search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது.
    • வருகிற 3-ந்தேதி தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    சென்னை:

    பாராளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. முதலில் இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியுடனான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நேற்று நடைபெற்றது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சி நாளை தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் பேச உள்ளது. வருகிற 3-ந்தேதி தி.மு.க.- இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இடையே தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    இந்நிலையில் வருகிற 4-ந்தேதி திமுக - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

    2019 பாராளுமன்ற தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு கோவை, மதுரை என 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
    • அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும்.

    கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் ஏராளமான விவசாயிகள், வியாபாரிகள், பொதுமக்கள் நிலம் வைத்துள்ளனர். கடந்த 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தினால் அவர்கள் இந்த நிலத்திற்கான பட்டாவை வைத்து வங்கியில் கடன் பெற முடியாத சூழ்நிலையில் உள்ளனர்.

    இதனால் நிலப்பதிவு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வியாபாரிகள், விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.

    இதனைத் தொடர்ந்து மாநில அரசு இடுக்கி மாவட்டத்தில் 1953, 1959-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட நிலப்பதிவு சட்டத்தில் திருத்தம் செய்து அந்த மசோதாவை கேரள கவர்னர் ஆரிப் முகம்மது கானின் ஒப்புதலுக்கு அனுப்பி வைத்தது. ஆனால் கவர்னர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளார். கவர்னரின் செயலை கண்டித்து மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட்டு, இந்திய கம்யூனிஸ்ட்டு கூட்டணி கட்சிகள் சார்பில் நாளை (9ந் தேதி) இடுக்கி மாவட்டத்தில் முழு அடைப்பு போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போராட்டத்தின் போது அனைத்து வர்த்தக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் மூடப்படும். வாகன போக்குவரத்தும் நிறுத்தப்படும். ஆனால் ஐயப்பபக்தர்கள் வாகனங்கள், ஆம்புலன்ஸ், பால் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கான வாகனங்களுக்கு மட்டும் விதி விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பா.ஜ.க, அ.தி.மு.க எவ்வளவு பிரசாரம் செய்தாலும் எடுபடாது.
    • எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது.

    கோவை:

    கோவை காந்திபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    பா.ஜ.க., அ.தி.மு.க கட்சிகளை வீழ்த்துவதற்காக தி.மு.க. கூட்டணியில் உள்ளோம். அ.தி.மு.க., பா.ஜ.கவின் பி டீமாக செயல்படுகிறது.

    இந்த பாராளுமன்ற தேர்தலில் கடந்த அளவு கிடைத்த வெற்றி கூட இந்த முறை அ.தி.மு.க.வால் பெற முடியாது.

    சிறுபான்மையினருக்கு ஆதரவாக இருப்பது போல எடப்பாடி பழனிசாமி பேசி வருகிறார். முத்தலாக், சிஏஏ, காஷ்மீர் பிரிவினை போன்றவை கொண்டு வரப்பட்டபோது எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, தற்போது சிறுபான்மை மக்களின் காவலன் என அ.தி.மு.க. ஏமாற்ற பார்க்கின்றது.

    அதனை எடப்பாடி பழனிசாமி வேண்டுமென்றால் மறந்திருக்கலாம். சிறுபான்மை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். பா.ஜ.க, அ.தி.மு.க எவ்வளவு பிரசாரம் செய்தாலும் எடுபடாது.

    கோவை, மதுரை ஆகிய இரு தொகுதிகளில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றி பெற்றோம். அதேபோன்று வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் இந்த 2 தொகுதிகளையும் வலியுறுத்தி கேட்டு பெறுவோம். மதுரை, கோவை பாராளுமன்ற தொகுதிகளை கண்டிப்பாக கேட்போம்.

    எல்லா கட்சிகளையும் போல கூடுதலான தொகுதிகளில் போட்டியிட விருப்பம் உள்ளது. கூட்டணி தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் கூடுதல் தொகுதிகள் கேட்போம். தொகுதி பங்கீட்டில் பிரச்சனை ஏற்படும் என நினைக்கின்றனர். ஆனால் தொகுதி உடன்பாடு சுமூகமாக நடைபெறும்.

