காடு ஏரிக்கரையில் பயங்கர ஆயுதங்களுடன் ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக மங்கலம் போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது.

    இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் கீர்த்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த 6 பேர் கொண்ட கும்பல் போலீசாரை பார்த்ததும் தப்பியோட முயன்றது.

    ஆனால் போலீசார் அந்த கும்பலை சுற்றி வளைத்து மடக்கி பிடித்தனர். இதில் 4 பேர் சிக்கினர். 2 பேர் தப்பியோடி விட்டனர்.

    பிடிப்பட்ட அவர்களிடம் நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் வீச்சரிவாள்கள் இருந்தன. இதையடுத்து போலீசார் நாட்டு வெடி குண்டுகள் மற்றும் வீச்சரிவாள்களை பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பிடிபட்ட 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் கடலூர் நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவில் தெருவை சேர்ந்த சல்மான்கான் (வயது21), நெல்லிக்குப்பம் பெரியசோழவள்ளி ராஜீவ்காந்திநகரை சேர்ந்த ராஜி(18), அதே பகுதியை சேர்ந்த சிற்றரசன்(20) மற்றும் வில்லியனூர் ஜி.என்.பாளையம் ஒத்தவாடை தெருவை சேர்ந்த வீரபாகு(20) என்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் திடுக்கிடும் தகவல்களை தெரிவித்தனர்.

    முன் விரோதத்தில் புதுவையை சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் ஒருவரை கொலை செய்யும் நோக்கத்தோடு பதுங்கியிருந்ததாக தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களிடம் போலீசார் தொடர்நது விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    புதுவையில் கடந்த சில ஆண்டுகளாக வெடி குண்டுகளை வீசி கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை வாணரப்பேட்டையை பிரபல ரவுடி பாம் ரவி மற்றும் அவரது நண்பர் அந்தோணி ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #mrvijayabhaskar #bomb

    சென்னை:

    இலங்கையில் கடந்த 21-ந்தேதி ஈஸ்டர் பண்டிகையின் போது நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் பலியானார்கள். தமிழகத்திலும் பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பரபரப்பான தகவல்கள் வெளியானது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.

    இதற்கிடையே தமிழகத்தில் குண்டுவெடிக்கும் என்றும், பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாகவும் சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தொடர் மிரட்டல்கள் வந்துகொண்டே இருக்கின்றன. இலங்கையை போல கோயம்பேடு ஆழ்வார் திருநகரிலும் குண்டு வைக்கப் போவதாக மிரட்டல் விடுத்த நபர் கடந்த சனிக்கிழமை பிடிபட்டார்.

    கர்நாடக மாநில போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து தமிழகம் உள்பட 8 மாநிலங்களில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக மிரட்டிய முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் சிக்கினார்.

    நேற்று போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்த வாலிபரும் கைதானார். இப்படி தொடர்ச்சியாக வரும் மிரட்டல் போன்களால் சென்னை போலீசார் கலங்கிப்போய் உள்ளனர்.


    இந்தநிலையில் நேற்று இரவு அடையாறு கிரீன் வேஸ் சாலையில் உள்ள போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜய பாஸ்கரின் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சரின் வீட்டு தொலை பேசியில் பேசிய நபர் அமைச்சரின் வீட்டில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக கூறி விட்டு போனை துண்டித்து விட்டார்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வெடி குண்டு நிபுணர்களும் சோதனை செய்தனர். ஆனால் மிரட்டல் வெறும் புரளி என்பது தெரியவந்தது.

    இதற்கிடையே சென்னை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று இரவும் ஒரு மிரட்டல் போன் வந்தது. அதில் பேசிய நபர் இலங்கையில் வெடித்தது போல இன்னும் 3 மாதத்தில் தமிழகம் முழுவதும் குண்டு வெடிக்கும் என்று கூறிவிட்டு போனை துண்டித்து விட்டார்.

