search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "5 state Assembly Election"

    • மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா அறிவித்துவிட்டது.
    • ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    புதுடெல்லி:

    5 மாநில சட்டசபை தேர்தல் தேதி நேற்று அணிவிக்கப்பட்டு மிசோரம் மாநிலத்துக்கு நவம்பர் 7-ந்தேதியும், சத்தீஸ்கரில் நவம்பர் 7 மற்றும் 17-ந்தேதியும், மத்திய பிரதேசத்துக்கு நவம்பர் 17-ந்தேதியும், ராஜஸ்தானுக்கு நவம்பர் 23-ந்தேதியும், தெலுங்கானா மாநிலத்துக்கு நவம்பர் 30-ந்தேதியும் தேர்தல் நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந்தேதி நடைபெறும்.

    5 மாநில தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு வருகிற 13 மற்றும் 14-ந்தேதிகளில் டெல்லியில் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் வேட்பாளர்களை இறுதி செய்வதற்காக இந்த கூட்டம் நடத்தப்படுகிறது.

    மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்கான முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை பா.ஜனதா அறிவித்துவிட்டது.

    ராஜஸ்தான் தவிர மற்ற மாநிலங்களுக்கான வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட சந்திரசேகர ராவ் முடிவு செய்துள்ளார்.
    • பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலத்திலிருந்து 2014-ம் ஆண்டு தெலுங்கானா மாநிலம் புதிதாக உருவானது.

    அப்போது மாநில பிரிவினைக்கு பெரும் பங்கு வகித்த சந்திரசேகர ராவ் கட்சி 63 இடங்களை கைபற்றி முதல் முறையாக ஆட்சிக்கு வந்தது. அதற்கு பின்னர் 2018-ம் ஆண்டு தேர்தலில் 88 இடங்களை பெற்று 2-வது முறையாக ஆட்சியை பிடித்தது.

    இந்த நிலையில் நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெலுங்கானா மாநிலத்தில் முதல்- மந்திரி சந்திரசேகர ராவ் பல்வேறு வியூகங்கள் வகுத்து வருகிறார்.

    அவருக்கு ராசியான இடமாக கருதப்படும் ஹீஸ்னாபபாத்தில் இருந்து தேர்தல் பிரசாரத்தை வருகிற 15-ந்தேதி தொடங்குகிறார். அன்று காலை கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடுகிறார்.

    வழக்கம் போல காமரெட்டி பகுதியில் அவர் போட்டியிட முடிவு செய்துள்ளார். முன்னதாக கோனை பள்ளியில் உள்ள வெங்கடேஸ்வரா சாமி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி வேட்பாளர்களுக்கு பி-படிவங்களையும் அவர் வழங்குகிறார். இதைத் தொடர்ந்து மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் பிரசாரத்தில் ஈடுபட அவர் முடிவு செய்துள்ளார்.

    இதற்கான பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    • தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.
    • தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் 119 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. தனி பெரும்பான்மை பெற 60 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வேண்டும்.

    வருகிற நவம்பர் மாதம் 30-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. 2014-ம் ஆண்டு மாநிலம் உருவான போது அதிக செல்வாக்கு உள்ள பி.ஆர்.எஸ். கட்சியை சேர்ந்த சந்திரசேகரராவ் ஆட்சியை பிடித்தார்.

    தொடர்ந்து ஆட்சியில் இருக்கும் அவர் 3-வது முறையாக ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள பல்வேறு விதமான வியூகம் வகுத்து வருகிறார்.

    மாநிலத்தில் அதிக செல்வாக்கு பெற்றுள்ள அவரது கட்சி ஆட்சியைப் பிடிக்கும் வகையில் வேட்பாளர்கள் தேர்வு நடந்து வருகிறது. 115 தொகுதிகளில் அவரது கட்சி வேட்பாளர்கள் நேரடியாக போட்டியிடுகின்றனர்.

    வாக்காளர்களை கவரும் வகையில் தேர்தல் அறிக்கை தயாராகி வருகிறது. சந்திரசேகரராவ் கட்சியில் அவரது மகள் கவிதாவுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தரப்படுகிறது. இதனால் வாரிசு அரசியல் என்ற பிரசாரத்தை எதிர்க்கட்சிகள் தொடங்கியுள்ளன.