    உண்மைக்கு மாறான விஷயங்களை மோடி தொடங்கி அண்ணாமலை வரை பேசுகின்றனர். அண்ணாமலை மூளைக்கு எதுவும் தெரியாது. பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் காவிரி டெல்டா பகுதி என்பது பற்றி ஞானமே இல்லை.

    அண்ணாமலை ஞானசூனியமாக இருக்கின்றார். தமிழக வளர்ச்சிக்கு யார் அதிகம் இருந்திருக்கின்றனர், கம்யூனிஸ்டுகளா, பா.ஜ.க.வா என பகிரங்கமாக விவாதிக்க தயார்.

    தமிழக அரசு மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும். தமிழகத்தில் உள்ள தொழில்கள் வேறு பல மாநிலங்களுக்கு இடம் மாறும் நிலை இருக்கிறது.

    சிறுகுறு தொழில்முனைவோரிடம் பேச்சு நடத்தி தொழில் கடன்கள் வழங்கி அவர்கள் தொழில் தொடர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    விவசாயிகளின் மீது குண்டர் சட்டம் போடக்கூடாது என்பதை உடனே வலியுறுத்தினோம். தி.மு.க. கொடுத்து இருக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    போக்குவரத்து ஊழியர் சம்பள விவகாரம், பழைய ஓய்வூதியம் போன்றவை நிறைவேற்றப்பட வேண்டும். தொழில் துறையினருக்கு மின்கட்டண உயர்வை குறைக்க வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்
    • மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்ஜெட் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்க்கு மணிகண்டன் தலைமை தாங்கினார், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் செல்வம், மகேஷ், யோகராஜ் மற்றும் மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    • கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.
    • மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார்.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

    தமிழ்நாட்டில் கவர்னராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்து மாநில உருவாக்கத்தை கடித்து, மாநிலத்தின் பெயரைக் கடித்து, அரசமைப்புச் சட்டத்தின் விழுமியங்களைக் கடித்து, இப்போது மார்க்சையும், டார்வினையும் கடிக்க ஆரம்பித்திருக்கிறார். செக்கு என்றும், சிவன் என்றும் தெரியாமல் நடந்து கொள்வதைப் போல கவர்னர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் மார்க்சையும், மார்க்சியத்தையும் சாடியிருக்கிறார்.

    அறிவில் அந்நிய அறிவு, உள்ளூர் அறிவு என்றும் கிடையாது. சொல்லப்போனால் ஆர்.என்.ரவியின் ஞான பீடம் ஒரே கொடி, ஒரே தலைவர், ஒரே நாடு என்கிற உதவாக்கரை தத்துவத்தையும், சாகாவையும் பாசிஸ்ட் முசோலினியிடமிருந்தும், கொடி வணக்கம், மார்பில் கை வைத்து வணங்கும் முறை, சுவஸ்திக் ஆகியவற்றை ஹிட்லிரிடமிருந்தும் கடன்பெற்றுக் கொண்ட அமைப்பு.

    இன அழிப்புக் கொள்கைக்கு ஹிட்லரை முன்னோடியாக கொள்ள வேண்டும் என்று ஜெர்மன் நாஜியை குருவாக ஏற்றுக் கொண்ட அமைப்பு. தத்துவம், நடைமுறை என அனைத்தையும் ஐரோப்பாவிலிருந்து கடன் வாங்கிக் கொண்ட ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சார்ந்த ஆர்.என்.ரவி மார்க்சியத்தை அந்நிய தத்துவம் என்று பேசுவது அவரது அறியாமையையே காட்டுகிறது.

