என் மலர்
நீங்கள் தேடியது "பிசிசிஐ"
- KKR அணியில் இருந்து முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார்.
- இதனால் வங்கதேச அணி இந்தியாவுக்கு வர மறுப்பு தெரிவித்தது.
வங்கதேசத்தில இந்து நபர்கள் தாக்கப்பட்டதற்கு இந்தியாவில் கடும் கண்டனம் எழும்பியது. மேலும், வங்கதேசத்தில் இந்து மக்கள் தாக்கப்படும்போது, ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா அணிக்கெதிராக வங்கதேச வீரர் முஸ்தாபிஜுர் ரகுமான் விளையாடுவதா? எனவும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. கொல்கத்தா அணி அவரை உடனடியாக ரிலீஸ் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மேலும், அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கான் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானார். இதனால், கொல்கத்தா அணியிடம் முஸ்தாபிஜுர் ரகுமானை விடுவிக்க பிசிசிஐ கேட்டுக்கொண்டது.
அதனடிப்படையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விடுவிக்கப்பட்டார். இதனால் வங்கதேச கிரிக்கெட் போர்டு கடும் அதிருப்தியடைந்தது. வருகிற 7-ந்தேதி தொடங்கும் உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு செல்ல மாட்டோம் எனவும், எங்களுடைய போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் வைத்தது. ஆனால், ஐசிசி அவர்களின் வேண்டுகோளை நிராகரித்தது. இதனால் வங்கதேசம் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலகியது.
வங்கதேசத்திற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்தது. அதனடிப்படையில் இந்தியாவுக்கு எதிராக லீக் தொடர் போட்டியை புறக்கணிக்கிறோம் என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு முடிவு எடுத்துள்ளது.
இந்த நிலையில் முஸ்தாபிஜுர் ரகுமான் விவகாரத்தை பிசிசிஐ இன்னும் தந்திரமாக கையாண்டிருந்தால் டி20 உலகக் கோப்பையில் புறக்கணிப்பு குழப்பத்தை தவிர்த்திருக்கலாம் என ஐசிசி முன்னாள் தகவல் தொடர்பு தலைவர் சமி-அல்-ஹசன் பர்னி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பர்னி கூறியதாவது:-
நான் சொல்ல வருவது என்னவென்றால், கிரிக்கெட் நிர்வாகிகள் அல்லது போட்டிக்கான பொறுப்பாளர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி, முஸ்தாபிஜுர் ரகுமானை கே.கே.ஆர். அணியில் இருந்து வெளியிடுவது போன்ற பொதுவெளி அறிக்கையை தவிர்த்திருந்தால், இதுபோன்ற குழப்பமான விசயங்களை தவிர்த்திருக்கலாம்.
அவர்கள் வெளிப்படையாக அறிக்கை வெளியிடத் தேவையில்லை. அவர்கள் தனிப்பட்ட முறையில் கே.கே.ஆர் அணியிடம் வீரரை ரிலீஸ் செய்ய சொல்லியிருக்கலாம். அப்படி இருந்திருந்தால் யாருக்கும் எதுவும் தெரிந்திருக்காது. சுமூகமாக சென்றிருக்கும்.
சில சமயங்களில் நீங்கள் தீர்ப்பில் தவறு செய்து, சில விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு அறிக்கையை வெளியிட்டுவிடுகிறீர்கள். எனவே, ஜனவரி 3 ஆம் தேதி அறிவிப்பு ஒரு தூண்டுதலாக அமைந்தது.
இவ்வாறு பர்னி தெரிவித்துள்ளார்.
ஐசிசி தலைவர் பதவிக்காலம் முடிவடைந்த பிறகு, பாகிஸ்தான் கிரிக்கெட போர்டின் மீடியா டைரக்டராகவும் பணியாற்றியுள்ளார்.
- கம்பீர் தலைமையில் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை.
- சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி இழந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கவுதம் காம்பீர் கடந்த ஆண்டு ஜூலை 10-ந்தேதி நியமிக்கப்பட்டார். ராகுல் டிராவிட்டுக்கு பிறகு அந்த பொறுப்பை ஏற்றார். 2027-ல் நடைபெற உள்ள ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பை வரை அவரது பதவிக்காலம் இருக்கிறது.
காம்பீர் நியமிக்கப்பட்ட பிறகு இந்திய அணி குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களையும், சரிவையும் சந்தித்துள்ளது. அவரது தலைமை யின் கீழ் இந்திய அணி ஐ.சி.சி.சாம்பியன்ஸ் டிராபி, ஆசிய கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றது.
ஆனால் டெஸ்டில் இந்திய அணி பெரிய அளவில் வெற்றிகளை பெறவில்லை. சொந்த மண்ணில் நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை முழுமையாக இழந்ததால் விமர்சனங்கள் எழுந்தன.
சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இழந்தது. இதனால் அவரை ரசிகர்களும், கிரிக்கெட் நிபுணர்களும் கடுமையாக சாடி இருந்தனர். எனவே அவர் பயிற்சியாளர் பதவியில் இருந்து நீக்கப்படலாம் என்ற வதந்தி பரவியது. இதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) தனது மவுனத்தை கலைத்தது. பி.சி.சி.ஐ. செயலாளர் சைபியா இந்த வதந்திகளை நிராகரித்தார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
140 கோடி மக்களை கொண்ட நாடு இந்தியா. இங்கு எல்லோரும் கிரிக்கெட் நிபுணர்கள்தான். அனைவருக்கும் ஒரு கருத்து இருக்கும். இது ஒரு ஜன நாயக நாடு, யாரையும் எங்களால் வாயடைக்க முடியாது. ஊடகங்கள் உள்பட கருத்துக்களை உருவாக்குபவர்கள் அனைவரும் தங்கள் கருத்துக்களை தெரிவிக்க முழு சுதந்திரம் உண்டு.
இந்தத் துறையில் நிறைய யூகச் செய்திகள் பரவி வருகின்றன.மேலும் பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், தற்போதைய வீரர்கள் அல்லது மற்றவர்களும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக ஊடகங்களில் இது போன்ற கருத்துக்கள் நிரம்பியுள்ளன.
ஆனால் விஷயம் என்ன வென்றால் பி.சி.சி.ஐ-யில் முன்னாள் கிரிக்கெட் வீரர்களை கொண்ட ஒரு குழு எங்களிடம் உள்ளது. அவர்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு அனைத்து முடிவுகளையும் எடுக்கிறார்கள். மறுபுறம் அணித் தேர்வுக்காக எங்களிடம் 5 தேர்வாளர்கள் உள்ளனர். அந்தப் பதவிக்கு வர அவர்களும் தகுதி பெற்று இருக்க வேண்டும். அந்த முடிவுகளையும் அவர்கள்தான் எடுக்கிறார்கள். ஒவ்வொரு முடிவுக்கும் ஒரு மாற்று கருத்து இருக்கக்கூடும்.
ஆகவே அந்த கருத்துக்களை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும், அவற்றை நாம் பரிசீலிக்கவும் வேண்டும். ஆனால் இறுதி முடிவு எப்போதும் கிரிக்கெட் குழு மற்றும் தேர்வாளர்களால் தான் எடுக்கப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- 1993-ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக செயல்பட்டார்.
- பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
டெல்லி:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) இந்திய கிரிக்கெட் அணியை நிர்வகித்து வருகிறது. இதனிடையே, 1993ம் ஆண்டு முதல் 1996-ம் ஆண்டு வரை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இந்திரஜித் சிங் பந்த்ரா (வயது 84) செயல்பட்டார். அவர் பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்க தலைவராகவும் செயல்பட்டுள்ளார்.