    ஆனாலும் அவற்றையெல்லாம் உடைத்து மக்களுக்கான நலத்திட்டங்கள் மூலம் மீண்டும் ஆட்சியை பிடிக்க தீவிர பிரசாரத்தில் இறங்கி உள்ளனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் மாநகராட்சியில் நடந்த தேர்தல் மூலம் பா.ஜ.க 2-வது பெரிய கட்சியாக உருவெடுத்துள்ளது.

    கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி 2 இடங்களில் நடந்த பொதுக்கூட்டங்களில் பேசினார். தொடர்ந்து அமித்ஷா மத்திய மந்திரிகளும் பிரசார ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    தெலுங்கானாவில் டார்கெட் 75 என்ற இலக்குடன் பா.ஜ.க. களமிறங்குகிறது. நடிகைகள் விஜயசாந்தி, ஜெயசுதா உள்ளிட்ட 25 வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் திட்டங்கள் மூலம் வாக்குகளை பெறுவதற்கு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் கர்நாடக மாநில பார்முலாவை பயன்படுத்த காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. கடந்த மாதம் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் இந்த மாநிலத்தில் நடத்தப்பட்டது.

    அப்போது பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2500, ரூ.500-க்கு சமையல் கியாஸ் சிலிண்டர், பெண்களுக்கு இலவச பஸ் பயணம் மற்றும் விவசாயிகளுக்கு உதவி தொகை என 6 முக்கிய வாக்குறுதிகளை சோனியா காந்தி அறிவித்தார். இதன் மூலம் பெண்கள் வாக்குகளை எளிதாக கவர முடியும் என காங்கிரஸ் கணக்கிட்டு உள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்தவரை தற்போது காங்கிரஸ் கட்சி 3-வது இடத்தில் உள்ளது. தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சர்மிளாவை அந்த கட்சியில் இணைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

    அது நிறைவேறவில்லை. தெலுங்கானா மாநிலத்தில் இந்த சட்டமன்ற தேர்தலில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது. ஆட்சியைப் பிடிக்க ஆளும் பி.ஆர். எஸ். கட்சி, பா.ஜ.க., காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கடும் பிரசார வியூகங்களை வகுத்து வருகின்றனர்.

    • கடந்த 2018-ம் ஆண்டு 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை அந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது.
    • பிரதமர் மோடி தெலுங்கானாவில் 2 நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.

    திருப்பதி:

    தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநில சட்டசபை தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் அக்டோபர் 3-ந்தேதி முதல் 6-ந்தேதி வரை 5 மாநிலங்களில் சுற்றுப்பயணம் செல்கின்றனர்.

    அப்போது 5 மாநிலங்களின் அரசியல் கட்சி பிரதிநிதிகள், தலைமைச் செயலாளர்கள், டி.ஜி.பி.க்கள், கலெக்டர்கள் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் விரிவான ஆலோசனை நடத்த உள்ளனர்.

    தேர்தல் ஆணைய அதிகாரிகள் சுற்றுப்பயணத்திற்கு பிறகு தேர்தல் தேதி நிர்ணயிக்கப்படுகிறது. அடுத்தவாரம் 5 மாநிலங்ளுக்கான சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

    கடந்த 2018-ம் ஆண்டு 5 மாநிலங்களின் தேர்தல் அட்டவணையை அந்த ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி தேர்தல் ஆணையம் அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    தெலுங்கானா மாநிலத்தில் முதல்-மந்திரி சந்திரசேகர ராவ் மற்றும் பா.ஜ.க. சட்டசபை தேர்தலுக்கான வேட்பாளர்களை ஏற்கனவே அறிவித்து உள்ளது. ஆளும் கட்சிக்கு அடுத்த நிலையில் உள்ள பா.ஜ.க வரும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கானாவில் ஆட்சியைப் பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து வருகிறது. தேர்தல் பணியை தொடங்கி சுறுசுறுப்பாக பணி செய்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தெலுங்கானாவில் 2 நாட்கள் பொதுக்கூட்டங்களில் கலந்து கொண்டு வாக்குகளை சேகரிக்க உள்ளார்.

