search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயணி"

    • இருக்கையின் கீழ் வெடிகுண்டு இருப்பதாக தெரிவித்தார்.
    • விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

    மும்பையில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட வேண்டிய இன்டிகோ விமானம் பயணி ஒருவரால் தாமதமாக கிளம்பி சென்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது. பயணம் செய்வதற்காக இன்டிகோ விமானத்தில் ஏறிய பயணி ஒருவர், தனது இருக்கையின் கீழ் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து இருக்கிறார்.

    குடியரசு தினமான ஜனவரி 26-ம் தேதி மாலை வேளையில் இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக பயணி தெரிவித்ததை அடுத்து, அந்த பகுதியில் பரபரப்பான சூழல் நிலவியது. வெடிகுண்டு புகாரை அடுத்து விமானம் முழுக்க தீவிர சோதனை நடத்தப்பட்டது.

     

    கோப்புப்படம் 

    கோப்புப்படம் 


    விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக தகவல் கிடைத்ததும், மும்பை காவல் துறை மற்றும் விமான நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணையை மேற்கொண்டனர். விமானத்தில் நடத்தப்பட்ட தீவிர சோதனையில், சந்தேகத்திற்குரிய வகையில் எந்த பொருளும் கிடைக்கப்பெறவில்லை.

    இதைத் தொடர்ந்து வெடிகுண்டு இருப்பதாக குற்றம்சாட்டிய 27 வயதான பயணி மீது காவல்துறையினர் இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர்.
    • உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சேலம்:

    மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் கான்பட் (68). இவர் மனைவியுடன் மதுரையில் இருந்து தாதர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று புனேக்கு புறப்பட்டார். நேற்று நள்ளிரவு 12 மணியளவில் சேலம் அருகே ரெயில் வந்தபோது கான்பட் மயங்கி விழுந்தார். அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறினர். இது தொடர்பாக அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதேபோல் சேலம் ஜங்ஷன் ரெயில் நிலைய 1-வது பிளாட்பாமில் 55 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் நேற்று இரவு மயங்கிய நிலையில் கிடந்தார். இதனை பார்த்த போலீசார் அவரை மீட்டு ரெயில்வே டாக்டர்கள் மூலம் பரிசோதித்தனர். அப்போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது. அவரது உடல் சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.
    • குருவாயூர் - ராமேஸ்வரத்திற்கு 496 கி.மீ தூரத்தில் நேரடியாக வந்தே பாரத் ரெயில் இயக்க வேண்டும்.

    உடுமலை

    கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி ெரயில்வே நிலையத்தை பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை, ஆனைமலை , உடுமலை ஆகிய தாலுகா மக்கள் பயன்படுத்துகின்றனர்.இந்நிலையில் குருவாயூர் - ராமேஸ்வரத்துக்கு வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டுமென பொள்ளாச்சி ெரயில் பயணிகள் நலச்சங்கத்தினர், தெற்கு ெரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பினர். மனுவுடன் எந்த வழித்தடத்தில் ெரயில் இயக்க வேண்டுமென வரைபடத்தையும் சேர்த்து அனுப்பியுள்ளனர்.

    இது குறித்து பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் கூறியதாவது:-

    குருவாயூரில், ஸ்ரீ கிருஷ்ணர் கோவிலும், பாலக்காட்டில் சைலண்ட் வேலி, நெல்லியம்பதி மலை, மலம்புழா அணை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன.ராமேஸ்வரத்தில், ராமநாத சுவாமி கோவில், ராமநாதபுரத்தில் ஏர்வாடி தர்கா போன்ற முக்கிய புனித தலங்கள் உள்ளன. மதுரை மீனாட்சி அம்மன் கோவில், பழநியில் முருகன் கோவில் உள்ளது.

    தென் மாநிலத்தில் உள்ள பக்தர்களும், பிற நாடுகளில் இருந்தும் இக்கோவிலுக்கு வந்து செல்கின்றனர். பழநி அருகே புகழ் பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலும் உள்ளது.பொள்ளாச்சி அருகே ஆனைமலை மாசாணியம்மன் கோவிலும், வால்பாறை மலை, ஆனைமலை புலிகள் காப்பகம் மற்றும் ஆழியாறு போன்ற சுற்றுலா தலங்களும் உள்ளன. உடுமலை அருகே, திருமூர்த்தி மலை கோவிலும்,மூணாறு, அமராவதி போன்ற வனப்பகுதிகளும் உள்ளன.

