என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நாகர். ரெயில் நிலையத்தில் பயணி சுருண்டு விழுந்து சாவு
- நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.
நாகர்கோவில்:
குழித்துறை அருகே உள்ள நடைக்காவு பகுதியை சேர்ந்தவர் லூக்காஸ் (வயது 52).
இவர், சென்னையில் உள்ள துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்தார். உடல் நலம் பாதிக்கப்பட்டதையடுத்து சென்னையில் இருந்து லூக்காஸ் ஊருக்கு புறப் பட்டார். நேற்று மாலை சென்னையில் இருந்து கன்னியாகுமரி புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயிலில் அவர் பயணம் செய்தார்.
இன்று காலை கன்னியா குமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. இதையடுத்து லூக்காஸ் ரெயில் பெட்டியில் இருந்து இறங்கினார். பின்னர் அவர் குழித்துறை செல்வதற்காக மற்றொரு ரெயிலில் ஏற பிளாட்பாரத்தில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது லூக்காஸ் பிளாட்பாரத்தில் திடீ ரென சுருண்டு விழுந்தார். இதை பார்த்த பயணிகள் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். உடனடி யாக பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பார்த்தனர். பின்னர் லூக்காசை சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் லூக்காஸ் இறந்து விட்டதாக தெரி வித்தனர்.
இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோத னைக்காக கொண்டு செல்லப்பட்டது. லூக்காஸ் இறந்தது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அவர்கள் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து வந்தனர்.
நாகர்கோவில் ரெயில்வே போலீசார் இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்