search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செல்போன்"

    • டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனையை நடத்தி வந்தது.
    • ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    பிஜிங்:

    செல்போன் டவர்கள் இல்லாமல் நேரடியாக செயற்கை கோள் மூலமாக ஸ்மார்ட் போன்களில் பேசும் வசதியை கொண்டு வர சீனா ஆய்வு மேற்கொண்டது.

    இதற்காக டியான்டாங்-1 என்ற செயற்கை கோள்களை விண்ணுக்கு அனுப்பி 2016 -ம் ஆண்டு முதல் சோதனனையை நடத்தி வந்தது. இந்த சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி தரையில் செல்போன் கோபுரங்கள் இல்லாமல் செல்போன்களில் பேசலாம் என்று கூறப்படுகிறது. ஸ்மார்ட் போன் தகவல் தொடர்பு அமைப்பில், செயற்கைக் கோள் இணைப்பை அடைவதில், சீன விஞ்ஞானிகள் புதிய சாதனை படைத்துள்ளதாக தெரிவித்தனர். இதன்மூலம் ஆசியா - பசிபிக் பிராந்தியம் முழுவதும் மொபைல் செயற்கைக்கோள்கள் வழியாகவே ஸ்மார்ட்போன்களில் பேச முடியும்.

    தரையில் உள்கட்டமைப்பு இன்றி நேரடியாக செயற்கை கோள் மூலமாகவே பேச முடியும் என்பதால், நிலநடுக்கம், சூறாவளி போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது கூட எந்த இடையூறும் இன்றி தொலை தொடர்பு இருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர். இதனால் இத்திட்டம் உலகம் முழுவதும் பிரபலம் ஆகும் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    • ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
    • ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டு மத்திய ஜெயிலில் 200-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இவர்களில் பிரபல ரவுடிகளும் அடங்குவார்கள். ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பிரபல ரவுடிகள், தங்களின் வழக்கு செலவு, குடும்ப செலவுக்கு சிறைக்குள் இருந்தபடி, செல்போன் மூலம் தொழிலதிபர்களை மிரட்டி மாத, மாதம் மாமூல் வசூலித்து வருகின்றனர்.

    இந்த வசூல் பணிகளை 2-ம் கட்ட ரவுடிகள் வசூலித்து ரவுடியின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கின்றனர்.

    இதனை தடுப்பதற்காக ஜெயிலில் அடிக்கடி ரவுடிகள் அறைகள் சோதனை நடத்தப்பட்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் ஜெயில் வளாகத்தின் உட்பகுதி மதில் சுவர் அருகே ஜெயில் வார்டன்கள் மற்றும் ஊழியர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு பார்சல் கிடந்தது. அதனை எடுத்து ஜெயில் வார்டன்கள் பிரித்து பார்த்தபோது, ஒரு ஆண்ட்ராய்டு செல்போன் உட்பட 5 செல்போன்கள், ஒய் பை மோடம், பீடி கட்டுகள், கஞ்சா பொட்டலங்கள், 2 சார்ஜர், குட்கா பாக்கெட்டுகள் இருந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த சிறை காவலர்கள் அதனை பறிமுதல் செய்து காலாப்பட்டு போலீசில் ஒப்படைத்தனர்.

    ஜெயிலில் உள்ள பிரபல ரவுடிகளுக்கு கஞ்சா, செல்போன்கள் வீசப்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • செல்போன் பேசுவது போன்று ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.
    • இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

    சாத்தான்குளம்:

    இன்றைய நவீன காலத்தில் மாணவர்கள், வாலிபர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் செல்போனில் மூழ்கி கிடக்கின்றனர். அந்த வகையில் செல்போன் பேசுவது போன்று ஒரு கட்டிடத்தில் திருஷ்டி பொம்மை வைக்கப்பட்டிருப்பது வியப்பை ஏற்படுத்தி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்குளம் கிராமத்தில் ஸ்ரீவைகுண்டம் செல்லும் சாலையில் புதிதாக கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் வழக்கமாக திருஷ்டி பொம்மையோ அல்லது தடியங்காயில் திருஷ்டி பொம்மையின் படம் வரைந்து வைப்பது வழக்கம்.

