search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம்
    X

    ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம்

    ஐ.சி.எப்.பில் பாழடைந்த கட்டிடத்தில் நாட்டு வெடிகுண்டு வெடித்து சிறுமி காயம் அடைந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லிவாக்கம்:

    ஐ.சி.எப். ராஜீவ்காந்தி நகர் 1-வது தெருவில் உள்ள பாழடைந்த கட்டிடம் அருகே அப்பகுதியை சேர்ந்த சிறுமி காயத்ரி (வயது 11) நேற்று மாலை நடந்து சென்று கொண்டிருந்தாள். அப்போது திடீரென்று வெடிபொருட்கள் ஒன்று வெடித்து சிதறியது. இதில் காயத்ரி படுகாயம் அடைந்தார்.

    அவளை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்த ஐ.சி.எப். போலீசார் பாழடைந்த கட்டிடத்தை ஆய்வு செய்த போது 4 நாட்டுவெடிகுண்டுகள் பதுக்கி வைக்கபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கியவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×