    மனிதகுல வரலாற்றில் ஆளும் வர்க்கத்தின் சுரண்டல், ஒடுக்குமுறை கொடுமைகளிலிருந்து உழைப்பாளி வர்க்கத்தை மீட்டு சுரண்டலற்ற பொதுவுடமை சமூகத்தை அமைக்க வழிவகுக்கும் மார்க்சிய சித்தாந்தத்தை விமர்சிப்பதன் மூலம் ஆளுநர் ரவி தான் ஆளும் வர்க்கத்தின் ஏஜெண்ட் என்பதையே வெளிப்படுத்தியுள்ளார். மார்க்சியம் இந்தியாவை சிதைத்துவிட்டது என்று பேசுகிறார்.

    பெருநோய்களை சிதைக்கும் தடுப்பு மருந்துகளை தவறானது என்று யாரும் பேச மாட்டார்கள். உலகத்தை அதன் அனைத்து விதமான கோரங்களிலிருந்தும் மீட்டெடுத்து அனைவருக்குமான பூமியாக மாற்றுவதே மார்க்சியத்தின் நோக்கம். அது சிதைக்கும் தத்துவமல்ல. அது செதுக்கும் தத்துவம். அறிவுச் சிதைவு ஏற்பட்டவர் மட்டுமே அதை சிதைக்கும் தத்துவமாக கருதுபவர்கள்.

    ஆர்.என்.ரவி அரசு அதிகாரத்தை பயன்படுத்திக் கொண்டு அடாவடித்தனமாகவும், பொருத்தமற்ற முறையிலும் பேசுவதை கண்டித்தும், மார்க்சியம் குறித்து அவதூறாக பேசியதற்கு வருத்தம் தெரிவிக்க வலியுறுத்தியும் அவர் செல்லுமிடம் எல்லாம் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பை தெரிவிப்பது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு முடிவு செய்துள்ளது.

    இதன் தொடக்கமாக 2023 பிப்ரவரி 28 அன்று கவர்னர் மாளிகை முன்பு கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறும். இப்போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகளும், ஜனநாயக முற்போக்கு இயக்கங்களும் கலந்துகொண்டு கருப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழகத்தில் 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்படுகின்றன.
    • ஆளுநரின் நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 

    நாடு முழுமையும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் நிழல் அரசாங்கங்களை நடத்த மத்திய அரசு முனைந்து வருகிறது. தமிழகத்தில் ஆர்.என்.ரவி, கேரளாவில் ஆரிப் முகமதுகான், தெலுங்கானாவில் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்ட ஆளுநர்கள் கடைப்பிடிக்கும் போக்குகள் அரசியல் சாசனத்தை அத்து மீறுபவை.

    சர்ச்சைக்குரிய பேச்சுக்கள், அரசியல் சாசனம் மீறிய நடவடிக்கைகள், சட்டமன்றங்களை அவமதிக்கும் வகையில் மசோதாக்களை கிடப்பில் போடுவது என ஆளுநர்களின் அத்துமீறல்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் மட்டும் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20 மசோதாக்கள் ஒப்புதல் தரப்படாமால் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

    அதன் ஒரு பகுதியே தமிழக சட்டமன்றம் நிறைவேற்றிய ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் தருவதில் தாமதம். தற்போது அவசர சட்டமும் காலாவதியாகி விட்டது. இது உயிர் குடிக்கும் பிரச்சினை. கடந்த ஓராண்டில் ஆன்லைன் சூதாட்டத்தால் 30 உயிர்கள் வரை பலியாகி இருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

    தாமதமாகிற ஒவ்வொரு நாளும், வாரமும், மாதமும் உயிர்களோடு விளையாடுகிற விபரீதமாக உள்ளது. ஆனால் ஆளுநர் ரவி இதை உணர்ந்தும் மத்திய அரசின் கைப்பாவையாக மட்டும் செயல்படுகிறார். ஆளுநரின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

    சட்டமன்றம் துவங்கிய முதல் நாளான அக்டோபர் 17, 2022 அன்றே ஆன்லைன் சூதாட்ட தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. ஆளுநருக்கும் அனுப்பப்பட்டது. நவம்பர் 10 வரை பதில் இல்லை, ஆளுநர் தரப்பில் இருந்து விளக்கமும் கேட்கப்படவில்லை என்று தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி தெரிவித்தார். அதற்கு பிறகும் இரண்டு வாரம் ஆளுநர் தரப்பில் அசைவில்லை. ஆளுநரை நேரில் சந்திப்பதற்கும் வாய்ப்பு தரப்படவில்லை.