    இதேபோல் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க. முன்கூட்டியே தேர்தல் பிரசாரத்தை தொடங்க உள்ளது.

    தேர்தல் தேதி அடுத்த வாரம் அறிவிக்கப்பட உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

    • பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார்.
    • மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

    கர்நாடக சட்டசபை தேர்தலில் தோல்வியை சந்தித்த பா.ஜனதா அடுத்து 5 மாநில சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள உள்ளது. அந்த 5 மாநிலங்களில் தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மூன்றும் பா.ஜ.கவுக்கு மிக மிக முக்கியமான மாநிலங்களாகும்.

    கர்நாடகா போல இந்த மாநிலங்களையும் பறிகொடுத்துவிடக்கூடாது என்பதில் பா.ஜனதா தீவிரம் காட்ட தொடங்கி உள்ளது. இதற்காகவே ஆட்சியிலும், கட்சியிலும் அதிரடி மாற்றங்களுக்கு மோடியும், அமித்ஷாவும் திட்டமிட்டு வருகிறார்கள்.

    இதில் இறுதி முடிவு எடுப்பதற்காக அமித்ஷா நேற்று டெல்லியில் ஓசையின்றி அதிரடி அலசலில் ஈடுபட்டார். அவருடன் ஜே.பி.நட்டா, சந்தோஷ் உள்பட சில தலைவர்கள் கலந்து கொண்டனர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தை சேர்ந்த சில தலைவர்களும் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

    அப்போது பிரதமர் மோடி அமெரிக்கா, எகிப்து சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு வந்ததும், மத்திய மந்திரி சபையில் சிறு மாற்றம் செய்வது பற்றி விவாதிக்கப்பட்டது. மத்திய மந்திரிகளில் சிலரை 5 மாநில தேர்தலுக்கு பொறுப்பாளராக அனுப்ப ஆலோசிக்கப்பட்டது.

    இது தவிர பாராளுமன்ற தேர்தலுக்கு எப்படி தயாராக வேண்டும் என்றும் அமித்ஷா தகவல்களை கேட்டு அறிந்தார். மோடி எந்தெந்த மாநிலங்களில் எத்தனை பேரணிகளில் பங்கேற்க வேண்டும் என்பது பற்றியும் கூட்டத்தில் பேசப்பட்டது.

    ஆனால் இந்த தகவல்கள் பா.ஜ.க.வின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்குக் கூட முழுமையாக தெரியவில்லை. அந்தளவுக்கு அமித்ஷா ரகசியமாக காய்களை நகர்த்த தொடங்கி உள்ளார்.

    பஞ்சாப், கோவா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்துகிறது.
    புதுடெல்லி:

    கோவா, மணிப்பூர் சட்டப்பேர்வையின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு மார்ச் 14-ம் தேதியுடனும், பஞ்சாப்பின் பதவிக் காலம் மார்ச் 15-ம் தேதியுடனும் முடிவடைகிறது. உத்தர பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய மாநில சட்டப்பேரவைகளின் பதவிக் காலமும் விரைவில் நிறைவடைய உள்ளது.

    இதற்கிடையே, தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா நேற்று அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஆலோசனை நடத்தினார். 

    இந்நிலையில், உத்தர பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்துவது தொடர்பாக அந்தந்த மாநில தேர்தல் அதிகாரிகளுடன் தலைமைத் தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

    5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரூ.14 ஆயிரம் கோடி வரை செலவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது. #Election2018
    புதுடெல்லி:

    மத்தியபிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களுக்கு சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடந்தது.

    இந்த தேர்தல்களில் போட்டியிட்ட வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் குறித்து சி.எம்.எஸ். எனப்படும் ‘சென்டர் பார் மீடியா’ கல்வியகம் என்ற அமைப்பு ஆய்வு மேற்கொண்டது.

    அதில் 5 மாநிலங்களில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் ரூ.14 ஆயிரம் கோடி வரை செலவு செய்து இருப்பது தெரியவந்துள்ளது.

