search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lokesh rahul"

    • நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை.
    • உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    ஜோகன்னஸ்பர்க்:

    இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும மூன்று ஆட்டம் கொண்ட ஒரு நாள் போட்டி தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் ஒருநாள் போட்டி இன்று மதியம் 1.30 மணிக்கு ஜோகன்னஸ்பர்க்கில் தொடங்குகிறது.

    ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கு லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ரோகித், கோலி உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஒருநாள் கிரிக்கெட்டில் இந்தியா விளையாடும் விதம் மாறாது. நாங்கள் ஒருநாள் போட்டியில் விளையாட விரும்பும் விதத்தில் நிறைய மாற்றம் ஏற்படும் என்று நான் நினைக்கவில்லை. அணியில் நிறைய புதுமுக வீரர்கள் உள்ளனர். உலக கோப்பை போட்டியில் ரோகித் சர்மா அல்லது கோலி விளையாடிய விதத்தில் அவர்கள் விளையாடுவார்கள் என்று இப்போது எதிர்பார்ப்பது சரியானதல்ல.

    அவர்களுக்கு நாம் நேரம் கொடுக்க வேண்டும். அவர்கள் வசதியாக உணர வேண்டும். எனவே இளம் வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் எதுவும் இல்லை. நாங்கள் உலக கோப்பையில் விளையாடிய விதம் மிகவும் சிறப்பாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது.

    தென் ஆப்பிரிக்க சூழ்நிலையில் இந்திய அணிக்கு எந்த மாதிரியான விளையாட்டு பயன் அளிக்கிறது என்பதை பார்க்க வேண்டும். அதற்கு தகுந்தாற்போல் தங்களை உட்படுத்தி கொள்ள வேண்டும்.

    இளம் வீரர்களின் ஆட்டம் போதுமானதாக உள்ளது என்ற நம்பிக்கையை அவர்களுக்கு வழங்குவது எனக்கு முக்கியம். முடிவுகளை பற்றி கவலைப்படாமல் அவர்கள் கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்.

    இவ்வாறு அவர்கூறினார்.

    • இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.
    • கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடியது. இன்று நடைபெற்ற கடைசி போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி வெற்றிப்பெற்றது. அத்துடன், இன்றுடன் வங்காளதேச தொடர் முடிவடைந்தது.

    இந்திய அணி அடுத்து இலங்கையுடன் விளையாடுகிறது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் ஆட்டம் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    இந்தியா- இலங்கை அணிகள் மோதும் முதல் 20 ஓவர் ஆட்டம் ஜனவரி 3ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. 2வது ஆட்டம் புனேயில் 5ம் தேதியும் 3வது மற்றும் கடைசி போட்டி ராஜ்கோட்டில் 7ம் தேதியும் நடக்கிறது.

    ஒருநாள் போட்டிகள் ஜனவரி 10, 12 மற்றும் 15ம் தேதிகளில் கவுகாத்தி, கொல்கத்தா, திருவனந்தபுரத்தில் நடக்கிறது.

    இந்தப் போட்டிக்கான இந்திய அணி அடுத்த வாரம் அறவிக்கப்படுகிறது. கிரிக்கெட் வாரியத்தால் நீக்கப்பட்ட கேப்டன் சர்மா தலைமையிலான தேர்வு குழுதான் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்கிறது.

    புதிய தேர்வு குழுவை தேர்வு செய்வதில் கால தாமதம் ஆவதால் சேட்டன் சர்மா தலைமையிலான குழு வீரர்களை அறிவிக்கிறது. புதிய தேர்வு குழுவை கிரிக்கெட் வாரியத்தின் ஆலோசனை குழு நாளை முதல் 28ம் தேதிக்குள் முடிவு செய்யும்.