    கடைசியில் நவம்பர் 24 அன்று ஆளுநர் விளக்கம் கேட்கிறார். முழுமையான தடை என்பது சென்னை உயர்நீதி மன்ற ஆணைக்கு முரணானது என்பது ஆளுநர் கேட்ட விளக்கம். தமிழக அரசு 24 மணி நேரத்திற்குள்ளாக பதில் தந்து விட்டது.

    இது பகுதி தடை தான்; தேவையான அளவிற்கே தடை விதிக்கப்பட்டுள்ளது; அரசியலமைப்பு சட்டத்தின் 7 வது அட்டவணை பட்டியல் 2ல் உள்ள பிரிவுகளின்படியே இந்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதிலளித்துள்ளது. அதற்கு பிறகும் ஆளுநர் செய்த தாமதத்தால் அவசர சட்டமும் காலாவதியாகிவிட்டது.

    மக்களின் உயிரோடு விளையாடாமல் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்டம் தடை மசோதாவிற்கு உடனடியாக ஒப்புதல் அளிக்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆளுநரை வலியுறுத்துகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
    • சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    அவினாசி,நவ.16-

    அவிநாசி ஒன்றியம், ராமநாதபுரம் ஊராட்சி 3வது வாா்டு தொட்டகளாம்புதூா் பகுதி விநாயகா் கோயில் பகுதியில் சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் மழை நீா் தேங்கி வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். மேலும் சாக்கடை கால்வாய் இல்லாததால், கழிவுநீா் சாலையில் தேங்கி நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே சாலை வசதி, சாக்கடை கால்வாய் அமைக்க கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் மக்களை சந்தித்து கையெழுத்து இயக்கம் நடத்தினா். இதில் சிஐடியு ஆட்டோ தொழிலாளா் சங்க கருவலூா் கிளை செயலாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    • அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
    • சிபிசிஐடி போலீசார் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளதாவது:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் தனியார் பள்ளியில் மாணவி ஸ்ரீமதி கடந்த ஜூலை 13-ந் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பான அமைக்கப்பட்ட சி.பி.சி.ஐ.டி. போலீசாரின் விசாரணை துரிதமாக நடைபெறுவதை உறுதி செய்திட வேண்டுகிறோம்.

    முதலமைச்சர் இப்பிரச்சனையில் தலையிட்டு கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். கனியாமூர், சக்தி மெட்ரிகுலேசன் பள்ளியை குறைந்தபட்சம் 5 ஆண்டுகளுக்காவது தனி அதிகாரியை நியமித்து தமிழக அரசே ஏற்று நடத்திட வேண்டும்.

    இவ்வாறு செய்வதே பள்ளி மாணவ, மாணவிகள் மனஉளைச்சலின்றி கல்வியில் கவனம் செலுத்திட இயலும். மாணவர்களின் கல்வி நலனை கவனத்தில் கொண்டு சிபிசிஐடி விசாரணையை விரைவாக முடித்து அதன் பின்னர் பள்ளி புனரமைப்பு பணிகளை அரசு அதிகாரிகள் மேற்பார்வையில் பள்ளியைத் திறக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

    பள்ளி நிர்வாகமே புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கு மாவட்ட ஆட்சியர் அளித்துள்ள அனுமதியை திரும்ப பெற வேண்டும். ஸ்ரீமதி மரணம் குறித்து அமைக்கப்பட்ட சிபிசிஐடி போலீசார் முறையாக விசாரணை நடத்தி விரைவில் குற்றப்பத்திரிகையினை தாக்கல் செய்ய வேண்டும்.