    இவற்றில் தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் ரூ.5 ஆயிரம் கோடி செலவிடப்பட்டுள்ளது. இங்கு ஒரு ஓட்டுக்கு குறைந்தது ரூ.500 முதல் வழங்கப்பட்டுள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு நடந்த தேர்தலை ஒப்பிடும் போது 50 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் கட்சி வேட்பாளர்களிடம் இருந்து ஓட்டுக்கு பணம் பெற்றுள்ளனர்.

    கடந்த 2005-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் ஓட்டுக்கு 25 சதவீதம் பேர் மட்டுமே பணம் பெற்றனர். 2007-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அனைத்து தரப்பு வாக்காளர்களும் ஓட்டுக்கு பணம் வாங்க தொடங்கினார்கள்.


    தற்போது 2018-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களில் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் 50 சதவீதம் வாக்காளர்கள் ஓட்டுக்கு பணம் வாங்கியுள்ளனர்.

    இந்த தகவலை சி.எம்.எஸ். அமைப்பின் நிறுவன தலைவர் என்.பாஸ்கரராவ் தெரிவித்தார். அவர் மேலும் கூறும்போது, “தற்போது ‘நோட்டுக்கு ஓட்டு’ என்ற கொள்கை வாக்காளர்களிடம் பரவி வருகிறது. தெலுங்கானாவில் மட்டும் தேர்தலுக்கு 3 நாட்களுக்கு முன்பு ரூ.150 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது மற்றும் தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

    அனைத்து ஊழல்களுக்கும் தாயாக தேர்தல் ஊழல் இருக்கிறது. தேர்தலில் வெற்றி பெற வேட்பாளர்கள் பணத்தை தண்ணீராக செலவு செய்கின்றனர். அதுவே ஊழல் மற்றும் முறைகேடுக்கு காரணமாக திகழ்கிறது.

    தேர்தல் செலவை குறைக்க அதிக பொதுக்கூட்டங்கள் நடத்த அனுமதி வழங்க கூடாது. தேர்தல் நடைமுறையை 15 நாட்களாக குறைக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார். #Election2018
    5 மாநில சட்டசபை தேர்தலில் மோடியா, ராகுலா என்று நடந்த பலப்பரீட்சையில் மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார் என்று திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Modi #Election2018
    மதுரை:

    மதுரை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த 5 மாநிலங்களுக்கான பொதுத்தேர்தலின் முடிவுகள் மூலம் மக்கள் பாஜகவிற்கு எதிராக இருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

    பா.ஜ.க. கைகளில் நீண்ட காலமாக ஆட்சி அதிகாரத்தில் இருந்த சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மூன்று மாநிலங்களையும் பாஜக பறிகொடுத்து இருக்கிறது.

    தனது ஆட்சி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துபல முயற்சிகளை மேற்கொண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை. மோடியா ராகுலா என்று நடந்த இந்த பலப்பரீட்சையில் ராகுல் வெற்றி பெற்றிருக்கிறார். மோடி வீழ்த்தப்பட்டு இருக்கிறார்.

    2019-ல் நடைபெற உள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் சனாதன சக்திகளை விரட்டி அடிப்பதற்கு பொது மக்கள் ஓரணியில் திரண்டு வருகிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று.

    ஏனென்றால் பாரதிய ஜனதாவுக்கு வலுவான செல்வாக்கு உள்ள மாநிலங்களில் மக்கள் இந்த தீர்ப்பை எழுதி இருக்கிறார்கள்.

    இதையொட்டி அவர்கள் மதத்தின் பெயரால் சனா தனத்தின் பெயரால் வன்முறைகளைத் தூண்டி விடுவதற்கான வாய்ப்பு உள்ளது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவோம் என்று முளைக்க தொடங்கி இருப்பது தேர்தல் ஆதாயத்திற்காக தான் தென்னிந்தியாவிலும் வன்முறைகளை கட்ட விழ்த்து விட அவர்கள் திட்டமிட்டு உள்ளார்கள்.

    இந்துக்கள், இந்துக்கள் அல்லாதவர்களுக்கு இடையேயான வன்முறை வெறியாட்டத்தின் மூலம் தான் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட சங் பரிவார அமைப்புகள் நம்புகின்றனர்.

    இதை எப்பாடு பட்டாலும் முறியடித்துவிட வேண்டுமென்று ஜனநாயக சக்திகள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள்.