    ஆனால் இங்கு அந்த கட்டிட உரிமையாளர் ஒரு திருஷ்டி பொம்மையை தயார் செய்து, பொம்மை கையில் செல்போனுடன் பேசிக் கொண்டிருப்பது போல வடிவமைத்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் வியந்து பார்த்து செல்கின்றனர்.

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.
    • போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அடுத்த நல்லூர் பாரதி வீதியைச் சேர்ந்தவர் லோகநாதன். இவரது மனைவி பூங்கொடி. இவர்களுக்கு ரகு (வயது 15) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர். ரகு நல்லூர் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று ரகு வீட்டில் செல்போன் பார்த்துக் கொண்டிருந்தான். அப்போது ரகுவின் தந்தை லோகநாதன் அவனிடம் பொது தேர்வு வரவுள்ளதால் செல்போனை பார்க்காதே என கண்டித்துள்ளார்.

    இதையடுத்து மனவேதனையில் இருந்த ரகு வீட்டினுள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டான். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் இதுகுறித்து புளியம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் பிரேதத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
    • சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    தொழில் நிறுவனங்களில் வேலை மற்றும் பணியின்போது பயன்படுத்தும் செல்போன்களை பணி முடிந்ததும் 'சுவிட்ச் ஆப்' செய்துகொள்ளும்

    சட்டம் பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளில் நடைமுறையில் உள்ளது.

    இதேபோல ஆஸ்திரேலிய நாட்டிலும் அலுவலக நேரத்திற்குப் பிறகு செல்போன்களை 'சுவிட்ச் ஆப்' செய்யும் உரிமை விரைவில் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகிறது. 

    வேலைநேரத்திற்குப்பின் நிறுவனங்களில் இருந்து வரும் அழைப்புகள், குறுஞ்செய்திகள் ஆகியவற்றை புறக்கணிக்கும் உரிமையை தொழிலாளர்களுக்கு அளிக்கும் புதிய சட்டத்தை ஆஸ்திரேலிய அரசு விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.

    இந்த மசோதா ஒரு வாரத்திற்குள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. இந்த சட்டம் ஆஸ்திரேலிய பசுமைக் கட்சி மற்றும் சுயேச்சை செனட்டர்களுடன் விரைவில் நிறைவேற்றப்படுகிறது.

    ஏற்கனவே பிரான்ஸ், ஸ்பெயின், பெல்ஜியத்தில் இந்த புதிய சட்டம் அமலான நிலையில் உலகில் பல்வேறு நாடுகளும் இந்த சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பரிசீலனை செய்து வருகின்றன.

    • சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.
    • உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம், சங்க ரெட்டி மாவட்டம், ராஜம்பேட்டையை சேர்ந்தவர் சந்தோஷ் (வயது 37). தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

    வேலைக்குச் சென்ற சந்தோஷ் மீண்டும் வீடு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

    போதி ரெட்டி பள்ளி சந்திப்பில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். இதனை சந்தோஷ் செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.

    சந்தோஷ் தங்களை வீடியோ எடுப்பதை கண்ட போலீசார் அவரது செல்போனை பறித்தனர். சந்தோஷ் நீண்ட நேரம் கெஞ்சிப் பார்த்தும் போலீசார் செல்போனை தர மறுத்து விட்டனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த சந்தோஷ் அருகில் உள்ள பெட்ரோல் பங்கிற்க்கு சென்று பாட்டிலில் பெட்ரோலை பிடித்துக் கொண்டு வந்தார்.

    போலீசார் முன்னிலையில் தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக் கொண்டு தீ வைத்தார். தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது.

    உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தாலும் சந்தோஷ் சாதாரணமாக சாலையில் நடந்து சென்றார்.

    அந்த வழியாக வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்திவிட்டு சந்தோஷ் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர்.