    ஆனால் பொள்ளாச்சி - உடுமலை - பழநி - ஒட்டன்சத்திரம் - மதுரை - ராமநாதபுரம் - ராமேஸ்வரத்துக்கு நேரடி ெரயில் வசதியில்லை. இதனால், பயணிகள் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

    எனவே, குருவாயூர் - ராமேஸ்வரம் இடையே குறைந்த தொலைவாக உள்ள, 496 கி.மீ., தூரத்துக்கு நேரடியாக வந்தே பாரத் ெரயில் இயக்க வேண்டும்.இந்த ெரயில், திருச்சூர், பாலக்காடு, பொள்ளாச்சி, பழநி, மதுரை வழியாக இயக்கப்பட வேண்டும். இதன் வாயிலாக, கேரளா மாநிலத்தின், பொன்னானி, திருச்சூர், பாலக்காடு, ஆலத்தூர் உள்ளிட்ட 4 பாராளுமன்ற தொகுதிகளும், தமிழகத்தின்,பொள்ளாச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட 5 பாராளுமன்ற தொகுதி மக்களும் பயன் பெற முடியும்.எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுத்து, ெரயில் இயக்க அதிகாரிகள் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மனு அனுப்பியுள்ளோம்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது.
    • பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது

    மார்த்தாண்டம் :

    மார்த்தாண்டத்தில் இருந்து விரிகோடு, கொல்லஞ்சி வழியாக இனையம் செல்லும் அரசு பஸ் இன்று காலை பயணிகளுடன் புறப்பட்டது. கொல்லஞ்சி செல்லும் பாதையில் பஸ் சென்ற போது எதிரே லாரி வந்துள்ளது. எனவே பஸ்சை டிரைவர் சற்று ஓரமாக ஓதுக்கினார்.

    அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் இருந்த ஓடையின் பக்க சுவர் இடிந்தது. இதனால் பஸ் ஓடைக்குள் இறங்கியது. இதனால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் கூச்சலிட்டனர். இருப்பினும் அதிர்ஷ்டவசமாக யாரும் காயம் இன்றி தப்பினர்.

    விரிகோடு மீன்கடை முன்பு பழுதடைந்து காணப்படும் சாலையை சீரமைக்காததால் பல்வேறு விபத்துகள் அந்த இடத்தில் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் அதிகாரிகள் யாரும் இதுவரை கண்டு கொள்ளவும் இல்லை. பொதுமக்கள் நடந்து செல்வதற்கு கூட லாயக்கற்றதாக இந்த சாலை இருக்கிறது. மேல விரிகோடிலிருந்து தபால் நிலையம் வரை கொஞ்ச தூரத்திற்கு மட்டும் சாலை போடாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளில் சாலை போடப்பட்டுள்ளது என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

    • தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
    • பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர்.

    பல்லடம், ஆக.22-

    பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:- இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.

    பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.

    எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.

    • பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது.
    • தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும்.

    திருப்பூர்:

    திருப்பூர் மத்திய பஸ் நிலையத்தில் மாநகர காவல்துறை சார்பில் பயணிகளின் உடமைகளை ஸ்கேனிங் செய்யும் நவீன எந்திரம் ரூ.12 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு நவீன எந்திரத்தை தொடங்கி வைத்தார்.

    சந்தேகத்துக்கு இடமான நபர்கள் கொண்டு வரும் உடைமைகளை எந்திரத்தின் வழியாக ஸ்கேன் செய்து பார்க்கும்போது உள்ளே, தடை செய்யப்பட்ட பொருட்கள், போதை பொருட்கள் இருப்பதை கண்டறியும் வகையில் கருவி நிறுவப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு கூறும்போது, "தடை செய்யப்பட்ட பொருட்கள், ஆயுதங்கள் இருந்தால் கண்டுபிடிக்க முடியும். கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களையும் கண்டறியலாம்" என்றார்.

    • ஒருவர் சிக்கினார்; மற்றொருவர் தப்பி ஓட்டம்
    • போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார்

    இரணியல், ஜூலை.20-

    கண்டன்விளையை சேர்ந்தவர் பிரபா. இவர் இன்று காலை மருத்துவ மனைக்கு செல்வதற்காக கண்டன்விளையில் இருந்து அரசு பஸ்சில் நாகர்கோவி லுக்கு புறப்பட்டு சென்றார். பஸ்சில் அவரது பின்னால் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நின்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தோட்டியோட்டில் இறங்கினர்.