    ராகுல்காந்தி தலைமையில் திராவிட முன்னேற்ற கழகம் உள்ளிட்ட மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைவரும் ஒன்று சேர்வது வரலாற்றின் தேவையாக மாறி இருக்கிறது. அதற்கான வாய்ப்பை இத்தேர்தல் முடிவுகள் ஏற்படுத்தியுள்ளன.

    தற்போது பா.ஜ.க. கூட்டணியில் இருந்து சிவசேனாவும் விலகி இருக்கிறது. தேசிய ஜனநாயக முன்னணி பலவீனமடைந்து வருகிறது .

    பாரதிய ஜனதா கட்சி பலவீனமடைந்து வருகிறது. சனாதான கட்சிகளும் பலவீனமடைந்து வருகிறார்கள். இன்னும் அவர்களை முற்றிலுமாக பலவீனப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.

    விடுதலை சிறுத்தைகள் கட்சியை எச்.ராஜா தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அண்மையில் திருமாவளவன் தொட்ட கட்சியை மக்கள் தொட மாட்டார்கள் என்று கூறுகிறார்.

    தீண்டாமை என்பது அதில் இருந்துதான் வருகிறது. ஆகவே சாதி புத்தி என்பது சனாதன புத்தி என்பது எச் ராஜாவை ஆட்டிப்படைக்கிறது என்பது வெளிப்படுத்தும் வகையில் தான் அவர் கூறியிருக்கும் கருத்து உள்ளது.

    அவர் மீது தமிழக அரசு உடனடியாக வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அவரை அந்த சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.

    ரஜினிகாந்த் பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள். தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க பலம் உடைய கட்சியாக இருக்கிறது என ரஜினி நம்பினார். தேர்தலுக்கு பின்பு பா.ஜ.க பலம் இல்லாத கட்சி என்று ரஜினி உணர்ந்து இருக்கிறார். அதையே ரஜினி கூறியுள்ள கருத்து வரவேற்கத்தக்கது.

    மேற்கண்டவாறு திருமாவளவன் கூறினார். #Thirumavalavan #Modi #BJP #Election2018
    மத்திய அரசு மீதான அதிருப்தியே பாரதிய ஜனதாவின் தோல்விக்கு காரணம் என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். #Election2018 #BJP #Sarathkumar
    சென்னை:

    அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    நடந்து முடிந்த தெலுங்கானா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன.

    இன்னும் சில மாதங்களில், பாராளுமன்ற பொதுத்தேர்தல் வரவிருக்கும் நிலையில், இந்த முடிவுகள் முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.

    2014-ம் ஆண்டு பா.ஜனதா மீது மக்களுக்கு இருந்த எதிர்பார்ப்புகள் மற்றும் நம்பிக்கைகள் சமீப காலமாக குறைந்து கொண்டே வருகின்றன என்பது கண்கூடு. அவசர கதியில் சரியான திட்டமிடல் இன்றி அறிவிக்கப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கை மற்றும் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு போன்றவற்றால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு, வேலைவாய்ப்பு மற்றும் கருப்புப்பணம் குறித்த அறிவிப்புகளின் தோல்வி, ரஃபேல் விமானங்கள் வாங்குவதில் முறைகேடு, அனைத்திற்கும் மேலாக பாரம்பரியம் மிக்க நமது மதநல்லிணக்கத்திற்கு விடப்பட்டிருக்கும் அச்சுறுத்தல் என்பன போன்றவை பா.ஜனதா மீது அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதே பெருமளவு உண்மை.

    மத்திய அரசின் மீதான அதிருப்தியே இத்தேர்தலில் எதிரொலித்து, ஆட்சிப் பொறுப்பில் இருந்த பா.ஜனதாவின் தோல்விக்குக் காரணமாகிவிட்டது என்றே கருதலாம். இதன் மூலம் பாஜக, பாடம் கற்கவேண்டிய தருணம் இது என்பதை உணர வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார். #Election2018 #BJP #Sarathkumar
    நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை என்று புதுவை கவர்னர் கிரண்பேடி தெரிவித்துள்ளார். #BJP #Kiranbedi #Election2018
    ஆலந்தூர்:

    புதுச்சேரி கவர்னர் கிரண்பேடி சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

    நடந்து முடிந்த 5 மாநில தேர்தலில் பா.ஜனதாவிற்கு எந்த பின்னடைவும் ஏற்படவில்லை. யாருக்கும் பின்னடைவு இல்லை.