    அப்பாவிகளை கைது செய்வது, குண்டர்சட்டத்தில் வழக்கு தொடுப்பது, சிறையில் அடைப்பது போன்ற போலீசாரின் நடவடிக்கைகளை முற்றிலும் கைவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துவது ஏழை மக்களின் வாழ்வை மோசமாக்கும்.
    • மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டும்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    தமிழ்நாட்டில் இன்று முதல் மின்சார கட்டணம் ரூ.55 முதல் ரூ.1130 வரை உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆண்டுக்கு 6 சதவிகிதம் என்ற அளவில் மின் கட்டண உயர்வு இருக்கும் என்றும் அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை ஏழை, எளிய, நடுத்தர மக்களது வாழ்வையும், சிறு-குறு தொழில்கள், சிறிய நடுத்தர வியாபாரிகள் வாழ்வினையும் மோசமாக்கி விடும் என்பதை தமிழ்நாடு அரசுக்கு சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

    மேலும் ஒவ்வொரு ஆண்டும் கட்டணத்தை உயர்த்துகிற நடைமுறை இதுவரை இல்லாதது என்பதையும் கவனப்படுத்துகிறோம். அரிசி, கோதுமை உள்ளிட்டு அனைத்து உணவுப் பொருட்களின் மீது ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் வரலாறு காணாத அளவில் விலைகள் உயர்ந்துள்ளன.

    மேலும், பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வு, சுங்க கட்டண உயர்வு ஆகியவை சங்கிலித் தொடர் போன்று அனைத்து பொருட்களின் விலை உயர்வையும் வேகப்படுத்திவிட்டது. மோடி அரசின் பொருளாதாரக் கொள்கையை கண்டிக்கும் தமிழ்நாடு அரசு, தன் பங்கிற்கு மின் கட்டணத்தை உயர்த்துவது நியாயமற்ற செயலாகும்.

    உத்தேசித்த மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, பொதுமக்களும், சிறு-குறு தொழில் முனைவோர்களும் கருத்து கேட்பு கூட்டங்களில் கலந்து கொண்டும், பல்லாயிரக்கணக்கான மனுக்கள் அளித்தும் வலியுறுத்தினர்.

    ஆனால் அவைகளை புறந்தள்ளி ஏற்கனவே உத்தேசித்த மின் கட்டண விகிதங்களில் எந்த மாற்றமும் செய்யாமல் அறிவிக்கப்பட்டுள்ளது. திமுக தேர்தல் வாக்குறுதி படி, மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதையும் நடைமுறைப்படுத்தாமல் மீண்டும் பழைய முறையிலேயே 2 மாதங்களுக்கு ஒருமுறைதான் கட்டணம் கணக்கிடப்படும் என்ற அறிவிப்பும் செய்துள்ளது.

    மின்வாரிய நெருக்கடியை சமாளிக்க அரசியல் கட்சிகள், துறைசார்ந்த நிபுணர்கள், செயல்பாட்டாளர்கள் முன்வைத்துள்ள ஆக்கப்பூர்வமான மாற்று ஆலோசனைகளை செயல்படுத்துவதற்கு மாறாக மக்கள் தலையில் சுமையை ஏற்றுவது அரசுக்கு அவப்பெயரையே உருவாக்கும் என சுட்டிக்காட்டுகிறோம்.

    எனவே, ஏழை, எளிய உழைக்கும் மக்களையும், நடுத்தர மக்களையும், சிறுகுறு தொழில்களையும் கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டுமென்று மார்க்சிஸ்ட் மாநில செயற்குழு வலியுறுத்துவதோடு, மாதம் ஒருமுறை மின் கணக்கெடுப்பு முறையை அமல்படுத்த வேண்டுமென்றும் தமிழக அரசை வலியுறுத்துகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • அனைவருக்கும் நியாயமான கட்டணத்தில் மின்சாரம் வழங்கும் கடமையை மாநில அரசுகள் ஏற்றுள்ளன.
    • மத்திய அரசு மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தனியார் பெருமுதலாளிகளின் லாப வேட்டைக்கு ஆதரவாக, மாநிலங்களின் மின் நுகர்வினை கட்டுப்படுத்தும் கொள்கையை மத்திய அரசு நிர்ப்பந்திக்கிறது. இதனால் தமிழ்நாடு உட்பட 13 மாநிலங்கள் இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மோடி அரசு தனது கொள்கையை உடனடியாக திரும்பப் பெற்று, தடையற்ற மின் விநியோகத்தை உறுதி செய்திட வேண்டுமென சி.பி.ஐ(எம்) மாநில செயற்குழு வலியுறுத்துகிறது.

