search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இறுதி ஊர்வலம்"

    • வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.
    • புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

    ஒடிசா:

    ஒடிசா மாநிலத்தில் இறந்துவிட்டதாக கருதி மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட புஜ்ஜி ஆம்மா (52) என்ற பெண் புதைப்பதற்கு முன்பு கண்விழித்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர்.

    பிப்ரவரி 1-ம் தேதி வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த புஜ்ஜி, சிகிக்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் வறுமையின் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையை தொடர முடியாமல், புஜ்ஜியை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்து வந்து கவனித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில் பிப்ரவரி 12-ம் தேதி அதிகாலையில், புஜ்ஜி கண்விழிக்காததால் அவர் இறந்துவிட்டதாக நினைத்து, இறுதி சடங்கிற்கு குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர். ஆனால் மயானத்தில் புதைப்பதற்கு முன்பு அவர் எழுந்து வந்ததால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். பின்பு இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருந்த அதே வாகனத்திலேயே மீண்டும் அவரை வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

    • மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன் சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.
    • மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தென்கரை பேட்டையைச்சேர்ந்தவர் மூவேந்தன்(வயது30). கொத்தனார் வேலை செய்து வரும் இவரது ஊரைச்சேர்ந்த ராமமூர்த்தி இறந்துவிட்டார். இவரது இறுதி ஊர்வலம் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. கோட்டுச்சேரி வடமட்டம் சாலையில் ஊர்வலம் சென்றபோது, அவ்வழியே மூவேந்தன் சென்றுள்ளார். அப்போது மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன்(21) , சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த மூவேந்தன் ஏன் சாலை நடுவே ஆடுகிறாய் ஓரமாக சென்று ஆடு என கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்பாண்டியன், நீ யார் என்னை கேள்வி கேட்பதற்கு என, கீழே தள்ளிவிட்டு, சாலையில் கிடந்த செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நேற்று கோட்டுச்சேரி போலீசில் மூவேந்தன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது.
    • துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.

    அபுஜா:

    நைஜீரியா நாட்டின் தென்மேற்கு மாகாணமான ஒட்டோவில் இறுதிச்சடங்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் உயிரிழந்தவரின் உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். அப்போது திடீரென பயங்கர ஆயுதங்களுடன் வந்த மர்ம நபர்கள் அவர்களை சுற்றி வளைத்தனர்.

    இதனையடுத்து துப்பாக்கி முனையில் சுமார் 25 பேரை அவர்கள் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. ஆனால் அவர்கள் யார்? எதற்காக கடத்தினார்கள்? என்பது இன்னும் தெரியவில்லை. எனவே போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

    • வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.

    அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.

    இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

    இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.

    அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×