    போனில் பேசியவர் தனது பெயர் சாமி என்றும் மதுரையில் வக்கீலாக இருப்பதாகவும் கூறியுள்ளார். அந்த நபர் பேசிய எண்ணில் போலீசார் தொடர்பு கொண்டனர். அப்போது அவர் இப்போது இவ்வளவு தகவலைதான் தெரிவிக்க முடியும். மற்ற தகவல்களை செய்தியாளர் சந்திப்பில் சொல்லப்போகிறேன் என்று கூறிவிட்டு மீண்டும் போனை துண்டித்தார்.

    மிரட்டல் விடுக்கப்பட்ட செல்போன் எண்ணை வைத்து விசாரணை நடத்தி வரும் போலீசார் போனில் பேசிய மதுரை சாமி யார்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போனில் பேசியவர் வக்கீல் என்று கூறியதால் அதுதொடர்பாகவும் விசாரணை நடக்கிறது. மிரட்டல் ஆசாமியை பிடிக்க மதுரை போலீசாரும் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #mrvijayabhaskar #bomb

    இலங்கை தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு முதல் அமைச்சர் நாராயணசாமி அஞ்சலி செலுத்தினார். #srilankablast #narayanasamy

    புதுச்சேரி:

    இலங்கையில் தேவாலயங்களில் பயங்கரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

    500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். புதுவை மாநில காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மையினர் பிரிவு சார்பில், இலங்கையில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மி‌ஷன்வீதியில் உள்ள ஜென்மராக்கினி கோவில் முன்பு நடந்தது.

    காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும் அமைச்சருமான நமச்சிவாயம் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி அமைச்சர் ஷாஜகான், காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் வைத்திலிங்கம், டெல்லி சிறப்பு பிரதிநிதி ஜான்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பாதிரியார்கள், கன்னியாஸ்திரிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினார்கள். தொடர்ந்து 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அஞ்சலிக்கு பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இலங்கையில் அடுத்தடுத்து நடைபெற்ற கொடூர வெடிகுண்டு தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்தியாவும் கண்டனம் தெரிவித்துள்ளது. உலக நாடுகள் இணைந்து தீவிரவாதத்தை ஒடுக்கினாலும் அது மீண்டும் மீண்டும் தலைதூக்கி வருகிறது.

    உலகம் முழுவதும் பல நாடுகளில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடந்து வருகிறது. இதில் அப்பாவி மக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். அனைத்து நாடுகளிலும் பயங்கரவாதம் ஒழிக்கப்பட வேண்டும். இலங்கையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவத்திற்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன்.

    இந்த தாக்குதலுக்கு காரணமான ஐ.எஸ். அமைப்பை அனைத்து நாடுகளும் தடை செய்ய வேண்டும். இவர்களை ஊக்குவிக்கும் நாடுகள் மீது ஐ.நா.சபை நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் பூரண குணம் அடையவும், இறந்தவர்களின் ஆத்மா சாந்தியடையவும் கடவுளை பிரார்த்திக்கிறேன். புதுவை அரசை பொறுத்தவரை எங்களால் முடிந்த வரை இலங்கை மக்களுக்கு உதவி செய்ய காத்திருக்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதேபோல் மகளிர் காங்கிரஸ் சார்பில், இலங்கை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று இரவு பழைய பஸ்நிலையம் அருகே நடந்தது. நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, மகளிர் காங்கிரஸ் தலைவி பிரேமலதா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர். #srilankablast #narayanasamy

    ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லிவாக்கம்:

    ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுமி காயத்ரி (வயது 11) நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வெடிபொருட்கள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார்.

    அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஐ.சி.எப். போலீசார் பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது 4 நாட்டுவெடிகுண்டுகள் பதுக்கி வைக்கபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள வெடிகுண்டு வழக்கில் கைதான வாலிபரிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    சேதராப்பட்டு:

    புதுவை காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகள் உள்பட 500க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

    சில நாட்களுக்கு முன்பு பாகூர் பகுதியில் கூட்டு கொள்ளையடிக்க திட்டமிட்ட கும்பலை பாகூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

    கைதான 6 பேரிடமிருந்தும் நாட்டு வெடிகுண்டுகள், வீச்சரிவாள் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது.