    இதனைக் கண்டு பதறிய போலீசார் சந்தோசை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    சந்தோஷ் உடல் 50 சதவீதம் கருகி உள்ளதால் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    வாலிபர் உடலில் தீயுடன் நடந்து செல்லும் வீடியோ காட்சிகள் பரவி வருகிறது.

    • செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரி பாகங்களுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்தது.
    • மத்திய நிதி அமைச்சகம் இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

    புதுடெல்லி:

    மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் நாளை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய நிதிஅமைச்சகம் நேற்று இரவு ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் செல்போன் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரியை (சுங்ககட்டணம்) 15 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாகக் குறைத்துள்ளது.

    செல்போன் உதிரிபாகங்களான பின் கவர்கள், பேட்டரி கவர்கள், ஜிஎஸ்எம் ஆன்டெனா, மெயின் கேமரா லென்ஸ் மற்றும் இதர பிளாஸ்டிக் மற்றும் உலோக மெக்கானிக்கல் பொருட்களுக்கான இறக்குமதி வரி 5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை மத்திய அரசின் வருவாய்த்துறை குறைத்துள்ளது.

    உதிரிபாகங்களைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் உள்ளீடுகளின் மீதான இறக்குமதி வரி பூஜ்ஜியமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

    இந்த இறக்குமதி வரி குறைப்பு உலகளாவிய உற்பத்தியாளர்களுக்கு இந்தியாவில் பெரிய அளவிலான மொபைல் அசெம்பிளி லைன்களை அமைக்க உதவும், மேலும் செல்போன்களின் ஏற்றுமதியை கணிசமாக அதிகரிக்கும்.

    இந்த நடவடிக்கை இந்தியாவின் செல்போன் உற்பத்தியை மேலும் போட்டித்தன்மை கொண்டதாக மாற்றும் என இந்திய செல்லுலார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் அசோசியேஷன் தெரிவித்துள்ளது.

    இறக்குமதி வரிகுறைப்பு மூலம் செல்போன் துறையில் ஒரு நன்மை பயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்மூலம் செல்போன் விரிவாக்கம் ஊக்குவிக்கப்படுகிறது மற்றும் உலகளாவிய சந்தையில் போட்டித்தன்மையை மேம்படுத்த இது உதவுகிறது

    • சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.
    • சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது.

    தொழில்நுட்பங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த உலகில் ஸ்மார்ட் போன்களை அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். பெரியவர்கள் மட்டுமல்லாது சுட்டி குழந்தைகள் கூட ஸ்மார்ட் போன்களில் வீடியோக்கள் பார்ப்பது வாடிக்கையாகி வருகிறது.

    இந்நிலையில் பிரபல தொழில் அதிபரான ஆனந்த் மஹிந்திரா தனது வலைதள பக்கத்தில் பதிவிட்ட பதிவில் குழந்தை ஒன்று உணவை போன் என தவறாக நினைத்து காதில் வைக்கும் காட்சி உள்ளது.

    டிஜிட்டல் யுகத்தில் நமது முன்னுரிமைகள் வியத்தகு முறையில் மாறிவிட்டன என்று ஆனந்த் மஹிந்திரா பதிவிட்டிருந்தார். அவரின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில் சிலர் மொபைல் சாதனங்கள் எந்த அளவுக்கு நம் அன்றாட வாழ்வில் ஊடுருவி உள்ளது என்பதை அப்பட்டமாக நினைவூட்டுவதாகவும், நமது நடத்தை மற்றும் வளர்ச்சியில் இத்தகைய சாதனங்களின் தாக்கம் பற்றிய கேள்விகளை எழுப்புகிறது எனவும் பதிவிட்டு வருகின்றனர்.

    • செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.
    • போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    செல்போன் நவீன காலத்தில் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறிவிட்டது. எந்த நேரத்திலும் செல்போனோடு தான் பொழுதை கழிக்கிறார்கள்.

    செல்போன் மூலம் கணவன் மனைவிக்கு இடையே கூட தற்போது தகராறு ஏற்பட்டு வருகின்றன.