    இதையடுத்து தோட்டி யோட்டில் இருந்து பஸ் சென்றது. அப்போது பிரபா தனது பர்சு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பஸ்சை நிறுத்த கூறினார். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்பு பிரபா பஸ்சில் இருந்து இறங்கி தோட்டியோடு பஸ் நிறுத்தத்திற்கு ஓடி வந்தார்.

    அப்போது இரு பெண்களில் ஒருவர் திங்கள் நகர் வந்த பஸ்சில் ஏறினார். இதனை அறிந்த பிரபா அங்கு நின்ற போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார் என கூறினார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் அங்கு நின்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று பரசேரியில் பஸ்சை மடக்கி நிறுத்தினர். பின்னர் அந்த பெண்ணை பிடித்து விசா ரித்தனர்.

    இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசா ரணை நடத்தினர். விசார ணையில் அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 31) என்பதும், பர்ஸை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவான மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.

    • அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது.
    • பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை.

    திருப்பூர் :

    அவிநாசியில் இருந்து இன்று காலை அரசு பஸ் ஒன்று திருப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தது. ஜெயபால் என்பவர் ஓட்டி வந்தார். இந்தநிலையில் பஸ் பழைய பஸ் நிலையம் வந்ததும் பயணிகள் அனைவரும் இறங்கினர்.

    ஆனால் ஒரு பயணி மட்டும் இறங்காமல் சீட்டில் தூங்கிய நிலையில் இருந்தார். இதையடுத்து நடத்துனர் தேவராஜ் அவரிடம் பஸ் நிலையம் வந்து விட்டது, கீழே இறங்கவும் என்று கூறினார். ஆனால் அந்தப் பயணி உடலில் இருந்து எந்த அசைவும் இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த நடத்துனர் அவரை சோதித்துப் பார்த்தபோது அவர் இறந்து இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து திருப்பூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர் .போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பஸ்சில் பிணமாக இருந்தவரை மீட்டு பிேரத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் அவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்று குறித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் திருப்பூர் அனுப்பர்பாளையத்தை சேர்ந்த அசோக்குமார் (வயது 52) என்பதும் வேலைக்காக இன்று காலை பஸ்சில் பழைய பஸ் நிலையத்துக்கு வந்த போது மாரடைப்பு ஏற்பட்டு இறந்து இருப்பதும் தெரியவந்தது.இது தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள்.
    • போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

    கொல்கத்தா:

    கத்தார் விமான நிறுவனத்துக்கு சொந்தமான விமானம் இன்று அதிகாலை 3.29 மணிக்கு மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா விமான நிலையத்தில் இருந்து லண்டன் புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தில் 541 பயணிகள் இருந்தனர்.

    அப்போது ஒரு பயணி திடீரென எழுந்து விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டு இருப்பதாக கூச்சலிட்டார். இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்,

    இது பற்றி உடனடியாக மத்திய தொழில்பாதுகாப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனே பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கி விடப்பட்டனர். பின்னர் வெடி குண்டு நிபுணர்கள் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவி உதவியுடன் விமானம் முழுவதும் சோதனை நடத்தினார்கள். ஆனால் இந்த சோதனையில் வெடி குண்டு எதுவும் சிக்கவில்லை. அது வெறும் புரளி என்பது தெரியவந்தது. இதை அறிந்த பயணிகள் நிம்மதி பெருமூச்சு விட்டனர்.

    இதையடுத்து போலீசார் வெடிகுண்டு இருப்பதாக சத்தம் போட்ட பயணியை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர் பக்கத்தில் இருந்த ஒருவர் தன்னிடம் இதுபற்றி கூறியதாக தெரிவித்தார்.

    உடனே போலீசார் அவரது தந்தையை விமானநிலையத்துக்கு வரவழைத்து விசாரித்த போது அந்த பயணிக்கு சற்று மனநலம் பாதிக்கப்ட்டு இருந்தது தெரியவந்தது. இதற்காக அவர் சிகிச்சை பெற்று வந்ததாக தந்தை தெரிவித்தார்.

    அந்த பயணி செய்த களேபாரத்தால் லண்டன் விமானம் தாமதமாக புறப்பட்டு சென்றது.

    • கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.
    • ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது.

