search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bomb"

    • தற்போது இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சவ ஊர்வலத்தில் பலரும் இருக்கும் போது ராஜி எங்களை தாக்கி அவமானப்படுத்தினார்.இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை தியாகு முதலியார் நகர் குடியிருப்பை சேர்ந்த வர் ராஜி (32).

    லாரி டிரைவரான ராஜி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தேங்காய்திட்டில் நடந்த உறவினரின் இறுதிச் சடங்கில் ராஜி பங்கேற்று பட்டாசு வெடித்து சென்றார்.

    அப்போது அவருக்கும், ஹரி, நிர்மல் ஆகியோர் இடையே பட்டாசு வெடிப்பதில் மோதல் ஏற்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பிய ராஜூவை பின்தொடர்ந்து வந்த கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தது.

    குடியிருப்புகள் நிறைந்த மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் இறுதி ஊர்வலத்தில் ராஜூவிடம் பட்டாசு கேட்டு தகராறு செய்த நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    அதோடு அவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த வர்கள், உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் தேடினர்.

    நிர்மல், ஹரி, பிரகாஷ், ரெனி, மோகன்ராஜ், ரஞ்சித் ஆகியோரும், வெடிகுண்டு கொடுத்த லோகபிரகாஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலை யாளிகள் போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-

    சவ ஊர்வலத்தில் பலரும் இருக்கும் போது ராஜி எங்களை தாக்கி அவமானப்படுத்தினார்.இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    திருப்பி தாக்க முயன்ற போது எங்களை மற்றவர்கள் தடுத்து விட்டனர். ஆனாலும் எங்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. ராஜியை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

    அதற்காக எங்களின் நண்பர்கள் உதவியை நாடினோம். அவர்கள் எங்களுக்கு கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்தனர். அதன் மூலம் ராஜியை வெடிகுண்டு வீசி கொலை செய்தோம் என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படு கிறது.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். 

    • புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம்.
    • கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டார்.

    புதுவையில் யார் பெரியவர்? என்பதில் ரவுடிகள் அவ்வப்போது மோதிக்கொள்வது வழக்கம். இதுவே பழிக்குப்பழியாக மாறி கொலைகளை அரங்கேற்றி வருகின்றனர். இது போன்ற சம்பவங்களில் சர்வ சாதாரணமாக வெடிகுண்டுகளை கையாளுவது தொடர்கதையாகி உள்ளது.

    கடந்த 2016-ம் ஆண்டுக்கு பிறகு முன்னாள் அமைச்சர் வி.எம்.சி. சிவக்குமார், அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளர் வீரப்பன், தொழில் அதிபர் வேலழகன், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் ஜோசப் ஆகியோர் வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

    இதே பாணியில் 2019-ம் ஆண்டில் வாணரப்பேட்டை ரவுடி சாணிக்குமார், காலாப்பட்டு காங்கிரஸ் பிரமுகர் சந்திரசேகர், அரியாங்குப்பம் பாண்டியன், முத்தியால்பேட்டை காங்கிரஸ் பிரமுகர் அன்பு ரஜினி ஆகியோரும் 2021-ம் ஆண்டில் முதலியார்பேட்டை பாம் ரவி, அவரது நண்பர் அந்தோணியும், கடந்த மார்ச் மாதம் பா.ஜ.க. பிரமுகர் செந்தில்குமரன் ஆகியோர் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    • வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.

    அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.

    இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

    இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.

    அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • வத்திராயிருப்பு அருகே வன விலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியது யார்?
    • தோட்ட உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை மாவட்டம் பேரையூர், தேனி மாவட்டம் மேகமலை ஆகிய வனப்பகுதிகள் இணைக்கப் ட்டு கடந்த 2021-ம் ஆண்டு ஸ்ரீவில்லிபுத்தூர்- மேக மலை புலிகள் காப்பகம் உருவாக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பொதுமக்கள் வனப் பகுதிக்குள் செல்ல பல்வேறு கட்டுப்பாடுகளை வனத் துறையினர் விதித்தனர். மேலும் வனப்பகுதியில் யாரும் நுழைக்கிறார்களா? என்பதை கண்காணித்து வருகின்றனர்.

