search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிசிசிஐ"

    • பாகிஸ்தான் சென்று இந்திய அணி கிரிக்கெட் விளையாடாது என பிசிசிஐ அறிவிப்பு.
    • அடுத்த வருடம் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடைபெற இருக்கிறது.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. 2022-ம் ஆண்டில் இருந்து பாகிஸ்தானில் நடைபெறும் கிரிக்கெட் தொடரில் பங்கேற்க மாட்டோம் என பிசிசிஐ தெரிவித்துள்ளது. 2023-ம் ஆண்டு ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற இருந்தது. இந்தியா பாகிஸ்தான் செல்ல மறுப்பு தெரிவித்ததால் பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் இந்தியா விளையாட மறுப்பு தெரிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தான் மற்றும் வெளிநாடுகளிலும் போட்டி நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ஐசிசி தொடர்களை புறக்கணித்தால் அது பின் விளைவை ஏற்படுத்தும் என இந்திய அணிக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ரஷித் லத்தீப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    இது தொடர்பாக ரஷித் லத்தீப் கூறியதாவது:-

    இரு நாடுகளுக்கு இடையிலான தொடரை நீங்கள் மறுக்க முடியும். ஐசிசி தொடர்களை மறுப்பது மிகவும் கடினமான ஒன்றாகும். ஐசிசி திட்டத்தை வெளியிடும்போது, அவர்கள் எங்கே சென்று விளையாட வேண்டும் என்பது அணிகளுக்கு தெரியும். உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு சென்று விளையாட வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு தெரிந்திருந்தது. அதன் அடிப்படையில்தன் கிரிக்கெட் ஒப்பந்தத்தில் கிரிக்கெட் போர்டுகள் கையெழுத்திடுகின்றன.

    1996 உலகக் கோப்பை தொடரின்போது ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இலங்கை சென்று விளையாட மறுத்தது. இதனால் போட்டிகளில் விளையாடாமல் காலிறுதிக்கு முன்னேறியது. அதோடு உலகக் கோப்பையையும் வென்றது. இந்தியா பாகிஸ்தான் வந்து விளையாட மறுப்பு தெரிவித்தால் அது பிசிசிஐக்கு பின் விளைவை ஏற்படுத்தும்.

    ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரை நடத்த பாகிஸ்தான் கராச்சி, ராவல்பிண்டி, லாகூர் மைதானங்களை பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு தேர்வு செய்துள்ளது. இந்திய அணிகளின் ஆட்டங்களை ஒரே மைதானத்தில் நடத்த ஐசிசி-க்கு பரிந்துரைத்துள்ளது.

    • 15 பேர் கொண்ட அணியில் உறுதியாக இடம் பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.
    • ரிசர்வ் வீரர்கள் நான்கு பேரில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பேர் கொண்ட அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ளார். சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தனது மகனுக்கு 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ரிங்கு சிங் தந்தை கூறியதாவது:-

    ரிங்கு சிங்கிற்கு 15 பேர் கொண்ட அணியில் இடம் கிடைக்கும் என முழுமையாக நம்பியிருந்தோம். ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடிக்கும் சம்பவத்தை கொண்டாட எங்கள் குடும்பத்தினர் ஸ்வீட்ஸ் மற்றும் பட்டாசுகள் வாங்கி வைத்திருந்தோம். ஆனால், ரிங்கு சிங் 15 பேர் கொண்ட அணியில் இடம் பெறவில்லை. ரிசர்வ் வீரர்கள் பட்டியலில்தான் இடம் பிடித்துள்ளார்.

    ரிங்கு சிங் அவரது அம்மாவிடம் போனில் இந்திய அணிக்கு தேர்வாகவில்லை எனத் தெரிவித்தார். அப்போது அவர் மனம் உடைந்துவிட்டார்.

    இவ்வாறு ரிங்கு சிங் தந்தை தெரிவித்துள்ளார்.

    கடந்த உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்துக்கு எதிராக இந்தியா 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. அதன்பின் இளம் வீரர்கள் பலருக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டது. கடந்த ஐபிஎல் தொடரில் கடைசி ஓவரில் ஐந்து சிக்சர்கள் விளாசி கொல்கத்தா அணியை வெற்றி பெற வைத்தார்.