    நாகர்கோவில்:

    சீனாவில் மீண்டும் கொேரானா பரவல் அதிக ரித்து உள்ள நிலையில் தமிழ கத்தில் முன்னெச்ச ரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    குமரி மாவட்டத்திலும் முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ஆசாரிப்பள்ளம் ஆஸ்பத்திரியில் கொரோனா வார்டு திறக்கப்பட்டு உள்ளது. மேலும் வெளிநாடு களில் இருந்து வருபவர்கள் கண்காணிக்கப்பட்டு வருகி றார்கள். குமரி மாவட்டத்தை ஓட்டியுள்ள கேரளாவில் முக கவசம் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் திருவ னந்தபுரத்தில் இருந்து குமரி மாவட்டத்திற்கு வரும் அனைத்து பஸ்களிலும் டிரைவர் கண்டக்டர்கள் முககவசம் அணிந்து பஸ் களை இயக்கி வருகிறார்கள். பஸ் பயணி களும் கட்டா யம் முககவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளனர். இதையடுத்து திருவனந்த புரத்திலிருந்து நாகர்கோவி லுக்கு வந்த அனைத்து பஸ் களிலும் பயணிகள் முக கவசம் அணிந்து இருந்தனர்.

    இதே போல் வடசேரி யில் இருந்து திருவனந்த புரத்திற்கு செல்லும் பஸ்களிலும் டிரைவர், கண்டக்டர்கள் முக கவசம் அணிந்து இருந்தனர். களியக்கா விளையை தாண்டி திருவனந்த புரத்திற்கு செல்லும் பயணிகள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து கழக அதிகாரி கள் அறிவுறுத்தி உள்ளனர்.

    குமரி மாவட்டத்தை பொருத்தமட்டில் பெரும்பா லான ஆஸ்பத்திரிகளிலும் முககவசம் கட்டாயமாக்கப் பட்டு உள்ளது. ஆஸ்பத்தி ரிக்கு வரும் பொதுமக்கள் ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிய தொடங்கி உள்ளனர்.குமரி மாவட்டத்தை பொறுத்த மட்டில் கடந்த சில நாட்க ளாக கொரோனா பாதிப்பு எதுவும்

    இல்லை. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து அவர்கள் வீட்டுத் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சளி தொல்லை, மூச்சு திணறல் இருந்தால் உடனடியாக பக்கத்தில் உள்ள சுகாதார மையத்தில் பரிசோதனை மேற்கொண்டு சிகிச்சை பெற்றுக் கொள்ளுமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத் துள்ளனர்

    கொரோனாவை கட்டுப் படுத்தும் வகையில் தடுப்பூசி போடப்பட்டது. முதல் டோஸ் தடுப்பூசி செலுத்திய பலரும் குறிப் பிட்ட நாட்கள் கழிந்த பிறகும் 2-வது டோஸ் தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். தடுப்பூசி செலுத்தாதவர்கள் கொரோனா பரவல் அதிக ரிக்க தொடங்கியதை யடுத்து தடுப்பூசி செலுத்துவதற்காக அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலை யங்களுக்கு சென்றனர்.

    ஆனால் கோவிஷீல்டு தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கோவாக்சின் தடுப்பூசி மட்டுமே இருப்பு உள்ளது.

    • சுற்றுலாத்துறை சார்பில் 14-ந்தேதி நடக்கிறது
    • கொட்டாரம் அருகே உள்ள சந்தையடியில் ஏற்பாடு

    கன்னியாகுமரி:

    குமரி மாவட்ட சுற்றுலா துறை சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் சுற்றுலா விழா கன்னியாகுமரி அருகே உள்ள கிராமப்புறங்களில் கொண்டாடப்படுவது வழக்கம்.கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை இந்த கிராமப்புறங்களுக்கு அழைத்துச் சென்று பொங்கல் இடும் நிகழ்ச்சியை காண செய்வார்கள்.

    அப்போது கிராமப்புற கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும். அதேபோல இந்த ஆண்டு குமரி மாவட்ட சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் சுற்றுலா விழா வருகிற 14-ந்தேதி காலை 6 மணிக்கு கொட்டாரம் அருகே உள்ள சந்தையடி கிராமத்தில் நடக்கிறது. அன்றைய தினம் கன்னியாகுமரிக்கு சுற்றுலா வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை தமிழக பாரம்பரிய கலாச்சார முறைப்படி வேட்டி சேலை அணியச் செய்து அந்த கிராமத்துக்கு சுற்றுலாத் துறையினர் அழைத்துச் செல்வார்கள்.