இந்நிலையில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பிசிசிஐ முன்னாள் தலைவர் இந்திரஜித் சிங் பந்த்ரா நேற்று மாலை 6.30 மணிக்கு டெல்லியில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவரது இறுதிச்சடங்கு இன்று மதியம் நடைபெற உள்ளது. இந்திரஜித் சிங் மறைவிற்கு பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
- பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம்.
- பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
"பி.சி.சி.ஐ-ஆல் நடத்தப்படும் கிரிக்கெட் அணியை 'டீம் இந்தியா'என்றோ அல்லது 'இந்திய தேசிய கிரிக்கெட் அணி' என்றோ அழைப்பதற்கு பொதுத்துறை ஒளிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதிக்குத் தடை விதிக்கக் கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த மனுவில் எந்தவித முகாந்திரமும் இல்லை என்று விமர்சித்த உச்சநீதிமன்றம், தேவையற்ற வழக்குகளைத் தொடர்ந்து நீதிமன்றங்களின் சுமையைக் கூட்டுவதாகவும் மனுதாரரை கண்டித்தது. இந்தியத் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி மற்றும் விபுல் எம். பஞ்சோலி ஆகியோர் அடங்கிய அமர்வு, வழக்கறிஞர் ரீபக் கன்சல் தாக்கல் செய்த பொதுநல மனுவை நிராகரித்த டெல்லி உயர் நீதிமன்றத்தின் உத்தரவை உறுதிசெய்து உத்தரவிட்டுள்ளது.
மேலும் டெல்லி உயர் நீதிமன்றமே முன்மாதிரியான அபராதம் விதித்திருக்க வேண்டும் என்றும், "உயர் நீதிமன்றம் அபராதம் விதிக்காதது நியாயமற்றது. முன்மாதிரியான அபராதம் விதிக்கப்படவில்லை என்றால், இது போன்ற தேவையற்ற மனுக்கள் உச்ச நீதிமன்றத்திற்கு வருவதை எப்படி நிறுத்துவது?" என்று அந்த அமர்வு கேள்வி எழுப்பியது. மேலும், மனுதாரருக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்க நீதிமன்றம் முற்பட்டது. ஆனால் மனுதாரரின் வழக்கறிஞர் விடுத்த தொடர் கோரிக்கைகளை ஏற்று அந்த அபராதத்தைத் தள்ளுபடி செய்தது.
விசாரணையின்போது மனுமீது கேள்விகளை அடுக்கிய உச்ச நீதிமன்றம்,
"இது நீதிமன்றத்தின் நேரத்தையும், உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். இது என்ன மாதிரியான வாதம்? அந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று விளையாடும் அந்த அணி, நாட்டைப் பற்றி தவறாகச் சித்தரிக்கிறதா? பி.சி.சி.ஐ-யை விட்டுவிடுங்கள், தூர்தர்ஷனோ அல்லது வேறு ஏதேனும் அதிகார அமைப்போ அதை 'டீம் இந்தியா' என்று காட்டினால், அது இந்திய அணி இல்லையா?" என்று கேள்வி எழுப்பியது.
இதனிடையே பி.சி.சி.ஐ-க்கு ஆதரவாக மத்திய அரசு இருப்பதாக தெரிவித்த நீதிபதி பாக்சி, "மத்திய அரசு இங்கே வந்திருந்தால் ஒரு பிரச்சனை இருந்திருக்கும், ஆனால் பி.சி.சி.ஐ-க்கு மிகச்சிறந்த ஆதரவு உள்ளது. இப்போது பரவலான கட்டுப்பாடு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. பணம் சம்பந்தப்பட்டிருப்பதால் சில சமயங்களில் வால் நாயை ஆட்டுவிக்கிறது என்பதுதான் இங்கிருக்கும் பிரச்சனை.
பொதுநல மனுவில் கூறப்பட்டிருந்தது என்ன?