    இதனால் இந்திய அணியில் இடம் பிடித்தார். குறிப்பாக டி20 அணியில் அதிரடியாக விளைாயடி முத்திரை படைத்தார். இதனால் நீண்ட காலம் டி20 இந்திய அணியில் விளையாடுவார் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில்தான் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ரிங்கு சிங் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

    • நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார்.
    • அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார்.

    டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடிய வீரர்கள் சிலருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்திய அணியில் இருப்பார்கள் என்று கருதப்பட்ட சில வீரர்கள், சரியாக விளையாடாத காரணத்தினால் கழற்றி விடப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது. அதேவேளையில் அனுபவம் வாய்ந்த சில வீரர்கள் சரியாக விளையாடாத நிலையிலும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த டி. நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இடம் பிடிக்கு தகுதியானவர் என கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக கவாஸ்கர் கூறுகையில் "நடராஜன் டெத் ஓவர்களில் சிறப்பான முறையில் யார்க்கர் பந்துகள் வீசி வருகிறார். ஐபிஎல் போட்டியில் இதுவரை 13 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். சராசரி 19.38 ஆகும். ஸ்டிரைக் ரேட் 12.92. ஆனால் ஓவருக்கு 9 ரன் என சற்று கூடுதலாக ரன் கொடுத்துள்ளார். அவர் கடைசி நேரத்தில் கடினமான ஓவர்களை வீசுகிறார். நடராஜன் 15 பேர் கொண்ட இந்திய அணியில் இருந்திருக்க வேண்டும்.

    அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் என்பதால் நான் அவர் குறித்து அதிகமாக நினைக்கிறேன். அவர் மிகவும் அற்புதமாக பந்து வீசுகிறார்" என்றார்.

    • உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய நிலையிலும் இந்திய அணியில் நிரந்தர இடம் இல்லை.
    • தற்போது ஐபிஎல் போட்டியில் சிறப்பாக விளையாடியதன் மூலம் டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பிடித்துள்ளார்.

    கேரள மாநிலத்தைச் சேர்ந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன். உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய போதிலும், சஞ்சு சாம்சனுக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. அப்படி இடம் கிடைத்தாலும் நிரந்தரமாக அணியில் விளையாடமாட்டார்.

    முன்னணி வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்படும்போது அவ்வப்போது வாய்ப்பு கிடைக்கும். ஒரு கட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு சலிப்பு தட்டி உள்ளூர், ஐபிஎல் போட்டிகளில் விளையாடினால் போதும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

    உலகக் கோப்பை உள்ளிட்ட முக்கியமான தொடருக்கான வீரர்கள் தேர்வின்போது, சஞ்சு சாம்சனை அணியில் எடுக்க வேண்டும் என குரல் வலுக்கும். ஆனால், பிசிசிஐ கண்டு கொள்வதில்லை. அதனைத் தொடர்ந்து விமர்சனங்கள் கிளம்பும். ஓரிரு நாட்களில் அது அடங்கி போகும்.

    தற்போது ஐபிஎல் தொடரில் சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடி வருகிறார். அவர் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 9 போட்டிகளில் விளையாடி 8-ல் வெற்றி பெற்றுள்ளது. 9 போட்டிகளில் 385 ரன்கள் விளாசியுள்ளார்.

    விக்கெட் கீப்பருக்கான இடத்திற்கு ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், கேஎல் ராகுல் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவியது. இந்த நிலையில்தான் நேற்று பிசிசிஐ டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியை அறிவித்தது.

    இதில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இடம் பிடித்துள்ளார். ஒருவேளை சஞ்சு சாம்சனுக்கு இடம் கிடைக்காமல் இருந்திருந்தால் பிசிசிஐ கடும் விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கும்.

    நேற்று அறிவிக்கப்பட்ட டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் தனது பெயர் இடம் பிடித்திருந்த நிலையில், சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாவில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இது வியர்வையால் தைக்கப்பட்ட சட்டை எனக் குறிப்பிட்டுள்ளார்.