    மின்சாரம், மக்களின் இன்றியமையாத அடிப்படைத் தேவையாக உள்ளது. அன்றாட வாழ்க்கைக்கும், வேலைவாய்ப்பிற்கும் மின்சாரமே அடிப்படையாகும். அனைவருக்கும் தடையற்ற மின்சாரத்தை, நியாயமான கட்டணத்தில் வழங்கிடும் கடமையை மாநில அரசுகளே ஏற்றுள்ளன. அதே சமயத்தில் மத்திய அரசாங்கம், தனியார் பெருமுதலாளிகளின் லாபத்தை மனதில் கொண்டு, மின்சார கொள்கையை மாற்றியமைக்க முயற்சிக்கிறது.

    தனது போக்கிற்கு மாநில அரசுகளையும், மின்வாரியத்தையும் நிர்ப்பந்திக்கிறது. இதனால் ஏற்படும் சுமை அனைத்தும் சாமானிய மக்களின் தலையிலேயே விடிகிறது. ஏற்கனவே, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும், தனியாரிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை தமிழ்நாட்டின் மீது மத்திய அரசாங்கம் கொடுத்து வருகிறது. அதன் காரணமாக நுகர்வோருக்கு கடுமையான கட்டணச் சுமை அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போது மின் விநியோகத்திலும் லாப நோக்கத்தை அடிப்படையாகக் கொண்ட விதிகள் புகுத்தப்படுகின்றன. மோடி அரசின் இந்த போக்கை முன் உணர்ந்துதான் மின்சார திருத்த மசோதாவிற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த பிறகு நிலைக்குழு பரிசீலனைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு பாக்கி வைத்திருப்பதாக சொல்லப்படும் ரூ. 926 கோடியோ, ஒட்டுமொத்தமாக மாநிலங்கள் பாக்கி வைத்திருக்கும் ரூ. 5085 கோடிகள் என்பதோ மத்திய அரசால் அனுமதிக்க முடியாத தொகை அல்ல. தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை நடத்தும் விரல்விட்டு எண்ணக்கூடிய பெருமுதலாளிகள் ரூ.2 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் கட்டணம் பாக்கி வைத்துள்ளார்கள்.

    அவர்கள் அந்த தொகையை செலுத்திட ஆண்டுக்கணக்கில் அவகாசம் கொடுக்கும் மோடி அரசுதான் – 12 மாநிலங்களில் வாழும் 64 கோடி மக்களின் வாழ்க்கையை இருளில் தள்ளுவோம் என்று மிரட்டுகிறது. தனியார் பெருமுதலாளிகள் வங்கியில் கடனாகப் பெற்ற சுமார் 11 லட்சம் கோடிகளை வராக்கடனாக தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    அந்த நிறுவனங்களின் பட்டியலைக் கூட வெளியிட அரசு தயங்குகிறது. இதனோடு ஒப்பிட்டால் மாநிலங்களின் பாக்கித் தொகை ஒன்றுமே இல்லை. ஆனாலும் கூட அதனை காரணமாக்கி, பட்டியல் வெளியிட்டு, தனது கொள்கைகளை அமலாக்க நிர்ப்பந்திப்பதன் நோக்கம் என்ன?. பெருமுதலாளிகளுக்கு வெண்ணையும், சாமானிய மக்களுக்கு சுண்ணாம்பும் தடவுவதுதான் மோடி அரசின் கொள்கை என்பதை மீண்டும் மீண்டும் அம்பலப்படுத்துகிறது.