    இந்தநிலையில் வத்திரா யிருப்பு மலையடிவார பகுதிகளில் கடந்த ஆண்டு நாட்டு வெடிகுண்டு வைத்து பன்றிகளை வேட்டையாடிய நபரை போலீசார் கைது செய்தனர். அதேபோல் கான்சாபுரம் அருகே ஓடை யில் 9 நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அதனைத்தொடர்ந்து அத்திக்கோவில் பகுதியில் உள்ள தனியார் தென்னந் தோப்பில் 5 நாட்டு வெடி குண்டுகளை பதுக்கி வைத் திருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர். வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடிகுண்டுகள் அடுத் தடுத்து சிக்கிய சம்பவம் வத்திராயிருப்பு பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் அத்தி கோவில் பகுதியில் வன விலங்குகளை வேட்டை யாடுவதற்காக சிலர் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருப்பதாக போலீசா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் சோதனை செய்தனர்.

    அப்போது கான்சா புரத்தை சேர்ந்த சோலை யப்பன் என்பவருக்கு சொந்தமான தென்னந் தோப்பில் பதுக்கி வைத்தி ருந்த 4 நாட்டு வெடிகுண்டு களை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர். வன விலங்குகளை வேட்டையாடு வதற்காக அதனை அங்கு யாரோ மர்மநபர்கள் பதுக்கி வைத்திருந்தது விசாரணை யில் தெரியவந்தது.

    ஆனால் பதுக்கிவைத்தது யார்? என்பது தெரிய வில்லை. அவர்கள் யார்? என்று விசாரணை நடத்தப் பட்டு வருகிறது. மேலும் வனவிலங்குகள் வேட்டை கும்பலுடன் தொடர்பு உள்ளதா? என்று தோட்ட உரிமையாளர் சோலை யப்பனிடம் போலீசார் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    • குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட கலெக்டருக்கு, போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரை.
    • 5 பேரையும் போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    நீடாமங்கலம்:

    தஞ்சை மாவட்டம் திருபுவனம் தெற்கு வீதியை சேர்ந்த குரு (வயது 23), பிரித்திவி ராஜ் (20), கும்பகோணத்தை சேர்ந்த சரண்ராஜ் (21), தர்மராஜ் (30), சந்தோஷ் (26) ஆகிய 5 பேர் மீதும் மணஞ்சேரியில் வெடிக்குண்டு வீசிய வழக்கு உள்ளன.

    இந்நிலையில் இவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவருக்கு, போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் உத்தரவுப்படி குரு, பிரித்திவிராஜ் உள்பட 5 பேரையும் போலீசார் குணடர் சட்டத்தில் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

    • சந்திப்பு த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது.
    • ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் தவறுதலாக எடுத்துச்சென்றுள்ளார்.

    நெல்லை:

    குடியரசு தின விழாவையொட்டி நெல்லை ரெயில் நிலை யத்தில் தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சந்திப்பில் இருந்து ரெயில் நிலையம் செல்லும் த.மு. சாலையில் உள்ள ஒரு கடையின் முன்பு இன்று காலை மர்ம பை ஒன்று கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். உடனடியாக கமிஷனர் ராஜேந்திரன் அதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார். அதன்பேரில் ரோந்து பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த சேகர், நுண்ணறிவு பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் மற்றும் போலீசார் காளிமுத்து, நடராஜன் ஆகியோர் அடங்கிய குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று மர்ம பையை கைப்பற்றி சோதனை நடத்தினர்.

