search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோத்தகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
    X

    கோத்தகிரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

    • தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்து கண்டன கோஷம் எழுப்பினர்
    • மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்

    அரவேணு,

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மார்க்கெட் திடலில் மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பட்ஜெட் அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்திற்கு ஏற்றதாக இல்லை என்றும் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் கண்டன கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்க்கு மணிகண்டன் தலைமை தாங்கினார், மக்கள் அதிகாரம் ஆனந்தராஜ் கண்டன உரை நிகழ்த்தினார். மேலும் ஆர்ப்பாட்டத்தில் செல்வம், மகேஷ், யோகராஜ் மற்றும் மக்கள் அமைப்பு சார்ந்த 20-க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×