    இதனால் பழைய தேர்வு குழு நாளை அல்லது நாளை மறுநாள் இலங்கை தொடருக்கான அணியை தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    தேர்வு குழு உறுப்பினர்கள் பதவிக்கு சேட்டன் சர்மா மற்றும் தற்போது மத்திய மண்டல குழு உறுப்பினரான ஹர்வீந்தர் சிங் ஆகியோர் மீண்டும் விண்ணப்பித்து உள்ளனர். முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத், நயன் மோங்கியா, மனிந்தர் சிங், அதுல் ஹாசன், நிதில் சோப்ரா, அமய் குருசியா உள்ளிட் டோர் தேர்வு குழு உறுப்பினர் பதவிக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே இலங்கை தொடருக்கான 20 ஓவர் அணியில் இருந்து லோகேஷ் ராகுல் நீக்கப்படுகிறார். இதை கிரிக்கெட் வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன. இதேபோல் ரோகித் சர்மாவும் காயத்தில் இருந்து முழுமையாக குணமடையவில்லை.

    இதனால் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்படலாம். முன்னாள் கேப்டன் வீராட் கோலிக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

    ‘உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் 4-வது வரிசையில் லோகேஷ் ராகுல் சதம் அடித்தது நம்பிக்கை அளிக்கிறது’ என்று இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தெரிவித்தார்.
    கார்டிப்:

    கார்டிப்பில் நேற்று முன்தினம் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி லோகேஷ் ராகுல் (108 ரன்), டோனி (113 ரன்) ஆகியோரின் அபார சதத்தால் 7 விக்கெட் இழப்புக்கு 359 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய வங்காளதேச அணி 49.3 ஓவர்களில் 264 ரன்கள் எடுத்து ‘ஆல்-அவுட்’ ஆகி தோல்வியை தழுவியது.

    4-வது வரிசையில் களம் கண்ட லோகேஷ் ராகுல் சதம் அடித்ததன் மூலம் இந்த உலக கோப்பை போட்டியில் அவர் தான் 4-வது வீரராக இறங்குவார் என்பது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

    போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    4-வது வரிசையில் களம் இறங்கிய லோகேஷ் ராகுல் ஆடிய விதம் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்து இருக்கிறது. அணியில் இடம் பெற்றுள்ள அனைவரும் தங்களது பணி என்ன என்பதை அறிந்து இருப்பார்கள். லோகேஷ் ராகுல் ரன்கள் குவித்தது முக்கியமானதாகும். அவர் ஒரு தரமான வீரர். டோனி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோரும் மிகவும் நன்றாக விளையாடினார்கள்.



    முதலில் பேட்டிங் செய்ததால் 2 ஆட்டமும் சவாலாக இருந்தது. ஷிகர் தவான், ரோகித் சர்மா ஆகியோர் தரமான வீரர்கள். அவர்கள் பார்ம் குறித்து கவலைப்பட வேண்டிய தேவையில்லை. ஐ.சி.சி. போட்டியில் இருவரும் நட்சத்திர வீரர்கள். போகப்போக இருவரும் நல்ல நிலைக்கு வந்து விடுவார்கள். இந்த ஆட்டத்தில் நாங்கள் சேசிங் செய்ய தான் விரும்பினோம். ஆனால் சவாலை சந்திக்கும் நோக்கில் முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தோம். பயிற்சி ஆட்டத்தில் உத்வேகம் பெற வேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அந்த அளவுக்கு அதிகமான போட்டிகளில் நாங்கள் விளையாடி இருக்கிறோம். 2 ஆட்டங்களிலும் எங்களது செயல்பாடு மகிழ்ச்சி அளிக்கிறது. வங்காளதேச பேட்ஸ்மேன்கள் சவால் அளிக்கும் வகையில் ஆடினார்கள். எங்களது பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசினார்கள். ஜஸ்பிரித் பும்ரா தொடக்க விக்கெட்டுகளை வீழ்த்தினார். யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் இணைந்து 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள். 2-வது பாதியில் பந்து சற்று சுழல வாய்ப்பு உள்ளது. இருப்பினும் அதன் முதல் 15 ஓவர்களில் பந்தை ஸ்விங் செய்வது முக்கியமானதாகும். ‘டாஸ்’ ஜெயித்தால் பெரும்பாலான அணிகள் சேசிங் செய்வதையே விரும்பும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சதம் அடித்த லோகேஷ் ராகுல் அளித்த பேட்டியில், ‘சில பிரச்சினைகளால் கிரிக்கெட் ஆடாமல் சில காலம் நான் ஒதுங்கி இருந்தது எனது இயல்பான ஆட்டத்தை புரிந்து கொள்ள உதவியது. மற்றபடி எனக்கு எந்தவித வித்தியாசமும் தெரியவில்லை. அப்போது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அதிக நேரத்தை செலவிட்டேன். மறுபடியும் களம் திரும்பி நான் ஆடி வரும் விதம் மகிழ்ச்சி அளிக்கிறது. ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக விளையாடினேன். அதே நம்பிக்கையுடன் இங்கு வந்து ரன் குவித்தது திருப்தி அளிக்கிறது’ என்று கூறினார்.
    இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ள ஹர்திக் பாண்டியா மற்றும் லோகேஷ் ராகுலுக்கு பதிலாக தமிழக வீரர் விஜய் சங்கரும் ஷுப்மான் கில்லும் சேர்க்கப்பட்டுள்ளனர். #TeamIndia #VijayShankar
    புதுடெல்லி:

    ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவர்கள் அணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். எனவே அவர்கள் இருவரும் நாடு திரும்பினர்.

    இந்நிலையில், அணியில் இருந்து நீக்கப்பட்ட இரண்டு வீரர்களுக்கு பதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆல்ரவுண்டர் விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் அணியில்  சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த ரஞ்சி போட்டிகளில் இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


    விஜய் சங்கர் ஏற்கனவே, இலங்கையில் நடந்த முத்தரப்பு தொடரில் பங்கேற்றுள்ளார். மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான விஜய் சங்கர் (வயது 27), ஐந்து டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

    தற்போது அணியில் சேர்க்கப்பட்டுள்ள விஜய் சங்கரும், ஷுப்மான் கில்லும் ஆஸ்திரேலிய தொடரைத் தொடர்ந்து நியூசிலாந்துக்கு எதிரான தொடரிலும் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. #TeamIndia #VijayShankar
    பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததற்கு இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார். #HardikPandya #BCCI #LokeshRahul
    புதுடெல்லி:

    இந்தி சினிமா பட டைரக்டர் கரண் ஜோஹர் தொகுத்து வழங்கும் ‘காபி வித் கரண்’ டெலிவி‌ஷன் நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் சிறப்பு விருந்தினர்களாக ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுல் கலந்துக்கொண்டனர். அப்போது அவர்கள் பெண்கள் தொடர்பாக பேசுகையில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவு செய்தனர். பாலியல் தொடர்பாகவும் வெளிப்படையாக பேசினர். இதற்கு கடும் கண்டனம் எழுந்தது. கருத்துக்கு சமூக வலைதளங்களிலும் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.



    இவ்விவகாரத்தை உடனடியாக கையில் எடுத்த இந்திய கிரிக்கெட் வாரியம், ஹர்திக் பாண்டியா, லோகேஷ் ராகுலின் பொறுப்பற்ற பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தது. இருவரும் இந்த விவகாரம் குறித்து 24 மணி நேரத்துக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது. இதற்கிடையே என்னுடைய கருத்துகள் எந்த வகையிலாவது யாரையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். யாரையும் அவமதிக்க வேண்டும் என்பதோ, யாருடைய மனதையும் காயப்படுத்த வேண்டும் என்பதோ எனது நோக்கமில்லை என்று ஹர்திக் பாண்டியா மன்னிப்பு கேட்டுள்ளார்.
     
    இந்த சர்ச்சை எதிரொலியாக கிரிக்கெட்டுக்கு தொடர்பு இல்லாத நிகழ்ச்சிகளில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பங்கேற்க தடை விதிக்கலாமா? என்பது குறித்து இந்திய கிரிக்கெட் வாரியம் ஆலோசனை நடத்தி வருகிறது. #HardikPandya #BCCI #LokeshRahul
    இந்தியாவிற்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது. டோனி கேப்டனாக பணியாற்றுகிறார். #AsiaCup2018 #Dhoni
    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.