    அதில், துணிகள் வைக்கப்பட்டிருந்தது. அந்த பை யாருடையது? எப்படி அங்கு வந்தது என்பது? குறித்து விசாரணை நடத்தினர். அப்போது நெல்லையை சேர்ந்த குமார் என்பவரும், நாசரேத்தை சேர்ந்த ராபர்ட் ஜெபஸ்டியான் என்பவரும் சென்னையில் இருந்து ஒரே ரெயில் பெட்டியில் பயணம் செய்து இன்று சந்திப்பு ரெயில் நிலையம் வந்துள்ளனர். அப்போது தவறுதலாக ராபர்ட் ஜெபஸ்டியானின் பையை குமார் எடுத்துச்சென்றுள்ளார். பின்னர் த.மு.சாலையில் உள்ள ஒரு டீக்கடையில் டீ குடித்தபோது மறந்து விட்டு அந்த பையை அங்கேயே விட்டுச்சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து அந்த பையை கைப்பற்றிய போலீசார் அதனை ராபர்ட் ஜெபஸ்டியானிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.
    • வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை

    சண்டிகர்:

    சண்டிகரில் இன்று பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வீட்டின் அருகே வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மாலை 4:30 மணியளவில், ஹெலிபேட் மற்றும் பஞ்சாப் முதல்வரின் வீட்டிற்கு அருகிலுள்ள மாந்தோட்டத்தில் வெடிகுண்டு கிடந்ததை ஆழ்குழாய் கிணறு ஆபரேட்டர் கண்டுபிடித்து தகவல் கொடுத்தார்.

    இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வெடிகுண்டு பத்திரமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்திய ராணுவத்தின் மேற்கு பிரிவும் விசாரணைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வெடிகுண்டு எப்படி அங்கு வந்தது? என்பது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது.

    வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டபோது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வீட்டில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெடிகுண்டு வீசி தொழில் அதிபரை கொல்ல முயன்ற மர்ம நபர்களை தேடி வருகிறார்கள்.
    • போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள செவல்பட்டியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 29). இவர் அதே பகுதியில் கார்மெண்ட்ஸ் நடத்தி வருகிறார். இவர் தினமும் இரவில் அலுவலகத்திலேயே தூங்குவது வழக்கம்.

    சம்பவத்தன்று இரவு விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வாசலில் கட்டிலில் தூங்கி னார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கார்மெண்ட்சுக்குள் நுழைய முயன்றனர். சத்தம் கேட்டு எழுந்த விக்னேஷ் யார் என்று பார்ப்பதற்குள் மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். மறுநாள் இரவும் விக்னேஷ் கார்மெண்ட்ஸ் வெளியே தூங்கினார்.

    நள்ளிரவு அங்கு வந்த முகமூடி நபர்கள் 2 பேர் தாங்கள் வைத்திருந்த மண்எண்ணை குண்டை எடுத்து வீசி விட்டு தப்பினர். இதில் கட்டிலில் பட்டு அவை வெடித்தன. இதில் அதிர்ஷ்வசமாக விக்னேஷ் காயமின்றி உயிர் தப்பினார். ஆனால் கட்டில் எரிந்து நாசமானது.

    இதுகுறித்த புகாரின்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் சம்பவ இடம் வந்து நேரில் விசாரணை நடத்தினார்.

    சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரண மாக விக்னேசை கொல்ல முயற்சி நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
    • குண்டு வெடிப்பில் கார்கள் பைக்குகள் மற்றும் போலீஸ் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் கெங்காதர நல்லூரில் காவல் நிலையம் இயங்கி வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த காவல் நிலையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு பகுதியில் பாறைகளை உடைக்க பயன்படுத்தும் மருந்து பொருட்களை உரிமம் இல்லாமல் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    அதன் பேரில் அங்கு சென்ற போலீசார் அங்கிருந்து 713 கிலோ எடையுள்ள வெடி தயாரிக்கும் பொருட்களை பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்தனர். அதன் பின்னர் வெடிபொருட்களை போலீசார் அழித்துவிட்டனர். மீதமிருந்த 250 கிராம் எடையுள்ள வெடிபொருட்களை காவல் நிலைய வளாகத்தில் உள்ள ஆலமரத்தின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்து அதன் மீது கான்கிரீட் அமைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை 3.45 மணிக்கு ஆலமரத்தின் அடியில் புதைக்கப்பட்டிருந்த வெடிகுண்டுகள் திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார்கள் பைக்குகள் மற்றும் காவல் நிலைய கதவு ஜன்னல் மற்றும் சுவர்கள் சேதம் அடைந்தன.

