search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Funeral Procession"

    • மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன் சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.
    • மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த கோட்டுச்சேரி தென்கரை பேட்டையைச்சேர்ந்தவர் மூவேந்தன்(வயது30). கொத்தனார் வேலை செய்து வரும் இவரது ஊரைச்சேர்ந்த ராமமூர்த்தி இறந்துவிட்டார். இவரது இறுதி ஊர்வலம் கடந்த 1-ந் தேதி நடைபெற்றது. கோட்டுச்சேரி வடமட்டம் சாலையில் ஊர்வலம் சென்றபோது, அவ்வழியே மூவேந்தன் சென்றுள்ளார். அப்போது மூவேந்தன் ஊரைச்சேர்ந்த தமிழ்பாண்டியன்(21) , சாலை நடுவே ஆடி சென்றதாக கூறப்படுகிறது.

    இதை பார்த்த மூவேந்தன் ஏன் சாலை நடுவே ஆடுகிறாய் ஓரமாக சென்று ஆடு என கூறியதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த தமிழ்பாண்டியன், நீ யார் என்னை கேள்வி கேட்பதற்கு என, கீழே தள்ளிவிட்டு, சாலையில் கிடந்த செங்கல்லால் தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மூவேந்தன் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இது குறித்து நேற்று கோட்டுச்சேரி போலீசில் மூவேந்தன் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.
    • வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முதலியார் பேட்டை அனிதா நகர் தியாகு முதலியார் வீதி, ஹவுஸ்சிங் போர்டு குடியிருப்பை சேர்ந்தவர் ராஜி (வயது 32).

    லாரி டிரைவரான ராஜி. குடும்ப பிரச்னை காரணமாக மனைவியை பிரிந்து வசித்து வந்தார்.

    தேங்காய்திட்டில் வசித்து வந்த ராஜிவின் உறவினர் ஒருவர் இறந்தார். அவரது இறுதி ஊர்வலம் நேற்று மாலை நடந்தது.

    இறுதி ஊர்வலத்தில் ராஜி பட்டாசு வெடித்தபடி சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வேல்ராம்பட்டை சேர்ந்த நிர்மல், ஹரி ஆகியோர் வெடிக்க பட்டாசு கேட்டனர். அப்போது அவர் நீங்கள் சின்ன பசங்க... உங்களுக்கு பட்டாசு வெடிக்க தெரியாது என்று கூறியுள்ளார்.

    இதனால் ராஜிக்கும் அவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இதில் ராஜி அவர்களை தாக்கியுள்ளார்.

    அவர்கள் ராஜிவை தாக்க முயற்சித்த போது உறவினர்கள் தடுத்து சமாதானம் செய்தனர். இதனால் இறுதி ஊர்வலத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

    இதனிடையே முதலியார்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது தங்களுக்குள் பேசி தீர்த்து கொள்வதாக இருதரப்பும் கூறியதால் போலீசார் திரும்பி சென்றனர்.

    இறுதி சடங்கு முடிந்த பின்பு ராஜி வீட்டிற்கு வந்தார். அவரை பின் தொடர்ந்து நிர்மலும், ஹரியும் வந்தனர். ராஜியின் வீட்டை அடையாளம் தெரிந்த பின்னர் அவர்கள் திரும்பி சென்றனர்.

    இரவு 8.30 மணிக்கு அருகில் உள்ள ஓட்டலுக்கு ராஜி சென்று டிபன் வாங்கி கொண்டு வீட்டின் மாடிக்கு ராஜி சென்றார்.

    அப்போது அவருக்கு பின்னால் பைக்கில் வந்த நிர்மலும், ஹரியும் தாங்கள் கொண்டு வந்த நாட்டு வெடிகுண்டை எடுத்து ராஜி மீது வீசினர்.