    இதில் முக்கிய குற்றவாளியான கருவடிக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 27) என்பவரும் கைது செய்யப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

    இந்த நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் செல்போன் பயன்படுத்தி வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து சிறை வார்டன் கார்த்திகேயன் ரோந்து சென்றபோது வெடிகுண்டு வழக்கில் கைதான கார்த்திகேயன் அறையில் செல்போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    அதைத்தொடர்ந்து கார்த்திகேயன் அறையில் இருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதுகுறித்து சிறை சூப்பிரண்டு கோபிநாத்திடம் சிறை வார்டன் புகார் கூறி பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஒப்படைத்தார்.

    அதைத்தொடர்ந்து சிறை சூப்பிரண்டு காலாப்பட்டு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சிவப்பிரகாசம் விசாரணை நடத்தி வருகிறார்.

    வானூர் அருகே நாட்டு வெடிகுண்டு வீசி வாலிபர் படுகாயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    வானூர்:

    விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறைகாசிப் பாளையத்தை சேர்ந்தவர் உதயகுமார்(வயது 38). இவர் அதேபகுதியில் செங்கல்சூளை நடத்தி வருகிறார்.

    இவர் தொழில் சம்பந்தமாக பணம் வசூல் செய்ய புதுவை சென்றிருந்தார். பின்னர் நேற்று இரவு உதயகுமார் புதுவையில் இருந்து காசிப்பாளையத்துக்கு ரூ.50 ஆயிரம் பணத்துடன் மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். அவர் நள்ளிரவு 12 மணிக்கு காசிப்பாளையம் சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது உதயகுமாரை மர்மகும்பல் திடீரென்று வழிமறித்தனர்.

    அவர்களை பார்த்ததும் உதயகுமார் அதிர்ச்சி அடைந்தார். உடனே மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு அருகில் உள்ள முந்திரிதோப்புக்குள் ஓடினார். அங்கிருந்து உதயகுமார் தனது உறவினர் மற்றும் நண்பர்களுக்கு செல்போன் மூலம் மர்மகும்பல் வழிமறித்த தகவலை தெரிவித்தார்.

    உடனே அவரது உறவினர் மணிபாலன்(28) உள்பட 4 பேர் சம்பவ இடத்துக்கு வந்தனர். மர்மகும்பலை பிடிக்க முயன்றனர். இதைபார்த்த மர்மகும்பல் அவர்கள் மீது சரமாரியாக வெடிகுண்டு வீசினர். இதில் உதயகுமாரின் உறவினர் மணிபாலன்(28) என்பவர் படுகாயம் அடைந்தார். அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அவரது உறவினர்கள் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து உதயகுமார் வானூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வெடிகுண்டு வீசிய மர்மகும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.

    தொழில் போட்டி காரணமாக வெடிகுண்டு வீச்சு சம்பவம் நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்று போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். #bombrange

    பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat

    ஆலந்தூர்:

    கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு சில தினங்களுக்கு முன்பு மர்ம கடிதம் ஒன்று வந்தது.

    அந்த கடிதத்தில் அனுப்பியவரின் பெயர் இல்லை. அதில் கவர்னர் மாளிகையை குண்டு வைத்து தகர்ப்போம். உங்களை சுற்றிவரும் தமிழக அமைச்சர்களை சுட்டுக் கொல்வோம் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    கடிதத்தை பிரித்து பார்த்த கவர்னர் மாளிகை ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக உயர் போலீஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அடையாறு துணை கமி‌ஷனர் சஷாங் சாய் இதுபற்றி உரிய விசாரணை நடத்த உத்தர விட்டார்.


    இதனைதொடர்ந்து கிண்டி போலீசார் மிரட்டல் கடிதம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர். கடிதத்தில் பெயர், முகவரி உள்ளிட்ட எதுவும் இடம் பெறாததால் அதனை எழுதியது யார் என்பது தெரியவில்லை.

    இருப்பினும் கடிதம் எங்கிருந்து அனுப்பப்பட்டுள்ளது என்பதுபற்றி கடிதத்தில் உள்ள முத்திரையை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    மிரட்டல் கடிதத்தை அனுப்பிய மர்ம நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. கிண்டி உதவி கமி‌ஷனர் சுப்ராயன், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ஆளுங்கட்சியான அ.தி.மு.க.வை பிடிக்காத நபர்தான் இந்த கடிதத்தை அனுப்பி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும் மிரட்டல் ஆசாமி பிடிபட்டால் தான் கடிதத்தின் முழு பின்னணி தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.

    மிரட்டல் காரணமாக கவர்னர் மாளிகையில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கிண்டி மற்றும் கோட்டூர்புரம் போலீசார் கவர்னர் மாளிகையை சுற்றியுள்ள பகுதியில் ரோந்து பணியையும் தீவிரப்படுத்தி உள்ளனர்.

    தேர்தல் நேரத்தில் அமைச்சர்களுக்கும், கவர்னருக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #GovernorHouse #Bombthreat

    கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீது தாக்குதல் நடத்திய இலங்கை கடற்படையினர் நாட்டுவெடிகுண்டு வீசியதால் பதட்டம் உருவானது. #Fishermen #SriLankaNavy #TNFishermen

    ராமேசுவரம்:

    ராமேசுவரத்தில் இருந்து நேற்று 1,500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்கு சென்றனர். அவர்களில் சிலர் கச்சத்தீவு அருகே வலைகளை விரித்து மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இலங்கை கடற்படையினர் குட்டி ரோந்து கப்பல்களில் வந்தனர். அவர்கள் ராமேசுவரம் மீனவர்களை இங்கு மீன்பிடிக்க கூடாது திரும்பி செல்லுங்கள் என எச்சரித்தனர்.

    இதனைத்தொடர்ந்து மீனவர்கள் அவசர அவசரமாக வலைகளை சுருட்டிக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.

    அப்போது இலங்கை கடற்படையினர் மீனவர்களின் படகுகளுக்குள் நுழைந்து அங்கு இருந்த பொருட்களை சேதப்படுத்தினர். மீனவர்கள் பிடித்து வைத்திருந்த மீன்களையும் கடலில் தூக்கி எறிந்தனர். மேலும் மீனவர்கள் மீது இரும்பு பைப், கற்களை வீசி தாக்கினர். இதனால் மீனவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்த நிலையில் ஒரு படகில் ‘டமார்’ என வெடி சத்தம் கேட்டது. சிறிது நேரத்தில் அந்த படகின் அடிப்பகுதியில் தீ பிடித்தது. மீனவர்கள் உடனடியாக அதனை அணைத்துவிட்டு அங்கிருந்து வேகமாக கரை திரும்பினர்.

    கரை திரும்பிய மீனவர்கள் கூறுகையில், கடந்த சில நாட்களாகவே இலங்கை கடற்படையினர் தாக்குதல் அதிகரித்து வருகிறது. நேற்று அவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தாக்குதல் நடத்தியது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிர்ஷ்டவசமாக இதில் யாரும் காயமடையவில்லை. ஆனால் படகு மட்டும் சேதம் அடைந்தது. இதே நிலை நீடித்தால் எங்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விடும் என்றனர். #Fishermen #SriLankaNavy #TNFishermen

    இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையிலான வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் தூர்வாரும் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. #WWIIbomb #Kolkataport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் ஹூக்ளி நதியை ஒட்டியுள்ள கரைப்பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், நதியையொட்டியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகம் பகுதி அருகே நேற்று நடைபெற்ற இந்தபணியின்போது  450 கிலோ எடையிலான நான்கரை மீட்டர் நீளமுள்ள வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் அகழ்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்டது.


    இரண்டாம் உலகப்போரின்போது இந்த பகுதியை அமெரிக்க கப்பல்படையினர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த வெடிகுண்டினை செயலிழக்க வைப்பதற்காக ராணுவம் மற்றும் கடற்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா துறைமுகம் தலைவர் வினீத் குமார் தெரிவித்துள்ளார். #WWIIbomb #Kolkataport
    பெட்ரோல் பங்கை தகர்த்து விடுவேன் என வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் 4-வது முறையாக கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள செந்தமிழ் நகரை சேர்ந்தவர் பீர் முகமது (வயது 36).