    பிசிசிஐ பலமுறை நிராகரித்த போதிலும், பொறுமை காத்து தனது திறமையை வெளிப்படுத்தி டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் பிடித்துள்ளார்.

    15 பேர் கொண்ட அணியில் இடம் பிடித்துள்ள சஞ்சு சாம்சனுக்கு ஆடும் லெவன் அணியில் இடம் கிடைக்குமா? என்பது சந்தேகம்தான். ரிஷப் பண்ட் ஆடும் லெவன் அணியில் இடம் பெறவில்லை என்றால் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

    29 வயதாகும் சஞ்சு சாம்சன் 2015-ம் ஆண்டு இந்திய டி20 அணியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக அறிமுகம் ஆனார். கடைசியாக கடந்த ஜனவரி மாதம் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். இந்த 9 வருடத்தில் 25 போட்டிகளில் விளையாடி 1 அரைசதத்துடன் 374 ரன்கள் அடித்துள்ளார்.

    • டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியின் துணை கேப்டனாக பாண்டியா நியமனம்.
    • யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷிவம் துபே உள்ளிட்ட வீரர்களும் இடம்பிடித்துள்ளனர்.

    புதுடெல்லி:

    ஐ.சி.சி. நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக நேற்று அறிவித்தது.

    இதில் இந்திய அணி கேப்டனாக ரோகித் சர்மாவும், பாண்டியா துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.

    மேலும், சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், கேப்டனாக இல்லாவிட்டால் அணியில் இருந்து நீக்கப்பட்ட முதல் ஆளாக ரோகித் சர்மா இருந்திருப்பார் என முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து தெரிவித்துள்ளார்.

    • சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
    • ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது. 15 பேர் கொண்ட இந்திய அணியிலும், காத்திருப்போர் பட்டியலிலும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல். ராகுலுக்கு இடம் கிடைக்கவில்லை.

    சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஐபிஎல் தொடரில் களம் இறங்கிய ரிஷப் பண்ட், ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவரும் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    கே.எல். ராகுல் புறக்கணிக்கப்பட்டதற்கு டுவிட்டர்வாசிகள் தங்களது விமர்சனங்களை பதவிட்டு வருகிறார்கள். ரிஷப் பண்ட்-ன் சாதனையை கே.எல். ராகுல் சாதனையுடன் ஒப்பிட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் கே.எல். ராகுல் விளையாடி வரும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ஒரு தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு போஸ்ட் பதிவிட்டுள்ளது. அதில் "கே.எல். ராகுல் எப்போதும் எங்களுடைய நம்பர் ஒன்" எனக் குறிப்பிட்டுள்ளது.

    • ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
    • இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சார்பில் வருகிற ஜூன் மாதம் நடைபெறும் டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. அறிவித்துள்ள 15 பேர் கொண்ட இந்திய டி20 அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாகவும் இடம்பெற்றுள்ளனர்.

     

    இவர்களுடன் சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா ஆகியோரும் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளனர். ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இளம் வீரர்கள் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    இதையொட்டி பல இளம் வீரர்கள் நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணிக்காக களமிறங்குவர் என்ற எதிர்பார்ப்பு பெருமளவில் இருந்து வந்தது. தற்போது இந்திய டி20 அணி அறிவிக்கப்பட்ட நிலையில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு இந்திய அணியில் இடம்பிடிக்காத வீரர்கள் பட்டியலை தொடர்ந்து பார்ப்போம்.

     


    விக்கெட் கீப்பர் மற்றும் பேட்டரான கே.எல். ராகுலுக்கு இந்திய டி20 அணியில் இடம்கிடைக்கவில்லை. உள்ளூர் போட்டிகளில் விளையாட மறுத்ததால் இந்திய அணிக்கான ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட்ட ஸ்ரேயஸ் அய்யர் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கு இடமில்லை.