    அங்கு ஒரே இடத்தில் 100-க்கும் மேற்பட்ட பானைகளில் கிராம மக்கள் பொங்கல் இடும் நிகழ்ச்சி நடக்கிறது. ஒரே இடத்தில் 100 பானைகளில் பொங்கலிடும் நிகழ்ச்சியை வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் கண்டு களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள் ளது. அப்போது ஆர்வமிகுதி யால் ஒருசில வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பொங்கல் பானையில் பொங்கல் இடுவார்கள். கரும்புகளை கடித்து ருசிப்பார்கள். வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் தமிழக பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், நையாண்டி மேளம், செண்டை மேளம், தப்பாட்டம், மகுட ஆட்டம், சிலம்பாட்டம், ஒயிலாட்டம், போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறு கின்றன. இதில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் கலந்து கொண்டு தலையில் கரகம்எடுத்து ஆடுவார்கள். இந்த நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் தலைமை தாங்குகிறார். அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி முன்னாள் தலைவர் சந்தையடி பாலகிருஷ்ணன் முன்னிலை வகிக்கிறார். இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட சுற்றுலா அலுவலர் சதீஷ்குமார் உதவி சுற்றுலா அலுவலர் கீதா ராணி மற்றும் சுற்றுலா துறையினர் செய்து வருகிறார்கள்.

    • தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன்..?
    • நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார்.

    அமெரிக்கா நியூயார்க் நகரில் இருந்து டெல்லிக்கு சம்பவத்தன்று ஏர் இந்தியா விமானம் வந்து கொண்டு இருந்தது. இதில் பிசினஸ் வகுப்பில் மும்பையை சேர்ந்த சங்கர் மிஸ்ரா என்ற தொழில் அதிபர் பயணம் செய்தார். அவர் குடிபோதையில் இருந்தார்.

    விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது சங்கர் மிஸ்ரா இருக்கையில் அமர்ந்தவாறு திடீரென சிறுநீர் கழித்தார்.

    இதனால் பக்கத்தில் இருந்த பெண் பயணி ஒருவரின் உடை மற்றும் அவரது பையில் சிறுநீர்பட்டு நனைந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண், விமான பணியாளர்களிடம் இதுபற்றி கூறினார்.

    ஆனால் அவர்கள் பெண் பயணியை தொட மறுத்தனர். அவரது காலணி மற்றும் பை மீது கிருமி நாசினி தெளித்தனர்.மேலும் பைஜாமா மற்றும் கையுறையும் கொடுத்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து அவர் தனக்கு இருக்கையை மாற்றி தருமாறு கேட்டார். ஆனால் வேறு இருக்கை இல்லை எனக்கூறி அவருக்கு மாற்று இருக்கை கொடுக்க விமான பணியாளர்கள் மறுத்துவிட்டனர்.

    விமானம் தரை இறங்கியதும் அந்த பெண் பயணி தன் மீது சிறுநீர் கழித்த தொழில் அதிபரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு விமான நிலைய அதிகாரிகளிடம் புகார் அளித்தார். சிறிது நேரம் கழித்ததும் அந்த பெண், தொழில் அதிபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என தெரிவித்தார். இதனால் இருவரும் சமாதானமாகி சென்றுவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    தொழில் அதிபரை கைது செய்ய வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்த அந்த பெண் பயணி திடீரென மனம் மாறியது ஏன் என்பது குறித்து புதிய தகவல் கிடைத்துள்ளது.

    சம்பவம் நடந்த அன்று சங்கர் மிஸ்ராவிடம் நடந்த விவரம் குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அந்த சமயம் அங்கு இருந்த பெண் பயணியை பார்த்த அவருக்கு கண்களில் இருந்து பொலபொல வென கண்ணீர் வடிந்தது. நடந்த சம்பவத்திற்காக என்னை மன்னித்து விடுங்கள் என அவர் அந்த பெண்ணிடம் கண்ணீர் விட்டு கதறினார்.

    நீங்கள் செய்த செயல்களை மன்னிக்க முடியாது என பெண் பயணி கோபத்துடன் கூறினார். ஆனாலும் என்னை பற்றி கேள்விபட்டால் மனைவியும் குடும்பத்தினரும் பாதிக்கப்படுவார்கள்.

    அதனால் தன்மீது புகார் எதுவும் கொடுக்க வேண்டாம் என கெஞ்சினார். அந்த பெண் அவர் மீது மேலும் குற்றம் சுமத்தினால் கடினமாக இருக்கும் என நினைத்து நடந்ததை கெட்ட கனவாக எண்ணி புகார் கொடுக்காமால் சமாதான மாக சென்று விட்டார். இதனால் தொழில் அதிபர் தண்டணையில் இருந்து தப்பிவிட்டார்.

    ×