    இந்திய அணியில் ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். அத்துடன் தீபக் சாஹர் அறிமுகமாகியுள்ளார்.

    இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    1. லோகேஷ் ராகுல், 2. அம்பதி ராயுடு, 3. மணிஷ் பாண்டே, 4. டோனி, 5. தினேஷ் கார்த்திக், 6. கேதர் ஜாதவ், 7. ஜடேஜா, 8. தீபக் சாஹர், 9. சித்தார்த் கவுல், 10. குல்தீப் யாதவ், 11. கலீல் அகமது.
    245 அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இந்தியா 46 ரன்னுக்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்து திணறி வருகிறது #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 4-வது டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 246 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 273 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.

    பின்னர் 27 ரன்கள் பின்தங்கிய நிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இன்றைய 4-வது நாளில் இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 271 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 245 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    245 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியாவின் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். லோகேஷ் ராகுல் ரன்ஏதும் எடுக்காமல் ஸ்டூவர்ட் பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து புஜாரா களம் இறங்கினார்.



    புஜாராவை 5 ரன்னிலும், ஷிகர் தவானை 17 ரன்னிலும் வெளியேற்றினார் ஜேம்ஸ் ஆண்டர்சன். இதனால் இந்தியா 22 ரன்கள் எடுப்பதற்குள் மூன்று விக்கெட்டுக்களை இழந்தது.

    4-வது விக்கெட்டுக்கு விராட் கோலி உடன் ரகானே ஜோடி சேர்ந்தார். இந்தியா 4-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 3 விக்கெட் இழப்பிற்கு 46 ரன்கள் அடித்துள்ளது. விராட் கோலி 10 ரன்னுடனும், ரகானே 13 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவின் வெற்றிக்கு இன்னும் 199 ரன்கள் தேவை.
    டிரென்ட் பிரிட்ஜ் டெஸ்டில் இந்திய தொடக்க ஜோடியான தவான் - லோகேஷ் ராகுல் இரண்டு இன்னிங்சிலும் 60 ரன்கள் சேர்த்தது அரிய நிகழ்வாகும். #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டெஸ்ட் டிரென்ட் பிரிட்ஜ்-யில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சு தேர்வு செய்தது. அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை டிரென்ட் பிரிட்ஜ் ஆடுகளம் ஸ்விங்கிற்கு அதிக அளவில் ஒத்துழைக்கும்.

    இதனால் தொடக்க ஜோடியான ஷிகர் தவான், லோகேஷ் ராகுல் ஆகியோர் ஜேம்ஸ் ஆண்டர்சன், ஸ்டூவர்ட் பிராட் ஆகியோரது பந்து வீச்சை எப்படி தாக்குப்பிடிப்பார்கள்? என்ற பயம் இருந்தது. ஆனால் இருவரும் 18.4 ஓவர்கள் தாக்குப்பிடித்து 60 ரன்கள் சேர்த்தனர்.

    சுமார் 19 ஓவர் தாக்குப் பிடித்ததால் அதன்பின் வந்த ரகானே, விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா 329 ரன்கள் குவித்தது. ஷிகர் தவான் 35 ரன்களும், லோகேஷ் ராகுல் 23 ரன்களும் சேர்த்தனர்.

    அதன்பின் முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 161 ரன்னில் சுருண்டது. 168 ரன்கள் முன்னிலையுடன் இந்தியா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்த இன்னிங்சிலும் ஷிகர் தவான், லோகேஷ் ராகுல்  சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள்.

    இந்த இன்னிங்சிலும் இருவரும் 11.2 ஓவர்கள் தாக்குப்பிடித்து முதல் விக்கெட்டுக்கு சரியாக 60 ரன்கள் சேர்த்தனர். இதன்மூலம் இரண்டு இன்னிங்சிலும் தொடக்க தவான் - லோகுஷ் ராகுல் ஜோடி ஒரே ரன்கள் எடுத்த அரிய நிகழ்வு நடைபெற்றது. 2-வது இன்னிங்சில்  தவான் 44 ரன்களும், லோகேஷ் ராகுல் 36 ரன்களும் சேர்த்தனர்.