    இது மோடி, ராகுலுக்கு இடையே இருக்கும் போட்டி அல்ல. முற்றிலும் மக்களுடைய விருப்பம். ஜனநாயகத்தின் வெளிப்பாடு.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Kiranbedi #Election2018
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்தார். #Results2018 #Modi #EVKSElangovan
    ஈரோடு:

    தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் இன்று மாலை மலர் நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களில் நடந்த தேர்தல்களில் காங்கிரஸ் முன்னணி பெற்றுள்ளது. இந்த 3 மாநிலங்களிலும் வெற்றி உறுதியாகி விட்டது.

    இந்த தேர்தல் முடிவு மூலம் மோடியையும், பா.ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விட்டார்கள். காங்கிரசையும் ராகுலையும் மக்கள் ஏற்று கொண்டு உள்ளார்கள். இந்த தேர்தல் முடிவு பாராளுமன்ற தேர்தலிலும் எதிரொலிக்கும். பாராளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். ராகுல்காந்தி பிரதமராக நல்ல பிரகாசம் உருவாகி உள்ளது.


    தெலுங்கானா மாநிலத்தை பொறுத்த வரை அங்கு சந்திரபாபு நாயுடுயுடன் கூட்டணி வைத்ததை மக்கள் ஏற்று கொள்ளவில்லை. சந்திரபாபு நாயுடுவிடம் கூட்டணி அமைத்திருக்காவிட்டால் அங்கும் காங்கிரஸ் வெற்றி பெற்றிருக்கும்.

    தமிழகத்திலும் தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி மகத்தான வெற்றி பெறும். அ.தி.மு.க.வையும், பாரதிய ஜனதாவையும் மக்கள் நிராகரித்து விடுவார்கள்.

    இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.  #Results2018 #Modi #EVKSElangovan
    5 மாநில தேர்தல் முடிவுகள் மூலம் பாரதிய ஜனதா தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என்று புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார். #ElectionResults #Narayanasamy
    புதுச்சேரி:

    5 மாநிலங்களில் நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 3 மாநிலங்களில் ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பெற்றுள்ளது. காங்கிரஸ் வெற்றியை புதுவை மாநில காங்கிரசார் மாநில காங்கிரஸ் தலைவர் நமச்சிவாயம் தலைமையில் ராஜா தியேட்டர் சந்திப்பில் பட்டாசு வெடித்து கொண்டாடினார்கள்.

    இந்த வெற்றி கொண்டாட்டத்தில் முதல்- அமைச்சர் நாராயணசாமி பங்கேற்று பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரமேஷ், முன்னாள் தலைவர் இளையராஜா, காங்கிரஸ் பொதுச்செயலாளர்கள் கருணாநிதி, தனுசு, வட்டார காங்கிரஸ் தலைவர் ரகுமான் மற்றும் திரளான காங்கிரசார் பங்கேற்றனர்.

    பின்னர் முதல்-அமைச்சர் நாராயணசாமி நிருபரிடம் கூறிதாவது:-


    5 மாநில தேர்தல்களில் 3 மாநிலங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது, இளம் தலைவர் ராகுல்காந்திக்கு பெருமை சேர்ப்பதாகும்.

    கடந்த 4½ ஆண்டு ஆட்சி கால மத்திய பா.ஜனதா ஆட்சியில் எந்த திட்டங்களும் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலின்போது பா.ஜனதா கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை.

    பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. ஆகியவற்றால் நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டது. விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர். இதனையெல்லாம் தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல்காந்தி மக்களிடம் விளக்கி கூறினார்.

    இந்த தேர்தல் வெற்றி 2019-ல் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலுக்கு முன்னோட்டம். ராகுல்காந்தி தலைமையில் மதசார்பற்ற அணியின் ஆட்சி அமையும். பா.ஜனதாவின் அஸ்தமனகாலம். பா.ஜனதா தலைவர்களின் ஆணவத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #ElectionResults #Narayanasamy
    ×