    அவரது முதுகில் வெடிகுண்டு விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதில் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே ராஜி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். வெடிகுண்டு பயங்கர சத்ததுடன் வெடித்ததில் அக்கம்பக்கத்தில் உள்ள மக்கள் அலறியடித்து கொண்டு வெளியே ஓடிவந்தனர்.

    அங்கு ராஜி வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அங்கு நின்ற கொலையாளிகள் 2 பேரும் பொதுமக்கள் வருவதை பார்த்ததும் பைக்கில் ஏறி தப்பி சென்றனர்.

    இதுகுறித்து முதலியார்பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    போலீசார் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த ராஜி உடலை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து வழக்கு பதிவு செய்து நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடிவருகின்றனர்.

    வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். நாட்டு வெடிகுண்டு புதிதாக தயாரிக்கப்பட்டது தெரியவந்தது.

    ஆட்கள் நடமாட்டம் அதிகம் உள்ள குடியிருப்பு பகுதியில் வெடிகுண்டு வீசி டிரைவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சிகிச்சை பலனின்றி பரிதாபம்
    • மனைவி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த ஓய்வு பெற்ற போலீஸ்காரர் பலராமன் என்பவருடைய மனைவி ராஜாமணி இவர் கடந்த மாதம் 26-ந் தேதி இறந்து விட்டார்.

    சவ ஊர்வலத்தின் போது உடன் வந்தவர்கள் பட்டாசுகளை ெவடித்துள்ளனர்.

    அப்போது எதிர்பாராத விதமாக பட்டாசு வெடித்து சிதறி உள்ளது. அதன் தீப்பொறி வாகனத்தில் விழுந்து அதிலிருந்த பட்டாசுகளை வெடித்து சிதறின.

    அப்போது அந்த வண்டியில் இருந்த கள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (வயது 32) கே.வி.குப்பம் அடுத்த கீழ்ஆலத்தூர் நாகல் கிராமத்தைச் சேர்ந்த டில்லிபாபு (27) ஆகிய இருவர் மீதும் பட்டாசு விழுந்து வெடித்ததில் பலத்த காயம் அடைந்தனர்.

    இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரபாகரன் சிகிச்சை பலனின்றி கடந்த 1-ந் தேதி பரிதாபமாக இறந்தார்.

    மேலும் அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த டில்லி பாபு நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். சவ ஊர்வலத்தில் பட்டாசு வீசிய சம்பவத்தில் காயமடைந்த இருவரும் இறந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இறந்து போன டில்லிபாபுக்கு ரம்யா என்ற மனைவியும் 2 பெண் குழந்தையும் உள்ளது தற்போது ரம்யா 8 மாத கர்ப்பிணியாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது.
    • 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.

    கடலூர்:

    கடலூர் அருகே வெள்ளப் பாக்கம் பகுதியில் சவ ஊர்வலம் சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு கும்பல் ஆடிக்கொண்டு சென்றார்கள். இதனை அதே பகுதியை சேர்ந்த மணிவர்மன் என்பவர் தட்டி கேட்டார். அப்போது இரு தரப்பினருக்கு வாய் தகராறு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த முன் விரோதம் காரணமாக அதே பகுதியை சேர்ந்த 4 பேர் கொண்ட ஒரு கும்பல் மணி வர்மன் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து மணிவர்மனை தாக்கினர்.

    இதனை தட்டிக் கேட்ட உறவினர் பன்னீர் செல்வியை அடித்தனர். மேலும் இதனை பார்த்த மணிவர்மன் அண்ணன் அன்பு நேசமணியினை இந்த கும்பல் சரமாரியாக தாக்கி, மோட்டார் சைக்கிளை அடித்து சேதப்படுத்தி கொலை மிரட்டல் விடுத்து சென்றனர். இதில் காயம் அடைந்த மணிவர்மன் மற்றும் பன்னீர்செல்வி ஆகியோர் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் மணிவர்மன் கொடுத்த புகாரின் பேரில் தினேஷ், திவாகர், மோகன், புகழேந்தி ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×