    இதே போன்று ஐ.பி.எல். தொடரில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் ருதுராஜ் கெய்க்வாட் இந்திய டி20 அணியில் சேர்க்கப்படவில்லை. மும்பை அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இளம் வீரர் திலக் வர்மா, ஐதராபாத் அணிக்கு பந்துவீச்சில் பக்கபலமாக செயல்பட்டு வரும் தமிழக வீரர் நடராஜன் ஆகியோரும் இந்திய அணியில் இடம்பெறவில்லை.

    லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக களமிறங்கிய இளம் வேகப்பந்துவீச்சாளர் மயங்க் யாதவ் இந்திய டி20 அணியில் இடம்பிடிப்பார் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. எனினும், காயம் காரணமாக சில போட்டிகளில் விளையாடாமல் இருந்த மயங்க் யாதவுக்கும் இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

    இதே போன்று நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான முகமது ஷமி இன்னும் காயத்தில் இருந்து மீளாத காரணத்தால் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை. 

    • இந்திய அணிக்கு ஹர்திக் பாண்டியா துணை கேப்டன்.
    • விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் மாதம் துவங்குகிறது. இந்த தொடருக்கான அணி வீரர்கள் பட்டியலை ஒவ்வொரு அணியும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து வருகிறது.

    அந்த வரிசையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி வீரர்கள் அடங்கிய பட்டியலை பி.சி.சி.ஐ. அதிகாரப்பூரவமாக அறிவித்து இருக்கிறது. 




    அதன்படி 2024 டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

    இவருடன் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவிந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், யுஸ்வேந்திர சாஹல், அர்ஷ்தீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் 15 பேர் கொண்ட பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

    இவர்கள் தவிர சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அகமது மற்றும் ஆவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். 



    • இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர்.
    • இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    மும்பை:

    இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் கடந்த வாரம் மும்பையில் சந்தித்து டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி குறித்து விவாதித்தனர். இரண்டு மணி நேரம் நடந்த கூட்டத்தில் உலகக்கோப்பை அணியில் ஹர்திக் பாண்ட்யாவின் இடம் பற்றியும் விவாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணியில் பாண்ட்யா இடம்பெற நடப்பு ஐ.பி.எல். சீசனில் அதிகளவில் பந்து வீச வேண்டும் என்று இந்திய அணியின் கேப்டன் ரோகித், தலைமை பயிற்சியாளர் டிராவிட் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ஆகியோர் வலியுறுத்தி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்நிலையில் இந்த கருத்து ரோகித் சர்மா அளித்த பதில் பின்வருமாறு:-

    நாங்கள் இதுவரை சந்திக்கவே இல்லை. நானோ அல்லது ராகுல் அல்லது அஜித்தோ அல்லது பிசிசிஐயின் யாரோ ஒருவர் கேமரா முன் வந்து பேசுவதை நீங்கள் கேட்காத வரையில், எதையும் நம்பவேண்டாம். அதேபோல உலகக்கோப்பையில் நானும் கோலியும் தொடக்க வீரர்களாக இறங்குவது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை என ரோகித் சர்மா கூறினார்.

    மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக விளையாடி வரும் ஹர்திக் பாண்ட்யா 6 போட்டிகளில் 131 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால் இந்த ஐபிஎல் சீசனில் அவர் பந்துவீச்சில் மோசமாக செயல்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் இரண்டு போட்டிகளில் மட்டுமே பாண்ட்யா 4 ஓவர்களை வீசியுள்ளார்.

    டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு எதிராக அவர் ஒரு ஓவர் கூட வீசவில்லை. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் மீண்டும் ஒரு ஓவரை மட்டுமே வீசினார். சென்னை சூப்பர் கிங்சுக்கு எதிரான போட்டியில், பாண்ட்யா 3 ஓவர்கள் வீசினார். ஆனால் எதிலும் சிறந்த செயல்பாடு இல்லை. 

    • நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது.
    • 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் அறிமுக தொடரில் இருந்து விளையாடி வரும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி இதுவரை கோப்பையை வென்றதில்லை. நட்சத்திர வீரர்கள் அடங்கிய பெங்களூரு அணி இந்த முறையும் தடுமாற்றத்தையே சந்தித்து வருகிறது. 7 ஆட்டங்களில் விளையாடி இருக்கும் பெங்களூரு அணி ஒரு வெற்றி, 6 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் தத்தளிக்கிறது. அந்த அணி நேற்று முன்தினம் நடந்த ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டத்தில் 287 ரன்களை வாரி வழங்கி 25 ரன் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. பந்து வீச்சு படுமோசமாக இருப்பதால் பெங்களூரு அணி வீரர்கள் தேர்வு விஷயத்தில் தவறு இழைத்து விட்டதாக விமர்சனங்கள் கிளம்பி இருக்கின்றன.

    இந்த நிலையில் பிரபல இந்திய முன்னாள் டென்னிஸ் வீரர் மகேஷ் பூபதியும், பெங்களூரு அணி நிர்வாகத்தை சாடியிருக்கிறார்.

    இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பதிவில், 'விளையாட்டின், ஐ.பி.எல். கிரிக்கெட்டின், ரசிகர்களின், வீரர்களின் நலன் கருதி பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வேறு உரிமையாளரிடம் விற்க இந்திய கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என்று கருதுகிறேன். மற்ற அணி நிர்வாகங்கள் எப்படி அணியை சிறப்பாக கட்டமைத்து செயல்படுகிறதோ? அதேபோல் பெங்களூரு அணியையும் சிறப்பானதாக உருவாக்கும் அக்கறை கொண்ட புதிய உரிமையாளரிடம் விற்று விடுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கோலி களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.
    • கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும்.

    மும்பை:

    20 ஒவர் உலகக்கோப்பை போட்டி வருகிற ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்கிறது.உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் வீரர்கள் தேர்வானது ஏப்ரல் மாதம் இறுதியிலோ அல்லது மே மாதம் முதல் வாரத்திலோ நடைபெறும் என்று கூறப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கு விராட் கோலி தேர்வு செய்யப்படமாட்டார் என்று தகவல் வெளியானது.

    இந்த நிலையில் இது குறித்துதேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் கூறியதாவது:-

    விராட் கோலி கிரிக்கெட்டில் ஒரு அளவுகோலை அமைத்தவர். 15 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் சிறந்த உடற்தகுதியை தொடர்ச்சியாக அவர் பராமரித்து வருகிறார். அவர் களத்தில் இருக்கும்போது முடிவுகள் எப்படி இருந்தது என்பதையும் பார்க்க வேண்டும்.

    கோலி போன்ற ஒரு வீரர் அணியில் உள்ள மற்ற வீரர்களுக்கு முன்னுதாரணமாக இருந்தால் போட்டிகளின் முடிவுகள் நமக்கு சாதகமாக வரும். அணிக்குள் உடற்தகுதி என்பது அதிகப்படியான முக்கியத்துவம் பெற்றதில் கோலியின் பங்கு முக்கியமானது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கோலியை அகர்கர் பாராட்டி இருப்பதால் அவர் உலகக்கோப்பை தொடரில் விளையாடுவது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது.

    • டி20 உலகக் கோப்பை தொடரின் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகியது.
    • மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என தெரிவிக்கப்பட்டது.

    டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி இந்த ஆண்டு ஜூன் 1 முதல் 29-ந் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தொடர் மேற்கிந்தியத் தீவுகள், அமெரிக்காவில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டியைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

    இந்த தொடரில் இந்திய அணியில் இருந்து விராட் கோலி நீக்கப்படுவார் என தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேற்கிந்திய தீவுகளில் உள்ள மைதானம், விராட் கோலிக்கு சாதகமாக அமையாது என்ற காரணத்தாலும், டி-20 போட்டிகளில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையிலும் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்படலாம் எனற தகவல் பரவி வந்தன. இதனால், விராட் கோலி ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

    இந்நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் 2024 இல் அவர் ரன் குவிப்பு பட்டியலில் முன்னணியில் உள்ள அவரது ஃபார்மைப் பார்த்த பிறகு, 35 வயதான கோலி 15 பேர் கொண்ட அணியில் சேர்க்கப்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

    Cricbuzz-ன் அறிக்கையின்படி, விராட் கோலி நடக்கவிருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் களமிறங்க வைக்க பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ×