search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kolkata harbour"

    இரண்டாம் உலகப்போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட 450 கிலோ எடையிலான வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் தூர்வாரும் பணியின்போது கண்டெடுக்கப்பட்டது. #WWIIbomb #Kolkataport
    கொல்கத்தா:

    கொல்கத்தாவில் ஹூக்ளி நதியை ஒட்டியுள்ள கரைப்பகுதியில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.

    இந்நிலையில், நதியையொட்டியுள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் துறைமுகம் பகுதி அருகே நேற்று நடைபெற்ற இந்தபணியின்போது  450 கிலோ எடையிலான நான்கரை மீட்டர் நீளமுள்ள வெடிக்காத குண்டு கொல்கத்தாவில் அகழ்வு பணியின்போது கண்டெடுக்கப்பட்டது.


    இரண்டாம் உலகப்போரின்போது இந்த பகுதியை அமெரிக்க கப்பல்படையினர் பயன்படுத்தி வந்த நிலையில் தற்போது கிடைத்துள்ள இந்த வெடிகுண்டினை செயலிழக்க வைப்பதற்காக ராணுவம் மற்றும் கடற்படையினருக்கு தகவல் அளிக்கப்பட்டுள்ளதாக கொல்கத்தா துறைமுகம் தலைவர் வினீத் குமார் தெரிவித்துள்ளார். #WWIIbomb #Kolkataport
    ×