search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாகர்கோவில் வந்த பஸ்சில் பயணியிடம் பர்சை திருடிய வடமாநில பெண்கள்
    X

    நாகர்கோவில் வந்த பஸ்சில் பயணியிடம் பர்சை திருடிய வடமாநில பெண்கள்

    • ஒருவர் சிக்கினார்; மற்றொருவர் தப்பி ஓட்டம்
    • போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார்

    இரணியல், ஜூலை.20-

    கண்டன்விளையை சேர்ந்தவர் பிரபா. இவர் இன்று காலை மருத்துவ மனைக்கு செல்வதற்காக கண்டன்விளையில் இருந்து அரசு பஸ்சில் நாகர்கோவி லுக்கு புறப்பட்டு சென்றார். பஸ்சில் அவரது பின்னால் சுமார் 30 வயது மதிக்கத்தக்க 2 பெண்கள் நின்றுள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் தோட்டியோட்டில் இறங்கினர்.

    இதையடுத்து தோட்டி யோட்டில் இருந்து பஸ் சென்றது. அப்போது பிரபா தனது பர்சு மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் பஸ்சை நிறுத்த கூறினார். உடனடியாக டிரைவர் பஸ்சை நிறுத்தினார். பின்பு பிரபா பஸ்சில் இருந்து இறங்கி தோட்டியோடு பஸ் நிறுத்தத்திற்கு ஓடி வந்தார்.

    அப்போது இரு பெண்களில் ஒருவர் திங்கள் நகர் வந்த பஸ்சில் ஏறினார். இதனை அறிந்த பிரபா அங்கு நின்ற போக்குவரத்து போலீசாரிடம், அந்த இளம்பெண் பர்சை பறித்து விட்டு பஸ்சில் ஏறி தப்பி செல்கிறார் என கூறினார்.

    இதையடுத்து போலீசார் மற்றும் அங்கு நின்ற வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் விரைந்து சென்று பரசேரியில் பஸ்சை மடக்கி நிறுத்தினர். பின்னர் அந்த பெண்ணை பிடித்து விசா ரித்தனர்.

    இதுகுறித்து இரணியல் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து அந்த பெண்ணிடம் விசா ரணை நடத்தினர். விசார ணையில் அந்த பெண் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த லட்சுமி (வயது 31) என்பதும், பர்ஸை திருடி சென்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலை மறைவான மற்றொரு பெண்ணை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×