    சினிமா பாடல் கேட்பதற்காக செல்போன் கேட்ட கணவர் கண்ணை மனைவி குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம் ஹவுசிங் டெவலப்மென்ட் காலனியை சேர்ந்தவர் அங்கித். இவருடைய மனைவி பிரியங்கா. வீட்டில் இருந்த பிரியங்கா செல்போனில் சினிமா பாடல் கேட்டுக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அங்கித் மனைவியிடம் தான் பாடல் கேட்க வேண்டும் என கூறி செல்போனை கேட்டார்.

    அப்போது பிரியங்கா நான் இன்னும் சில பாடல்களை கேட்க வேண்டும். அதனால் செல்போனை தர முடியாது என தெரிவித்தார். இதனால் கணவன் மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது .

    ஆத்திரமடைந்த பிரியங்கா வீட்டில் இருந்த கத்திரிக்கோலை எடுத்து அங்கித்தின் கண்ணில் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த அவர் அலறி துடித்தார்.

    சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து அங்கித் தனது மனைவி பிரியங்கா மீது போலீசில் புகார் அளித்தார். போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
    • புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    செங்குன்றம்:

    புழல் பகுதியை சேர்ந்தவர் அப்துல்லத்தீப். இவரது செல்போனுக்கு குறுந்தகவலுடன் ஒரு லிங்கும் வந்தது. அந்த குறுந்தகவலில், உங்களது வங்கி கணக்கு முடக்கப்பட்டு உள்ளது. உடனடியாக லிங்கில் வங்கி கணக்கின் விபரங்களை பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    இதனை உண்மை என்று நம்பிய அப்துல்லத்தீப் தனது வங்கி கணக்கின் விபரங்களை குறிப்பிட்ட லிங்கில் பதிவு செய்தார்.

    சிறிது நேரத்தில் அவரது வங்கி வணக்கில் இருந்த ரூ.44 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. மர்ம நபர்கள் நூதன முறையில் வங்கியில் இருந்து பணத்தை சுருட்டி இருப்பது தெரியவந்தது.

    இதுபோல் புழலை சேர்ந்த ராஜ்குமார் என்பவருக்கும் மர்ம கும்பல் வங்கி கணக்கு விபரம், பான் எண் விபரங்களை பதிவு செய்யக்கூறி குறுந்தகவல் மற்றும் லிங்க் அனுப்பி ரூ.10 ஆயிரத்தை சுருட்டினர். இதுகுறித்து புழல் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    போலீசார் கூறும்போது, செல்போனுக்கு தெரியாத நபர்களிடம் இருந்து வரும் குறுந்தகவல், லிங்கை கிளிக் செய்யாமல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். இணையதள முகவரி சரியாக இருந்தால் மட்டுமே பதில் அளிக்க வேண்டும். இல்லை எனில் வங்கிக்கு நேரில் சென்று தங்களது சந்தேகங்கள் குறித்து கேட்டால் பணம் இழப்பை தவிர்க்கலாம் என்றனர்.

    • மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது.
    • இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.


    நாகர்கோவில் : குருந்தன்கோடு அருகே உள்ள செருப்பங்கோடு என்ற இடத்தில் மக்கள் நெருக்கம் மிகுந்த விவசாய விளை நிலத்தில் செல்போன் டவர் அமைக்க தனியார் நிறுவனம் முயன்று வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அரசு துறையினருக்கு மனுவும் அனுப்பி உள்ளனர்.

    இந்த நிலையில் செல்போன் டவர் அமைக்க ஆட்சியரின் ஒப்புதல் பெற உள்ளதாக தனியார் நில உரிமையாளர் பிளக்ஸ் போர்டு வைத்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து செல்போன் டவர் அமைக்க வி.ஏ.ஓ., தாசில்தார், மாவட்ட கலெக்டர் ஆகியோர் ஒப்புதல் வழங்கக்கூடாது என கோரி அப்பகுதி மக்கள் முதல்-அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருக்கு மீண்டும் மனு அனுப்பியுள்ளனர். செல்போன் டவர் அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×