    இவர் உக்கடம் அருகே பாலக்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்குக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளார். பெட்ரோல் நிரப்பியதும் ஊழியர் பணம் கேட்ட போது பீர் முகமது தகாத வார்த்தைகளால் திட்டினார். பங்க் ஊழியர்கள் அவரை கண்டித்தனர்.

    இதனால் ஆவேசமடைந்த பீர்முகமது நான் யார் தெரியுமா? நான் நினைத்தால் வெடிகுண்டு வைத்து இந்த பங்கை தகர்த்து விடுவேன் என மிரட்டி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

    இதுகுறித்து ஊழியர்கள் பங்க் உரிமையாளர் முருகேசனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உக்கடம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பீர் முகமதுவை கைது செய்தனர்.

    கைதான பீர் முகமது மீது ஏற்கனவே இதுபோல 3 வழக்குகள் உள்ளன. கடந்த ஜூன் மாதம் குடிபோதையில் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து குனியமுத்தூரில் வெடிகுண்டு வைத்திருப்பதாக மிரட்டியதாக கைது செய்யப்பட்டார்.

    இந்த வழக்கில் ஜாமீனில் வெளிவந்த பின்னர் ஜூலை மாதம் மீண்டும் ஒரு முறை கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வழக்கில் கைதானார்.

    ஏற்கனவே கடந்த ஆண்டும் இதுபோல வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக இவர் மீது வழக்கு உள்ளது. தற்போது 4-வது முறையாக கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிளாரி கிளிண்டன் உட்பட பலருக்கும் வெடிகுண்டுகளை தபால் மூலம் அனுப்பிய நபரை அமெரிக்க போலீசார் கைது செய்துள்ளனர். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் மிக முக்கிய பிரமுகர்களுக்கு அனுப்பப்படும் பார்சல்கள் உளவுப்படை போலீசார் பரிசோதித்த பின்னரே அவர்களிடம் ஒப்படைக்கப்படும்.

    அந்த வகையில், முன்னாள் அதிபர் பராக் ஒபாமா, முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரியும் தற்போதைய அதிபரான டிரம்ப்பை எதிர்த்து போட்டியிட்டவருமான ஹிலாரி கிளிண்டன் ஆகியோருக்கு அவர்களின் அலுவலக முகவரிகளுக்கு அனுப்பப்பட்ட வெடிபொருள் பார்சல்களை இடைமறித்து அமெரிக்க உளவுப்படையினர் கைப்பற்றினர்.



    இவர்கள் மட்டுமின்றி, ஜனநாயக கட்சியின் முக்கிய தலைவர்கள் மற்றும் ஹாலிவுட் நடிகருக்கும் இதுபோன்ற தபால்கள் அனுப்பப்பட்டன. இதையடுத்து இந்த விவகாரத்தில் தீவிரமாக தேடுதல் வேட்டையை துவங்கிய போலீசார், 56 வயதான சீசர் சாயோக் என்பவரை கைது செய்துள்ளனர்.

    வெடிகுண்டு பார்சல் ஒன்றில் இருந்த இவரது கைரேகையை வைத்து இவரை கைது செய்துள்ளதாக எப்.பி.ஐ. இயக்குனர் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். இவர் மீது வெடிமருந்து கடத்தல், சட்டவிரோதமாக வெடிமருந்துகளை தபால் அனுப்புதல் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த குற்றம் நிரூபிக்கப்படும்பட்சத்தில் இவருக்கு 58 ஆண்டுகள் சிறைவாசம் தண்டனையாக வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

    மேலும், இவரை கைது செய்ததன்மூலம் இந்த விவகாரம் முடியவில்லை எனவும், தொடர வாய்ப்பு இருப்பதாகவும் கிறிஸ்டோபர் தெரிவித்துள்ளார். #ExplosiveDevicestoObama #ExplosiveDevicestoHillary #FBI
    ×