    சாமானிய மக்களின் மீதும், சிறு குறுந் தொழில்களின் மீது மின்வெட்டை சுமத்தும் கொள்கையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு கண்டிக்கிறது. உடனடியாக தனது கொள்கையை திரும்பப் பெற்று அனைத்து மக்களுக்கும் தடையில்லாத மின்சாரத்தை நியாயமான கட்டணத்தில் உறுதி செய்திட வேண்டுமென வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது வீடியோவில் தெரிகிறது.
    • வன்முறை கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    மதுரையில் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசி தாக்கி இழிவான அரசியலில் பாஜகவினர் ஈடுபட்டுள்ளார்கள். இது கடும் கண்டனத்துக்குரிய செயலாகும்.

    தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பிய இடத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.

    தாக்குதல் நடந்த வீடியோக்களை பார்க்கும்போது எதுவுமே உணர்ச்சிவயப்பட்ட நிகழ்வுகள் அல்ல என்பதும், திட்டமிட்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதும் தெரிகிறது.

    அதுவும் வன்முறையில் ஈடுபட்ட கும்பல் கையில் தேசியக் கொடியை ஏந்தி, கொடிக்கும் அவமதிப்பை ஏற்படுத்தியுள்ளார்கள்.

    அதிகார வெறியோடு கிடைப்பதில் எல்லாம் அரசியல் செய்யும் பாஜகவினர், ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செய்வதில் கூட தங்கள் அரசியல் லாபத்தை மனதில் கொண்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை புரிந்துகொள்ள முடிகிறது.

    இதுவரை தாக்குதல் நடத்திய கும்பலை பாஜக தலைவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக, வன்முறையை மேலும் தூண்டும் விதமாக சமூக ஊடகப் பதிவுகளையே செய்து வருகிறார்கள்.

    எனவே, தமிழ்நாடு காவல்துறை இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறோம்.

    பாஜகவினரின் அரசியல் நாகரீகமற்ற இந்த அராஜகமான வன்முறைச் செயலை பொதுமக்களும், ஜனநாயக சக்திகளும் கண்டிக்க முன்வர வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொள்கிறது,

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? என சிபிஎம் கேள்வி
    • அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பது போல் உள்ளது.

    சென்னை:

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே. பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தமிழக ஆளுநரை ரஜினிகாந்த் சந்தித்துள்ளார். அவர் யாரை வேண்டுமானாலும் சந்தித்து பேச உரிமையுள்ளது. அத்தகைய சந்திப்பை சிபிஐ (எம்) கேள்வியெழுப்பவில்லை. அதேசமயம், "நாங்கள் அரசியல் பேசினோம்; ஆனால் அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாது" என ரஜினிகாந்த் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார். "பகிரங்கமாக பகிர்ந்து கொள்ள முடியாத" அளவுக்கு பேசிய அரசியலின் மர்மம் என்ன? ஆளுநர் அரசியல்வாதியாகவும், ஆளுநர் மாளிகையை அரசியல் கட்சி அலுவலகமாகவும் மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு விரோதமானது என்பதையே சிபிஐ (எம்) கேள்விக்குள்ளாக்கியது.

    இக்கேள்விக்கு ஆளுநரோ, ஆளுநர் அலுவலகமோ பதில் அளித்திருக்க வேண்டுமே தவிர, முந்திரிக்கொட்டையைப் போல் முந்திக்கொண்டு அண்ணாமலை பேட்டியளிக்க எந்த அவசியமுமில்லை. அண்ணாமலை ஒன்றும் ஆளுநரின் செயலாளரோ, செய்தி தொடர்பாளரோ அல்ல; அப்படியிருக்கும் போது வரிந்துகட்டிக் கொண்டு அண்ணாமலை ஆளுநருக்கு வக்காலத்து வாங்குவது "எங்கப்பன் குதிருக்குள் இல்லை" என்பது போல் உள்ளது.