பி.சி.சி.ஐ என்பது தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனியார் சங்கம். அது ஒரு தேசிய விளையாட்டு கூட்டமைப்பாகவோ அல்லது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2(h)-ன் கீழ் ஒரு "பொது அதிகார அமைப்பாகவோ" அங்கீகரிக்கப்படவில்லை. மேலும் இந்திய அரசிடமிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அனுமதியும் இல்லாத நிலையில், பி.சி.சி.ஐ அணியை 'டீம் இந்தியா' அல்லது 'இந்திய தேசிய அணி' என்று குறிப்பிடுவது பொதுமக்களை தவறாக வழிநடத்துகிறது.
இந்த நடைமுறையானது தவறான சித்தரிப்புக்கு சமமானதாகும். மேலும் இது தேசியப் பெயர், தேசியக் கொடி மற்றும் சின்னங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் 'சின்னங்கள் மற்றும் பெயர்கள் (தவறான பயன்பாடு தடுப்பு) சட்டம், 1950' மற்றும் 'இந்தியக் கொடி விதிமுறை, 2002' ஆகியவற்றை மீறும் வாய்ப்புள்ளது. என தெரிவிக்கப்பட்டிருந்தது.
டெல்லி உயர் நீதிமன்றம் கூறியது என்ன?
"இந்த அணி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று சொல்கிறீர்களா? எல்லா இடங்களுக்கும் சென்று இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த அணியை, இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லை என்று நீங்கள் கூறுகிறீர்களா? அது 'டீம் இந்தியா' இல்லையா? அது 'டீம் இந்தியா' இல்லை என்றால், ஏன் இல்லை என்பதை எங்களுக்குத் தயவுசெய்து விளக்குங்கள்," என்று நீதிபதி துஷார் ராவ் கெடேலா கேள்வி எழுப்பினார்.
டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி டி.கே. உபாத்யாயாவும் இந்த வழக்கை அர்த்தமற்றது எனக் குறிப்பிட்டதோடு, "இது நீதிமன்றத்தின் நேரத்தையும் உங்கள் நேரத்தையும் அப்பட்டமாக வீணடிக்கும் செயலாகும். ஏதேனும் ஒரு விளையாட்டில் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு தேசிய அணியைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள். காமன்வெல்த் போட்டிகள், ஒலிம்பிக் போன்றவற்றுக்குச் செல்லும் இந்தியக் குழுவினர் அவர்கள் அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா? அவர்கள் இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்தவில்லையா? ஹாக்கி, கால்பந்து, டென்னிஸ் என எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் சரி அது அரசு அதிகாரிகளால் தேர்ந்தெடுக்கப்படுகிறதா? என்று கேள்வி எழுப்பினார்.
- ஐ.பி.எல் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடக்க உள்ளது.
19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 26-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான போட்டி அட்டவணை 5 மாநில தேர்தல் தேதிகள் வெளியானதும் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் சட்டபேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில் தேர்தல் தேதிகளை பொறுத்து போட்டி அட்டவணை முடிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது.
- ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.
மும்பை:
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வீரர்களை ஏ பிளஸ், ஏ, பி மற்றும் சி என 4 கிரேடுகளாக பிரித்து ஒப்பந்தம் செய்து சம்பளம் வழங்கி வருகிறது.
ஏ பிளஸ் வரிசையில் இருப்பவர்களுக்கு ஆண்டு ஊதியமாக ரூ. 7 கோடி வழங்கப்பட்டு வருகிறது. ஏ, பி மற்றும் சி கிரேடுகளுக்கு முறையே ரூ. 5 கோடி, ரூ. 3 கோடி, ரூ.1கோடி அளிக்கப்படுகிறது.
டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் ஆகிய 3 வடிவ போட்டிகளில் விளையாடுபவர்கள் மட்டுமே ஏ பிளஸ் கிரேடில் இருப்பார்கள். சீனியர் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடி வருகிறார்கள். 20 ஓவர், டெஸ்டில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்று விட்டனர்.
இந்த நிலையில் கோலி, ரோகித்சர்மா இடம்பெற்றுள்ள ஏ பிளஸ் கிரேடை நீக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-26ம் ஆண்டுக்கான வீரர்கள் ஊதிய முறையில் இருந்து ஏ பிளஸ் நீக்கப்படுகிறது. ஏ, பி மற்றும் சி என 3 கிரேடுகளே இனி இடம் பெறும்.