    அதிர்ஷ்டவசமாக அப்போது பணியில் இருந்த போலீசார் யாருக்கும் எந்தவித காயமும் ஏற்படவில்லை.

    இதுகுறித்து தகவல் அறிந்த சித்தூர் டி.எஸ்.பி. சுதாகர் ரெட்டி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "இந்த வெடிகுண்டு விபத்து காரணமாக போலீசாருக்கோ பொதுமக்களுக்கோ எந்த காயமும் ஏற்படவில்லை.

    வெடிகுண்டு விபத்து குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வெடிபொருட்களை மரத்துக்கு அடியில் புதைத்து வைத்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என தெரிவித்தார்.

    சமூக விரோதிகள் யாராவது சதி செயலில் ஈடுபட்டார்களா? அல்லது எதேச்சையாக நடந்ததா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர்.
    • நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொண்டல் கிராமத்தை சேர்ந்தவர் பூபாலன் (வயது 29). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வந்தார். தற்போது விடுமுறைக்காக சொந்த ஊருக்கு வந்திருந்தார்.

    இவரது வீட்டின் அருகே அமைந்துள்ள அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் வள்ளுவக்கு டியை சேர்ந்த பிரகாஷ் உள்ளிட்ட வாலிபர்கள் சிலர் மது அருந்தினர். இதனை பார்த்த பூபாலன் ஏன் பள்ளி வளாகத்தில் மது அருந்துகிறீர்கள் என்று தட்டி கேட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் பூபாலனிடம் தகராறு செய்துவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இந்நிலையில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பூபாலனை மீண்டும் பிரகாஷ் உள்ளிட்ட சிலர் வழிமறித்து மிரட்டி உன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசுவோம் என எச்சரித்துள்ளனர். இது குறித்து சீர்காழி போலீஸ் நிலையத்தில் பூபாலன் புகார் செய்தார்.

    இந்த சூழ்நிலையில் நேற்று நள்ளிரவு பூபாலன் வீட்டிற்கு வந்த பிரகாஷ் உள்ளிட்டோர் எச்சரித்தபடி பெட்ரோல் குண்டு வீசினர். ஆனால் அதிர்ஷ்டவசமாக அந்த குண்டு வீட்டின் சுவற்றின் அருகே விழுந்து வெடித்ததில் அங்கிருந்த மரம் லேசாக பற்றி எரிந்தது. சத்தம் கேட்டு வெளியே வந்த பூபாலனை பார்த்த அவர்கள் அங்கிருந்து ஓடி விட்டனர். இது பற்றி சீர்காழி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர்.
    • விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு, சனிக்கிழமை அதிகாலை 63 வயது முதியவர் மனைவியுடன் விமானம் மூலம் வெளிநாடு செல்ல வந்தார்.

    அதிகாலை 1.30 மணியளவில் விமான நிலையத்தை அடைந்த அவர்கள் அவசர அவசரமாக புறப்பட தயாராக இருந்தனர். ஆனால் செக்-இன் கவுன்டரில் இருந்த ஊழியர்கள், அவர்களது உடமைகளை சோதனை செய்வதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது.

    இது முதியவருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் தனது பெட்டியில் வெடிகுண்டு இருப்பதாக அவர் கூறினார். இது விமான நிலையத்தில் பீதியைத் தூண்டியது.அதைத் தொடர்ந்து விமான நிலைய பாதுகாப்பு பிரிவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    அவர்கள் விரைந்து வந்து முதியவரை பிடித்து நெடுவாசல் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரணை நடத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

    ×