    மாநில அரசின் உரிமைகளை பறிப்பது, மத்திய அரசின் கொள்கைகளை நேரடியாக தமிழ்நாட்டில் நுழைப்பது, மாநில அரசுக்கு தெரியாமலேயே பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவை நடத்துவது, மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்க மறுத்து தமிழ்நாட்டிற்கு ஏற்ற ஒரு கல்விக்கொள்கையை உருவாக்க தமிழக அரசு ஆலோசனைக்குழு அமைத்திருக்கிற நிலையில், புதிய கல்விக்கொள்கையை நிறைவேற்றுவதற்கு பல்கலைக்கழக துணை வேந்தர்கள், பேராசிரியர்கள் கூட்டத்தை நடத்துவது போன்ற காரியங்களை தமிழக ஆளுநர் செய்து வருகிறார்.

    ஆளுநர் என்ற எல்லையைத் தாண்டி ஆர்.எஸ்.எஸ்.சினுடைய கொள்கைகளையும், கோட்பாடுகளையும் மேடைகளில் பிரச்சாரம் செய்து வருகிறார். அவரின் இத்தகைய நடவடிக்கைகள் ஏற்கனவே கடும் விமர்சனத்தை தமிழகத்திலேயே உருவாக்கியுள்ளன. இந்த சூழலில் ஆளுநர், ரஜினிகாந்திடம் பகிர்ந்து கொள்ள முடியாத அரசியல் பேசியது அரசியல் சட்ட நெறிமுறைகளுக்கு உட்பட்டது அல்ல என்பது சாதாரண குடிமகனுக்கும் தெரிந்ததாகும். ஆனால், ஐ.பி.எஸ். அண்ணாமலைக்கு இந்த அடிப்படை விசயம் புரியாமல் போனது ஏன்? .

    தேர்தல் பத்திரங்கள் வழியாகவும், கார்ப்பரேட் கம்பெனிகளில் சுரண்டல்களில் பங்குபெற்றதன் வழியாகவும் பல்லாயிரம் கோடிகளை சுருட்டி அதைவைத்து தமிழ்நாட்டில் பாஜகவுக்கு உயிரூட்ட அண்ணாமலை மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் படுதோல்வியடைந்துள்ளன. இந்நிலையில் ஆளுநர் அலுவலகத்தை தங்கள் கட்சி அலுவலகமாக மாற்றுகிற முயற்சியும் பகிரங்கமானதன் விளைவே அண்ணாமலையின் ஆதங்கத்திற்கு காரணமாகும்.

    பாஜகவைப் போல மன்னிப்பு கடிதம் சுமந்த பாரம்பரியத்தில் வந்தவர்கள் அல்ல கம்யூனிஸ்ட்டுகள், சுதந்திரப்போராட்டத்திற்கு துரோகமிழைத்த பாஜகவின் தலைவராக இருந்து கொண்டு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நேரத்தில் பேசுவதற்கு விசயமில்லாத சூழ்நிலையில், ஆளுநருக்கு வக்காலத்து வாங்கி கம்யூனிஸ்ட்டுகள் மீது அண்ணாமலை தாக்குதல் தொடுத்துள்ளார்.

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எந்த காலத்திலும் யாருக்கும் 'பி' டீம் ஆக இருந்ததில்லை. ஆனால், ஆர்.எஸ்.எஸ். தோன்றிய காலம் முதல் ஆங்கிலேயர்களுக்கு 'பீ' டீம் ஆகவும், ஆட்சிக்கு வந்த பிறகு கார்ப்பரேட்டுகளின் 'பீ' டீம் ஆகவும் செயல்படுவதற்காக மட்டுமே அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறது பாஜக. அதன் தலைவராக இருக்கும் அண்ணாமலைக்கு கம்யூனிஸ்ட்டுகளை விமர்சிப்பதற்கு எவ்வித அருகதையும் இல்லை. மக்கள் செல்வாக்கை பெற முடியாமல் புறக்கடை வழியாக ஆளுநர் மூலம் அரசியல் செய்ய முயற்சிக்கும் பாஜகவின் எண்ணம் பகல் கனவாகவே முடியும்.

    இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் கூறி உள்ளார்.

    ×