கோலி, ரோகித்சர்மாவுடன் ஜஸ்பிரித் பும்ரா, ஜடேஜா ஆகியோரும் 'ஏ' பிளஸ் கிரேடில் இடம்பெற்றுள்ளனர்.
- நடப்பு ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் மாதம் நடைபெறுகிறது.
- கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் ஆவார்.
புதுடெல்லி:
19-வது ஐ.பி.எல் டி20 கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் மாதம் 15-ம் தேதி தொடங்கி மே 31-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் முக்கிய ஸ்பான்சராக சுந்தர் பிச்சையின் கூகுள் ஜெமினி களத்தில் இறங்கியுள்ளது.
உலகளவில் ஏஐ போட்டியில் முன்னணியில் உள்ள கூகுள் நிறுவனத்தின் ஜெமினி, இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் ஸ்பான்சராக 3 ஆண்டுக்கு ரூ.270 கோடி மதிப்பிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இது ஐ.பி.எல். வரலாற்றில் AI தளங்களுடன் செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ஒப்பந்தம் கிரிக்கெட்டில் AI நிறுவனங்களின் ஆர்வம் வேகமாக அதிகரித்து வருவதை வெளிப்படுத்துகிறது.
ஏற்கனவே, பெண்கள் பிரீமியர் லீக் உடன் சாட் ஜிபிடி ரூ.16 கோடி மதிப்பிலான 2 ஆண்டு விளம்பர ஒப்பந்தம் செய்தது.
கூகுள் நிறுவனத்தின் சிஇஓவான சுந்தர் பிச்சை மிகப் பெரிய கிரிக்கெட் பிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலக கோப்பையில் தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
- இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது.
புதுடெல்லி:
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் எதிரொலியாக ஐ.பி.எல். போட்டியில் கொல்கத்தா அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தாபிசுர் ரகுமான் நீக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து பாதுகாப்பு காரணமாக டி20 உலக கோப்பையில் இந்தியாவில் விளையாட மாட்டோம் என்றும், தங்களது போட்டிகளை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது.
இதை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நிராகரித்ததாக தகவல் வெளியானது. ஆனால் இது குறித்து ஐ.சி.சி. இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
இதற்கிடையே வங்கதேச அணி இந்தியாவில் விளையாடுவதற்கு ஏற்றவாறு சென்னை, திருவனந்தபுரம் மாற்று இடமாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. அந்த அணி கொல்கத்தாவில் 3 போட்டியிலும், மும்பையில் ஒரு ஆட்டத்திலும் விளையாட திட்டமிடப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) செயலாளர் சைகியா கூறியதாவது:-
வங்கதேசப் போட்டிகளை சென்னைக்கோ அல்லது வேறு இடத்துக்கோ மாற்றுவது குறித்த எந்த தகவலும் பி.சி.சி.ஐ.க்கு வரவில்லை. இது எங்கள் கட்டுப்பாட்டில் இல்லை. இது ஐ.சி.சி. மற்றும் வங்கதேச கிரிக்கெட் வாரியத்திற்கு இடையேயான தகவல் பரிமாற்ற விஷயமாகும்.
ஏனெனில் ஐ.சி.சி.தான் ஆளும் அமைப்பு. இடமாற்றம் குறித்த முடிவை ஐ.சி.சி. எங்களுக்குத் தெரிவித்தால், பி.சி.சி.ஐ., தேவையான நடவடிக்கைகளை எடுக்கும். தற்போது எங்களுக்கு அத்தகைய தகவல் எதுவும் இல்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- வங்கதேச வீரர்கள் இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு அதிகரித்து வருகிறது.
- முஷ்தபிசுர் ரகுமான் கே.கே.ஆர். அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இதனால் நெருக்கடிக்கு உள்ளான பிசிசிஐ, வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று கோரியது. பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?
IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில் இந்தியாவில் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேச போட்டிகள் அனைத்தையும், இந்தியாவிற்கு வெளியே நடத்தப்பட வேண்டும் என ஐசிசி-க்கு முறையாக வேண்டுகோள் விடுத்துள்ளது வங்கதேசம் கிரிக்கெட் போர்டு. பாதுகாப்பு கவலை அளிப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.
தற்போதுள்ள சூழ்நிலை மதிப்பீடு அளவின்படி, இந்தியாவில் வங்கதேச அணியின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்து வரும் நிலையில், வங்கதேச அணியை இந்தியாவுக்கு அனுப்ப வேண்டுமா? என்பது குறித்து பரிசீலனை செய்யவும் என வங்கதேச அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இதனடிப்படையில் வங்கதேச கிரிக்கெட் போர்டு, முறையாக ஐசிசி-க்கு வங்கதேச போட்டிகளை அனைத்தையும் வேறு இடத்தில் (இந்தியாவுக்கு வெளியில்) நடத்த பரிசீலனை செய்யுங்கள் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என பிசிபி தெரிவித்துள்ளது.
இந்தியா- இலங்கை வருகிற பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை டி20 உலகக் கோப்பையைநடத்துகிறது.
- முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
- ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் விளையாட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?
IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.
- முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் விளையாட இந்துக்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
- முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது. இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
இந்நிலையில், இதுகுறித்து தனியார் ஊடகத்தில் பேசிய முஸ்தபிசுர் ரகுமான், "என்னை அணியில் இருந்து விடுவித்துவிட்டால், என்னால் வேறு என்ன செய்ய முடியும்?" என்று விரக்தியுடன் தெரிவித்தார்.
முஷ்தபிசுர் ரகுமான் ஐ.பி.எல். போட்டியில் 60 ஆட்டத்தில் 65 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். அவர் கடந்த காலங்களில் ஐதராபாத், மும்பை, ராஜஸ்தான், சென்னை அணிகளுக்காக ஆடி இருந்தார்.
- ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
- ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?
வங்கதேசத்தில் சிறுபான்மையினர் மீது நடத்தப்படும் தாக்குதல்களுக்காகக் கிரிக்கெட்டை பலிகடா ஆக்கக்கூடாது என்று சசி தரூர் தெரிவித்துள்ளார்.
வங்கதேசத்தில் இந்துக்கள் மீதான தாக்குதலை காரணம் காட்டி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெற்றிருந்த வங்கதேச வீரர் முஷ்தபிசுர் ரகுமானை விடுவிக்குமாறு பிசிசிஐ உத்தரவிட்டது.
பிசிசிஐ-யின் கட்டளையை ஏற்று, 9.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட முஷ்தபிசுர் ரகுமானை கேகேஆர் அணி விடுவிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்கு திருவனநாதபுர காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியதாவது, "பிசிசிஐ, முஷ்தபிசுர் ரகுமானை மிகவும் பரிதாபகரமான முறையில் அணியிலிருந்து நீக்கியுள்ளது.
ஒருவேளை வங்கதேசத்தின் இந்து வீரர்கள், லிட்டன் தாஸ் அல்லது சௌம்யா சர்க்கார் போன்றவர்கள் அணியில் இருந்திருந்தால் பிசிசிஐ என்ன செய்திருக்கும்?
ஒரு நாடு, ஒரு தனிமனிதன், அவரது மதம் - இங்கே நாம் யாரைத் தண்டிக்கிறோம்?
விளையாட்டில் புகுத்தப்படும் இந்த அர்த்தமற்ற அரசியல் நம்மை எங்கே கொண்டு செல்கிறது? ஒரு தனிப்பட்ட விளையாட்டு வீரரை அவரது நாட்டின் அரசியல் சூழ்நிலைக்குப் பொறுப்பாக்குவது முறையல்ல" என்று தெரிவித்துள்ளார்.