    இதற்கு முன் இந்த அரிய நிகழ்வு இரண்டு முறை நடந்துள்ளது. 2008-ம் ஆண்டு பெர்த்தில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக கல்லீஸ் - ஏபி டி வில்லியர்ஸ் ஜோடி முதல் இன்னிங்சிலும், 2-வது இன்னிங்சிலும் தலா 124 ரன்கள் சேர்த்திருந்தது.

    2009-ம் ஆண்டு சிட்னியில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிராக ஆஸ்திரேலியாவின் ஹெய்டன், காடிச் ஆகியோர் இரண்டு இன்னிங்சிலும் 62 ரன்கள் எடுத்திருந்தனர். அதன்பின் தற்போது தவான் - லோகேஷ் ராகுல் ஜோடி 60 ரன்கள் எடுத்துள்ளது.
    இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியா 11 ரன்கள் எடுப்பதற்குள் இரண்டு விக்கெட்டுக்களை இழந்துள்ளது. மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது டெஸ்ட் லார்ட்ஸில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் பந்து வீச்சு தேர்வு செய்தார். இந்திய அணியில் தவான், உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு புஜாரா, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.

    முரளி விஜய், லோகேஷ் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். முரளி விஜய் எதிர்கொள்ள ஆண்டர்சன் முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் முரளி விஜய் ஸ்டம்பை பறிகொடுத்தார்.

    2-வது விக்கெட்டுக்கு லோகேஷ் ராகுல் உடன் புஜாரா ஜோடி சேர்ந்தார். 7-வது ஓவரை ஆண்டர்சன் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் லோகேஷ் ராகுல் ரன்கள் எடுத்த நிலையில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.



    ஆண்டர்சன் முதல் இரண்டு விக்கெட்டுக்களையும் இழந்ததால், இந்தியா 6.1 ஓவரிலேயே தொடக்க விக்கெட்டுக்களை இழந்து தடுமாறியது.

    3-வது விக்கெட்டுக்கு புஜாரா உடன் கேப்டன் விராட் கோலி ஜோடி சேர்ந்தார். விராட் கோலி இரண்டு பந்துகள் சந்தித்து ஒரு ரன் எடுத்தபோது 6.3 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா 6.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 11 ரன்கள் எடுத்துள்ளது.
    எட்ஜ்பாஸ்டன் டெஸ்டின் 2-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. #ENGvIND
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாளில் 9 விக்கெட் இழப்பிற்கு 285 ரன்கள் எடுத்திருந்தது. இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியதும் மேலும் இரண்டு ரன்கள் எடுத்த நிலையில் ஆல்அவுட் ஆனது. அஸ்வின் நான்கு விக்கெட்டுக்களும், முகமது ஷமி 3 விக்கெட்டுக்களும் வீழ்த்தினார்கள்.

    பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. தவான் மற்றும் முரளி விஜய் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். இருவரும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். இதனால் இந்தியா 11.1 ஓவரில் 50 ரன்னைத் தொட்டது. 14-வது ஓவரை சாம் குர்ரான் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவிற்கு மிகப்பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. 4-வது பந்தில் முரளி விஜய் எல்பிடபிள்யூ மூலம் வெளியேறினார். அடுத்து வந்த லோகேஷ் ராகுல் 6-வது பந்தில் க்ளீன் போல்டானார்.



    இந்த அதிர்ச்சியில் இருந்து இந்திய ரசிகர்கள் மீள்வதற்குள் சாம் குர்ரான் வீசிய 16-வது ஓவரின் ஐந்தாவது பந்தில் தவான் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 8 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்தது. 20 வயதே ஆன சாம் குர்ரான் மூன்று விக்கெட்டுக்களையும் வீழ்த்தி இந்தியாவிற்கு அதிர்ச்சியூட்டினார. பின்னர் 4-வது விக்கெட்டுக்கு விராட் கோலியுடன் ரகானே ஜோடி சேர்ந்தார்.



