என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெடிகுண்டு வீசி டிரைவரை கொன்ற 6 பேர் கைது
    X

    கொலை செய்யப்பட்ட ராஜூ.

    வெடிகுண்டு வீசி டிரைவரை கொன்ற 6 பேர் கைது

    • தற்போது இவ்வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
    • சவ ஊர்வலத்தில் பலரும் இருக்கும் போது ராஜி எங்களை தாக்கி அவமானப்படுத்தினார்.இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை முதலியார் பேட்டை தியாகு முதலியார் நகர் குடியிருப்பை சேர்ந்த வர் ராஜி (32).

    லாரி டிரைவரான ராஜி மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் மாலை தேங்காய்திட்டில் நடந்த உறவினரின் இறுதிச் சடங்கில் ராஜி பங்கேற்று பட்டாசு வெடித்து சென்றார்.

    அப்போது அவருக்கும், ஹரி, நிர்மல் ஆகியோர் இடையே பட்டாசு வெடிப்பதில் மோதல் ஏற்பட்டது. இறுதிச்சடங்கு முடிந்து வீடு திரும்பிய ராஜூவை பின்தொடர்ந்து வந்த கும்பல் வெடிகுண்டு வீசி கொலை செய்தது.

    குடியிருப்புகள் நிறைந்த மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வீடு புகுந்து வெடிகுண்டு வீசி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த சம்பவத்தில் இறுதி ஊர்வலத்தில் ராஜூவிடம் பட்டாசு கேட்டு தகராறு செய்த நிர்மல், ஹரி ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

    அதோடு அவர்களுக்கு வெடிகுண்டு சப்ளை செய்த வர்கள், உடந்தையாக இருந்தவர்களையும் போலீசார் தேடினர்.

    நிர்மல், ஹரி, பிரகாஷ், ரெனி, மோகன்ராஜ், ரஞ்சித் ஆகியோரும், வெடிகுண்டு கொடுத்த லோகபிரகாஷ் ஆகிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

    அவர்களிடம் தொடர்ந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது கொலை யாளிகள் போலீசாரிடம் கூறியிருப்பதாவது:-

    சவ ஊர்வலத்தில் பலரும் இருக்கும் போது ராஜி எங்களை தாக்கி அவமானப்படுத்தினார்.இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டது.

    திருப்பி தாக்க முயன்ற போது எங்களை மற்றவர்கள் தடுத்து விட்டனர். ஆனாலும் எங்களுக்கு ஆத்திரம் அடங்கவில்லை. ராஜியை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

    அதற்காக எங்களின் நண்பர்கள் உதவியை நாடினோம். அவர்கள் எங்களுக்கு கொலை செய்ய நாட்டு வெடிகுண்டுகளை கொடுத்தனர். அதன் மூலம் ராஜியை வெடிகுண்டு வீசி கொலை செய்தோம் என்று போலீசாரிடம் அவர்கள் தெரிவித்ததாக கூறப்படு கிறது.

    இந்த வழக்கில் மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×