    இந்த ஜோடி 2-வது நாள் மதிய உணவு இடைவேளை முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டது. இந்தியா மதிய உணவு இடைவேளை வரை 21 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 76 ரன்கள் எடுத்துள்ளது. விராட் கோலி 9 ரன்னுடனும், ரகானே 8 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.
    இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்டில் இங்கிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் புஜாராவிற்கு இடமில்லை. #ENGvIND
    இங்கிலாந்து -  இந்தியா இடையிலான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் பர்மிங்காம் எட்ஜ்பாஸ்டனில் இன்று மதியம் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ததுள்ளது.

    இங்கிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    அலைஸ்டர் குக், ஜென்னிங்ஸ், ஜோ ரூட், மலன், பேர்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பட்லர், சாம் குர்ரான், அடில் ரஸித், ஸ்டூவர்ட் பிராட், ஜேம்ஸ் ஆண்டர்சன்.

    இந்திய அணியில் புஜாரா நீக்கப்பட்டு லோகேஷ் ராகுல் சேர்க்கப்பட்டுள்ளார். இந்திய அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

    முரளி விஜய், தவான், லோகேஷ் ராகுல், விராட் கோலி, ரகானே, ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, முகமது ஷமி, அஸ்வின்.
    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன் என்று கங்குலி கூறியுள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    புதுடெல்லி:

    வீராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கிலும் கைப்பற்றியது.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் இடையே 5 டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதல் டெஸ்ட் போட்டி வருகிற 1-ந்தேதி பர்மிங்காமில் தொடங்குகிறது.

    டெஸ்ட் தொடரில் தொடக்க வீரர்களாக யார் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. தவானின் மோசமான ஆட்டம் காரணமாக இந்த கேள்வி எழுகிறது.

    எசக்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் தவான் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. இரண்டு இன்னிங்சிலும் அவர் ‘டக்’ அவுட் ஆனார். பேட்டிங்குக்கு ஏற்ற ஆடுகளத்தில் அவர் சிறப்பாக ஆட முடியாததால் ஏமாற்றமே.

    இந்த பயிற்சி ஆட்டத்தில் முரளிவிஜய், வீராட்கோலி தினேஷ் கார்த்திக், ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதம் அடித்து இருந்தனர்.

    தவானின் மோசமான ‘பார்ம்’ காரணமாக அவர் தொடக்க வீரராக களம் இறக்கப்படுவாரா? என்ற கேள்வி இருந்து வருகிறது.

    இந்த நிலையில் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளி விஜய்யையும், லோகேஷ் ராகுலையும் தொடக்க வீரராக களம் இறக்க வேண்டும் என்று முன்னாள் கேப்டனும், டெலிவி‌ஷன் வர்ணனை யாளருமான கங்குலி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வெளிநாடுகளில் தவான் டெஸ்ட் தொடரில் சிறப்பாக ஆடியது இல்லை. அவர் ரன்களை குவித்ததில்லை என்று சாதனைகள் சொல்கிறது.

    தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து அல்லது ஆஸ்திரேலியா எதுவாக இருந்தாலும் அவர் சரியாக ஆடவில்லை. தவானை பொறுத்தவரை ஒருநாள் போட்டியில் சிறந்த வீரர்.

    டெஸ்ட் போட்டியில் அவர் உள்நாட்டில் மட்டுமே தனது திறமையை நிரூபித்து இருக்கிறார். இந்திய மண்ணில் சதம் அடித்ததை வைத்து அவருக்கு அணி நிர்வாகம் வாய்ப்பு வழங்குவது சுவாரசியமே.


    நானாக இருந்தால் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் முரளிவிஜய், ராகுல் ஆகியோரைத் தான் தொடக்க வீரர்களாக களம் இறக்குவேன்.

    இவ்வாறு கங்குலி கூறினார்.

    இதேபோல 3-வது வரிசையில் ஆடும் புஜாராவும் திணறி வருகிறார். 11 பேர் கொண்ட அணிக்கு அவர் தகுதியானவர் என்று இங்கிலாந்து முன்னாள் தொடக்க வீரர் டாரன்காக் தெரிவித்துள்ளார். #Ganguly #MuraliVijay #lokeshrahul

    ×